.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 16, 2013

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதி!

 

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், காய்ச்சல் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ராஜாஜி மார்க்கில் இருக்கிறது அப்துல் கலாம் வீடு. வீட்டில் இருந்த அப்துல் கலாம், உடல்நலம் சரியில்லை எனக் கூறியதை அடுத்து அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : அவருக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

ரத்த அழுத்தம், இதய செயல்பாடுகள் சீராகவே இருப்பதால் வேறு பிரச்சினை ஏதும் இல்லை. அவரை ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என தெரிவித்தனர்.

அண்மை காலமாக அதிக அளவில் பிரயாணங்களை அப்துல் கலாம் மேற்கொண்டிருந்ததாகவும், அதனால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிறப்பிலும் அவசரம் ஆண்களுக்கு!

 article-baby

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே உரிய காலத்துக்கு முன் பிறந்து விடுவதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. பிரிட்டனில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 5,700 குழந்தைகள் இதுபோல் உரிய காலத்துக்கு முன் பிறப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய ஆய்வறிக்கையின் படி உரிய காலத்துக்கு முன் பிறக்கும் குறை பிரசவ குழந்தைகள் நோய்வாய்படுவத்ற்கும் சீக்கிரம் மரணம் அடையவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் பள்ளியில் பேராசிரியர் ஜாய் நடத்திய ஆய்வில் இதுபோன்ற குறை பிரசவக் குழந்தைகள் மஞ்சல் காமாலை உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கு எளிதில் ஆட்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பெண் குழந்தைகளுக்கு  கருப்பையில் இருக்கும்போதே நுரையீரல் மற்ற உறுப்புகள் எல்லாம் வேகமாக வளர்ச்சி அடைந்து விடுவதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் படி பிரிட்டனில் கடந்த 2012ம் ஆண்டு 37 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த 34 400 ஆண்குழந்தைகளை மற்றும் 28,700 ஆண்குழந்தைகளிடம்  ஒப்பிடுகையில் 6000 ஆண் குழந்தைகளுக்கு பெருமூளை வாதம், பார்வை கோளாறு சுகாதார பிரச்சனை உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என பேராசிரிய லாவன் கூறினார். மேலும் குறைபிரசவம் என்பது  உலகம் முழுவது இருக்கும் பிரச்சனை எனவும் பிரிட்டனில் 7.8 சதவீதமும், அமெரிக்காவில் 5 சதவீதமும் குறைபிரசவ குழந்தைகள் பிறக்கிறது என்றும் தெரிவித்தார்.

பிரிட்டனில் ஆண்டுக்கு 28 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த குழந்தைகளில் 1,300 குழந்தைகள் இறந்துவிடுகிறது. உலக அளவில் 15.1 மில்லியன் குழந்தைகளுக்கு ஒரு மில்லியன் குழந்தை குறைபிரசவத்தில் பிறக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு குறை பிரசவ குழந்தைகள்  குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ரெட்டினோபதி தாக்கத்தால் குறைபிரசவ குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. இந்த பார்வை இழப்பை தடுப்பதற்கு புற்றுநோய் மருந்து அவஸ்தின் உதவுகிறது. குறை பிரசவ குழந்தைகளின் கண்கள் முழுவளர்ச்சி அடைவதற்கு முன்னர் இம் மருந்து தரப்படும் பட்சத்தில் பார்வை இழப்பை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கை நியூஇங்கிலாந்து ஜர்ன்ல் ஆப் மெடிசன் என்ற இதழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது!

 

கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும்  வேதியியல் விஞ்ஞானி 

சி.என்.ஆர்.ராவுக்கும் இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பாரத

ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.





இருவருக்கும் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

அறிவித்தார்.


 

இந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது

குறிப்பிடதக்கது


பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்!

பீர் பாட்டில்களில் இந்து கடவுளர்களான விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், லேபிள்களை அகற்றுவதாகவும் கூறியது.இதையடுத்து இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய நிவேதா பகுதி இந்து அமைப்பைச் சேர்ந்த ராஜன் ஸேத் இது சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று கூறினார்.இதற்காக, தங்களுக்கு உதவி புரிந்த, தங்கள் குரலுக்கு செவிசாய்த்து, ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து ஹிந்துக்களுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதாக அவர் வெள்ளிக்கிழமை இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

                                                       nov 9 - vanigam god beer


சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட ஆஸ்திரேலியாவாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகைய தெய்வ உருவங்களை மதுபாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது வர்த்தகம் என்பது, மத நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று கூறியுள்ள அவர், மத நம்பிக்கைகளை வியாபாரிகள் மதிக்க வேண்டும் என்றார்.இதை அடுத்து, நவ.24ம் தேதிக்குள் பீர் பாட்டில்களில் வேறு டிசைன்களை அளிப்பதாகவும், அதற்காக உலகெங்கிலும் இருந்து கிராபிக் டிசைனர்கள், ஓவியர்களிடம் டிசைன்களை வரவேற்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

 
back to top