.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

கம்பியில்லாமல் மின் இணைப்பு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...!



கம்பியில்லா முறையில் மின் சாதனங்களுக்கு மின் இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின் னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.

 இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.

மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும்.

செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங் களுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

Wednesday, January 15, 2014

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்..!



சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும்.

உங்கள் துணிகளை தொழில் ரீதியான சலவைகாரர்களிடம் கொடுத்தும் கூட சலவை செய்யலாம். ஆனால் அதற்கு அதிக அளவில் செலவாகும். ஏன் நீங்களே எளிய முறைகளை பின்பற்றி சலவை செய்து, சலவை செலவுகளை குறைக்க கூடாது? கண்டிப்பாக இதற்கு சற்று நேரத்தை நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும். ஆனால் வேலை முடிந்து விட்டால் உங்களை நினைத்து நீங்களே பெருமை அடைவீர்கள். மேலும் உங்கள் துணிகளும் கூட தூய்மையாகவும் நற்பதமாகவும் விளங்கும்.

 துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்..!!!

இந்த மிகப்பெரிய வேலையை செய்து முடிக்க பல வழிகள் இருக்கிறது. உங்கள் தேவைக்கு எது வசதியாக உள்ளதோ அந்த வழிமுறையை நீங்கள் உங்கள் அனுபவத்தில் தேர்ந்தெடுத்து விடலாம். நாங்கள் இங்கே உங்களுக்கு சொல்லப்போவது ஒன்றும் ராக்கெட் செய்யும் வித்தையல்ல. சொல்லப்போனால், எளிய முறையில் சிறப்பாக சலவை செய்ய சில அடிப்படை வழிகளே இவைகள். சிறப்பாக செயல்படாவிட்டால் எளிய முறையை பின்பற்றி பயந்தான் என்ன?

 வாஷிங் மெஷின் (சலவை இயந்திரம்)

சலவை செய்ய சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்குகிறது வாஷிங் மெஷின். இது உங்கள் நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற டென்ஷன் மற்றும் மன உளைச்சலை நீக்கும். சந்தையில் பல வகையான வாஷிங் மெஷின் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், டாப் லோட், ஃப்ரண்ட் லோட், ஆட்டோமாட்டிக் (தானியங்கி), செமி ஆட்டோமாட்டிக் (பகுதித் தானியங்கி), சிங்கிள் டப் மற்றும் ட்வின் டப்.

 லேபிலை படியுங்கள்

ஆடையை பராமரிக்க அதனுடன் சேர்ந்து வரும் பராமரிப்பு லேபிலை படிக்க தவற விடாதீர்கள். பொக்கிஷமான உங்கள் ஆடைகளை பற்றிய முக்கிய தகவல்களை அது வைத்திருக்கும். உங்கள் ஆடை நல்ல தரத்துடன் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால், அதில் துவைப்பதற்கு கொடுத்திருக்கும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுங்கள். இல்லையென்றால் தவறான தண்ணீர் வெப்ப நிலை அல்லது தவறான சோப்பு தூளால் உங்கள் ஆடைகள் பாழாகி விடும்.

வகைப்படுத்துங்கள்

ஒரு முறை துவைக்கப் போகும் போது அதில் நிறம், துணி வகை மற்றும் பயன்பாட்டு வகை என பல வகையான ஆடைகள் கலந்திருக்கும். உங்கள் சலவையை சுலபமாக்க வேண்டுமானால் உங்கள் ஆடைகளை கண்டிப்பாக வகைப்படுத்த வேண்டும். வெண்ணிற ஆடைகளை பிற நிற ஆடைகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். முக்கியமாகவும் முதன்மையாகவும் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இது. அதே போல் மென்மையான ஆடைகளை எல்லாம் தனியாக துவைக்க வேண்டும்.

 கறைகள்

 சில நேரங்களில், முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில், கையாளுவதற்கு கடினமாக இருக்கும் கறைகள் உண்டாகும். உங்கள் சலவையை சுலபமாக்க, கரையை நீக்கும் பொருட்களின் பட்டியலை எப்போதும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பட்டியலில் அடிப்படியான பொருட்களாக வினீகர், பேக்கிங் சோடா அல்லது கறைகளை அகற்ற சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்துவதற்கு தேவையான பிற பொருட்கள் கருதப்படுகிறது. கறைகளை நீக்க பல வலைத்தளங்கள் பல விதமான டிப்ஸ்களையும் அளித்து வருகிறது.

 டிடர்ஜெண்ட்

 திரவ வடிவில் இருக்கும் டிடர்ஜெண்டை பயன்படுத்துவது உங்கள் ஆடைகளுக்கு நல்லது. இதனால் ஆடைகளில் சோப்பு தூளின் எச்சம் தேங்குவதில்லை. சலவையை சிறந்த முறையில் செய்ய வேண்டுமானால், நீங்கள் எவ்வளவு ஆடைகளை துவைக்க போகிறீர்களோ அதற்கேற்ப அளவில் டிடர்ஜெண்டை பயன்படுத்துங்கள். டிடர்ஜெண்டை அதிகமாக பயன்படுத்தினால் கூடுதல் சுத்தம் கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல.

 உலர்த்தி இஸ்திரியிடுதல்

ஆடைகளை வரிசையாக தொங்கப்போட்டு காய வைப்பதே சலவையில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் ஆற்றலை திறனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆடைகளையும் நற்பதமாக வைக்கும். இதை செய்த பின்னரும் உங்கள் ஆடைகள் சுருக்கமாக இருந்தால், அவைகளுக்கு இஸ்திரி போடுங்கள். இந்த கட்டத்தில் நீராவி பயன்படுத்த தேவையில்லை என்பதால், இஸ்திரி போடுவதும் சுலமபாக இருக்கும்.

சிறிதளவு உழைப்பு மற்றும் மேற்கூறிய அடிப்படை வழிகளை பின்பற்றினால் துவைப்பதனால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சலை தவிர்க்கலாம். சலவையை சுலபமாக்க உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அந்த வழிமுறைகளை பின்பற்றி பயனை அடையுங்கள்.

’அஜித்தின் பெருந்தன்மை’ - வியக்கும் வீரம் படக்குழு..!




            ஸ்டண்ட் சில்வாவிடம் வீரம் திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கியது குறித்து கேட்டபோது “வீரம் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியின் போது ரயிலில் தொங்கியபடியே செய்யவேண்டிய ஆக்‌ஷன் காட்சி ஒன்று இருந்தது.

 அந்த காட்சி ரொம்பவும் ரிஸ்கான காட்சி என்பதால் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்கலாம் என்று முடிவெடுத்தோம். இதுகுறித்து அஜித் சாரிடம் சொன்னபோது அவர்,

‘எதுக்கு டூப் போட்டு ஷூட் பண்ணனும். டூப் போட்றவரும் மனிதர் தான் நானும் மனிதன் தான். தவறாக ஏதாவது நடந்தால் அவருக்கு உண்டாகும் காயம் தான் எனக்கும் ஏற்படும். அவருக்கு அடிபடலாம் எனக்கு அடிபடக் கூடாதா? இந்த படத்தில் நடிப்பது மூலம் பெயர் கிடைக்கப்போவது எனக்கு தானே தவிர அவருக்கு இல்லை.

 இந்த காட்சியில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். இதைக்கேட்டு யூனிட் முழுவதும் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், ஒரு விதமான பயம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சி அற்புதமாக வந்திருக்கிறது. அனைவரையும் ஒரே சமமாக மதிக்கும் அஜித் சாரின் பெருந்தன்மையை யூனிட்டே புகழ்ந்தது” என்று கூறினார்.


ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம் – பெண்களே எதையும் நன்கு திட்டமிடுவார்களாம்..!




பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அதனை ஆண்களை விட பெண்களே மிகவும் வேகமாக செய்து முடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது பல வேலைகளை ஒன்றாக கொடுத்து இவற்றை முடியுங்கள் என்று கூறினால், அவற்றை திட்டமிட்டு, எதனை முதல் செய்வது எதனை பின்னர் செய்வது என்று ஒழுங்கு படுத்திச் செய்வதில் ஆண்கள் மிகவும் தாமதமாக இருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த விடயத்தில் இப்போது இரு கேள்விகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். முதலாவது கேள்வி இது ஏன் என்பதாகும். அடுத்தது எந்த வேலையை கொடுத்தாலும் இந்த நிலைமைதானா அல்லது சில வேலைகளில் மாத்திரந்தான் இந்த நிலைமையா என்பதாகும்.

இதற்கான விடைகளை கண்டுபிடிக்கும் போதுதான் வேலைத்தளங்களை எப்படி ஏற்பாடு செய்வது என்பதில் சரியான திட்டங்களைத் தீட்ட முடியும். பல வேலைகளை ஒன்றாக அடுத்தடுத்து முடிப்பது என்பது வேலைத்தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், அதுதான் எமது வேலை தொடர்ச்சியாக நடப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

முன்னைய ஆய்வுகள்


முன்னர் இந்த விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைத் தந்துள்ளன. சீனாவில் நடந்த ஒரு ஆய்வில் பெண்கள், ஆண்களை விட பல வேலைகளை ஒன்றாக முடிப்பதில் மிகவும் வேகமனவர்கள் என்ற பதில் வந்திருக்கிறது. ஆனால் சுவீடனில் நடந்த ஆய்வில் ஆண்கள்தான் வேகமானவர்கள் என்ற முடிவு வந்திருக்கிறது.

இதற்காக இன்னுமொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சில அலுவலக வேலைகளை, அதாவது மின்னஞ்சல்களை படிப்பது, அதற்கு பதிலளிப்பது, தொலைபேசிகளுக்கு பதிலளிப்பது, அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்துகொள்வது என பல வேலைகள் இருதரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. அதேபோல வீட்டுவேலைகள், அதாவது, சமைப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்ளவது, வீட்டு தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் சொல்வது என்று பல வேலைகள் ஒன்றாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஒற்றை வேலையைச் செய்வதில் இருவரும் சமம் இதில் ஒவ்வொரு வேலையாகச் செய்யச் சொன்னால், இரு தரப்பாரும் ஒரே வேகத்திலேயே செய்தார்கள். ஆனால் எல்லா வேலைகளை ஒன்றாகக் கொடுத்த போது, அவற்றை ஒவ்வொன்றாக செய்து முடிப்பதற்கும் ஒரு வேலையில் இருந்து அடுத்த வேலைக்கு மாறும் போதும் இருதரப்பாரும் சிரமப்பட்டார்கள், ஆனாலும் பெண்கள், ஆண்களை விட அவற்றை வேகமாக முடித்தார்கள். இந்த வேறுபாடு மிகவும் சிறியதுதான் என்றாலும், தொடர்ச்சியாக வாரக்கணக்கில் இவற்றைச் செய்யும்போது அது மிகவும் அதிகமாகிவிடும்.

நன்கு திட்டமிடும் பெண்களும் அவசரக்குடுக்கையான ஆண்களும்

அதன் பின்னர் 8 நிமிடத்துக்குள் சில வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டும் என்று இரு தரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. உண்மையில் அந்த அனைத்து வேலைகளையும் 8 நிமிடத்தில் முடிக்க முடியாது. இப்போது, வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவற்றை திட்டமிடுவதற்கு நீண்ட நேரத்தை பெண்கள் எடுத்துக்கொண்டார்கள், ஆனால் ஆண்கள் அவசரக் குடுக்கையாக, நிறைய யோசிக்காமல் வேலையில் குதித்துவிட்டார்கள்.

ஆனால் இங்கும் பெண்கள்தான்முன்னணியில் இருந்தார்கள். இதில் இருந்து எந்த அழுத்தமான நிலைமைகளிலும் நின்று நிதானமாகச் சிந்தித்து, திட்டமிட்டு, செயற்படும் திறன் பெண்களுக்கே அதிகம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தார்கள்.

அதுமாத்திரமன்றி ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள், பல வேலைகளை ஒன்றாகக் கையாள்வதில் தாம் உண்மையில் எவ்வளவு திறமையானவர்களோ, அதனைவிட அதிகமாகவே தம்மிடம் திறமை இருப்பதாக அவர்கள் தம்மைப் பற்றி நினைத்துகொள்வதாகவும், ஆனால் பெண்களோ மறுபுறமாக, தமக்கு இந்த விடயங்களில் இருக்கும் உண்மையான திறமையின் அளவை விட குறைவாகவே தமக்கு திறமை இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தம்மிடம் அதிக திறமை இருப்பதாக அளவுக்கு அதிகமாக ஆண்கள் நினைப்பதால்தான் அவர்கள் சிந்திக்காமலேயே வேலையைத் தொடங்கிவிட்டு முடிக்க முடியாமல் தடுமாறுகிறார்களாம்.

 
back to top