.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் எண்ட்ரி..!!!



மோகன்லால் அளித்த விருந்துக்கு திடீர் எண்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

1980ம் ஆண்டுகளில் நடித்து அப்போது டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி விருந்துண்டு மகிழ்வது வழக்கம்.

தமிழ்நாட்டில் சுஹாசினி, லிஸி, குஷ்பு, ஸ்ரீப்ரியா ஆகியோர் இந்த விருந்தை நடத்தினர். ஆந்திராவில் சிரஞ்சீவியும், கன்னடத்தில் அம்ரிஷூம் நடத்தினர்.

இந்த ஆண்டு மோகன்லால் நடத்தினார். 80களில் பிரபலமாக இருந்த அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ரஜினியையும் அழைத்தனர்.

அவர் நான் கோச்சடையான் பணியில் பிசியாக இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்திருந்தாராம்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மோகன்லால் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த டின்னருக்கு 80களில் டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அந்த விருந்திற்கு யாரும் எதிர்பாராத வகையில் வந்தார் ரஜினி. விருந்து முடியும் வரை அவர்களோடு இருந்து ஜாலியாக சிரித்து பேசிவிட்டு கிளம்பி விட்டாராம்.

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!



இந்தியாவின் அதிகமாக பணி வாய்ப்புகளை வழங்கி வரும் இந்திய ரயில்வே, ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 659
துறைவாரியான காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின் அடிப்படையில் 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிசிகல் மெஷர்மெண்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் ஆகிய நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும். பின்னர் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனை போஸ்டல் ஆர்டர் வாயிலாக கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் குறித்த விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!



கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும்.

இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு.

இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும்.

 இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். இதே போல் மவுஸை வைத்து ஒரு பெரும் புரட்சி செய்யும் டெக்னாலஜி பொருளை நான் இன்னும் சில நாட்களில் லான்ச் செய்ய உள்ளேன்.

ஜில்லா & வீரம் படங்களின் லாப நஷ்டக் கணக்கு - சில குறிப்புகள்..!



சும்மா இருப்பதே சுகம் … அதிலும் நான் மற்றும் என்னை போன்ற சில விவரம் தெரிந்த சினிமா மனிதர்கள் யாரையும் பகைத்துகொள்ள வேண்டாம் என நினைக்கும் சில பத்திரிகை நண்பர்களும் சும்மா இருப்பதே சுகம் … யாருக்கு என கேட்கிறீர்களா … யாருக்கோ .. யார் யாருக்கோ… விதி நான் இன்று சும்மா இருப்பதாக இல்லை

1. ஜில்லா திரைப்படம் யார் யாருக்கு லாபம் … யார் யாருக்கு நஷ்டம்

2. வீரம் திரைப்படம் யார் யாருக்கு லாபம் யார் யாருக்கு நஷ்டம்

3. ஏன் உண்மைகள் வெளி வருவதில்லை

4. என்று மாறும் இந்த நிலை

இதுதான் இன்றைய கருத்துகள். உண்மை என்பதால் சிலருக்கு சுடும் .. சிலருக்கு சுகம்.

ஜில்லா கல்லா கட்டவில்லை .. மினிமம் காரண்டீ (minimum guarantee) முறையில் திரையிட்ட அனைவருக்கும் நஷ்டம் … நிச்சயம் …பல வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டம்.(இதே கதை வீரத்துக்கும் பொருந்தும் .. ஆனால் விலை சற்றே குறைவு என்பதால் நஷ்டமும் குறைவு. ..

அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரி முழுமையாக வரவில்லை .. வரி ஏய்ப்பில் நிறைய திரை அரங்குகளுக்கு பங்கு உண்டு .. அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வரவுக்கு வாய்ப்பு உண்டு.

லாபம் யாருக்கு என கேட்டால் … ஜில்லா படத்தில் தயரிப்பாளருக்கு நல்ல லாபம். நடிகர் விஜய் முதல் அனைத்து நடிகர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் லாபம் . சில திரை அரங்கு தவிர பல திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் …

விளம்பர நிறுவனங்களுக்கும் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் லாபம் . படம் முழு திருப்தி தராததால் 300 500 என காசு கொடுத்து வாங்கிய ரசிகர்களுக்கு நஷ்டமோ நஷ்டம்…

வீரம் திரைப்படத்தில் தயரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லை … வினியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை .. ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் இல்லை …ஆனால் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் .
வரி ஏய்ப்பு செய்வதில் ஜில்லாவுக்கு இணையாக வீரமும் உண்டு ..

ஏதோ இரு படங்களுக்கும் வரி உண்டு என முடிவு செய்ததால் அரசாங்கத்துக்கு கொஞ்சமாவது வருமானம் வந்தது..

சரி இதெல்லாம் உண்மையாக இருக்குமானால் … ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை

சிறு பத்திரிகைகளை சிறிய விலைக்கும் பெரிய பத்திரிகைகளை பெரிய விலைக்கும் யாராவது வாங்கி விடுகிறார்களா… யாமரியேன் பராபரமே..

என்று மாறும் இந்த நிலை …

மக்கள் அதிக விலைக்கு டிக்கட் வாங்க மாட்டோம் என முடிவு எடுத்தால்…

திரை அரங்கு உரிமையாளர்கள் கருணை வைத்தால் …

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் அரசாங்கம் தியேட்டரிலும் கண் வைத்தால் ..

பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டால்…

ஊடகங்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால்…

நல்ல திரைப்படங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் ..

 
back to top