.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 9, 2014

தயாரிப்பில் குதிக்கும் ஹீரோக்கள் பட அதிபர்கள் ஷாக்..!





கோலிவுட் ஹீரோக்கள் திடீரென்று தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருப்பதால் பட அதிபர்கள் ஷாக் ஆகி உள்ளனர். நடிப்பது ஹீரோக்கள் வேலை, படம் தயாரிப்பது தயாரிப்பாளர்களின் பணி என்ற நிலை மாறி நடிப்பதும், படம் தயாரிப்ப தும் ஹீரோக்களின் பணி என்றாகி விட்டது. நடிகர் தனுஷ் சொந்த பட நிறுவனம் தொடங்கி ‘எதிர்நீச்சல்‘ என்ற படத்தை தயாரித்தார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தார்.

 அடுத்து ‘வேலையில்லா பட்டதாரி‘ என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார் தனுஷ். அதேபோல் விஷால் சொந்த நிறுவனம் தொடங்கி ‘பாண்டியநாடு‘ என்ற படத்தை தயாரித்து நடித்தார். அடுத்து ‘நான் சிகப்பு மனிதன்‘ என்ற படம் தயாரித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா சொந்த பட தயாரிப்பில் ஈடுபடுகிறார். இப்படத்தை ராஜேஷ் டைரக்டு செய்ய உள்ளார். சூர்யா, டி2 என்ற நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க உள்ளார்.


இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ‘பீட்சா‘, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்‘, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா‘ போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது ‘மெல்லிசை‘, ‘பண்ணையாரும் பத்மினியும்‘ என்ற படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சொந்த பட நிறுவனம் மூலம் ‘ஆரஞ்சு மிட்டாய்‘ என்ற படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். ஹீரோக்கள் அனைவரும் தற்போது சொந்த பட நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதால் பட அதிபர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 

0 comments:

 
back to top