.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 17, 2014

விஜய் டுவிட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள்...?





நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ‘ஜில்லா’ படம் வெற்றி பெற்றது பற்றி உங்கள் கருத்து?

பதில்:– ‘ஜில்லா’ படம் பெரிய வெற்றி படமாக காரணமாக இருந்த எனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே:– தமிழ் படஉலகில் உடம்பை வருத்தி கடுமையாக உழைக்கும் நடிகர் யார்?

ப:– சீயான் விக்ரம்.

கே:– உங்கள் ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதே?

ப:– தயவுசெய்து இதுபோன்ற தகராறுகளில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற மோதல்கள் ஆரோக்கியமானது அல்ல.

கே:– ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:– உங்கள் வேலையை நன்றாக செய்யுங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கே:– மோகன்லாலுடன் நடித்தது பற்றி?

ப:– மோகன்லாலுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. மலையாள படமொன்றில் அவருடன் இணைந்து நடிக்க ஆசை.

கே:– இந்தி படத்தில் நடிப்பீர்களா?

ப:– நமக்கு எப்பவும் நம்ம நாடுதான்னா...

கே:– உங்களை எதிர்க்கும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள்?

ப:– அவர்களையும் நான் விரும்புகிறேன்.

இவ்வாறு விஜய் கூறினார்.

0 comments:

 
back to top