
படம் இயக்கித் தருவதாகக்கூறி இயக்குனர் செல்வராகவன் அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் சந்தோஷி உட்பட சிலர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறியுள்ளனர். மேலும் இந்தப் பணத்தை திருப்பித் தராவிட்டால் செல்வராகவன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு படத்தை எடுத்தாலும் கூட அதை நினைத்த நேரத்தில் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி ரிலீஸ் செய்வது என்பது, கோலிவுட்டைப் பொறுத்தவரை இப்போதைக்கு குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது. எப்போ, எந்த உருவத்தில், என்ன பிரச்னை, வரும் என்று யாராலும் சொல்ல முடியாது.



4:50 PM
Unknown
Posted in:
0 comments:
Post a Comment