.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 17, 2014

இசைக்கு மட்டுமே தனது திரை உலக பணி..!


இளம் இசை அமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது . நடிக்க வரும் பல வாய்ப்புகளை தட்டி கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரை உலக பணி  என்று திட்ட வட்டமாக இருக்கும் அனிருத் , அதை உரக்க சொல்லியும் வருகிறார் . "ஆக்கோ" _ சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்து ,கேட்டு வியந்த கதை . தன்னுடைய பங்களிப்பு ஒரு இசை அமைப்பாளராக மட்டுமே , என்று கூறியதோடு மிக சிறந்த பாடல்களை இசை அமைத்து கொடுத்து  இருக்கிறார்.

இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குனர் ஆ .ஷ்யாம் மாரும்  தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில்  அனிருத்தை பிரதான படுத்தி கசைளவ டழழம ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே  அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.

இந்த படத்தின் தலைப்பு மிகவும் வித்தியாசமாக  இருக்கிறது. "ஆகோ" என்றால் ஆர்வ கோளாறு . மூன்று ஆர்வ கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் சாரம்சமே "ஆர்வ கோளாறு"  படத்தின் கதை  என்று கூறும் இயக்குனர் ஷ்யாம்,  ஆக்கோ நகைசுவை கலந்த ஒரு யஉவழை% படம். இது எந்த குறிப்பிட்ட வயதினரையோ, வகுப்பினரையோ கவர மட்டுமே எடுக்க பட்ட படமல்ல . எல்லோரையும் எப்போதும் கவரும் படம் இது. அனிருத்தின் பாடல்கள் 2014 ஆண்டின் மிக சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார்.

0 comments:

 
back to top