.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 18, 2013

கொத்தமல்லி கீரையின் மருத்துவ குணங்கள்..



News Service


















கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.


வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.

கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்

ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.

இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.

பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

தோல் நோய்களை குணமாக்குகிறது

மன அமைதி, தூக்கம் கொடுக்கும்

4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.

வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.

தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.

தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

 

ஜில்லா விஜய் சொல்ல வந்த கதை!



தலைவா படத்தின் வெற்றியைக் கொண்டாடக்கூட 'ஜில்லா' படத்திற்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் விஜய். அவரை இயக்கிக்கொண்டிருப்பவர் டைரக்டர் நேசன். ஷூட்டிங் இடைவேளைக்கு நடுவில் அவரைச் சந்தித்து 'ஜில்லா'வின் பல்ஸ் பார்த்தோம்.


விஜய் இப்போது தமிழில் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர் அவரது கால்ஷீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது?

'வேலாயுதம்' படமத்தின் சூட்டிங் சுமார் 1.5 ஆண்டுகள் நடைபெற்றது. அப்போது விஜய்யுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சார் உங்களுக்காக 2 கதைகள் வைத்து இருக்கிறேன் என்று கூறி, 2 கதையையும் சொன்னேன். அதில் அவர் டிக் அடித்த கதைத் தான் ஜில்லா. இக்கதையை கேட்டவுடன் கண்டிப்பாக நான் தான் இப்படத்தினை செய்வேன் என்று கூறிவிட்டார். அப்போது அவர் கொடுத்த நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் கழித்து 'ஜில்லா' படப்பிடிப்பினை துவங்கி இருக்கிறோம்.”


விஜய் ரசிகர்களுக்கு எந்த விதத்தில் 'ஜில்லா' ஸ்பெஷலாக இருக்கும்?

“தலைவா படத்தைத் தொடர்ந்து இந்த படம் வெளிவருவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதை எல்லாம் நிறைவேற்றும் வகையில் ஜில்லா இருக்கும். கலர்புல் பாடல்கள், பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள், செண்டிமெண்ட் என ஒரு கலர்புல் கலவையாக இந்தப் படம் இருக்கும்.

விஜய் - மோகன்லால் காம்பினேஷனை எப்படி பிடிச்சீங்க?

'ஜில்லா' படத்தோட கதையைக் கேட்டதும், 'நாம இதை பண்றோம்”ன்னு விஜய் சொல்லிட்டார். படத்தில் அவருக்கு சமமான ஒரு பாத்திரத்திற்கு யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். ஒரு நாள் மோகன்லால் சார் நடிச்சா நல்லா இருக்குமே என்று தோன்றியது. விஜய்யிடம் சொன்னேன் சூப்பர் சாய்ஸ் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார்.
எனக்கு மோகன்லால் என்ன சொல்லுவாரோ என்ற பயம் இருந்தது. கேரளாவிற்கு சென்று சந்தித்து கதையைச் சொன்னேன். உடனே நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். விஜய் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், கூடவே மோகன்லாலும் நடிக்கிறார் என்றவுடன் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. ரெண்டு பேரையும் வைத்து காட்சிகள் இயக்கும் வேளையில், மானிட்டரைப் பார்க்கும் போது 'ஜில்லா' கண்டிப்பாக வெற்றிப் படம் தான் என்று என் மனது எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

படம் எப்போது ரிலீஸ்?

படம் 60 சதம் வரை முடிந்து விட்டது. இன்னும் படப்பிடிப்பு நடத்த நிறைய காட்சிகள் இருக்கிறது. அனைத்தையும் முடிந்தவுடன் தான் படம் எப்போது வெளியாகும் என்பதை முறைப்படி அறிவிப்போம். இணையத்தில் வரும் 'ஜில்லா' வெளியீடு குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை என்பதினை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

'துப்பாக்கி' ஹிட் ஆனதால்தான் இந்தப் படத்திலும் காஜல் அகர்வாலை ஹீரோயினாக போட்டீர்களா?

“அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. விஜய் கிட்டதட்ட அனைத்து நாயகிகளுடன் நடித்து விட்டார். அவருடன் நடிப்பு, டான்ஸ் என அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த வகையில் காஜல் அகர்வால் எனக்கு பொருத்தமாக இருந்தார். இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் கண்டிப்பாக 'துப்பாக்கி' படத்தை விட பேசப்படும்.

'ஜில்லா' கதை தான் என்ன?

“இப்போதைக்கு கேட்காதீர்கள். அதே நேரத்தில் இணையத்தில் இந்தப் படத்தின் கதை என்று இப்பவே 10 கதைகளை எழுதி தள்ளிட்டாங்க. எதுவுமே உண்மையில்லை. அவங்களுக்கு எல்லாம் நான் சொல்றது 'நீங்க எழுதின கதையை விட.. எதிர்பாக்குறதை விட 'ஜில்லா' இரண்டு மடங்கு இருக்கும்' என்பது மட்டும் உண்மை.


ஜி.எஸ்.எல்.வி. டி- 5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் பேட்டி

ஜி.எஸ்.எல்.வி. டி- 5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் பேட்டி

 

திரவ எரிபொருள் கசிவால் விண்ணில் செலுத்துவது ரத்து செய்யப்பட்ட ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் தெரிவித்தார். 



முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜனிக் என்ஜின் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் கடந்த மாதம் 19-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுவதாக இருந்தது. 



இந்த ராக்கெட் மூலம் ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளும் இந்தியாவில் தகவல் சேவை வழங்குவதற்காக 6 கே.யூ.பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும், 6 விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும் செலுத்தப்படஇருந்தன. 



விண்ணில் செலுத்தும் கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2-வது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று திரவ எரிபொருள் கசிந்தது. அதனால் ராக்கெட் செலுத்துவது ரத்து செய்யப்பட்டது.



இந்த கசிவு சரிசெய்யப்பட்டு பின்னர் ஒரு நாளில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.



இந்த நிலையில் நேற்று சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் வருடாந்திர தொழில்நுட்ப விழா நடைபெற்றது. அந்த விழாவை இஸ்ரோ விஞ்ஞானி எம்.ஒய்.எஸ்.பிரசாத் தொடங்கி வைத்தார். 



அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



கடந்த மாதம் 19-ந்தேதி நிறுத்தி ராக்கெட் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டபிறகு அதில் உள்ள ஜிசாட்-14 என்ற செயற்கை கோள், ராக்கெட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. கசிந்த 2-வது நிலை எரிபொருள் பகுதி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



முதல் நிலை எரிபொருள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கு உரிய அனைத்து பணிகள் முடிவடைந்து, நிறுத்தி வைக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு விஞ்ஞானி பிரசாத் தெரிவித்தார்.

புலி...குரங்கு...மனிதன்.(நீதிக்கதை)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDupv-MIPfYlOfgRfVCKab8sF6ht-uaNtC2fZQM3KX4JrRAA-KQcbIkhE2tPTPU6_xmWU9BrHiWUfVIP6UeXxnVeqs5CSR0lwexxpj10hKj8V_jpXnYn-GTgTuYTQh54P9jRuiIFF4ZJKB/s1600/tiger+2.bmp


 
அருண் ஒரு நாள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான்.கிட்டதட்ட இருட்டும் சமயம்.
 


அந்த சமயம் புலி ஒன்று அவனை பார்த்து துரத்த ஆரம்பித்தது...


அவன் உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.வந்தவனுக்கு அந்த மரத்தில் வசித்த குரங்கு ஒன்று இடமளித்து..அவன் பசியையும் தீர்க்க
பழங்களைப் பறித்து கொடுத்தது.
 


மரத்தின் கீழே பசியோடு இருந்த புலி குரங்கிடம் ' குரங்கே அந்த மனிதனை நீ கீழே தள்ளு ...எனக்கு பசி ' என்றது.
 


ஆனால் குரங்கோ ..'இவன் என்னை நம்பி வந்தவன்.அதனால் தள்ள மாட்டேன்.நம்மை நம்பியவர்க்கு துரோகம் செய்யக்கூடாது' என மறுத்தது.
 


பிறகு குரங்கு தூங்க ஆரம்பித்தது...அப்போது புலி..'மனிதனே...எவ்வளவு நேரமானாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன் ..எனக்கு கொள்ளைப் பசி.
 

அந்த குரங்கையாவது தள்ளி விடு ..நான் சாப்பிட்டுவிட்டு செல்கிறேன் ' என்றது.


உடனே அருண் .. தூங்கும் குரங்கை தள்ளி விட ..புலி அதை தின்று விட்டு மறைந்தது.


தன்னை நம்பியவனை காப்பாற்றியது குரங்கு ..தனக்கு உதவிய குரங்கை தன்னை காத்துக்கொள்ள தள்ளிவிட்டு ..நம்பிக்கை துரோகம் செய்தான் அருண்.


நாம்..இந்த கதை மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது - நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது.ஆபத்துக்கு நமக்கு உதவியவர்களின் நற்செயலை மறக்கக் கூடாது. 
 

 
back to top