.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 17, 2014

வீரம் படத்தை மறுபடியும் பார்க்கணும் - சிம்பு



தல அஜித் நடித்து கடந்த ஜனவரி 10ல் வெளியாகியிருக்கும் வீரம் திரைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் வசூலையும் அள்ளிவருகிறது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அஜித்தின் வீரம் படத்தினை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்த சிம்பு கடந்த ஆண்டின் இறுதியில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கும் படம் மற்றும் வாலு போன்ற பல படங்களில் நடித்துவரும் சிம்பு, செவன் அப் விளம்பர மாடலாகவும் நடித்துவருகிறார். இதனால் மிகவும் பிசியான ஷெட்யூலில் இருந்ததால் அஜித்தின் வீரம் திரைப்படத்தினை வெளியாகி ஆறு நாட்களுக்குப் பிறகே பார்த்திருக்கிறார்.

வீரம் திரைப்படத்தினை பார்த்ததும் சிம்பு தான் வீரம் திரைப்படத்தினை வெகுவாக ரசித்ததாகவும், அஜித்தின் பிரபலத்தை நன்றாகப் புரிந்து கொண்டு
அதற்கேற்றாற்போல் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா என்றும் பாராட்டியுள்ளார். மீண்டும் இப்படத்தினைப் பார்க்க
விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்துடன் நடிக்கும் வாய்ய்பை இழந்தேன்..! - சிவகார்த்திகேயன்



பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களின் மனத்திலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் மனத்திலும் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தல அஜித்துடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரிப்பில் , ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, நவ்தீப் மற்றும் பியா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏகன். அஜித் இப்படத்தில் சி.பி.ஐ. ஆபீசராக நடித்திருந்தார்.

தல அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் தான் நடிக்கவிருந்ததாகவும், இறுதிக் கட்டத்தில் தனது கதாபாத்திரம் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டதால் தன்னால் அஜித்துடன் இணைந்து நடிக்கவியலாமல் போனது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் வரும்காலங்களில் தனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழலாக இருந்தாலும், எதற்காகவும் அந்த வாய்ப்பினை நழுவ விடமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தல அஜித்துடன் நடிக்கும் இளம் நடிகர்கள் அஜித்தின் பெருந்தன்மையைப் பற்றிப் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்…!




இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

 சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

 திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

 முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க..!



உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்

உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.

உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

அதற்கு cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :

  •     பெயர்(NAME)
  •     முகவரி(ADDRESS)
  •     போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  •  அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  •     கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  •     உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  •     எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  •     போனின் அடையாள எண் (IMEI)

ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.

Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.

அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும்.

 
back to top