.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 2, 2014

ரஜினிக்குப் பதிலாக அஜித்?




ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.


கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.


ஆனால் , கே.எஸ். ரவிக்குமாரே, 'ரஜினிக்கு இப்போது படம் இயக்கவில்லை. இது வதந்தி' என்று சொல்லிவிட்டார்.


ஷங்கர், பி.வாசு, கே.வி. ஆனந்த் என்று பல பெயர்கள் அடிபட்டன.


அதில் இப்போது கே.வி.ஆனந்த் கழன்று கொண்டார். ரஜினிக்காகத் தயார் செய்த கதையை அஜித்திடம் சொல்லி ஓ.கே வாங்கிவிட்டாராம்.


ரஜினிக்குப் பதில் அஜித்தான் நடிக்கப் போகிறாராம் .


கௌதம் மேனன் படம் முடிந்த பிறகு, அஜித் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதற்குள் கே.வி.ஆனந்த் 'அனேகன்' படத்தை முடித்து விடுவாராம்.

உன் மொழி தமிழ் மொழியென்று !!!



தடுக்கி விழுந்தால் மட்டும்
 அ...ஆ...
சிரிக்கும்போது மட்டும்
 இ..ஈ..

சூடு பட்டால் மட்டும்
 உ...ஊ..

அதட்டும்போது மட்டும்
 எ..ஏ...

ஐயத்தின்போதுமட்டும்
 ஐ...

ஆச்சரியத்தின் போது மட்டும்
 ஒ...ஓ...

வக்கணையின்
 போது மட்டும்
 ஒள...

விக்கலின்போது மட்டும்
 ஃ


 என்று தமிழ் பேசி மற்ற
 நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம்
 மறக்காமல் சொல்வோம்
 உன் மொழி தமிழ் மொழியென்று !!!

நயன்தாராவுக்கு விருது நிச்சயம்!




வித்யாபாலனுக்கு பெரிய இமேஜை உருவாக்கிக்கொடுத்த 'கஹானி' படத்தின் தமிழ்-தெலுங்கு ரீமேக்கான 'அனாமிகா'வில் நயன்தாரா நடித்திருக்கிறார்.


ஆனால், இந்தப் படத்தின் முக்கிய சாரம்சமாக இருந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தை நார்மலாக மாற்றியிருக்கிறாராம் இயக்குநர் சேகர்முல்லா.


புதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தனது கணவரைத் தேடி வருவது போன்று படமாக்கியுள்ளாராம்.


ஆனால்,'கஹானி' படத்தில் கர்ப்பிணி என்பதுதான்  கதையின் அடிநாதமாக விளங்கியது.


'கஹானி' இந்தியா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிறபோது ரசிகர்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.


அதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய்திருக்கிறேன் . 'அனாமிகா'வில் நடித்ததற்காக நிச்சயம் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும் என்கிறார் சேகர் முல்லா.

காதலர்கள் சமூகத்தின் பார்வையில்..!



காதலர்கள் சமூகத்தின் பார்வையில்..!


1-15 வயதுக்கு உட்பட்டவராயின் : முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே உனக்கு லவ் (love ) கேக்குதோ


16-21 வயது என்றால் : படிக்கிற வயதில கழுதைக்கு லவ் கேக்குதோ


22-34 வயது என்றால் : வேல வெட்டி இல்லாத துடைப்பு கட்டைக்கு நீயே தண்டம் உனக்கு ஒரு தண்டமா ..?


35-49 வயது என்றால் : பிள்ள குட்டிகள் லவ் பண்ணுற வயதில உனக்கெல்லாம் காதாலா ..?


50-64 வயது என்றால் : பேரன் பேத்திய கானுற வயதில கிழட்டுக்கு காதல் கேக்குது


65- வயது மேல் - காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது இந்த வயதில் காதாலா ...? கலிகாலமடா இது.!

 
back to top