.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, November 17, 2013

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு!


கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீனத் தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக மக்கள் தொகை யில் முதல் இடத்தில் உள்ளது சீனா. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 18.5 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.


2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 22.1 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.1 கோடி முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு கிராமப்புற, நகர்புறம் இரண்டிலும் ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்று கொள்ள கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.


தற்போது முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் பார்டியின் 18 வது மத்திய குழு கூட்டம் கடந்த 9ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. இதில் 376 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


அவர்கள் ஒரு குழந்தை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதை தொடர்ந்து சீனா வில் நடைமுறையில் உள்ள ஒரு குழந்தை திட்டம் தளத்தப்படுவதாகவும், தம்பதி 2 குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சீன மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இன்டர்நெட்டை கலக்கும் கூகுள் விளம்பரம்(google adsense)!


இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த நண்பர்கள் இருவர் மீண்டும் சந்திப்பது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் இன்டர்நெட்டை கலக்கி வருகிறது. இரண்டே நாளில் இதுவரை 27 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.கூகுள் நிறுவனம் தனது சர்ச் இன்ஜினை பிரபலப்படுத்துவதற்காக எடுத்த விளம்பரம் அது. டெல்லியில் வயதான தாத்தா, தனது பேத்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.


ஒரு புத்தகத்தில் இருக்கும் பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவைக் காட்டி, அதில் இருக்கும் தனது பால்யகால நண்பனான யூசுப்பை பற்றி பேசுகிறார். லாகூரில் வசித்ததையும் நண்பனுடன் சேர்ந்து பட்டம் விட்டது பற்றியும், தான் வசித்த வீடு முன்பு மிகப் பெரிய இரும்பு கேட்டுடன் கூடிய பார்க் இருந்ததையும் சொல்கிறார். நண்பனுடன் சேர்ந்து அவனுடைய தந்தை கடையில் ஜஜாரியா என்ற ஸ்வீட்டை திருடி தின்றதையும் கூறிவிட்டு பெருமூச்சு விடுகிறார்.


கூகுள் சர்¢ச் மூலம் லாகூரில் வசிக்கும் தாத்தாவின் நண்பனை தேடுகிறார் பேத்தி. முதலில் பார்க்கை கண்டுபிடிக்கும் பேத்தி, லாகூரில் பழைய ஸ்வீட் ஸ்டால் எது என தேடி அதையும் கண்டுபிடிக்கிறார். பாஸல் ஸ்வீட் ஸ்டாலுக்கு போன் செய்கிறார். யூசுப்பின் பேரன் போனை எடுக்கிறார். அவரிடம் தனது தாத்தா பற்றியும் யூசுப் பற்றியும் சொல்லி அவரிடம் பேச முடியுமா எனக் கேட்கிறார். கடையின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் தாத்தாவிடம், ‘தாத்தா டெல்லியில் இருந்து உங்களுக்கு போன்’ எனக் கூறிவிட்டு போனை கொடுக்கிறான்.


Ôஉங்கள் பால்யகால நண்பன் பால்தேவின் பேத்தி சுமன் டெல்லியில் இருந்து பேசுகிறேன் என அறிமுகம் செய்து கொள்ளும் பேத்தி, இருவரும் சேர்ந்து ஜஜாரியா ஸ்வீட்டை திருடி தின்பீர்களாமே... தாத்தா சொன்னார்... உங்களுக்கு ஞாபகம் இருக்காÕ எனக் கேட்கிறார். பசுமையான பழைய நினைவுகளுக்குள் செல்லும் யூசுப், புன்னகைக்கிறார். முகத்தில் சந்தோஷம். இதைப் பார்க்கும் அவரின் பேரன், தாத்தாவை டெல்லி அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான். இந்திய விசா குறித்த விவரங்களை கூகுளில் தேடும் பேரன், பெட்டியில் துணியை அடுக்கி வைத்துக் கொண்டு, டெல்லிக்கு கிளம்புகிறான். மறுநாள் தாத்தாவும் பேத்தியும் ஒரு பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 1947ல் இந்தியாபாகிஸ்தான் பிரிவினையின் போது, ராத்திரியோடு ராத்திரியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா கிளம்பிவந்து விட்டதாகவும் தனது நண்பன் யூசுப்பை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறுகிறார் தாத்தா.


அடுத்த காட்சியில், விமானம் மூலம் டெல்லி வரும் யூசுப்பையும் அவரது பேரனையும் விமான நிலையத்தில் இருந்து டாக்சியில் அழைத்துவரச் சொல்கிறார் பேத்தி.பல்தேவ் வீடு. காலிங் பெல்லை அடிக்கிறார் யூசுப். கதவைத் திறந்த பல்தேவுக்கு அடையாளம் தெரியவில்லை. யார் எனக் கேட்கிறார். ஹாப்பி பெர்த் டே மை பிரண்ட் என யூசுப் கூறியதும், நடுங்கும் குரலில் யூசுப்... நீயா... நீயா... என பலமுறை கேட்டபடி, கண் கலங்கும் பல்தேவ், யூசுப்பை கட்டியணைத்துக் கொள்கிறார். அதோடு முடிகிறது விளம்பரம்.


வெள்ளிக்கிழமை தான் இந்த விளம்பரத்தை வெளியிட்டது கூகுள். யூ டியூப்பில் இடம் பிடித்த இந்த விளம்பரத்தை இரண்டே நாளில் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து லைக் போட்டுள்ளனர். நண்பர்கள் இருவரும் கட்டியணைத்துக் கொள்ளும்போது பார்ப்பவர்கள் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது விளம்பரம்.இந்தியா  பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வசிக்க வேண்டிய நிலைமை வந்தது.


மோசமான விளைவுகளை ஏற்படுத்திய இந்த பிரிவினை அப்போது காயத்தை ஏற்படுத்தினாலும், இன்னும் பலர் சொந்த பந்தங்களை, நட்புகளை இழந்து தவிக்கின்றனர். அந்த நினைவுகளை தூண்டும் வகையில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த லட்சக் கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆனாலும் விளம்பரத்தில் வருவதுபோல் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வளவு எளிதாக விசா கிடைத்துவிடாது.


 விசா வழங்குவதில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாக இரு தரப்பினருக்குமே அதிருப்தி இருக்கிறது. வர்த்தகர்கள், மூத்த குடிமக்கள், பிரிந்த குடும்பத்தினர், புனித பயணம் செய்வோர் ஆகியோருக்கு எளிதில் விசா வழங்கும் வகையில் கடந்த ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இருந்தாலும் விசா தாமதம் தொடர்கிறது.

கூகுள் நிறுவனம் மாணவர்களுக்காக கல்வி அப்பிளிக்கேஷன் வெளியீடு!




கூகுள் நிறுவனமானது தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது.


Google Play for Education எனும் இச்சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த அப்பிளிக்கேஷன்களை கிளவுட் முறையில் சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரொல்லா நிறுவனம் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அறிமுகம்!


மோட்டோரொல்லா நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 179 அமெரிக்க டாலர் விலை கொண்ட குவாட் கோர் ப்ராசசர் கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோரொல்லா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பெயர் மோட்டோ 'ஜி' என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் 8 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 179 அமெரிக்க டாலர்களாகவும், 16 ஜி.பி. மெமரியுடன் கூடிய மாடல் விலை 199 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது. கூகிள் உரிமை கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான மோட்டோரொல்லா அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், இந்திய சந்தையில் மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

மோட்டோ 'ஜி' ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 4.5-அங்குல HD கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 டிஸ்ப்ளே

1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர்

Adreno 305 ஜி.பீ. யூ

ரேம் 1GB

8GB and16GB சேமிப்பு வகைகள், விரிவாக்க கூடிய சேமிப்பு இல்லை,

5 மெகாபிக்சல் பின்புற கேமரா,


1.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,

ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன்,

இரட்டை சிம் variant

2070mAh பேட்டரி

Wi-Fi,

ப்ளூடூத்,

3G,

ஜிபிஎஸ்,

எ-ஜிபிஎஸ்,

GLONASS

 
back to top