.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 17, 2014

ஹீரோக்களுக்கு டிமிக்கி கொடுத்த - நயன்தாரா...!



நயன்தாராவை காதலிக்க கதாநாயகர்கள் பலர் சுற்றுகின்றனர். ஆனால் அவர் யாரிடமும் சிக்கவில்லை. இரண்டுமுறை காதலில் தோற்றதால் எச்சரிக்கையுடன் இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முதல் காதல் சிம்புவுடன் நடந்தது. இருவரும் ஆழமாக காதலித்தனர். திருமணத்துக்கும் தயாரானார்கள். திடீரென அது முறிந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறைகளை அள்ளி வீசி விட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு நயன்தாராவும், சிம்புவும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் தோல்வியில் தவித்துப் போய் இருந்த நயன்தாரா வாழ்க்கையில் இரண்டாவதாக பிரபு தேவா வந்தார். அவரின் ஆறுதல் பேச்சில் மனதை இழந்தார். இருவரும் காதலித்தார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வந்து நெருக்கத்தை பகிரங்கப்படுத்தினர்.

மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயன்தாராவை மணக்க பிரபுதேவா தயார். ஆனால் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த நிலையில் இவர்களும் பிரிந்தார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவருமே இதுவரை சொல்ல வில்லை.

இதனால் விரக்தியின் உச்சிக்கு போன நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பழைய மார்க்கெட் சரியவில்லை. பெரும் தொகை சம்பளம் கொடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

தற்போது ஆர்யாவுக்கு நயன்தாரா மேல் காதல் துளிர்த்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. வீட்டில் அழைத்து விருந்து கொடுத்தார் என்றும் கூறப்பட்டது. இது போல் இன்னாரு இரண்டெழுத்து ஹீரோவும் அவரை விரும்புகிறாராம்.

 அத்துடன் பெரிய தொழில் அதிபர்கள் சிலரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது விட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் யாருடைய காதலையும் நயன்தாரா ஏற்கவில்லை. எற்கனவே பட்ட அனுபவங்கள் மூலம் இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று சொல்லி விலகி போகிறாராம்.

விஜய் டுவிட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள்...?





நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ‘ஜில்லா’ படம் வெற்றி பெற்றது பற்றி உங்கள் கருத்து?

பதில்:– ‘ஜில்லா’ படம் பெரிய வெற்றி படமாக காரணமாக இருந்த எனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே:– தமிழ் படஉலகில் உடம்பை வருத்தி கடுமையாக உழைக்கும் நடிகர் யார்?

ப:– சீயான் விக்ரம்.

கே:– உங்கள் ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதே?

ப:– தயவுசெய்து இதுபோன்ற தகராறுகளில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற மோதல்கள் ஆரோக்கியமானது அல்ல.

கே:– ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:– உங்கள் வேலையை நன்றாக செய்யுங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கே:– மோகன்லாலுடன் நடித்தது பற்றி?

ப:– மோகன்லாலுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. மலையாள படமொன்றில் அவருடன் இணைந்து நடிக்க ஆசை.

கே:– இந்தி படத்தில் நடிப்பீர்களா?

ப:– நமக்கு எப்பவும் நம்ம நாடுதான்னா...

கே:– உங்களை எதிர்க்கும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள்?

ப:– அவர்களையும் நான் விரும்புகிறேன்.

இவ்வாறு விஜய் கூறினார்.

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?



மேக்-அப் பிரைமர் என்பது மேக்-அப் செய்வதற்கு முன் போடக்கூடியது. பொதுவாக இதனை மேக்-அப் வெகுநேரம் முகத்தில் தங்குவதற்காக போடுவார்கள். இது தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது.

 மேக்-அப் போடும் முன் இதை தடவுவதால், முகத்தின் தன்மை மேக்-அப்பிற்கு ஏற்றார் போல் மாறி, மேக்-அப் போட வசதியாக இருக்கும். இதன் மூலம் மேப்-அப் போட்டிருந்தாலும் இயற்கையான சருமத்தை போன்ற அமைப்பை பெற முடியும்.

 இதனால் முகத்திற்கு போடும் மேக்-அப் வெகு நேரத்திற்கு கலையாமல் இருப்பதுடன், மிகவும் அழகாகவும் காட்டும். மேலும் இந்த மேக்-அப் பிரைமர் போட்டால், முகத்தில் அதிக மேக்-அப் வழிவதை கட்டுப்படுத்தும். குறிப்பாக இதனை மேக்-அப் வெகுநேரம் தங்காத இடத்தில் தடவ வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தாடை, கண் இமைகள், உதடு மற்றும் முகத்தை சுற்றி இதை போட வேண்டும். எந்த வகையான மேக்-அப்பாக இருந்தாலும், போடும் முன்னர் முகம் சுத்தமாக இருப்பது அவசியம்.

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?

 * முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதிலும் சோப் அல்லாத ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

* பின் மென்மையான மற்றும் சுத்தமான துணியை வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.

 * அடுத்து ஈரப்பதம் தரும் க்ரீமை தடவி, சருமத்தில் அது காயும் வரை விட வேண்டும்.

 * காய்ந்தவுடன் பிரைமரை தடவ வேண்டும். அதிலும் முகத்தில் மேக்-அப் அதிக நேரம் தங்காத இடத்தில் கவனமாக பூச வேண்டும். கண் இமை, உதடு மற்றும் தாடை போன்ற இடங்களில் அதிக கவனம் கொண்டு பூசவும்.

* பிறகு முகம் முழுவதும் பூச வேண்டும். பிரைமரானது நன்கு முகத்தில் காய்ந்தவுடன், ஃபௌண்டேஷன் க்ரீம் (foundation cream) பூச வேண்டும். பிறகு பாருங்கள் நீங்கள் தேவதை தான்.

உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்...!



உலகில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்சித்திருப்பார்கள்.

இருப்பினும் எந்த பலனும் கிடைத்ததாக இருக்காது. ஆனால் தினமும் தேன் மற்றும் பட்டை நீரை குடித்து வந்தால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் பருமனானது குறைந்துவிடும் அதிலும் இதனை இரவு மற்றும் காலையில் குடித்து வர வேண்டும்.

இப்போது அந்த தேன் மற்றும் பட்டை நீரை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.

 உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர் .

தேவையான பொருட்கள்:

தேன் - 2 டீஸ்பூன்

 பட்டை - 1 டீஸ்பூன்

 தண்ணீர் - 1 கப்

செய்முறை:

 * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்க கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

 * பின் அதில் பட்டையை போட்டு, வெதுவெதுப்பாகும் வரை தனியாக மூடி வைக்க வேண்டும்.

 * நீரானது வெதுவெதுப்பானதும், அதில் தேன் சேர்த்து கலந்து, அதில் பாதியை இரவில் படுக்கும் முன்பும், மீதியை மூடி வைத்து, மறுநாள் காலையில் எழுந்தும் குடிக்க வேண்டும்.

குறிப்பு:
காலையில் குடிக்கும் போது அதனை சூடேற்ற வேண்டாம்.

 
back to top