.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 14, 2013

உதவுகிறேன் என்று சொன்னால் போதுமா?



உதவுகிறேன் என்று சொன்னால் போதுமா?


நீச்சல் தெரியாத ஒருவன் கிணறு ஒன்றில் தவறி விழுந்து விட்டான்.


தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வந்தவன், “என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்றபடி தத்தளித்துக் கொண்டிருந்தான்.


அவன் கூச்சலைக் கேட்ட பலர் கிணற்றினருகில் கூடி விட்டனர்.அவர்களுள் ஒருவன், எப்படியாவது கிணற்று நீரில் போராடிக் கொண்டிருப்பவனைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்.


உடனே அவன் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு. உன் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறேன்.” என்று கத்தினான்.


ஆனால், தத்தளித்துக் கொண்டிருந்தவனோ கையை நீட்டவில்லை. தண்ணீரைக் கையிலடித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.


கரையிலிருந்தவன் மீண்டும் அவனைப் பார்த்து, “உன் கையை மட்டும் நீட்டு, நான் உன்னைக் காப்பாற்றி விடுகிறேன்” என்றான்.


அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், “நீ உண்மையிலேயே அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தால், உன் கையை நீட்டி அவன் கையைப் பிடித்து வெளியே இழு. நீ எத்தனை முறை கத்தினாலும் அவன் கையை நீட்டப் போவதில்லை.


உதவி செய்கிறவன்தான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, உதவி கேட்பவன் அல்ல.” என்றார்.

உண்மை உணர்ந்த அவன்,உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனின் கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினான்.

ஸ்ஸ் ஸப்பா...ரொம்ப கஷ்டம்.. முடியல...





1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.


2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாறியே பாவனை பண்றது.


3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்தறிப்பது.


4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.


5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.


6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது.


7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது.


8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.


9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரை நாள் இருப்பது


10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது.


11. கம்ப்யூட்டர் ல எதையாவது கிளிக் செஞ்சிட்டு ஓபன் ஆகற வரை இன்னொரு முறை கிளிக் செய்யாமல் இருப்பது.


12. தலைவன் எப்ப கைய தூக்குவான், கால தூக்குவான் நாமா கத்தலாம்னு காத்திருக்கிற கூட்டத்துக்கு நடுவுல தியேட்டர்ல ஒரு சினிமா பார்ப்பது.

தன்னில் எது சமூக மாற்றம் ? கவிதை!




தன்னில் எது சமூக மாற்றம் ?

தேவைக்கு அதிகமாய்
 எதையும்
 சேர்க்காமல் இருப்பது.


வீட்டில் எது சமூக மாற்றம் ?
அவரவர் வீட்டுக்குப்பையை
 அடுத்தவீட்டு வாசலுக்கு
 தள்ளாதிருப்பது.


வீதியில் எது சமூக மாற்றம் ?
மற்றவர் வைத்த
 மரங்களெனினும்
 பற்றுவைத்து பராமரிப்பது.


சாலையில் எது சமூக மாற்றம் ?
பின்னே ஒலி எழுப்பும்
 வாகனத்திற்கு
 முன்னே செல்ல வழிவிடுவது.


ஊரில் எது சமூக மாற்றம் ?
இன்னொரு இனத்தின்
 இழவிற்கு
 கண்ணீரோடு கலந்துகொள்வது.


மாநிலத்தில் எது சமூக மாற்றம் ?
வீணாய் கடல்சேரும் முன்
 தானாய் மனமுவந்து
 தண்ணீரை திறந்துவிடுவது.


நாட்டில் எது சமூக மாற்றம் ?
மரபணுக்களில் ஊறிப்போன
 ஊழல் தொற்றை
 அறவோடு அழிப்பது.


உலகில் எது சமூக மாற்றம் ?
உரிமைக்காக போராடும்
 உணர்வாளர்களுக்கு
 உண்மையாக குரல்கொடுப்பது.

விருப்பமே ஆசையின் காரணம் - கவிதை!





விருப்பமே ஆசையின் காரணம்


 ஆசையே கடனுக்கு காரணம்


 அன்பே கடமைக்கு காரணம்


 பண்பே உயர்வுக்கு காரணம்


 பணமே உழைப்பிற்கு காரணம்


 பகையே போருக்கு காரணம்


வெற்றியே விருப்பத்திற்கு காரணம்


 அடிமைத்தனமே விடுதலைக்கு காரணம்


 ஆதிவெடிப்பே ஓசையின் காரணம்


 ஓசையே தமிழுக்கு காரணம்


 தமிழே உலகமொழிகளுக்கு காரணம்


 பக்தியே அருளின் காரணம்


 நிறைவே பூரணத்தின் காரணம்


 பிறப்பே தந்தையின் காரணம்


 வாழ்வே தாயின் காரணம்


 முக்தியே இறைவனின் காரணம்


 முடிவே உனது காரணம்.

 
back to top