.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் - காதல் உலகம் விமர்சனம்..!



நடிகர் : ஆர்யா

நடிகை : அனுஷ்கா

இயக்குனர் : செல்வராகவன்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத்

ஓளிப்பதிவு : ராம்ஜி


காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அதில் காதலை தழைக்க வைப்பதுதான் இரண்டாம் உலகம்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் ஆர்யா. தாய் இல்லாத அவர் உடல் நிலை சரியில்லாத தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத தந்தையை மிகவும் பொறுப்புடன் கவனித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுடன் ஆறுதலாக பழகிவருகிறார். இதே மருத்துவமனையில் டாக்டராக பணி புரியும் அனுஷ்கா இவரின் நல்ல செயல்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். தன் காதலை ஆர்யாவிடம் சொல்ல முடிவெடுக்கிறார். அதன்படி நண்பர்கள் துணையோடு ஆர்யாவிடம் காதலை சொல்கிறார்.

இந்த காதலை ஏற்க ஆர்யா மறுத்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த அனுஷ்கா, தன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். முதலில் அனுஷ்காவின் காதலை ஏற்க மறுத்த ஆர்யா, பின்னர் அடிக்கடி அவரை பார்த்தபோது, அவர் மீது காதல் வயப்படுகிறார். தன் காதலை அனுஷ்காவிடம் சொல்ல அவரையே சுற்றி வருகிறார்.

ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் திருமணம் நடைபெறாமல் நின்றுவிடுகிறது. இதனால் ஆர்யாவின் காதலை ஏற்றுக்கொள்கிறார் அவர். இருவரும் சந்தோஷமாக காதல் வாழ்க்கையை தொடங்கும் போது, அனுஷ்கா இறந்து விடுகிறார். இவை அனைத்தும் இயல்பாக நம் வாழும் உலகத்தில் நடக்கிறது.

இதேபோன்று இரண்டாம் உலகம் என்று ஒரு கிராபிக்ஸ் உலகத்தை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த உலகத்தில் காதல் என்ற ஒன்று கிடையாது. அதில் வாழும் மக்கள் அனைவரும் பெண்களை மதிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆணுக்கு பெண் அடிமை என்றும் அவர்களுக்கு எந்தவித மரியாதை தராமலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நவீன உலகத்தில் ஒரு பெண்ணை தெய்வமாக வழிப்படுகிறார்கள். அவருக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரியாதை. இங்கு அரசர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆணுக்கு பெண் அடிமை இல்லை என்று சுய கவுரவத்தோடு வாழும் பெண்ணாக அனுஷ்கா. துடிப்பான இளைஞரான ஆர்யா அங்கு அனுஷ்கா மீது காதல் கொள்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் அனுஷ்கா. இவர்களுக்குள் காதல் புரிய வைக்க, காதல் மலர, இயல்பான உலகத்தில் இருந்து அனுஷ்காவை பிரிந்து வாழும் ஆர்யாவை இரண்டாம் உலகத்திற்கு கொண்டு வருகிறார் பெண் கடவுள்.

நிஜ உலகத்தில் இருந்து இங்கு வரும் ஆர்யா, இரண்டாம் உலகத்தில் காதலே என்ன என்று அறியாத அனுஷ்காவிற்கு காதலை உணரவைத்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இரண்டாம் உலகத்தில் முதல் காதல் மலர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

இரண்டு கதாபாத்திமாக நடித்திருக்கும் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் வந்திருந்தாலும் ரசிக்கும் படியாக செய்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் இருவரும் மிரள வைக்கிறார்கள். ஆர்யாவின் உடல் அமைப்பு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு இல்லை.

காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அந்த உலகம் காதல் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லி, பின்பு அதில் காதலை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். எங்கெல்லாம் காதல் இல்லாமல் இருக்கிறதோ அந்த உலகத்திற்கு எல்லாம் ஆர்யாவை அனுப்பி காதலை மலர வைப்பது என்று முடிவெடுத்திருப்பதுடன் படம் முடிகிறது.

மொத்தத்தில் இரண்டாம் உலகம் காதல் உலகம்.

பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

 

உலகில் அதிகம் பயன்படுத்தபடுத்தப்படும் முக்கியமான சமூக இணையதளம் ஒன்று உண்டென்றால் அது பேஸ்புக் தளமாகத்தான் இருக்கும். அவ்வாறு பலரும் பயன்படுத்த காரணம் அத்தளத்தில் உள்ள வசதிகள், மற்றும் எளிமையாக பயன்படுத்தும் வழிமுறைகளே காரணமாக உள்ளது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதும்,மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டதுமான பேஸ்புக் தளத்திலிருந்து இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச

உங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக உங்கள் மொபைலிலிருந்து அழைத்துப் பேச பயன்படுகிறது ஓனஜ் என்ற   ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பயன்படுகிறது. நீங்கள் Android, Apple iPad, iPod touch என எந்த வகை மொபைல்களைப் பயன்படுத்தினாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எளிதான உங்களுடைய நண்பர்களுடன் உரையாடல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்த பேஸ்புக் அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமே. இதைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள உங்கள் நண்பரும் அவருடைய ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோன் போன்ற சாதனங்களில் இந்த அப்ளிகேஷனை நிறுவியிருக்க வேண்டும்.

உலகில் எந்த ஒரு மூலையில் உங்கள் உறவினர் நண்பர்கள் இருந்தாலும் உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு பேச முடியும் என்பதே இந்த அப்ளிகேஷனின் சிறப்பு. இந்த அப்ளிகேஷன் ஐபோன், ஆண்ட்ராய்ட், ஐபோட், ஐபேட் ஆகிய சாதனங்களில் தொழிற்படுகிறது.

இந்த அப்ளிகேஷனை ஐடியூன் ஸ்டோர் (iTunes Store), ஆண்ட்ராய்ட் மார்க்கெட் (Android market), வோனஜ் பேஸ்புக் பேன் பேஜ் (Vonage Facebook FanPage)ஆகியவற்றில் கிடைக்கிறது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் கிட்டதட்ட 3ஜி, 4ஜி மற்றும் வைபை தொழில்நுட்பம் (3G, 4G, WiFi) இயங்குவதால் அனைத்து நாடுகளில் உள்ளவர்களும் இந்த பேஸ்புக் அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம்.


பேஸ்புக் வோனஸ் மொபைல் அப்ளிகேஷன் இயங்கும் விதம்:


இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, முதன் முதலில் இயககும்பொழுது உங்களுடைய கடவுச் சொல், பயனர் பெயர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.


உடனேயே இந்த அப்ளிகேஷன் , உங்கள் பேஸ்புக் நண்பர்களை இரு குழுக்களாக பிரித்து காண்பிக்கும். வோனஜ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி இலவச அழைப்புகளை மேற்கொள்பவர்களை ஒரு பிரிவாகவும், மற்றொரு பிரிவில் இன்ஸ்டன்ஸ் மேசேஜ் (Instant Message) சேவையை பயன்படுத்துபவர்களாகவும் காட்டும்.


பேச வேண்டிய நபர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்களாக இருப்பவராயின் உடனடியாக அவர்களை நீங்கள் தொடர்புகொண்டு அழைக்கலாம். நீங்கள் அழைத்தவுடன் உங்களுடைய நண்பரின் முகப்பு படமும் அவரது ஸ்டேடஸ் செய்தியும் திரையில் தோன்றும். இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும்பொழுதும், உங்கள் நண்பர்கள் உங்களை அழைக்கும்பொழுது உங்களுக்கு அழைப்புச் சத்தம் கேட்கும்.


மிகச்சிறந்த இலவசமான இந்த அப்ளிகேஷன்களை நீங்கள் பின்வரும் வழிமுறைகளில் பெறலாம். 



1. ஐடியூன் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும். (இது iPhone, iPod touch பயன்படுத்துவபர்களுக்கு) CLICK


2. ஓனஜ் அப்ளிகேஷன் ஆன்ட்ராய்ட் லிப் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும் (இது ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு)  CLICK


குறிப்பு: இந்த அப்ளிகேஷன் மூலம் பேசுவது மட்டுமின்றி, எழுத்துகள், படங்கள் ஆகியவற்றையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். 


வெங்கட்பிரபு இயக்கத்தில் மீண்டும் அஜீத்!

 

அஜீத் நடிப்பில் ‘பில்லா’ படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்காத நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா’ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

இந்த படத்தில் முதன்முறையாக தன்னுடைய உண்மையான தோற்றத்தில் நரைத்த முடி, தாடியுடன் நடித்திருந்தார். இந்த தோற்றம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘வீரம்’ ஆகிய படங்களிலும் நரைத்த முடியுடனும், தாடியுடனும் நடித்துள்ளார்.

தன்னுடைய கெட்டப்புக்கு புதுவடிவம் கொடுத்த வெங்கட்பிரபு-வுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் அஜீத் நடிக்கப் போகிறாராம். ‘பிரியாணி’ படத்திற்கு பிறகு சிறுபட்ஜெட்டில் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் அஜீத் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

ஏற்கெனவே அஜீத், ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனதின் அடிஆழத்தில் ஈரம்!

கடும் மழை. ஒருவர் மருத்துவமனை செல்ல வேண்டும். எல்லா ஆட்டோவும் நிற்காமல்செல்கின்றன. ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் இதுதான் தருணம் என்று முப்பது ரூபாய் தூரத்துக்கு 200 ரூ கேட்கிறார்.

வேறு வழியின்றி அந்த மனிதர் ஆட்டோவில் ஏறி வேறு ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு பாட்டியைக் கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை செல்கிறார்.

 Receptionist பாட்டியின் பெயரைக் கேட்க' இவர்.....இது  என் பாட்டி இல்லை. தெருவில் மயங்கிக்கிடந்தார். உதவும் எண்ணத்தில் அழைத்து வந்தேன் " என்றார்.

ஆட்டோ டிரைவர் மனதினுள் "இவ்வளவு நல்ல மனிதரிடம் அநியாயமாகப் பணம் பேசிவிட்டோமே என்று வேதனை அடைகிறார். வைத்தியம் முடிந்ததும் டிரைவரே பாட்டியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி உரியஇடத்தில் இறக்கி விட்டுப் பணம் வாங்க மறுத்து விடுகிறார்.

மனிதனிடம் மூன்று நிலைகள் உள்ளன.

1.சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கவேண்டும் என்று அற்பமாக நினைத்தல்

2.தானும் மனிதனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுதல் இரண்டாவது நிலை.

3.பிறரைவிட சற்றேனும் கூடுதலாக நல்ல குணத்தை வெளிப் படுத்த நினைத்தால் மூன்றாம் நிலை.

ஆட்டோ டிரைவரிடம் இந்த மூன்று நிலைகளும் படிப்படியாகக் காணப்படுகின்றன.ஒரு தெளிவான மனமாற்றம் ஏற்படுகிறது.

எல்லா மனிதரிலும் இப்படிப்பட்ட ஈர உள்ளம் இருக்கவே செய்கிறது.ஆனால் மனதின் அடிஆழத்தில்  உள்ளது.

ஆழ் துளை [borewell]  மூலம் ஈரத்தை வெளிக்  கொணர வேண்டியுள்ளது. இந்த borewell போடும் பணியினைச் செய்வது தான் நமது பெரியோரின் அறிவுரைகள், நன்னெறிப் பாட வகுப்புகள் முதலியன. குழந்தைகளின் உள்ளத்தில் ஈரத்தை வற்ற விடாமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.

 
back to top