.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் ..!



மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் 

அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 5-வது இடத்தையும் பிடித்தனர்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' நாளிதழ் சார்பில் 'யுகவ்' என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர் பற்றி கருத்து கணிப்பு நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

30 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில், சச்சின் (5), பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி (7), பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (9), குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் (10) சமூக சேவகர் அண்ணா ஹசாரே (14) டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் (18), தொழிலதிபர் ரத்தன் டாடா (30) ஆகிய 7 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பில் கேட்சுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 2-வது இடத்திலும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் 3-வது இடத்திலும் உள்ளனர். போப் பிரான்சிஸ் (4), சீன அதிபர் ஜி ஜின்பிங் (6), தலாய் லாமா (13), அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட் (8) உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.

ராணி எலிசபெத் (17), ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி (19), அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினி ஓபரா வின்பிரே (20), ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (26), ஹிலாரி கிளின்டன் (27) மற்றும் சீன பாடகர் பெங் லியுவான் (28) ஆகிய 6 பெண்களும் இதில் இடம் பிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இப்பட்டியலில் டெண்டுல்கர் மட்டுமல்லாது, கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி (15), கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான் (21), கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ (22), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (12) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தனி பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை எடுத்துக் கொண் டால் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஒபாமா, மோடி, பில் கேட்ஸ், அமிதாப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

கோல்டன் குளோப் விருதுகள் - சிறந்த நடிகர் '' டிகாப்ரியோ ''



கோல்டன் குளோப் விருதுகள் - சிறந்த நடிகர் '' டிகாப்ரியோ ''

ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்னதிரை படைப்புகளுக்காக வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்து முடிந்தது. லியார்னடோ டிகாப்ரியோ சிறந்த நடிகராகவும், அமெரிக்கன் ஹஸல் சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கோல்டன் குளோபில் விருது பெற்றவர்களுக்கு ஆஸ்கரில் விருது பெறவும் வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து நிலவுவதால், ஆஸ்கரைப் போலவே, ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் விருதுகளும் சினிமா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கும்.

 இந்த வருடத்திற்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடந்தது.இதுவரை ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ, இரண்டாவது முறையாக, வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதினைத் தட்டிச் சென்றார்.

காமெடி மியூசிக்கல் வகையில் சிறந்த திரைப்படமாக அமெரிக்கன் ஹஸல் திரைப்படமும், டிராமா வகையில் சிறந்த படமாக 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருதை, உலகம் முழுவது வெற்றிகரமாக ஓடி, விமர்சகர்கள் பாராட்டையும் பெற்ற கிராவிட்டி படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ காரன் பெற்றர்.

சென்ற வருடம் கோல்டன் குளோபில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற ஜெனிஃபர் லாரன்ஸ், இந்த முறை சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.


முழு விருது விவரங்கள் பின்வருமாறு:
  • சிறந்த திரைப்படம் (டிராமா) - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்
  • சிறந்த திரைப்படம் (காமெடி/மியூசிக்கல்) - அமெரிக்கன் ஹஸல்
  •  சிறந்த நடிகர் (டிராமா) - மேத்யூ மெக்கானஹே (டாலஸ் பையர்ஸ் க்ளப்
  •  சிறந்த நடிகர் (காமெடி/மியூசிக்கல்) - லியார்னடோ டிகாப்ரியோ (வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்)
  • சிறந்த நடிகை (டிராமா) - கேட் ப்ளான்செட் (ப்ளூ ஜாஸ்மின்)
  • சிறந்த நடிகை (காமெடி/மியூசிக்கல்) - ஏமி ஆடம்ஸ் (அமெரிக்கன் ஹஸல்)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன்
  • சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம் - தி கிரேட் பியூட்டி (இத்தாலி)
  •  சிறந்த உறுதுணை நடிகர் - ஜாரெட் லிடோ (டாலஸ் பையர்ஸ் க்ளப்)
  •  சிறந்த உறுதுணை நடிகை - ஜெனிஃபர் லாரன்ஸ் (அமெரிக்கன் ஹஸல்)
  •  சிறந்த இயக்குநர் - அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி)

அனிருத் மீது ஒய் திஸ் கொலவெறி..?



இளம் இசையமைப்பாளரான அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றன.

ஒய் திஸ் கொலவெறி பாடலின் மூலம் உலகையே ஆட்டம்போட வைத்த இசையமைப்பாளர் அனிருத். இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்துவரும் இவர் மீது மோசடிப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் பரவிவருகின்றன.

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி மோகன் தற்பொழுது இயக்கிவரும் வாய் மூடி பேசவும் திரைப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழ்து இப்படத்திற்கு ராகவேந்திரா என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் அவர் இப்படத்திற்கு இசையமைக்கவில்லை என்றும், முன்பணத்தைத் திரும்பப் பெற்றுத்தரக் கோரியும் இப்படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன.

வாய் மூடி பேசவும் திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிவருகிறது. தல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர்.

கம்பியில்லாமல் மின் இணைப்பு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...!



கம்பியில்லா முறையில் மின் சாதனங்களுக்கு மின் இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின் னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.

 இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.

மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும்.

செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங் களுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

 
back to top