.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 7, 2013

வெட்கப்படும் பிராணி மனிதன்தான்…(பொன்மொழிகள்)

1.  சந்தோஷத்தைவிட கஷ்டங்கள் மனிதனுக்கு நிறைய,
நல்ல படிப்பினைகளை சொல்லிக் கொடுக்கின்றன.

-விவேகானந்தர்

2.  மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத்தான் கேடு வரும்.

-எமவ்ரென்

3.  கடைசிவரை அமைதியாக இருப்பது

மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

-வில்லியம் ஜேம்ஸ்

4. அரைகுறை படிப்புக்கு அகந்தை அதிகம்.

-மாத்யூ

5. உயர வேண்டுமானால் பணிவு வேண்டும்.

-சாப்மன்

6.  எல்லாவிதத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம் அகங்காரம்.

-கிப்ஸன்

7.  இடையூறுகளும் துன்பங்களுமே

மனிதனை மனிதனாக்குபவை.

-மாத்யூஸ்

8.  அறிவு என்பது மேஜை விளக்கு. அன்பு என்பது கலங்கரை விளக்கு.

-லால்ரிட்ஜ்

9.  கண்ணியமும் நேர்மையும் நம் இரு கண்கள்.

-இங்கர்சால்

10.  வெட்கப்படும் பிராணி மனிதன்தான்.

-மார்க் ட்வைன்

ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு...?

கூகுள் நிறுவனமானது ஜமெயில் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றிற்கு தட்டச்சு மூலம் மட்டுமின்றி தற்போது கையால் எழுத்தும் எழுத்துக்களை உள்ளீடு (Input) செய்யும் வசதியை தந்துள்ளது.


இதன் மூலம் கூகுள் டொக்ஸில் 20 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும், ஜிமெயிலில் 50 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும் உள்ளீடு செய்ய முடியும்.இதனை செயற்படுத்துவதற்கு முதலில் ஜிமெயிலினை ஓப்பன் செய்து, தொடர்ந்து செட்டிங்ஸ் செய்வதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.


அதில் General பகுதியில் தென்படும் Enable input tools என்பதை தெரிவுசெய்யவும். இந்த ஒப்சன் தென்படைவில்லையாயின் Show all language options இனை தெரிவு செய்யவும்.


அதன் பின்னர் Input Tools விண்டோ ஒன்று தென்படும், தொடர்ந்து மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.


(குறிப்பு – கையெழுத்து மூலமான மொழிகளை தேர்வு செய்யும் ஒப்சன் பென்சில் ஐகானுடன் காணப்படும்)

இதன் பின்னர் சேமிக்கவும், இப்போது ஜிமெயில் விண்டோவானது Refresh ஆகும்.


தொடர்ந்து Handwriting  ஆப்சனை பயன்படுத்துவதற்கு ஆப்பிள் கணினிகளில் Cmd + Shift + K என்ற கீக்களையும், ஏனைய கணினிகளில் Ctrl + Shift + K ஆகிய கீக்களையும் பயன்படுத்த முடியும்.

ஹாலிவுட் ஹீரோவுக்கு பயந்து டைட்டில் மாற்றிய பிரபுதேவா!



ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டேலோனுக்கு பயந்து தான் இயக்கும் பட டைட்டிலை மாற்றினார் பிரபுதேவா.

தமிழில் போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுதேவா தற்போது பாலிவுட் படங்களை இயக்குகிறார்.

 ஷாஹித் கபூர் நடிக்கும் ஆர் ராஜ்குமார் படத்தை தற்போது இயக்கியுள்ளார்.

முன்னதாக இப்படத்துக்கு ராம்போ ராஜ்குமார் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

திடீரென்று அதை ஆர் ராஜ்குமார் என்று சுருக்கினார்.

ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டேலோன் ஏற்கனவே ராம்போ பெயர்கொண்ட படங்களில் 2 பாகம் நடித்திருக்கிறார்.

 அந்த டைட்டிலுக்கு சர்வதேச அளவில் படம் ரிலீஸ் ஆகும்போது பிரச்னை ஏற்படும் என்பதால் தனது பட டைட்டிலை சுருக்கிகொண்டார் பிரபுதேவா.

இது பற்றி அவர் கூறும்போது, ஒருநாள் நானும் ஷாஹித்தும் டி.வி பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஸ்டேலோன் நடித்த ராக்கி 5 படம் ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது ஸ்டேலோன் நடித்த ராம்போ பட டைட்டில் வைத்தால் அதற்கு ஆட்சேபம் வரலாம் என்று எண்ணினேன்.

ஸ்டேலோன் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரலாம். அதனால் ராம்போ ராஜ்குமார் என்ற பெயரை ஆர் ராஜ்குமார் என்று மாற்றிவிட்டேன்.

கவுதம் மேனனின் சட்டென்று மாறுது வானிலை!



வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் என்று சினிமா பாடல் வரிகளை தனது படங்களுக்கு டைட்டிலாக வைக்கும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்,


 அடுத்தப்படத்துக்கும் பாடல் வரியை டைட்டிலாக வைத்துள்ளார். அவர் இப்போது இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.


ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்கு சட்டென்று மாறுது வானிலை என்ற சினிமா பாடல் வரி டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கவுதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டபோது கூறியதாவது:


இந்தப் படம் காதல், ஆக்ஷன் என்று செல்லும். கவித்துவமான தலைப்பு வைக்க நினைத்தேன். சட்டென்று என் மனதில் தோன்றிய வரி, சட்டென்று மாறுது வானிலை.


என் படத்தின் பாடல் வரியே டைட்டிலாக கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயாவின் இரண்டாவது பாகமா என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. இது வேறொரு தளத்தில் செல்லும் கதை.


முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தியா முழுவதும் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.இவ்வாறு அவர் சொன்னார்.

 
back to top