.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

பொற்கோயில் ராணுவ நடவடிக்கை இங்கிலாந்து திட்டம் வடிவமைத்து கொடுத்ததா?



பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில், சீக்கிய தீவிரவாதிகள் பெருமளவில் மறைந்திருந்தனர். அங்கிருந்தபடியே அவர்கள் தங்கள் சதித் திட்டங்களை தீட்டி வந்தனர். இதனால் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, 1984ம் ஆண்டு ஜூன் மாதம், அதிரடியாக பொற்கோயிலில் ராணுவம் நுழைந்தது.

அங்கிருந்து தீவிரவாதிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இச்சண்டையில் பலர் இறந்தனர். இதற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் கே.எஸ்.பிரார் தலைமை வகித்தார். ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டதால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அதே ஆண்டில், அக்டோபர் மாதம் சீக்கிய பாதுகாவலரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது, பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்துதான் திட்டம் வடிவமைத்து கொடுத்தது என்பதுதான் அது.இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ராணுவ உயரதிகாரி ஒருவர், தன் நாட்டு உள்துறை அமைச்சரின் செயலாளருக்கு, 1984 பிப்ரவரி 23ல் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், ‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு உதவும்படி இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன்பேரில், பிரதமரின் (இங்கிலாந்து) ஒப்புதலுக்கு இணங்க இதற்கான திட்டம் வடிவமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால், இங்கிலாந்துதான் இத்திட்டத்தை வடிவமைத்து கொடுத்தது என்று வெளியே தெரியவந்தால், அங்கு வசிக்கும் சீக்கிய சமுதாயத்தினர் இடையே பதற்றம் எழ வாய்ப்புள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், இத்தகவலை ராணுவ நடவடிக்கையை முன்னின்று மேற்கொண்ட தளபதி கே.எஸ்.பிரார் மறுத்துள்ளார்.

‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கை முழுவதையும் இந்திய ராணுவம்தான் வடிவமைத்து செயல்படுத்தியது. எனக்கு தெரிந்தவரையில், வெளிநாடுகள் எதுவும் இதில் தலையிடவில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இங்கிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்து உதவியதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரிக்கும்படி அமைச்சரவை செயலாளருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்’’ என்று கூறியுள்ளார்.

தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி.யான டாம் வாட்சன் கூறுகையில், ‘‘இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர், நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்காமலேயே இதுகுறித்து முடிவு எடுத்து செயல்பட்டார். இதன் மூலம்தான் ரகசியமாக ராணுவ நடவடிக்கை திட்டம் அளிக்கப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.

3ஜி ஆதரவு கொண்ட நோக்கியா ஆஷா 503 ரூ.6.683 விலையில் இப்போது கிடைக்கும்....!



நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் ஆஷா போன் தொடர்களை விரிவுபடுத்தி ஆஷா 500, ஆஷா 502 மற்றும் ஆஷா 503 அறிமுகப்படுதியுள்ளது. இந்திய சந்தையில் நோக்கியா ஆஷா 500 ரூ.4,499 விலையிலும், நோக்கியா ஆஷா 502 ரூ.5.969 விலையிலும் இப்போது கிடைக்கிறது.

இறுதியாக நிறுவனம் நோக்கியா ஆஷா 503 அறிமுகப்படுதியுள்ளது. முன்னதாக நோக்கியா ஆஷா 503 ரூ.6,799 விலையில் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இப்போது நோக்கியா வலைத்தளத்தில் இருந்து நோக்கியா ஆஷா 503 ரூ.6.683 விலையில் ஆர்டர் செய்யலாம். இந்த போன் கருப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் வகைகளில் கிடைக்கும்.

நோக்கியா ஆஷா 503, சாதனத்தில் ஸ்வைப் பயனர் இடைமுகம் மற்றும் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கண்ணாடி 2 பொருத்திய 3 இன்ச் QVGA (240x320) தீர்மானம் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. ஆஷா 500 மற்றும் ஆஷா 502 போன்று, ஆஷா 503 இரட்டை காத்திருப்பு ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது 64MB ரேம் வருகிறது மற்றும்
மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு துணைபுரிகிறது.

ஆஷா 503, 1110mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்கள் 3G, Wi-Fi, 802.11 b/g/n, ஸ்லாம் கொண்ட ப்ளூடூத் 3.0 மற்றும் FM ரேடியோ ஆகியவை அடங்கும். அக்டோபர் 2013ல் நோக்கியா உலக நிகழ்ச்சியில், நோக்கியா ஆஷா 500 மற்றும் ஆஷா 502 கைபேசியில் இயங்கும் ஆஷா Platform 1.1 ல் இருந்து மேம்படுத்தப்பட்டு நோக்கியா ஆஷா 503ல் ஆஷா Platform 1.2 செயல்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

நோக்கியா ஆஷா 503 அம்சங்கள்:

கார்னிங் கொரில்லா கண்ணாடி 2 பொருத்திய 3 இன்ச் QVGA (240x320) தீர்மானம் டிஸ்ப்ளே,
எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
இரட்டை காத்திருப்பு ஆதரவு கொண்ட இரட்டை சிம்,
64MB ரேம்,
மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை அதிகப்படுத்த கூடிய சேமிப்பு,
3G,
Wi-Fi,
802.11 b/g/n,
ஸ்லாம் கொண்ட ப்ளூடூத் 3.0,
FM ரேடியோ,
1110mAh பேட்டரி.

நித்யானந்தா - புது சேனல் விரைவில்.....!



இது நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமான வதந்திதான் ஆனா நம்பித்தான் ஆகணும். பரபரப்பான அந்த சாமியார் இப்போது ஒரு சேனல்ல நிகழ்ச்சி பணிக்கிட்டிருக்கார்.

 அப்படியே ஒரு சேனல் எப்படி நடத்துறதுங்கறதையும் கற்றுக் கொண்டாராம். விரைவில் அவர் ஒரு தனி சேனல் ஆரம்பிக்கப்போறாராம். அது ஆனந்தம் தரும் ஆன்மீக சேனல் இல்லையாம்.

 ஆல் இன் ஆல் தரும் எண்டர்டயிண்ட்மெண்ட் சேனலாம். அதுக்கு மானேஜிங் டைரக்டராவும், புரோகிராம் ஹெட்டாகவும் ஆகப்போகிறவர் சாமியாரின் அன்புக்கு பாத்திரமான அந்த நடிகை தானாம்.

ஆசிரமத்தின் நிதியை கையாளும் உரிமையை கொடுப்பதற்காகத்தான் அண்மையில் அவர் தீட்சை பெற்றாராம்.

தனது சிடியை வெளியிட்டு அவமானப்படுத்திய சேனலை தன்னோட சேனல் மூலம் பழிக்குபழி வாங்குவேன்னு நெருக்கமானவங்கிட்ட சொல்லியிருக்காராம்.

அதர்வாவின் கணிதன் -- ஆரம்பிக்கிறது...!!




அதர்வா நடித்துக் கொண்டிருக்கும் படம் கணிதன். வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். டி.என்.சந்தோஷ் டைரக்ட் செய்கிறார்.

 அரவிந்த் கிருஷ்ணா கேமரா மேன். டிரம்ஸ் சிவமணி இசை. அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கேத்ரின் டிரேசா நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து விட்டது.

கணிதன் என்றால் கணக்கு பார்ப்பவனாம். வீரத்துடன் இருக்கிறவனை வீரன் என்று அழைக்கிற மாதிரி கணக்கு பண்ணி வாழ்கிறவனை கணிதன் என்று அழைக்கிறார்களாம். அதர்வா எதையும் திட்டமிட்டு கணக்கா செய்கிறவர்.

அவரது கணக்கும் ஒரு இடத்தில் தப்பாகிறது. பிறகு அதனை எப்படி சரி செய்கிறார் என்பதுதான் கதையாம். அடுத்த கட்ட ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கிறது. படத்தில் கே.பாக்யராஜ், நரேன், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். வித்தியாசமான கோணத்தில் சொல்லப்படப்போகிற ஆக்ஷன் கதையாம்.

 
back to top