.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, May 30, 2013

இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை - 'ரோபோ' ஜெல்லி மீன்`










                கடல் கண்காணிப்பு பணியில் 'ரோபா' ஜெல்லி மீனை ஈடுபடுத்தி இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

 



              அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஷசாங் பிரியா. பிளாக்ஸ்பர்கை சேர்ந்த இவர் விர்ஷினியா தொழில் நுட்ப கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் பேராசிரியராக பணிபுரிகிறார்.







             இவர் தலைமையிலான குழுவினர் ரோபோ எந்திர ஜெல்லி மீன் தயாரித்துள்ளனர். 5 அடி 7 இஞ்ச் நீளமும், 170 பவுண்ட் எடையும் கொண்டது. இதற்கு சைரோ என பெயரிட்டுள்ளனர்.

 






               எந்திரத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஜெல்லி மீன் தானாக சுதந்திரமாக இயங்க கூடியது. இதன் மூலம் கடல் பகுதியை மிகவும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இது உளவாளியாக செயல்படுவதால் கடலுக்குள் புதிதாக நுழைபவர்கள் பற்றியும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை, கடல் மட்டத்தின் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.



மொழிகள் தொடர்பான தகவல்கள் - உங்களுக்கு!








                  உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன. 

 

               உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்
.





                  உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி. 




                உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும். 




                 உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. 





                 ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.


 



Wednesday, May 29, 2013

அணு மூலக்கூறு உள்பகுதியை முதன் முறையாக போட்டோ எடுத்த விஞ்ஞானிகள்!








                              முதன் முறையாக அணு மூலக்கூறு உட்பகுதியை படமெடுத்து நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்ர் புதிய சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.!.





                   இந்த உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை.இந்த அணுக்களை ஒருபோதும் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 





                      அப்படி பிரிக்கப்பட்ட அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் எர்னெஸ்ட் ருதர்போர்ட் என்பவரே இது போன்று அணுவை வெற்றிகரமாக பிரித்ததால் அணுப் பெளதிகவியலின் தந்தை என்று கருதப்படுகின்றார்.அத்துடன் இவரை இரண்டாம் நியூட்டன் எனறும் அழைக்கிறார்கள்.











                        இந்நிலையில் பிரிக்கப்பட்ட அணு மூலக்கூறின் உள் பகுதியின்  வடிவமைப்பை யாராலும், எந்த சூழ்நிலையிலும் இதுவரை போட்டோ எடுக்க முடியவில்லை. ஏனெனில் அணு சோதனையின்போது அவற்றின் துகள்கள் உடனடியாக அழிந்துவிடும்.






                       ஆனால், சமீபத்தில் நடந்த சோதனையின்போது நெதர்லாந்து விஞ்ஞானிகள் லேசர் கருவிகள் மற்றும் மைக்ராஸ்கோப் உதவியுடன் ஹைட்ரஜன் துகள்களை பார்த்தனர். இதற்கு முன்பு இதுபோன்ற துகள்களை பார்த்ததில்லை.











                       எனவே, அவற்றின் உள் அமைப்பை உடனடியாக போட்டோ எடுத்தனர். இதற்காக அவர்கள் 20 ஆயிரம் மடங்கு பெரிதாக காட்டும் விசேஷ லென்சையும், மிகப் பெரிதாக காட்டும் மைக்ராஸ்கோப்பையும் பயன்படுத்தினார்கள்.




                      தற்போது அணு மூலக்கூறின் உள் அமைப்பை போட்டோ எடுத்ததன் மூலம் எலெக்ட்ரானிக்சின் புதிய அமைப்பை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




Amazing! First ever photograph inside a hydrogen atom:-
 


               Scientists have captured the first ever photo of an electron’s whizzing orbit within a hydrogen atom, thanks to a unique new microscopy technique.


BE., படிப்பு ஆன்லைனில் வழங்குகிறது - அண்ணா பல்கலைகழகம்!









                         இப்போதெல்லாம் பட்டபடிப்புகள் ஆன்லைனில் வந்தாகிவிட்டது. எந்த டிகிரி வேண்டுமானாலும் ஆன்லைனில் கற்கலாம். 




                        என்றாலும் மருத்துவ மற்றும் பொறியாளர் படிப்பு மட்டும் இந்த ஆன்லைனில் குதிரை கொம்பாக இருந்த கல்வியாகவே இருந்தது. 




                      இந்நிலையில் இப்போது இன்ஜியரிங் கல்வியையும் ஆன்லைனில் படிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.! 








                   அதுவும் பிளஸ் 2 முடித்த எவரும் இப்போது கூட ஆன் லைனில் இந்த பட்ட படிப்பை தொடரலாம். இது ஒரு ஹேப்பி நியூஸ் தானே





BE Engineering Degrees NOW available ONLINE through Anna University:-



                     There’s good news for working professionals and those who missed out on an opportunity to do engineering. Anna University plans to offer open learning, allowing working professionals or those who have passed their higher secondary (class 12) to do an engineering course online and get a degree.


 
back to top