|
Monday, October 28, 2013
வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத் - சுற்றுலாத்தலங்கள்!
7:31 AM
Unknown
No comments
கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு!
7:25 AM
Unknown
No comments
கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது.
கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.
கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.
1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.
ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )
7:17 AM
Unknown
No comments
அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.
வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.
அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய் வானத்தில் பறக்கும் பறவைகளை உன்னால் பிடிக்க முடியாது' என்றார்.
அதற்கு வேடன்..' ஆம்..ஒற்றுமையுடன் அவை பறக்கும் வரையில் அவற்றை என்னால் பிடிக்க முடியாது.ஆனால் அவை ஒற்றுமையுடன் எவ்வளவு தூரம் பறந்து செல்லும்...விரைவில் அவற்றின் ஒற்றுமை நீங்கிவிடும் ' என்றான்.
அதற்கேற்றாற்போல மாலை நேரம் வந்தது.வலையை தூக்கிக்கொண்டு பறந்த பறவைகள் ஒவ்வொன்றும் தன் கூடு இருக்கும் பக்கமே பிடிக்கவேண்டும் என அதனதன் திசையில் வலையை இழுத்தன....இதனால் வலை கிழிந்து வலையுடன் அவை கீழே விழுந்தன.
வேடனும் தான் நினைத்தது நடந்தது என மகிழ்ந்து பறவைகளை பிடித்து சென்றான்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு என்பதை பறவைகள் பின்னரே உணர்ந்தன..
2014 உலக கோப்பை டி20 முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் மோதல்!
7:13 AM
Unknown
No comments
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
2012, அக். 8ம் தேதி வரையிலான உலக டி20 தரவரிசையில் முதல் 8 இடத்தை பிடித்த அணிகள், சூப்பர் 10 சுற்றில் நேரடியாக இடம் பெற்றுள்ளன. மீதம் உள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டியில் (மார்ச் 16,21) மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இதில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளும் அடங்கும்.
இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும். மார்ச் 21ம் தேதி மாலை நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இறுதிப் போட்டி ஏப். 6ம் தேதி நடக்க உள்ளது. எல்லா போட்டிகளும் சிட்டகாங், தாக்கா, சைலெட் மைதானங்களில் நடைபெறும். இதே தேதிகளில் மகளிர் டி20 உலக கோப்பையும் நடக்க உள்ளது. அதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சூப்பர் 10 சுற்றில் (ஆண்கள் பிரிவு) இடம் பெற்றுள்ள அணிகள் : பிரிவு 1: இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, தகுதி அணி பி1. பிரிவு 2: இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தகுதி அணி ஏ1.