.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, October 12, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 2...!

                   கடந்த பதிவில் ஏழாம் நூற்றாண்டு வரை உள்ள உலக வரைபடங்களைபார்த்தோம் இந்த பதிவில் எட்டாம் நூற்றாண்டு வரைபடத்திலிருந்து பார்ப்போம் அதற்கு முன் நண்பர்கள் சிலர் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு விடையளித்து விட்டு 
தொடர்கிறேன் ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்கும் தோன்றியிருக்கும். 


உலகின் முதல் வரைபடம்னு குறிப்பிட்டிருக்கும் வரைபடத்தில் உலகம் முழுவதும் இல்லையே? என்பதே அந்த கேள்வி.


விடை:   மனித நாகரிகம் முதன் முதலாக தோண்டியதாக கருதப்படும் மெசபடோமியாவை (பாபிலோனியர்கள்) சுற்றி மட்டுமே அந்த வரைபடம் இருந்திருக்கும் ஏனெனில் மனிதன் உலகம் என்று நினைத்தது அந்த பகுதியை மட்டுமே. மனிதன் பயணம் செய்ய செய்ய உலகம் எவ்வளவு பெரியது என்பதை அறிந்தான், உணர்ந்தான்.


எட்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:










Albi or Merovingian இன மக்களால் வரையப்பட்ட உலக வரைபடம் வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை

 


   திபெத்தியர்களால் கி.பி 733 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்.


ஒன்பதாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




                   .

அரேபியர்களால் கி.பி 804 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம் 




பெர்சியா நாடு Balkhi என்பவரால் கி.பி 816 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக காலநிலை வரைபடம்.


பத்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




Anglo-Saxon Cottonian களால் கி.பி 900 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்





அரேபியர்களால் கி பி 980 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்

பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து அடுத்த பதிவில் தொடர்வோம்.....

ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் -புதிய சட்டம் அமலாகிறது!


மக்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால் திருட்டு நகைகளை அதிகாரபூர்வமாக கடைகளில் விற்கும் போக்கு குறையும் என்பதுடன் தங்கம் வாங்குதல் மற்றும் நகை விற்பனை தொடர்பான தில்லுமுல்லு கணக்குகள் முடிவிற்கு வரும் என அரசு கருதுகிறது.

12 -  jewellery gold.

 

தற்போது தங்க நகைகளின் தரத்திற்கு இந்திய தர நிர்ணய கழகம் (பீ.ஐ.எஸ்.,) ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்குகிறது. நகைகளில் பதிக்கப்பட்டுள்ள இந்த முத்திரையில் தங்கத்தின் தூய்மையை குறிக்கும் எண் (22 காரட்டிற்கு – 916), விற்பனையாளர் குறியீடு வருடத்தை குறிக்கும் சங்கேத எழுத்து உள்ளிட்டவை அடங்கியுள்ளன.


இவற்றுடன் மேலும் பல விவரங்களை மக்கள் படித்து தெரிந்து கொள்ளும் நோக்குடன் ‘நகை சான்றிதழ்’ திட்டத்தை செயல்படுத்த பீ.ஐ.எஸ்., திட்டமிட்டுள்ளது. 



இதன் முதற்கட்டமாக, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களில் வரும் புத்தாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் படி மக்கள் வாங்கும் ஒவ்வொரு ‘ஹால்மார்க்’ நகையுடன் அதன் தரம், பயன் படுத்தப்பட்ட இதர உலோகம், பதிக்கப்பட்டுள்ள கற்கள் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட சிறிய அட்டை வழங்கப்படும்.இந்த சான்றிதழ் அட்டையில், குறிப்பிட்ட நகையின் படமும் இடம் பெற்றிருக்கும்.



இத்தகைய நடைமுறை நகை மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும் என்பதோடு சுலபமாக மறு விற்பனைக்கும் உதவும்’ என பீ.ஐ.எஸ்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த விதிமுறை அமலுக்கு வரும்பட்சத்தில் குறிப்பாக பெரு நகரங்களில் கடைகளில் திருட்டு நகைகளை விற்பது கட்டுப்படுத்தப்படும். சான்றிதழ் இருந்தால் தான் நகைகளை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை ஏற்படும்.


அதே சமயம் கடத்தி வரப்படும் நகைகளை விற்பதும் குறையும். இதனால் நகைக் கடைக்காரர்கள் தாங்கள் வாங்கும் தங்கம், தயாரித்த நகைகள் அவற்றின் விற்பனை குறித்த விவரங்களை துல்லியமாகவும், வெளிப்படையாகவும் பராமரிக்கும் நிலை ஏற்படும்.



தற்போது இந்த திட்டம் பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வரஉள்ளது. இதர பகுதிகளில் நடைமுறைப்படுததப்பட மாட்டாது.எனினும் இந்த புதிய விதிமுறையால் பெரு நகர நகைக் கடைக்காரர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வர்த்தகம் இதர சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று விடுமோ என அஞ்சுகின்றனர்.

இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது - இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதற்கு!!


பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.

12 - varon arora u n award winner

 


உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்கள் 10 பேரை, சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்து ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


18 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களே பங்கேற்க முடியும். இந்த விருதுக்கு தேர்வு பெற்ற 10 பேரின் பெயர் விவரத்தை ஐ.டி.யூ. அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாமாடோவின் தோரே நேற்று அறிவித்தார்.
இந்த விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்வு பெற்றார். தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.


மேலும் வியட்னாம், டிரினிடாட் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் தேர்வாகி இருக்கிறார்கள். வெற்றி பெற்ற 10 பேரும் நவம்பர் மாதம் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Indian youth wins UN award

*********************************************
 


A young man from India is among 10 people from around the world selected for a prestigious United Nations award in recognition of their work as entrepreneurs and use of technology to change the world. 

நம் மரணத்தை கணித்து சொல்லும் ‘கடிகாரம்’!


ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை அவர் மரணமடையும் நேரத்திற்கு நெருங்கிய செகன்ட வரை கணித்து கூறக்கூடிய கைக்கடிகாரமொன்றை ஸ்வீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். மேலும் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


ஆனால், தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌ கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூற்ப்படுகிறது.




12 - tec deathwatch-

 


பிரெடிக் கொல்டிங் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம் ‘மரண கைக்கடிகாரம்’ என அழைக்கப்படுகின்றது. இந்தக் கைக்கடிகாரம் மரணமடையப் போகும் நேரத்தை கணித்துக் கூறுவது மட்டுமல்லாது மரணமாகும் கணத்தை கவுண்ட்- டவுன் செய்யவும் ஆரம்பிக்கிறது.


இந்த கைக்கடிகாரம் அதனை அணிந்துள்ளவரின் வயது, மருத்துவ பிரச்சினைகள் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கங்கள் என்பன தொடர்பான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கியுள்ளது. அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பயன்பாட்டாளர் பதிலளித்ததும் அது அத்தகவல்களை பகுப்பாய்வு செய்து அவர் மரணமடையும் தருணத்தை கணக்கிட்டு எண்ண ஆரம்பிக்கிறது. இந்த ரிக்கர் கைக்கடிகாரத்தின் விலை 59 அமெரிக்க டாலராகும். இந்த கைக்கடிகாரமானது எஞ்சியுள்ள நம் வாழ்வின் அளவை அறிந்து அதனை பயனுள்ளதாக வாழ பயன்பாட்டாளர்களுக்கு உதவும் என பிரெடிக் கூறுகிறார்.


அத்துடன் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.ஆனால், தற்போதுள்ள முறையில் 
இறந்த நேரம் உத்தேசமாகவே  ‌கொடுக்கப்படுகிறது. 


இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூறுகிறார்.

 
back to top