.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 15, 2014

என்னையும் கொஞ்சம் கவனிங்க... பாஸ்...! லேப்டாப்...!!




லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!

கணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல், கணினி போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் லேப்டாப்..

லேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில் படிக்கும் மாணவர்களுக்காக அரசும் இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. ஆக, லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது என்பதில் சந்தேகமில்லை..

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் மிக எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடிவதால் மேசைக் கணினிகளில் பயன்பாடு வெகுவாக குறைந்துவருகிறது.. லேப்டாப் பயன்பாடு அதிகரிக்கும் அளவிற்கு அதை பராமரிப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை..

நன்கு பராமரிக்கப்படும் லேப்டாப் விரைவில் பழுதடைவதில்லை.. பராமரிப்பில்லாமல் பயன்படுத்தும் லேப்டாப் விரைவில் பழுதடைந்துவிடும். அவ்வாறு விரைவாக லேப்டாப் பழுதடையாமல் இருக்கச் செய்வதற்கான பயனுள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.

மடிக்கணினி திரைப் பாதுகாப்பு:

கணினியில் மிக முக்கியமானதொரு பாகம் கணினித் திரைதான்.. அதில் பார்த்துதான் அனைத்தை வேலைகளையும் மேற்கொள்கிறோம். கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மெல்லிய 'சில்க்' துணிகளைப் பயன்படுத்தலாம்.. அல்லது அதற்கென இருக்கும் Screen Cleaning Liqued பயன்படுத்தி காட்டனால் துடைத்தெடுக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை:
கரடு முரடான துணிகளையோ, அல்லது வெறும் கைகளையோ பயனபடுத்தி துடைக்க கூடாது. இதனால் கணினித் திரையில் கீரல் விழும், கைத்தடங்கள் அதில் பதிந்துபோகும். மேலும் அழுத்தமாக துடைப்பதால் கணினித் திரைக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

தூசி மற்றும் ஈரப்பதம்:
பொதுவாகவே அனைத்து கணினிகளும் தூசி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கபடுகின்றன. குறிப்பாக பயணங்களின்போது லேப்டாப்பை பயன்படுத்தக்கூடிய இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. அதோடு அங்கு ஈரப்பதம் இல்லாம் சாதாரண சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. தொடர்ந்து ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமில்லாத இடங்களில் லேப்டாப் கணினியை பயன்படுத்தும்போது அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆண்டி வைரஸ் ரொம்ப முக்கியம்:

வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதும் நம் கடமை. பல ஆயிரம் மதிப்பு வாய்ந்த மடிக் கணினியை பாதுகாக்க ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வாங்குவது தவறில்லை. அதனால் நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்வேர் ஒன்றை வாங்கி இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு கட்டண வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்தும்பொழுது வைரஸ் தாக்குதல்களிலிருந்து உங்களுடைய லேப்டாப்பிற்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

உணவுப் பொருட்களை தவிருங்கள்:
மடிக் கணினியைப் பயன்படுத்திக்கொண்டே சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதோ, டீ, கூல்டிரிங்ப் போன்ற பான வகைகளை அருந்துவதோ கூடாது.. அவ்வாறு செய்வது உங்கள் லேப்டாப்பிற்கு நீங்களே உருவாக்கும் ஆபத்து..

லேப்டாப் பேக்:

வெளியில் பாதுகாப்பாக லேப்டாப்பை எடுத்து வைக்க தகுந்த லேப்டாப் பேக்கைப் பயன்படுத்துங்கள். லேப்டாப்பின் அளவிற்கு தகுந்த மாதிரியான போதுமான அளவில் லேப்டாப் பேக் இருக்க வேண்டும். முதுகில் மாட்டிச் செல்ல ஏதுவான லேப்டாப் பேக் லேப்டாப்பை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும்.

ஹபர்னேட் நிலை:

பணிக்கு இடையே சிறுது நேரம் அவசகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், (உதாரணமாக உணவு எடுத்துக்கொள்ள செல்வதற்கு முன்பு, தொலைபேசியில் அதிக நேரம் பேசும் சூழல்) உங்கள் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையில் வைப்பது சிறந்தது.. இதனால் அதிக மின்சாரம் சேமிக்கப்படுவதுடன் லேப்டாப்பும் பாதுகாக்கப்படும்.

தொடர்ச்சியான பயன்பாட்டை தவிருங்கள்:
தொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகபட்சமாக 8 மணி நேரம் வரைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் கணினியை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் விரைவில் மடிக் கணினி வெப்பமடைந்துவிடும். இதனால் விரைவிலேயே கணினியின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது.

ஃபையர் வால் பாதுகாப்பு:

பொதுவாக எல்லா மடிக்கணினிகளிலும் ஃபையர்வால் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகிறது. ஃபையர்வால் பாதுகாப்பு மிக முக்கியம். கணினியின் தலைமைக் காவலனாக இது செயல்படுகிறது.. எந்த வகையிலும் உங்கள் கணனி சேதாரமாகாமல் இருக்க இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் பையர்வால் இல்லையெனில் தனியாக வாங்கியோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ உங்கள் கணினியல் நிறுவிக்கொள்ளுங்கள்.

பரிசோதனை:

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய லேப்டாப்பை சர்வீஸ் செய்வது நல்லது.. அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் லேப்டாப்பை கொடுப்பது புத்திசாலித்தனம்.

லேப்டாப் மேடை:
வீடுகள், மற்றும் அலுவலகங்களில் லேப்டாப்பை பயன்படுத்தும்பொழுது, அதற்கென தயாரிப்பட்ட மேடைகளைப் பயன்படுத்துங்கள். தற்பொழுது லேப்டாப் ஸ்டேன்டுகள் பலவிதங்களில் கிடைக்கிறது. அதனால் லேப்டாப் சூடேறுவதை குறைப்பதோடு, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும்.

மீண்டும் இணைகிறதா விஜய் - நேசன் கூட்டணி ?



இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.டி. நேசன் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது.

இளையதளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்ககும் ஜில்லா திரைப்படம் தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான ஆர்.டி. நேசனிடம் விஜய் “ உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அஷோக், ஸ்ருதி சர்மா நடிப்பில் வெளியான முருகா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நேசன். ஜில்லா அவரது இரண்டாவது படமாகும்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜில்லா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப்
பெற்றிருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபீசில் இணையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"ப்ரூஸ் லீ" - ன் மறுபக்கம்...?






தற்காப்பு கலையின் முடிசூடா மன்னன் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் "ப்ரூஸ் லீ" ஒரு சிறந்த நடன கலைஞரும் கூட என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

அவருடைய 14 வயதில் குங்ஃபூ படித்து கொண்டிருத்த கால கட்டத்தில், Cha Cha Cha நடனத்தின் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு வந்து, அதற்க்கேன நேரம் ஒதுக்கி மிக விருப்பத்துடன் கற்று கொண்டார் ப்ரூஸ் லீ. ஹாங்-காங்கில் 1958-ம் ஆண்டு நடைபெற்ற மிக பிரமாண்ட Cha Cha Cha நடன போட்டியிலும் பங்கெடுத்து சாம்பியன்ஷிப் பட்டதையும் வென்றார் ப்ரூஸ் லீ.

Martial Arts கற்றுகொள்வதர்க்கு காண்பித்த அதே ஆர்வத்தையும், உழைப்பையும் Cha Cha Cha நடனம் கற்று கொள்வதிலும் காட்டியிருக்கிறார் ப்ரூஸ்லி.

 தன்னுடைய நோட்டில் Cha Cha Cha-வின் 108 ஸ்டெப்களை குறித்து வைத்திருந்திருக்கிறார் அவர். அமெரிக்காவிற்கு சென்ற ப்ரூஸ் லீயின் முதல் வேலை "dancing instructor"-தான்.

என்ன மனுஷன் இவர்..! அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா..!



பொங்கல் படமாக வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'வீரம்'.இப்படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலாவுக்கு இத்தனை நாளாக நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருடலை 'வீரம்' பட வெற்றி அறுவை சிகிச்சை இல்லாமேலேயே அகற்றியிருக்கிறது.

இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். தமிழில்தான் 'அன்பு' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். இங்கே படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார்.

'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன.அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி,ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார். 'வீரம்' இவரது 44 வது படம் என்றால் பாருங்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நம்புகிறவர்கள் நம்மவர்கள். வேற்று மொழியினர் எவரையும் எளிதில் உள்ளே விடாதவர்கள் மலையாளத் திரையுலகினர். பாலாவுக்கு எப்படி அங்கு ஒரு இடம் கிடைத்தது?

"அதை என் விதி என்பதா தலையில் எழுதப்பட்ட வாய்ப்பு என்பதா அதிர்ஷ்டம் என்பதா பாக்யம் என்பதா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

நான் அறிமுகமாகி தமிழில் நடித்த படங்கள் ஓடவில்லை. அதனால் எனக்கு இங்கே வாய்ப்பு வரவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிப்பு, திறமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான். வெற்றி பெற்றால்தான் மறு பேச்சு. வெற்றி பெறவில்லை என்றால் அவ்வளவுதான். இதுதான் இங்கு உள்ள நிலைமை. ஆனால் மலையாளத்தில் நிலைமையே வேறு. அங்கு வெற்றியைப் பார்ப்பதில்லை. வேலையைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்குத்தான் அங்கு மரியாதை.நடிகரைவிட நடிப்புத் திறமையைத்தான் பார்ப்பார்கள். நிஜமான திறமைசாலியை அங்கீகரிப்பார்கள். ஆதரிப்பார்கள். அதனால்தான் என்னை ஏற்றுக் கொண்டார்கள். " என்கிற பாலா,"எனக்கு மொழி ஒரு தடையில்லை. இருந்தாலும் பிற மொழியிலிருந்து, என்னை மாதிரி பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபமாக மலையாளத்தில் வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்காது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.என்னை ஏற்றுக்கொண்டு தங்களில் ஒருவராக பார்க்கிற அவர்களின் அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்வது? என் ஒவ்வொரு படத்திற்கும் அவர்கள் கொடுத்த வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் என்னால் நன்றி என்று மட்டும் கூறி விட முடியாது." என்று நெகிழ்கிறார்.

பாலாவின் தந்தை ஜெயக்குமார் 426 ஆவணப் படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் இயக்கியவர். தாத்தா ஏ. கே. வேலன் தயாரிப்பாளர். சகோதரர் சிவா இயக்குநர். இருந்தாலும் இவருக்குள் ஒரு சங்கடம் தொண்டைக்குள் பந்தாக இதுநாள் வரை உருண்டு கொண்டிருந்தது. அதை 'வீரம்' படம் அகற்றியுள்ளது. சங்கடத்தைத் துடைத்து இருக்கிறது.

"நான் தமிழில்தான் அறிமுகமானேன். இங்கு சரிவர படங்கள் அமையாததால்தான் மலையாளப் பக்கம் போனேன். அங்கு பலதரப்பட்ட படங்கள். வியாபாரரீதியில் வெற்றி பெற்ற 'பிக் பி', 'புதியமுகம்' 'ஸ்தலம்' 'திஹிட்லிஸ்ட்' 'அலெக்சாண்டர்' தி கிரேட் போன்ற படங்களாகட்டும்

'வேனல்மரம்' 'பத்தாம் அத்தியாயம்' யோன்ற ஆர்ட் பிலிம் களாகட்டும் ஒவ்வொருபடமும் ஒவ்வொரு அனுபவமாக என்னை செதுக்கியது உண்மை. அப்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு இங்கு நம்மைப் பாராட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள். திறமைக்கு இங்கு மரியாதைஉ.ள்ளது.ஆனால் தாய் மொழியில் நமக்கென்ன மரியாதை உ.ள்ளது என்று நினைப்பதுண்டு.அப்படிப்பட்ட நேரத்தில்தான் 'வீரம்' படவாய்ப்பு வந்தது.

இயக்குநர் சிவா என் அண்ணன்தான். நானும் மலையாளத்தில் ஒரு படம் இயக்கிவிட்டடேன். ஆனாலும் நான் அவரிடம் வாய்ப்பு கேட்டதில்லை. அவரும் என்னைப்பற்றி விசாரித்து பேசியதில்லை. அப்படிப்பட்ட சுதந்திர வெளியில் இருந்தோம்.

'வீரம்' படத்தில் நடிக்கக் கேட்ட போது அண்ணனின் படத்தில் நடிக்கும் தம்பி என்கிற வகையிலும் அஜீத் சாரின் தம்பியாக நடிக்கிறேன் என்கிற வகையிலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிந்தது. படமும் வெற்றி பெற்றது எனக்கு நீண்டநாள் நெஞ்சுக்குள் கிடந்த ஏக்கம், சங்கடம், உறுத்தல், விலகிய உணர்வில் இருக்கிறேன். "என்கிறார்

வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்ட போது ' நிறைய சொல்லலாம் சொல்வது அவ்வளவையும் எழுத முடியாதே' என்ற படி தொடங்கினார்.

"அஜீத் சார் பற்றி நிறைய சொல்லலாம். நானும் 44 படங்கள் முடித்து விட்டேன். அஜீத்சார் மாதிரி அற்புதமான மனிதரைப் பார்த்ததில்லை. அப்படி இயல்பாகப் பேசிப் பழகுவார். 'வீரம்' படம் தொடங்க 4 நாட்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் படப்பிடிப்புக்கு முன்பே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்தார்.

அழைத்தவர் எல்லாருடனும் அன்பாக மனம் விட்டு அன்னியோன்யமாகப் பேசிப் பழகினார். 'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம். நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது'. என்றார்.

நாள் முழுக்க நாங்கள் அவருடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். காலையில் எழுவது சாப்பிடுவது ஒர்க் அவுட் செய்வது ஸ்விம்மிங் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்கவைத்தார். சில நாட்களில் நிஜ அண்ணன் தம்பிகள் போலாகி விட்டோம். 110 நாட்கள் இப்படியே போனது. அது ஜாலியான சந்தோஷமான அனுபவம்.

அஜீத் சார் நல்ல குக். பிரமாதமாக சமைப்பார்.சிக்கன் பிரியாணி அருமையாக சமைத்துப் போட்டார். 'ஆரம்பம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் எங்களுக்கு மீன் வறுவல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன மனுஷன் இவர் என்று வியப்பாக இருந்தது. அவர் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் வெளியில் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். நான் இது பற்றிக் கேட்ட போது மனிதர் செய்வது மனிதருக்குத் தெரியக் கூடாது என்பார். கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பார். 'இது எனக்கும் கடவுளுக்கும் உள்ள கணக்கு' என்பார்.'இப்போது அவரை மிஸ் பண்ணுவதாக உணர்கிறேன்.''இப்படி அஜீத் பற்றிக் கேட்டால் மூச்சு விடாமல் பேசுகிறார் பாலா.

'வீரம்' படத்தின் மூலம் அஜீத் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ள கூடுதல் பூரிப்பு பாலாவுக்கு.

பாலா தான் இயக்கிய 'தி ஹிட் லிஸ்ட்' பட அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது எனக்கு 30 வயதில் கிடைத்த வாய்ப்பு. நானே தயாரித்தேன். 40 நடிகர்கள் என் மீதுள்ள அன்புக்காக நடித்தார்கள். ஒரு பத்தாண்டுகால அனுபவம் ஒரு படத் தயாரிப்பில் கிடைத்தது. எல்லா நடிகர்களும் ஒரு படம் தயாரித்தால் நல்ல மனிதராக மாறிவிடுவார்கள். "என்கிற பாலாவின் மனைவி அம்ருதா, பாடகியாக வந்து காதலியானவர். இவர் நினைக்கிற ஸ்வரத்தில் தாம்பத்யசங்கீதம் பாடுகிற பாடகி. ஒரே மகள் அவந்திகா.இதுதான் பாலா.

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை...!

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை - படிப்பதில் மாணவர்களுக்கு...!


 இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான். இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது.

ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.

தாவும் மனம்

இணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது மனம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.

பெரும் புரட்சி

அண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர்.

 இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”

‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.

ஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.

நிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா?

நிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.

ஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது.

 அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.

முப்பது நொடிகள்தான்

தன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.

பெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை.

அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள்..!


ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது..!


குழந்தைகளின் பிரியா பிஸ்கெட் ஆகிவிட்டது ஓரியோ.

கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!



இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.

ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.

நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

டேப் டான்ஸ் பயின்ற கார்த்திகா..!



புறம்போக்கு படத்திற்காக கார்த்திகா டேப் டான்ஸ் பயின்றுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் நடிக்கும் படம், புறம்போக்கு. இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். படத்திற்காக டேப் டான்ஸை பயின்றுள்ளார் கார்த்திகாக. அவருக்கு இந்தப் பயிற்சி ஐந்து நாட்கள் அளிக்கப்பட்டதாம். தமிழ் சினிமாவுக்கு இந்த நடனம் புதுமையாக இருக்கும் என்கிறது படக்குழு.

யுடிவி நிறுவனத்துடன் ஐனநாதன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு வர்ஷன் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று குலுமணாலியில் துவங்கியது.

படத்தில் கார்த்திகா போல்டான கேரக்டரில் வருகிறாராம். இதற்காக அவர் பைக் ஓட்டி பழக போகிறாராம்.இதற்கும் மேலாக படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகளும் உண்டாம்.

‘இசை’ - புது அவதாரம்.?




‘தமிழில் நான் படம் இயக்கி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஏன் இந்த இடைவெளி என்பதற்கான காரணம் என்னிடம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. என் படத்தை, என் மீது கொண்ட நம்பிக்கையை கொண்டாடிய ரசிகர்களை மீண்டும் சந்தோஷப்படுத்த வேண்டும். பனி படர்ந்திருக்கும் இந்த அழகான குளிர் காலத்தைப்போல என் மீது படிந்திருக்கும் கவனத்திற்கு ‘இசை’ திரைப்படத்தின் வழியே கொஞ்சமும் குறைவில்லாமல் திருப்தியை கொடுப்பேன்!’’ என்று உறுதியாகச் சொல்கிறார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.

மே முதல் தேதி தன் ‘இசை’ படத்தை வெளியிட பம்பரமாய் உழைத்துக் கொண்டிருந்த  அவரை,  சந்தித்து பேசியதிலிருந்து…

இசையமைப்பாளர் ஆனதால்தான் ‘இசை’ படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறதா?

கதை தயாராக இருந்தது. இதை தற்போது கையில் எடுக்கவேண்டுமா என்ற முடிவுக்காக 6 மாதங்கள் எடுத்துக்கொண்டேன். படத்தின் சில முக்கியமான காட்சிகளை கொடைக்கானலில் சர்ஜ் செட் போட்டு படம் பிடித்திருக்கோம். அங்கே என் கதைக்கு வேண்டிய குளுமைக்காக 6 மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த குளுமைக்காகவும், மலையின் அழகியலுக்காகவும் வேண்டி கொஞ்சம் காலத்தை செலவழித்தேன். மொத்தமாக ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்புக்காக மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

இசையை கற்றுக்கொள்வதற்காக 8 மாதங்கள். இப்போது எடிட்டிங் 4 மாதங்கள். எடிட்டர் ரியாஸுடன் அமர்ந்து தினம்தினம் செதுக்கிக்கொண்டிருக்கிறேன். அற்புதமான எடிட்டர், இவர். ஆண்டனியின் உதவியாளர். படம் வந்தால் உங்களுக்கு நிச்சயம் பிடித்தவராக இருப்பார். இப்படித்தான் கடந்த 4 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு என்னுடைய ‘இசை’ தயாராகி வருகிறது. எதிலும் என்னை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் வேலையை தொடர்ந்தேன். அதற்கான பலன், படத்தில் தெரியும்.

எஸ்.ஜே.சூர்யாவை ஒர் இயக்குநராகவே பார்க்க விரும்புவதாக வரும் விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு தொடர்கிறோம். இன்னொரு இடத்தை ஆண்டவன் வேற ஒரு மாதிரி கொடுக்கிறான். ‘நியூ’ படத்தில் ஒரு நல்ல நடிகனாகத்தான் என்னை நிரூபித்திருக்கிறேன். வெளியில் நமக்கு கிடைக்கும் வெற்றியை எல்லோரோடும் சேர்ந்து ஷேர் பண்ணிக்க வேண்டும். தோல்வியை நாம் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல நடிகனாக நிரூபிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்தப்படத்தில் அதற்கான போராட்டம் நிறைய இருக்கும். இயக்குநர் ஒரு பயிற்சியாளர் மாதிரி. வீரர் நடிகர்தான். என் விளையாட்டு ‘இசை’ யில் புதிதாக இருக்கும். அதன்பின் இப்படியான விமர்சனங்களுக்கு அவசியம் இருக்காது.

படத்தில் இளையராஜாவாக சத்யராஜும், ஏ.ஆர்.ரஹ்மானாக நீங்களும் நடித்திருப்பது உண்மை தானா?

வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நம்மை ஏதாவது ஒன்று ஆட்சிசெய்யும். அது அரசியல், விளையாட்டு ஏன்.. அது ஒரு பள்ளிக்கூடமாகக்கூட இருக்கும். அந்த துறையில் ஒருவர் சீனியர், ஜீனியர் என்றும் இருப்பார்கள். அந்த சூழலில் ஒரு பயணம். அதில் சில அனுபவங்கள் உண்டு. அப்படியான காலகட்டத்தில் அந்த சீனியர், ஜூனியருக்குள் ஒரு பொறாமை உணர்வு உண்டாகும். அந்த உணர்வால் நிகழும் மாற்றங்கள்தான் என் கதை. எனக்கு இசை பிடிக்கும். பார்த்து பழகிய அனுபவம் இருப்பதால் இதை கதையின் களமாக ஆக்கிக்கொண்டேன். இதில் இவர்கள் இருவரையும்தான் குறிப்பிட்டுள்ளேன் என்பதெல்லாம் முற்றிலுமான வதந்தி.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ராஜா சார் இசைப்பயணத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். என் படத்தில் சித்தரிப்பதால்தான் அவரது வெற்றி இருக்கிறதா என்ன? நான் இங்கே யார் மனதையும் புண்படுத்த வரவில்லை. எனக்கு படம் செய்ய ஒரு களம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். இந்தப்படத்துக்கும், என் கதைக்கும் அப்பார்ப்பட்ட ஜீனியஸ் ராஜா சார். மற்றவை எல்லாம் நான் முன் சொன்னதைப்போல வதந்தி.

ஹிந்தியில் சல்மான்கானிடம் வைக்கும் கேள்வியை உங்களிடமும் வைக்கிறோம். கல்யாணம் எப்போது?

இத்தனை ஆண்டுகளாக ஏன் செய்துகொள்ளவில்லை என்பதற்கான பதில் என்னிடம் இல்லை. நம் அலைவரிசைக்கு ஏற்றவரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மனதுக்கு பிடித்த வேலையை இத்தனை ஆண்டுகளாக தொடர்கிறேன். இப்போது கூட 8 மாதங்கள் மாணவனாக மாறி இசையையும் புதிதாக எடுத்திருக்கேன். அதேபோல மனதிற்கு பிடித்த பெண்ணை இதுவரைக்கும் தேட முயற்சி எடுக்கவில்லை. அது இயல்பாக அமையும்போது பார்த்துக்கொள்ளலாம்.

சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன் வரைக்கும் சினிமாவில் வளர்ந்து வருகிறார்களே. இவர்களை வைத்து எப்போது படம் கொடுக்கப் போகிறீர்கள்?
ஒவ்வொரு காலத்திலும் யாராவது ரெண்டு பேர் ரூல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் வரைக்கும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒரு கதை யாரைத்தேடுகிறதோ அவர்களுடன் சேர்ந்து அதை சரியாக செய்ய வேண்டியதுதான். இப்போ அந்த வேலையை நானே செய்வதால் அதற்குள் போக விருப்பமில்லை. என்னோட இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான தேடலில் என் வேலைகளை கவனித்து வருகிறேன். சினிமா எப்பவுமே நன்றாக இருக்கிறது. அதில் நாம இருக்கிறோமா? இல்லையா என்பதை செக் பண்ணி பார்த்துக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல், மியூசிக்கில் அட்வான்ஸ் என்று வளர்ந்துகொண்டே போகிறது. அதை அப்டேட் பண்ணிக்கொள்ளும் வேலையே இங்கு அதிகம் இருக்கே. அதை நோக்கி என் பயணமும் இருக்கு. வெளிநாட்டோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் இன்னும் 10 ஆண்டுகள் பின்னுக்குத்தான் இருக்கிறோம். இங்கே, இப்போ பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்கள், மாடர்ன் டி.டி.எச். சினிமா வெளியிடும் நுட்பங்கள் எல்லாம் அங்கு வந்தாச்சு. ஒரு படத்தை வீட்டிலும் பார்க்கிறார்கள், தியேட்டர்களிலும் பார்க்கிறார்கள். காலத்துக்கு தகுந்த விஷயங்கள் அவ்வபோது மாறிக்கொண்டேதான் இருக்கும். சினிமாவும் அதில் ஒன்றுதானே.

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சாவித்ரி என்று அறிமுக நாயகியை சொல்லியிருக்கிறீர்களே?
நாயகிக்காக 124 பேரை ஆடிஷன் எடுத்து அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவங்க இந்த சாவித்ரி. மும்பை பெண். தமிழ்நாட்டில் சாவித்ரியாகவே வலம் வரட்டும் என்று அவங்களோட நிஜ பெயரைக்கூட யார்கிட்டயும் சொல்லவில்லை. யூத்ஸ் பலர் நோகப்போறாங்க. முதல் பாகத்தோட காதல், ரெண்டாவது பகுதியின் கதை எல்லாவற்றிலும் அழகா அசத்தியிருக்காங்க… அந்தப்பொண்ணு.

இசையை அடுத்து?

அடுத்த படம் கதை ரெடி. முக்கால்வாசி இசையில் பயணித்த அதே டீமாகக்கூட இருக்கலாம். அது இயல்பாகவே அமைந்தால் சந்தோஷப்படுவேன். இனி தாமதம் இருக்காது. இசை வெளியான ஆறாவது மாதத்தில் அடுத்த காதல் பயணமும் திரைக்கு வந்துவிடும்.

பெண் நோயாளிகளிடம் வரம்பு மீறும் ஆண் டாக்டர்கள் - புகார் கொடுக்க...




 இந்தியாவில் மருத்துவ சிகிச்சை முறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ கம் மருத்துவத்துறையில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மிகவும் அரிதானதாக சொல்லப்படும் இதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக குறைந்த செலவில் சென்னையில் செய்யப்படுகிறது.

ஆனால் தனியார் மருத்துவ மனை மற்றும் தனியார் கிளினிக்கு களுக்கு சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளிடம் ஒரு சில டாக்டர் கள் வரம்பு மீறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை பெரும் பாலான பெண் நோயாளிகள் வெளியே சொல்ல தயங்குகின்ற னர். இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் சிலர், தங் களது அத்துமீறல்களைத் தொடர் கின்றனர்.

ஒரு சில பெண் நோயாளிகள் வெளியே சொல்லும் போது, சம்பந் தப்பட்ட டாக்டர் கைது செய்யப் படுகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி திருவேற்காடு அடுத்துள்ள வேலப்பன்சாவடி பள்ளிக்குப்பம் பகுதியில் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் நோயாளியிடம், அங்கு பணியில் இருந்த டாக்டர் சித்தார்த்தசீலன் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அந்த பெண் திருவேற்காடு போலீஸில் புகார் அளித்ததின் பேரில், டாக்டர் சித்தார்த்தசீலனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத் தனர். இதுபோல ஒரு சில டாக் டர்கள் செய்யும் தவறால், ஒட்டு மொத்த டாக்டர்களுக்கு மட்டு மின்றி தமிழக மருத்துவத் துறைக்கே அவப்பெயர் ஏற்படு கிறது. இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கீதாலட்சுமி, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவ மனை ஆர்.எம்.ஓ. டாக்டர் கலை வாணி ஆகியோர் கூறியதாவது:

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது,  -கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.

பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்; இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புகார் கொடுக்கலாம்
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

செபி தீவிர நடவடிக்கை -முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய....




 பிபிஓ எனப்படும் வெளிப்பணி ஒப்படைப்பு மையங்கள் மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஓ-க்களிடம் இதற்கு ஆகும் செலவு குறித்து அழைப்பு டெண்டரை கோரியுள்ளது.

200 ஏஜென்டுகளையும் ஒருங்கிணைத்து உதவி மையத்தை இத்தகைய பிபிஓ-க்கள் செயல்படுத்த வேண்டும். இதற்கான அழைப்பு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எனப்படும் தொலைபேசி வழி குறைகேட்பு மையத்தை குறைவான பணியாளர்களின் உதவியோடு அதாவது 50 பணியாளர்களுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். இப்போது 50 ஏஜென்டுகளை ஒருங்கிணைக்கும் வகையிலான இந்த ஹெல்ப்லைன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பணியாளர்களாக விரிவுபடுத்தப்படும் என்றும் செபி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு 14 பிராந்தித மொழிகளில் உதவிகளை அளிக்கும் வகையில் இந்த தொலைபேசி வழி குறைகேட்பு மையங்கள் இருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், வங்காளம், மலையாளம், தெலுங்கு, உருது, கன்னடம், ஒரியா, பஞ்சாபி, காஷ்மீரி ஆகிய பிராந்திய மொழிகள் இதில் அடங்கும். ஏற்கெனவே கட்டணமில்லா தொலைபேசி சேவையை வாடிக்கையாளர்களுக்கு செபி ஏற்படுத்தித்தந்துள்ளது. இத்தகைய சேவை 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சேவையை விரிவுபடுத்தும் வகையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்தித் தர முன்வரும் நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவலை 21 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள், வாடிக்கையாளரிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஏற்ப பதில் அளிக்க வேண்டும். யாரிடம் புகார் தெரிவிப்பது மற்றும் வர்த்தக கணக்கு தொடங்குவது உள்ளிட்ட தகவலை அளிக்க வேண்டும்.

இது தவிர, ஏஜென்டுகள் தங்களது வாடிக்கையாளர் பற்றிய முழு தகவலை அதாவது பங்கு பரிவர்த்தனை குறித்த அளிப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இது அமைய வேண்டும். இந்த ஹெல்ப்லைன் வசதியில் வாடிக்கையாளர்கள் கோரினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பற்றிய தகவலும் அளிக்கப்படும். குறிப்பிட்ட நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதா இல்லையா என்ற தகவலை அளிக்கும். அத்துடன் நிறுவனம் செயல்படுகிறதா அல்லது நொடித்து போய் மூடப்பட்டுள்ளதா, நிறுவனமே இல்லையா அல்லது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லையா என்ற தகவலும் அளிக்கப்படும்.

செபி-யின் வரம்புக்குள் வராத அதேசமயம் பிற புலனாய்வு அமைப்புகள் மூலம் திரட்டப்பட்ட தகவலும் இதில் அளிக்கப்படும். இந்த ஹெல்ப்லைனில் முதலீடு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட மாட்டாது. இந்த ஹெல்ப்லைனில் பதிவாகும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அது 24 மணி நேரத்துக்குள் செபி-க்கு அனுப்பப்பட வேண்டும். இத்தகைய சேவை அளிக்க முன்வரும் நிறுவனங்கள் பற்றிய மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் சிறந்த நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இத்தகைய சேவை அளிக்க அனுமதி அளிக்கப்படும்.

விருப்பத்தின் பேரில் இது 5 ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்படக்கூடும். இத்தகைய சேவை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் எத்தகைய புகாரிலும் சிக்காத நிறுவனமாக இருத்தல் அவசியமாகும். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் இந்நிறுவன வருமானம் ரூ. 50 கோடிக்கும் குறைவாக இருக்கக் கூடாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனமாக இருக்கக் கூடாது என்று செபி தெரிவித்துள்ளது.

ஹெல்ப்லைன் மையத்தில் இரண்டு செபி அதிகாரிகள் நிரந்தரமாக நியமிக்கப்படுவர். குறிப்பிட்ட நிறுவனம் நாஸ்காமில் பதிவு பெற்ற சாப்ட்வேர் நிறுவனமாக இருக்க வேண்டும். ஹெல்ப்லைன் சேவை அளிக்க முன்வரும் நிறுவனங்களிடம் தடையற்ற பேச்சுத் திறன் கொண்ட பணியாளர்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் செயல்பாடு மாதந்தோறும் செபி-யால் ஆய்வுக்குட்படுத்தப்படும். ஹெல்ப்லைன் சேவை அளிக்க முன்வரும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன் எந்த குற்ற பின்னணி கொண்டவராக இருத்தல் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

குரு – சிஷ்யன் ...!


துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான்.

சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான்.

 கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.

”காற்று” என்றான் இளைஞன்.

”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.

நீதி :முதலில் தகுதியாக்கிக் கொள். பின்னர் ஆசைப்படு (First Deserve & then Desire)

'அனேகன்' ஷூட்டிங்கில் தனுஷ் பிசி - பொங்கல் கொண்டாட்டம் மிஸ்



அனேகன் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் பொங்கல் கொண்டாட்டத்தை மிஸ் பண்ணுகிறார்.

கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்னதான் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தனுஷ் படப்பிடிப்பில் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பாலிவுட் படமான இஷாக் மூலம் அறிமுகமான அமீரா நடிக்கிறார். அனேகன் படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான லுக்கில் வருவார் என்று கே.வி. ஆனந்த் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

காதல், ஆக்ஷன் கலந்த அனேகன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைப் பணியை கவனக்கிறார்.

Tuesday, January 14, 2014

விஜய் சேதுபதியின் '' வசந்தகுமாரன் '' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதியின் வசந்தகுமாரன் ஃபர்ஸ்ட் லுக்..!


கோலிவுட்டின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டாரான விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் வசந்தகுமாரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டுடியோ 9 தயாரித்துவரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லக்‌ஷ்மி மேனன் நடித்துவருகிறார். ஆனந்த்குமார் இப்படத்தினை இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயனண் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ரம்மி திரைப்படம் ஜனவரி 24லிலும், பண்னையாரும் பத்மினியும் திரைப்படம் பிப்ரவரி ஏழாம் தேதியும் வெளியாகவுள்ளன.

விஜய் சேதுபதி தற்பொழுது ஆர்யா மற்றும் ஷ்யாமுடன் புறம்போக்குபடத்திலும், இடம் பொருள் ஏவல், வன்மம், மெல்லிசை, ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்களிலும் தொடர்ச்சியாக நடித்துவருகிறார்.

சூர்யாவின் அஞ்சான்..!

சூர்யாவின் அஞ்சான்..!


சூர்யா- லிங்குசாமி கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

சிங்கம் -2 படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்துவருகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

சூர்யா நடித்துவரும் இப்படத்திற்கு மன்னார் அல்லது ராஜு பாய் என்று தலைப்பிடப்படலாம் என்று வதந்திகள் பரவிவந்தன. மேலும் இப்படத்தின் டைட்டிலை அறிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துவந்தது. முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுபோல இப்படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியின் நம்பியார் ட்ரெய்லர்..!



ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படமான நம்பியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கோல்டன் பிரைடே பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கணேஷ் இயக்கிவருகிறார். இவர் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவராவார்.

ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான் விஜய், சுப்பு மற்றும் பலர் நடித்துவரும் இப்படம் நகைச்சுவையை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

நம்பியார் ட்ரெய்லர்..!



இப்படத்திற்கு விஜய் ஏண்டனி இசையமைத்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா...!

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா பொன்வன்னன்


நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனை, தேசிய விருது வென்ற நடிகையான சரண்யா பொன்வன்னன் டம்மி பீசு என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.

விஜய் வசந்த், மஹிமா,சரண்யா பொன்வன்னன், பிரபு முதலானோர் நடிப்பில் ராஜபாண்டி இயக்கிவரும் திரைப்படம் என்னமோ நடக்குது. காதல் த்ரில்லர் படமான இப்படத்தினை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துவருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இப்படத்தின் பேட்டி ஒன்றில் தான் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறித்து சரண்யா பொன்வன்னன் பேட்டியளித்தார். அப்பொழுது பிரேம்ஜியை காமெடியனாகவே, டம்மி பீசாகவே பார்த்த தனக்கு, அவரை இசையமைப்பாளராக, தனது குருவாகப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாகவும், அவரா இவர் என்று நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை செல்லமாக டம்மிபீசாக தான் நினைத்துக் கொண்டதையும் விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

என்னமோ நடக்குது திரைப்படத்தின் இசைவெளியீடு கடந்த டிசம்பர் 16ல் வெளியானது நினைவிருக்கலாம். இளைய திலகம் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!




முருகதாஸின் சம்பளத்தை பார்த்து விஜய்யே அதிர்ந்து போய்யிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் வெற்றி பெற்ற பட வரிசையில் துப்பாக்கி முக்கிய இடம் பிடித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அத்துடன் சென்னை மற்றும் கோவை உரிமையும் விஜய் பெறவுள்ளார் (அந்த உரிமை சுமார் 45கோடி வருமாம்).

ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸோ விஜய்யை காட்டிலும் அதிகம் சம்பளத்தை கேட்டு பெற்றிருக்கிறாராம். அதாவது விஜய் சம்பளத்தைவிட இரண்டு கோடி அதிகமாக ரூ 20 கோடி சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம் முருகதாஸ். இதை கேட்ட விஜய் முதலில் அதிர்ந்து போனாராம்.

பின்னர் இதையெல்லாம் கேட்டும் கேட்காமல் இருப்பது தான் நல்லது என அமைதியாக போய் விட்டாராம். ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்

இயக்குனர் எம்.ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும் அறிமுகமானார். அறிமுகப் படமே அட்டகாசமான வெற்றியைத் தந்ததால், அப்படத்திற்குப் பிறகு இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

சசிக்குமாரின் சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது கதிர்வேலன் காதல். உதயநிதி ஸ்டாலினுக்கும் இது இரண்டாவது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா உதயநிதியின் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தினைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் ”காதலித்த பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்ககூடாது; இது பசங்களுக்கும் சரி, பொண்ணுங்களுக்கும் சரி நல்ல விசயம்தான்” என்று விளையாட்டாகத் தெரிவித்தார்.

இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ல் வெளியாகவுள்ளது.

கணினியில் இருந்து கண்களைக் காக்க ..!

கணினியில் இருந்து கண்களைக் காக்க..!


கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணிபுரிவீர்கள் என்று கூறவும். அப்போது மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியை வடிவமைப்பார்கள்.

3. மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணிபுரிந்து கொண்டிருந்தால், அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்குப் புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை கண் சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4. கணினியில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள்.

இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6. ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடலாம்.   

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

 

இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.

 ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும். அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர். வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும்.

 * பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும்.

 * உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது.

 * எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்.

 * சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர். ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!
 

இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்…..

• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

• நிறைய பெண்களுடன் தொடர்புடைய ஆணுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.

• பெண்களுக்கு தினமும் குடிக்கும் ஆண்களை பிடிக்காது. ஏனெனில் அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற காரணத்தால் தான்.

• தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது.

• பெண்கள் சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

• பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

• ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். பெரும்பாலான ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

• ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

• சில ஆண்கள் எப்பொழுதும் வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் போதும், மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

சிவகார்த்தி கேயனைவிட நான் மட்டமா என்ன..? – தயாரிப்பாளரிடம் சீறித்தள்ளிய ஜீவா..!



கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்..புகழடைய வேண்டும்..! என்பதே சினிமாவில் நடிக்க வருகிறவர்களுக்கு லட்சியமாக இருக்கும்.

ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜீவா நடிகரானதற்கு இவை எதுவுமே காரணமாக இல்லை போலிருக்கிறது.

அவரைப் பற்றி காதுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் சொல்வதென்றால்…

முன்னணி கதாநாயகிகளை கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற ஒரே காமத்தினால்… ஸாரி…காரணத்தினால்தான் இவர் கதாநாயக நடிகரானாரோ என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இப்படி சொல்லுமளவுக்கு என்ன நடந்தது?

‘ஆசைஆசையாய்’ படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே ஜீவாவிடம் ஒரு பழக்கம் இருக்கிறது.

அவரிடம் கதை சொல்லப்போகும் இயக்குநர்களிடம், கதை என்ன, சம்பளம் என்ன என்ற கேள்விகளுக்கு முன் ஜீவா கேட்கும் ஒரே கேள்வி… ‘ஹீரோயின் யாரு?’ என்பதுதான்.

கதாநாயகி விஷயத்தில் அறிமுகநிலையிலேயே இப்படி அநியாயத்துக்கு ‘ஆர்வம்’ காட்டிய ஜீவா வளர்ந்த பிறகு எப்படி இருப்பார் என்று சொல்லவா வேண்டும்?

ராம், டிஷ்யூம், ஈ போன்ற படங்களில் நடித்த பிறகு தன்னை புக் பண்ண யார் வந்தாலும், ‘எனக்கு ஜோடியாக நடிக்க பெரிய ஹீரோயினாக கமிட் பண்ணுங்க’ என்பதை ஓட்டை ரெக்கார்டு போல சொல்லிக் கொண்டே வந்தார்.

அப்போது அவரது மார்க்கெட் இருந்த லட்சணத்தில், ‘உன்னை வச்சு படம் எடுக்கிறதே பெரிய விஷயம்.. இதுல உனக்கு பெரிய ஹீரோயின் கேக்குதா?’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு ஜீவாவின் இந்த ஆசையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன்பிறகு, ‘த்ரிஷாவை கமிட் பண்ணுங்க’ என்று திரி கொளுத்த ஆரம்பித்தார்.

ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஜீவாவின் இந்த ஆசை அண்மையில்தான் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் நிறைவேறியது.

ஜீவாவின் கேரியரிலேயே ‘என்றென்றும் புன்னகை’ படம் சுமாரான வெற்றிப்படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. ப்ளாப் படங்களில் நடித்தபோதே த்ரிஷாவைக் கேட்டவர், சுமாரான வெற்றிப்படம் கொடுத்துவிட்டு சும்மா இருப்பாரா?

தற்போது அவரை அணுகும் இயக்குநர்களிடம் காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, அமலாபால் ஆகியோரது பெயர்களைச் சொல்லி இவர்களில் ஒருத்தரை எனக்கு ஜோடியாக கமிட் பண்ணுங்கள் என்கிறாராம்.

‘நீங்க சொல்ற ஹீரோயின்ஸ் சம்பளம் எல்லாம் ஒரு கோடிக்கு மேல இருக்கு..நம்ம பட்ஜெட்டுக்குக் கட்டுப்படியாகாது’ – என்று ஒரு தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார்.

அதைக் கேட்டதும் ஜீவா டென்ஷனாகிவிட்டாராம்.

‘நேத்து வந்த சிவகார்த்திகேயன் எல்லாம் ஹன்சிகா, அமலாபால்னு போய்க்கிட்டு இருக்காங்க. நான் என்ன சிவகார்த்திகேயனைவிட மட்டமா?’ என்று எகிறியவர், ‘அப்ப ஒண்ணு பணணுங்க..சில வருஷம் வெயிட் பண்ணுங்க. நான் இன்னும் பெரிய ஹீரோவா ஆனப்புறம் வாங்க. அப்ப கால்ஷீட் தர்றேன்.’ என்று கடுப்படித்துவிட்டு போனை கட் பண்ணிவிட்டாராம் ஜீவா.

நடிகைகங்களை கட்டிப்புடிக்கிறதுக்காக இப்படியா கண்ணு மண்ணு தெரியாம நடந்துக்கிறது?

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!


பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.

 * இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 * ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.

 * மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

 * ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.

 * குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

``விடியும் வரை பேசு`` - திரைவிமர்சனம்



கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு நாயகி) பேசுகிறார். இந்த மிஸ்டு கால் நட்பு தொடர்கிறது.

காலப்போக்கில் இந்த நட்பு, பார்க்காமலேயே காதலாக மாற... அனித் தனது மாமா மகளினை வைதேகியை முழுவதுமாக மறந்துவிட்டார். மாறாக, நன்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நன்மாவோ, அந்த அளவுக்கு தீவிரமாக இல்லாமல், பொழுதுபோக்கிற்காகவே மட்டுமே அனித்துடன் பேசி வருகிறார்.

இந்நிலையில், சென்னைக்கு வரும் தாய்-தங்கையிடம் நன்மாவை வரவழைத்து அறிமுகம் செய்ய நினைத்தார் அனித். ஆனால், கடைசி நேரம் வரையில் நன்மா வரவேயில்லை. இதனால் விரக்தியடையும் அனித், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். எந்த வகையிலும் நன்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்மா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அனித்தின், மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்களைக் கண்டாலே, அவர்களின் செல்போன்களை பிடுங்கி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுகிறார்.

இறுதியில் இவர் பித்தம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தாரா? நன்மாவின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

அறிமுகமாகியிருக்கும் நாயகன் அனித், நன்மாவிடம் செல்போனில் பேசும் காட்சிகள், அவரை நினைத்து உருகும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ஹீரோவுக்குரிய நல்ல உடல் அமைப்பு இருந்தாலும் அவருக்கான ஆக்சன் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

அறிமுக நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டை பெறுகிறார்கள். குறிப்பாக பேச்சிலேயே நாயகனுக்கு சூடேற்றி விடும் காட்சியில் நன்மா நன்றாக நடித்திருக்கிறார். வைதேகியோ, துறுதுறுவென கிராமத்துப் பெண்ணாக வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போனால் நடக்கும் அவலங்களையும், கலாச்சார சீரழிவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் காட்சிகள் மற்றும் படத்தொகுப்பு ரசிகர்களை சுண்டி இழுக்காமல் போனது படத்திற்கு பின்னடைவு. மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் உள்ளிட்ட சிறு கதா பாத்திரங்கள் படத்துடன் ஒன்றியுள்ளனர்.

மோகன்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். கன்னிப்பொண்ணு மனசு அது கரும்புடா... ஏதாவது நீயாக..., யாரோ அவள், யாரோ... பெண் மனது... என 4 பாடல்களே இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் நான்கும் நான்கு முத்துக்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் விடியும் வரை பேசு, கடலை போடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை..!

கமல்ஹாசனுடன் நடிகராகிறாரா லிங்குசாமி..?




விஷ்வரூபம் -2 படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் லிங்குசாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு இயக்குனராக தொடர் வெற்றிகளைத் தந்து கொண்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமி சமீபமாகப் பல படங்களைத் தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இயக்குனர், தயாரிப்பாளர் என்ற தனது அடையாளங்களைத் தாண்டி, கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் ஒரு நடிகராகவும் மாறுவார் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

கமல்ஹாசனின் நீண்ட நாள் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம் உத்தமவில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இயக்குனர் லிங்குசாமி தற்பொழுது சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் புதிய படத்தைத் தயாரித்து, இயக்கிவருகிறார். இப்படத்தின் தலைப்பு
விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

முஸ்லிம்கள் தொப்பி, பர்தா அணிந்து படமெடுத்தால் அடையாள அட்டை இல்லை...!



அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். (13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விஷயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2014ம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை, இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும், கலர் புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும்.

எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது என தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹூஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்..!


இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்..!



இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.

ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:


 * இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

 * இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.

 * இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.


இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய் முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:

மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:


இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:


தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டுபாதுகாக்கப்படுகின்றது.

சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

  • தூய இரத்தம் – 35 நாட்கள்
  •  இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்
  •  இரத்தத் தட்டுக்கள் – 5 நாட்கள்
  •  பிளாஸ்மா – 1 வருடம்

 இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது. இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் நிறுவனங்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும் வருடா வருடம் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், அரசு பொது மருத்துவமனையும் இணைந்து ஊக்குவிப்புப் பாராட்டு விருதுகளை வழங்கி வருகின்றனர். தமிழ் நாட்டில் நிறைய தன்னார்வ அமைப்புகள் உள்ளன அவற்றில் சத்யா சாய்(www.sathyasai.org) என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து தமிழ் நாட்டில் இரத்த தானத்தில் முதலிடம் வகித்தது ,ஆனால் தற்போது தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்(TNTJ - www.tntj.net) என்ற முஸ்லிம் அமைப்பு கடந்த ஏழு வருடங்காளாக முதலிடம் வகிக்கிறது , இந்த அமைப்பின் சாராம்சம் என்னவென்றால் நீங்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியிலும் இருந்தாலும் சரி , இவர்களுடைய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் போதும் இந்த அமைப்பை சார்ந்தவர்கள் களத்தில் இறங்கி எந்த சாதி மதம் இனம் பாராமல் எந்த பொருள் செலவையும் எதிர் பாராமல் ரத்த தானம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; கொடுப்பவரின் தன் நலன் காப்பதற்கு உதவுவதோடு அவர்களின் உடல்நலன் மேம்படுவதற்கும் அது உதவுகிறது. இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதன்மூலம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவதால், இரத்தத்தில் தேங்கும் அசுத்தங்கள், இறந்த செல்கள் போன்றவை நீக்கப்பட்டு உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு ஏற்படும் மயக்கம் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பதுதான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவர்.

இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.
ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!

இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!

இருநூறு ப்ளஸ் கோடி...



இனி அந்த பருப்பு வேகாது. 2013ம் ஆண்டு அதை சுத்தமாக மாற்றிவிட்டது. யெஸ், இனி நூறு ப்ளஸ் கோடி வசூலை எந்தப் படம் கடந்தாலும் அது சுமாரான வெற்றிதான். எந்தப் படம் குறைந்தது 200 ப்ளஸ் கோடியை கடந்து கல்லாவை நிரப்புகிறதோ அதுவே சூப்பர் ஹிட் மூவி.

இதை ஆரம்பித்து வைத்தப் புண்ணியம் ஷாருக் கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை சாரும். இதை உறுதிப்படுத்திய பெருமை சென்ற ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3ஐ போய்ச் சேரும்.

நம்புங்கள் ஸ்வாமி, முதல் மூன்றே நாட்களில் தூம் 3 நூறு ப்ளஸ் கோடி ரூபாயை வசூலில் கடந்துவிட்டது. அதுவும் இந்தியத் தாய்த் திருநாட்டில் மட்டும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது என்றெல்லாம் நரம்பு புடைக்க சவுண்ட் விட்டது சினிமாவுக்கு பொருந்தாது போல.

ரைட், இப்படியாக சென்ற ஆண்டு குத்த வைத்து வசூலில் கும்மிய இந்தித் திரையுலகம் இந்த வருடம் எப்படியிருக்கும்? அதே ஜெகஜோதியாகத்தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள். லேசாக கண்களுக்குத் தெரியும் கீற்றுகள் அந்த பிரகாசத்தைதான் மெய்ப்பிக்கின்றன.

சென்னை எக்ஸ்பிரஸ் கொடுத்த எனர்ஜியில் ஹேப்பி நியூ இயர் என களம் இறங்குகிறார் ஷாருக் கான். இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடி அதே தீபிகா படுகோன்தான். இயக்கியிருப்பவர் ஷாருக்கானின் ஆருயிர் தோழியும், இந்தியாவின் முக்கியமான நடன இயக்குநர்களில் ஒருவருமான ஃபாரா கான். ஓம் சாந்தி ஓம் ப்ளாக் பஸ்டருக்கு பிறகு அதே கூட்டணி கைகோர்த்திருப்பதால் ஏரியா பரபரவென இருக்கிறது.

வழக்கமாக ரம்ஜான் பண்டிகை சல்மான் கானின் பட ரிலீஸ் இல்லாமல் பூர்த்தியாகாது. கடந்த சில ஆண்டுகளாகவே இதுதான் நிலை. சல்மான் கானே நம்பிக்கை வைக்காத பாடிகாட் கூட ரசிகர்களின் வரவேற்பில் சக்கைப்போடு போட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி செல்போனும் சிம்கார்டும் போல் இருந்த ரம்ஜானும் சல்மான் கானும் சென்ற ஆண்டு கா விட்டுக் கொண்டார்கள். சல்லு பாயின் படம் கடந்த ஈத்தில் வெளியாகவில்லை. இதை பிரஸ்டீஜ் இஷுவாக நினைப்பவர், 2014ல் வட்டியும் முதலுமாக அதை ஈடுகட்ட வருகிறார். தெலுங்கில் கிக் என பம்பர் ஹிட் ஆகி தமிழில் தில்லாலங்கடி என சூப்பர் ஹிட் ஆன படம், இப்போது சல்மான் கான் நடிப்பில் கிக் என்ற பெயரிலேயே தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டெலிவரியை ரம்ஜான் அன்றுதான் குறித்திருக்கிறார்கள். இதுபோக மென்டல் என்னும் படமும் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது. வெளியாகும்போது இந்த டைட்டில் மாறலாம்.


இன்றைய தேதி வரையில் அதிக நூறு ப்ளஸ் கோடி வசூல் படங்களை இயக்கியிருப்பவர் என்ற பெருமைக்குரிய இயக்குநர் ரோஹித் ஷெட்டி, இந்த ஆண்டும் தன் பங்குக்கு ஓர் படத்தை சமூகம் முன் படைக்கப்போகிறார். அதுதான் சிங்ஹம் 2. சந்தேகமே வேண்டாம். தமிழ் சிங்கம் 2வின் ரீமேக்தான். முதல் பார்ட்டில் ஹீரோவாக நடித்த அஜய் தேவ்கன்தான் இதிலும் நாயகன்.

போலவே ரவுடி ராத்தோர் படத்துக்கு பிறகு எந்த ப்ளாக் பஸ்டரையும் கொடுக்காத அக்ஷய் குமார், இந்த ஆண்டு சொல்லி அடிக்கும் கில்லியாக இரு படங்களுடன் களம் இறங்குகிறார். இரண்டுமே வெற்றிப் பெற்ற தமிழ்ப் படங்களின் ரீமேக்தான் என்பதால் நாம் காலரை உயர்த்திக் கொள்ளலாம். அதில் ஒன்று ரமணா ரீமேக். தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருக்கும் இந்த நேரத்தில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக ஒரு பேராசிரியர் தன் மாணவர்களை திரட்டி போராடியதை சரசரவென விவரிக்கும் இந்தப் படம் தோற்கவா செய்யும்? அதே போல் விஜய்யின் இமேஜை சர்வதேச அளவில் உயர்த்திய துப்பாக்கி படமும் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் தயாராகிறது. இயக்கம் அதே ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படமும் பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

இந்த நிமிடம் வரை ஆமிர் கானின் அடுத்தப் படம் எதுவென்று மீடியாவுக்கு தெரியாது. அதற்கு அவசியமும் இல்லை. ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3 இன்னும் மூன்று மாதங்களுக்கு இண்டு இடுக்கெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். எனவே ரிலாக்ஸாக அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு செல்வார். ஒருவேளை அது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு
தொடக்கத்தில் வெளியாகலாம்.

பிறகு இருக்கவே இருக்கிறார் நம்ம பிரபுதேவா. இந்தி சினிமாவின் ஒன் அண்ட் ஒன்லி மினிமம் கேரண்டி இயக்குநர். ஒருவகையில் 1980களில் தமிழ்ச் சினிமாவில் வீடு கட்டி அடித்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் எக்ஸ்டென்ஷனாக இவரை சொல்லலாம். தப்பில்லை. கடந்த ஆண்டு ராமய்யா வஸ்தாவய்யா, ஆர்... ராஜ்குமார் என இரு படங்களை கொடுத்தார். இரண்டுமே முறையே அறிமுக நாயகன், மூன்றாம் நிலை நாயகன் என்று அறியப்பட்டவர்களை ஆக்ஷன் ஹீரோக்களாக உயர்த்திய படங்கள். நூறு ப்ளஸ் கோடியை எல்லாம் வசூலிக்கவில்லைதான். ஆனால், பி, சி சென்டர்களை இரண்டுமே வாழ வைத்தது. தயாரிப்பாளர்களையும் காப்பாற்றியது. எனவே இவரும் தன் பங்குக்கு எதையாவது கொடுப்பார் என்று தீர்மானமாக நம்பலாம். அதிகபட்சம் நான்கு மாதங்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்யும் வித்தையை கற்றவர் அல்லவா இவர்?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஆண்டு தொடக்கத்தில் ஷோலே படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதுவும் 3டியில். இந்திய திரையுலக வரலாற்றிலேயே குறைந்தது 15 வெளிநாட்டுப் படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு ஒரு படத்தை உருவாக்கலாம் என்பதை நிரூபித்த முதல் படமும் இதுதான். பரந்த அளவில் மெகா ஹிட் அடித்த மெகா பட்ஜெட் படமும் இதுவேதான். அப்படிப்பட்ட லேண்ட் மார்க் படம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் மறு வெளியீடு காண்பது ஒருவகையில் எதிர்கால இந்தி சினிமாவின் போக்கை கட்டியங்கூறும் விஷயம்தான்.

இந்த ஆண்டும் இருநூறு ப்ளஸ் கோடி ரூபாயை அனைத்துப் படங்களும் வசூலிக்க வாழ்த்துகள்.

ரசிகர்கள் கொடுத்த வெற்றி - விஜய் நெகிழ்ச்சி



 விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படம் 10ம் தேதி ரிலீசானது. இப்படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

அப்போது விஜய் பேசியதாவது:பொதுவாக நான் படத்தின் வெற்றி சந்திப்புகளில் கலந்துகொள்வது இல்லை. என்றாலும், ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்காக இதில் கலந்துகொண்டேன். என் நண்பர்கள் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு சென்று, அங்கு எடுத்த வீடியோ காட்சிகளை எனக்கு காட்டினார்கள்.

 அதில் என் ரசிகர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டர் வாசலில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவதை பார்த்து நெகிழ்ந்தேன்.

படத்துக்கான நல்ல ஓப்பனிங்கும், வெற்றியும் அவர்கள் கொடுத்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக சொன்னார்கள். அவர்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம்தான்.

அனைவருக்கும் என் நன்றி.‘வீரம்’ படமும் நன்றாக இருப்பதாகவும், நன்றாக ஓடுவதாகவும் சொன்னார்கள். அஜீத், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளருக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகள்.இவ்வாறு விஜய் பேசினார். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குனர் ஆர்.டி.நேசன், நடிகர்கள் மஹத், சூரி, இசையமைப்பாளர் இமான் உடனிருந்தனர்.

அதுதான் நல்ல நட்பு ..! -



வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான் .அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது .அதற்க்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன் >இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல் அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது .

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது அதற்க்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்குகொள்ளவேண்டும் அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்..

 
back to top