.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

சருமத்தில் ரோமமா? நீக்கலாம்... தடுக்கலாம்!



நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை  வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப்  பெரிய சவாலான இந்தப்  பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு .

அழ குத் துறையில். அத்தனையும்  பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை  நீக்க வும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு  சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.

‘‘பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார்மோன்களின் இயக்கம் சீராக இல்லாமல்  போவதே முக்கிய  காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசிஓடி எனப்படுகிற மருத்துவப் பிரச்னை  என வேறு காரணங்களும் இதன்  பின்னணியில் உண்டு.

இள வயதிலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்பத்திலேயே இந் தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்’’ என்கிற  ராஜம், அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.

பியூமிஸ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த பியூமிஸ் ஸ்டோ னில் தடவி  வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்கவும். 

கடலை மாவு, பார்லி பவு டர், தேன் மூன்றும் தலா 1  டீஸ்பூன் அளவு எடுத்து, சில துளிகள் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து, ரோமம் நீக்க வேண் டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை  மணி நேரம் ஊற விட்டு, அது காய ஆரம்பித்ததும், தண்ணீரைத் தெளித்து, சந்த னம் தடவி வைத்த பியூமிஸ் ஸ்டோனால், மிக மென்மையாக  ரோமத்தின் எதிர் திசையில் தேய்க்கவும்.

பிறகு அந்த இடத்தைக் கழுவ வும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி வளர்ச்சியின் வேகம்  குறைந்து, வேர்க்கால்கள் பலவீனமடையும்.

விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து, சம அளவு எடுத்துக் கலந்து, நீர் விட்டு பேஸ்ட்  போலச் செய்து,  உடல் முழுக்கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு, எதிர் திசையில் தேய்த்துக் குளிக்கவும்.

எரிச்சலாக  உணர்ந்தால் குளிர்ந்த பாலோ, தயிரோ,  தேங்காய் எண்ணெயோ தடவிக் குளிக்கலாம்.

பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே சருமத்தில் நிறைய ரோமங்கள் இருப்பதைப் பார்க்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன்  வெல்லத் தண்ணீர்  கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைகளின் முதுகில் தடவி, காய்ந்ததும், மென்மையாக உரித்தெடுத்து விடலாம். 

தொடர்ந்து இப்படிச் செய்தால், பெண்  குழந்தைகள் பருவமடையும் போது, ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.

சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடியின் வேரைக் காய வைத்து அரைத்த தூள்  எல்லாம் சம அளவு  கலந்து கொள்ளவும்.

 தினமும் குளிக்கும் போது, மஞ்சள் மாதிரி இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளித் தால் ரோம வளர்ச்சி கட்டுப்படும்.

செய்யக்கூடாதவை...

சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிலக்கு சுழற்சிதான். அது சரியில்லாம லிருப்பது  உடலில் ஹார்மோன் கோளாறு இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகிச்சை.

கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோகித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்,  ரோமங்களை நீக்கிய  இடம், தடித்து, கருப்பதுடன், ரோம வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும்.

கெமிக்கல் கலந்த ஹேர் ரிமூவிங்  கிரீம்களை உபயோகிப்பதும் ரோம  வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ஏற்கனவே கிரீம் மாதிரியானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்களுக்கு  சருமத்தின் சில இடங்களில் கரும்புள்ளிகள் மாதிரி  நின்று விடும். 

அந்த இடங்களை அப்படியே வறண்டு போகவிடாமல், வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் வை த்து, ஊறிக் குளிப்பது மூலம்  ஓரளவு நிவாரணம் காணலாம்.

பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத்  தெரியாமல்  தற்காலிகமாக மறைக்கப்படும்.

ஆனால், பிளீச்சின் தீவிரம் குறையக் குறைய, அதாவது, நான்கைந்து நாள்களில் மறுபடி  ரோமங்கள் தம் பழைய  நிறத்துக்குத் திரும்பும். கெமிக்கல் கலந்த கிரீம் கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கும் கேடு.

பொற்கோயில் ராணுவ நடவடிக்கை இங்கிலாந்து திட்டம் வடிவமைத்து கொடுத்ததா?



பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில், சீக்கிய தீவிரவாதிகள் பெருமளவில் மறைந்திருந்தனர். அங்கிருந்தபடியே அவர்கள் தங்கள் சதித் திட்டங்களை தீட்டி வந்தனர். இதனால் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, 1984ம் ஆண்டு ஜூன் மாதம், அதிரடியாக பொற்கோயிலில் ராணுவம் நுழைந்தது.

அங்கிருந்து தீவிரவாதிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இச்சண்டையில் பலர் இறந்தனர். இதற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் கே.எஸ்.பிரார் தலைமை வகித்தார். ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டதால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அதே ஆண்டில், அக்டோபர் மாதம் சீக்கிய பாதுகாவலரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்துதான் திட்டம் வடிவமைத்து கொடுத்தது என்பதுதான் அது.இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ராணுவ உயரதிகாரி ஒருவர், தன் நாட்டு உள்துறை அமைச்சரின் செயலாளருக்கு, 1984 பிப்ரவரி 23ல் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், ‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு உதவும்படி இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன்பேரில், பிரதமரின் (இங்கிலாந்து) ஒப்புதலுக்கு இணங்க இதற்கான திட்டம் வடிவமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால், இங்கிலாந்துதான் இத்திட்டத்தை வடிவமைத்து கொடுத்தது என்று வெளியே தெரியவந்தால், அங்கு வசிக்கும் சீக்கிய சமுதாயத்தினர் இடையே பதற்றம் எழ வாய்ப்புள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், இத்தகவலை ராணுவ நடவடிக்கையை முன்னின்று மேற்கொண்ட தளபதி கே.எஸ்.பிரார் மறுத்துள்ளார்.

‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கை முழுவதையும் இந்திய ராணுவம்தான் வடிவமைத்து செயல்படுத்தியது. எனக்கு தெரிந்தவரையில், வெளிநாடுகள் எதுவும் இதில் தலையிடவில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இங்கிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்து உதவியதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரிக்கும்படி அமைச்சரவை செயலாளருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்’’ என்று கூறியுள்ளார்.

தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி.யான டாம் வாட்சன் கூறுகையில், ‘‘இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர், நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்காமலேயே இதுகுறித்து முடிவு எடுத்து செயல்பட்டார். இதன் மூலம்தான் ரகசியமாக ராணுவ நடவடிக்கை திட்டம் அளிக்கப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.

3ஜி ஆதரவு கொண்ட நோக்கியா ஆஷா 503 ரூ.6.683 விலையில் இப்போது கிடைக்கும்....!



நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் ஆஷா போன் தொடர்களை விரிவுபடுத்தி ஆஷா 500, ஆஷா 502 மற்றும் ஆஷா 503 அறிமுகப்படுதியுள்ளது. இந்திய சந்தையில் நோக்கியா ஆஷா 500 ரூ.4,499 விலையிலும், நோக்கியா ஆஷா 502 ரூ.5.969 விலையிலும் இப்போது கிடைக்கிறது.

இறுதியாக நிறுவனம் நோக்கியா ஆஷா 503 அறிமுகப்படுதியுள்ளது. முன்னதாக நோக்கியா ஆஷா 503 ரூ.6,799 விலையில் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இப்போது நோக்கியா வலைத்தளத்தில் இருந்து நோக்கியா ஆஷா 503 ரூ.6.683 விலையில் ஆர்டர் செய்யலாம். இந்த போன் கருப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் வகைகளில் கிடைக்கும்.

நோக்கியா ஆஷா 503, சாதனத்தில் ஸ்வைப் பயனர் இடைமுகம் மற்றும் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கண்ணாடி 2 பொருத்திய 3 இன்ச் QVGA (240x320) தீர்மானம் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. ஆஷா 500 மற்றும் ஆஷா 502 போன்று, ஆஷா 503 இரட்டை காத்திருப்பு ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது 64MB ரேம் வருகிறது மற்றும்
மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு துணைபுரிகிறது.

ஆஷா 503, 1110mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்கள் 3G, Wi-Fi, 802.11 b/g/n, ஸ்லாம் கொண்ட ப்ளூடூத் 3.0 மற்றும் FM ரேடியோ ஆகியவை அடங்கும். அக்டோபர் 2013ல் நோக்கியா உலக நிகழ்ச்சியில், நோக்கியா ஆஷா 500 மற்றும் ஆஷா 502 கைபேசியில் இயங்கும் ஆஷா Platform 1.1 ல் இருந்து மேம்படுத்தப்பட்டு நோக்கியா ஆஷா 503ல் ஆஷா Platform 1.2 செயல்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

நோக்கியா ஆஷா 503 அம்சங்கள்:

கார்னிங் கொரில்லா கண்ணாடி 2 பொருத்திய 3 இன்ச் QVGA (240x320) தீர்மானம் டிஸ்ப்ளே,
எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
இரட்டை காத்திருப்பு ஆதரவு கொண்ட இரட்டை சிம்,
64MB ரேம்,
மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு,
3G,
Wi-Fi,
802.11 b/g/n,
ஸ்லாம் கொண்ட ப்ளூடூத் 3.0,
FM ரேடியோ,
1110mAh பேட்டரி.

நித்யானந்தா - புது சேனல் விரைவில்.....!



இது நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமான வதந்திதான் ஆனா நம்பித்தான் ஆகணும். பரபரப்பான அந்த சாமியார் இப்போது ஒரு சேனல்ல நிகழ்ச்சி பணிக்கிட்டிருக்கார்.

 அப்படியே ஒரு சேனல் எப்படி நடத்துறதுங்கறதையும் கற்றுக் கொண்டாராம். விரைவில் அவர் ஒரு தனி சேனல் ஆரம்பிக்கப்போறாராம். அது ஆனந்தம் தரும் ஆன்மீக சேனல் இல்லையாம்.

 ஆல் இன் ஆல் தரும் எண்டர்டயிண்ட்மெண்ட் சேனலாம். அதுக்கு மானேஜிங் டைரக்டராவும், புரோகிராம் ஹெட்டாகவும் ஆகப்போகிறவர் சாமியாரின் அன்புக்கு பாத்திரமான அந்த நடிகை தானாம்.

ஆசிரமத்தின் நிதியை கையாளும் உரிமையை கொடுப்பதற்காகத்தான் அண்மையில் அவர் தீட்சை பெற்றாராம்.

தனது சிடியை வெளியிட்டு அவமானப்படுத்திய சேனலை தன்னோட சேனல் மூலம் பழிக்குபழி வாங்குவேன்னு நெருக்கமானவங்கிட்ட சொல்லியிருக்காராம்.

 
back to top