.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 3, 2014

தினமும் காலை உணவு பிரெட் சாப்பிட்டா ஆபத்து!




இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை. இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப் போகும். சமைக்கும் நேரம் மிச்சம். குழந்தைகளுக்குத் தொந்தரவு தராத உணவு. இதெல்லாம் தான் பிரெட்டை காலை உணவாக தேர்ந்தெடுக்க காரணம்.ஆனால், வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் சாப்பிட்டால் சரி. தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ, அல்லது எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் பிரெட் ஜாம், பிரெட் ஆம்லெட், பிரெட் மசாலா என்று செய்து சாப்பிடுவதால் பெரிய ஆபத்தும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.


உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் பி.பி. உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வரும் என்பது எல்லோரக்கும் தெரிந்த விஷயம். வேறு எந்த தொந்தரவுக்காகவும், நீங்கள் டாக்டரிடம் போனால் முதலில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லித்தான் டாக்டர்கள் அறிவுரை வழங்குகிறார்கள்.


தினசரி 0.5 மில்லி கிராம் அளவக்குத்தான் உடலில் உப்பு சேர்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் நாம் சாப்பிடும் சிலைஸ் பிரெட்டில் 230 மில்லி கிராம் உப்பு உள்ளது. இவ்வளவு உப்புள்ள பிரெட்டை அடிக்கடி சாப்பிடும்போதுதான் உடலில் உப்பின் அளவு கூடுகிறது என்கிறார்கள். அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள்.


இந்த மையம் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து விரிவான கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. அதில் பரிசோதனை செய்தவர்களில் 10 பேரில் 9 பேருக்கு உப்பின் அளவு மிக திகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழு முக்கியக் காரணம் தினமும் சிற்றுண்டியாக பிரெட், பிரெட் ஆம்லெட் போன்றவற்றை அவர்கள் உண்டு வந்திருக்கிறார்கள்.


“பிரெட்டைத் தொடர்ந்து சாப்பிட்டால் உப்பின் அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். எனவே இதை தொடர்ந்து சாப்பிடக் கூடாது’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.


ஏன் பிரெட் கூடாது?



எப்போதாவது சாப்பிடுவதால் பிரெட்டால் தீமை இல்லை. மாறாக நன்மைதான். குழந்தைகளுக்கு பிரெட் ஆம்லெட் என்பது நல்ல ஊட்டச்சத்துதான். ஆனால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதற்காகவும், பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் எப்படியோ எதையாவது சாப்பிட்டுக் கொண்டு போனால் போதும் என்றோ நினைத்து பிரெட் ஐட்டங்களை அடிக்கடி கொடுப்பதுதான் ஆபத்து.


குழந்தைகள் முதலே பிரெட் வகைகளாக சாப்பிட, அதில் உள்ள உப்பானது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். அது அப்படியே துளித்துளியாக சேர்ந்து பெரியவர்கள் ஆனதும், ரத்த அழுத்த நோய்க்கு இட்டுச் செல்லும்.


“எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் என்கு பி.பி என்கிறார் டாக்டர்’ என்று சொல்வதெல்லாம் இந்த ரகம்தான். ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணமும் இதுதான்.


தீர்வு என்ன?



1. பிரெட் வகைகளை உண்ணக் கூடாது என்று சொல்லவில்லை. தினந்தோறும் அல்லது அடிக்கடி சாப்பாடாக இதையே எடுத்துக் கொள்ளக் கூடாது.


2. வெறும் பிரெட் ஜாம், பிரெட் மசாலா என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரெட் சாப்பிட்டவுடன் கூடவே இரண்டு துண்டு பழங்கள் சாப்பிட பழக்க வேண்டும்.


3. பிரெட் சுவையாக இருக்க முழு முதற்காரணம் அதில் உள்ள உப்பு சுவைதான். அதனால் சுவை கொஞ்சம் குறைவாக இருந்தாலும் உப்பு அதிகம் கலக்காத பிரெட் கேட்டு வாங்கி உண்ணலாம்.


4. பிரெட் ஆம்லெட் நல்ல ஆரோக்கியம்தான். ஆனால் தினந்தோறும் சாப்பிட்டால், பிரெட்டில் உள்ள உப்பும், ஆம்லெட்டில் உள்ள மஞ்சள் கருவும் சேர்ந்து கூடுதல் கொழுப்பை உருவாக்கும். ரத்தக்குழாய்கள் அடைபட இதைவிட காரணம் தேவையில்லை. வாரம் ஒருநாள் ஒரு பிரெட் ஆம்லெட் நல்லது.


5. பிரெட் உப்புமா செய்யும்போது, மேலும் கொஞ்சம் உப்பைச் சேர்ப்பது வழக்கம். அது எவ்வளவு கெடுதல் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.


6. நாகரிக மோகத்தில் சிலர் பிரெட், சிப்ஸ், பீசா என்று அடிக்கடி சாப்பிடுவது கவனத்திற்கு உரியது. ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் தேவையான உப்பை உடல் எடுத்துக் கொண்டதுபோக, மீதமுள்ளவற்றில் ஒரு சிறிதாவது உடலில், ரத்தத்தில் கலக்க வாய்ப்பு உண்டு. அப்படி சேமித்து சேமித்து வைப்பதால்தான் பிற்காலத்தில் அது நோயாக உருவெடுக்கிறது.


7. அவசர காலம் என்றாலும், வேக வைத்த உணவுகள், காய்கறிகள் போன்வற்றை கொஞ்சம் சுவையாக தயாரித்து உண்ணப் பழகுங்கள்.

சாகசம் செய்ய தயாராகும் பிரசாந்த்..!!




சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பவுள்ளார்.


ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ‘வைகாசி பொறந்தாச்சு’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


திருமணம் மூலம் பிரச்னையை சந்தித்த பிரசாந்த் அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஒரு இடைவெளி விட்டு மம்பட்டியான், பொன்னர் சங்கர் போன்ற படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் சரியாக போகாததால் எந்த இயக்குனரும் அவரை கண்டுகொள்ளவில்லை. சிறிது காலம் பொறுத்து பார்த்த பிரசாந்த், தற்போது மீண்டும் சொந்த தயாரிப்பில் படம் எடுக்க களம் இறங்கியுள்ளார்.


சாகசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவருமே பிரசாந்த்தான். வில்லன் கேரக்டருக்காக உடம்பை ஏற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். ஜிம்மிற்கு சென்று ஆறுமணிநேரம் தினசரி உடற்பயிற்சி செய்து வருகிறார்.


சாகசம் என்ற தலைப்பை அவருக்கு பரிந்துரைத்தவர்கள் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள்தானாம். இதனை அவரே புத்தாண்டு அன்று அறிவித்துள்ளார்.

அம்மாவாக அமலாபால்....?




இரண்டு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் அமலாபால்.


தமிழ் சினிமாவில்தான் கதாநாயகிகள் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க தயங்குகிறார்கள்.


ஆனால், மலையாள சினிமாவில் அப்படியல்ல. எத்தனை வயது குழந்தைகளுக்கும் தாயாக நடிக்கிறார்கள்.


அந்த வகையில், தமிழில் யூத்புல் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் அமலாபால், தாய்மொழியான மலையாளத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார்.அப்படமும் வெற்றி பெற்றிருப்பதால், அதேபோன்று மெச்சூரிட்டியான வேடங்கள் நிறைய அமலாபாலை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறதாம்.


அதனால், தமிழிலும் பிசியாக இருக்கும் அமலாபால், அடுத்தடுத்து மாறுபட்ட கதாநாயகி வேடங்களாக மலையாளத்தில் ஓ.கே செய்து கொண்டிருக்கிறாராம்.


மேலும் இதற்கு முன்பு நரைமுடி கதாநாயகர்களுடன் நடிக்க தயங்கி நின்ற அமலாபால், இப்போது மம்மூட்டி, மோகன்லால் போன்ற ஹீரோக்களுடனான வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு வருகிறாராம்.

‘ஜில்லா’வுக்கு 3 இடத்தில் கத்தரி..?





விஜய்யின் ஜில்லா படத்தை பார்த்த சென்சார் போர்டு 3 இடங்களில் கத்தரி போட்டுள்ளது.


பொங்கல் விருந்தாக வரும் விஜய்யின் ஜில்லா படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்பட்டது.படத்தை பார்த்த போர்டு உறுப்பினர்கள் 3 இடங்களில் கத்தரி போட வேண்டும் என்று கூறியுள்ளனர்.


இதற்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.


படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ள இரண்டு காட்சிகளுக்கு கத்தரி போடப்பட்டுள்ளது.


மேலும் மதுரை பக்கத்து கெட்ட வார்த்தை வரும் ஒரு காட்சிக்கும் கத்தரி போடப்பட்டுள்ளது.


ஜில்லா தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
back to top