.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, August 19, 2013

என்ஜினில் இருந்து வெண்ணிற புகை வெளியேறியதால் ஜி.எஸ்.எல்.வி. டி -5 ராக்கெட் கவுன்ட் டவுன் திடீர் நிறுத்தம்!

ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் தளத்தில் இருந்து இன்று மாலை 4.50 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.


114 டன் எடையும், 160 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை, இன்று விண்ணில் செலுத்துவதற்கு ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் இருந்தபோது திடீரென கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது.என்ஜினில் இருந்து வெண்ணிற புகை வெளியேறியதால் கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.


 இந்த ராக்கெட் மூலம் ஜிசாட் –14 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளும், இந்தியாவில் தகவல் சேவை வழங்குவதற்காக 6 கே.யூ.பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும், 6 விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும் செலுத்தப்படுத்த இருந்தது குறிப்பிடத்தக்கது.


       ISRO’s GSLV-D5 launch from Sriharikota put on hold
***************************************************************

 he much awaited launch of India’s geosynchronous satellite launch vehicle-D5 (GSLV-D5), with communication satellite GSAT-14 as payload, from Sriharikota rocket port in Andhra Pradesh was put on hold on Monday.GSLV-D5, one of the most crucial launches for the India Space Research Organisation (ISRO), was scheduled to blast-off at 4.50 pm but the space agency put it on hold at around 4 pm.Official announcement on the reasons behind move is awaited.


Sunday, August 18, 2013

பொறியியல் பட்டதாரிகளுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணி வாய்ப்பு!



மத்திய அரசுக்கு சொந்தமான கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Project Officer (Mechanical -12, Electrical – 06, Electronics-02, Civil-02 )

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். அத்துடன் கப்பல் கட்டும் தளம், மரைன் இன்ஜினியரிங் பயிற்சி நிலையம், கனரக பொறியியல் தொழிற்சாலையில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 பணி காலம்: 2 வருடம். ஒப்பந்த அடிப்படையிலானது.


 உதவித்தொகை: பயிற்சியின்போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.22,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 22,500 வீதம் வழங்கப்படும். பணியின் நேரத்தை விட கூடடுதலாக வேலை செய்தால் மாதம் ரூ.3,000 வரை OT சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு மையம்: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்


மேலும் முழுமையான தகவல்களை அறிய www.cochinshipyard.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2013 ஆன்லைன் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 27.08.2013

Saturday, August 17, 2013

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் - pdf download




சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்



+2 தேர்ச்சியுடன் D.T.Ed முடித்தவர்களுக்கு சென்னை ராணுவ குடியிருப்பில் பணி வாய்ப்பு!



சென்னை பல்லாவரத்தில் உள்ள St. Thomas Mount Cantonment Board -ல் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரகவேற்கப்படுகின்றன.

பணி: Secondary Grade Teacher

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200

வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் D.T.Ed முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.


 16 - vazhikatti Cantonment


பணி: உதவி மருத்துவ அதிகாரி

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.15,600 – 39,100

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: எம்பிபிஎஸ் முடித்து ஒரு வருட Intership முடித்திருக்க வேண்டும். மருத்துவ படிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.


பணி: Lower Division Clerk

 காலியிடங்கள்: 03

சம்பளம்: ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் தட்டச்சு செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும். M.S. Office முடித்திருப்பது விரும்பத்தக்கது.

பணி: Health Inspector

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் Sanitary Inspector பாடத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (அரசு மருத்துவதுறை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்)

வயதுவரம்பு: விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 26.07.2013 தேதிப்படி நிர்ணயிக்கப்படும். அனைத்து பிரிவினருக்கும் உச்ச வயதுவரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbstm.org.in   or pdf file  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Chief Executive Officer, Cantonment Board, St.Thomas Mount, Chennai -16.

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2013

 
back to top