.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

இனி சர்ச்சையில் சிக்க மாட்டேன் - நஸ்ரியா உஷார்..!



 கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வார்த்தை ஜாலத்துக்காக சொல்லாமல் நய்யாண்டி படத்தில் தான் நடித்ததுபோல் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக இயக்குனரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் நஸ்ரியா நாசிம். இதையடுத்து குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டது.

 இயக்குனர்களுடன் மோதல்போக்கு கடைபிடித்தால் பட வாய்ப்பு பறிபோகுமே என்று அவரிடம் கேட்டபோது, ‘நய்யாண்டி விவகாரம் வெளியில் தெரிந்தது ஒரு வகையில் எனக்கு பிளஸ்தான். என்னை வைத்து படம் எடுப்பவர்கள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதை புரிந்துகொள்ள அந்த விவகாரம் உதவி இருக்கிறது. அதே நேரம், இனி சர்ச்சையில் சிக்காதபடி பார்த்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

நஸ்ரியா தமிழில் நடித்துள்ள திருமணம் என்னும் நிக்ஹா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வாய் மூடி பேசவும் என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். ‘சல¢லால மொபைல்ஸ்‘ என்ற படத்துக்காக சொந்த குரலில் நஸ்ரியா பாட்டு பாடி இருக்கிறார்.

 இப்பாடல் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நஸ்ரியா தனது இணைய தள பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். தான் பாடிய பாடலுக்கு என்ன பொருள் என்பதை விளக்கி இருக்கிறார். ‘கோழிக்கோடு மலையாள பேச்சு வழக்கு இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது‘ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Monday, January 20, 2014

தனது ஹீரோக்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல்..! - லிங்குசாமி



ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி ரன் திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர் லிங்குசாமி தனது படங்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமியின் வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் அஞ்சான் திரைப்படம் குறித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கமல்ஹாசன் “ இத்தன வருட சினிமா அனுபவத்துல என்ன பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன், ஆனா என்ன பண்ணனும்னு தெரியல” என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி தற்பொழுது சூர்யா - சமந்தா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிவருகிறார்.

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க..!



உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக்  கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது  நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும்  வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில்  வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான  பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா  என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்:

 கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற  பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்:

 கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை:

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட  வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை  பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: 

உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ,  அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது  பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு:


 சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா  உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி:

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில்  மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின்  போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு:

 பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும்.  இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு  அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

மூளை வாதம்:


 மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள்  வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில  சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்..!



மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், அதிகமான மருந்துகளை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மரணத்தை அடுத்து அவரது உடலின் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், சுனந்தாவின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அவரது மரணம் இயற்கையானதல்ல, திடீர் மரணம்தான் என்று குழுவினர் கண்டறிந்தனர் என்றனர்.இந்நிலையில், அவர் கடைசியாக எடுத்து கொண்ட உணவில் விஷம் கலந்துள்ளதா, மது குடித்திருந்தாரா என்று அறிய உடலின் பாகங்கள் சிலவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கையில், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதற்கான தடயம் இல்லை என்பதால், அவர் குடித்திருக்கவில்லை என தெரியவந்தது.

மேலும், மன அழுத்தத்திற்காக அல்பிராசோலம் எனப்படும் மருந்துகளை அவர் அதிகமாக சாப்பிட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த மருந்து அதிகரித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தூக்க மாத்திரைகளை போல் மயக்கத்தை தரக்கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில், சிறப்பு புலனாய்வு படையினர் சசிதரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சசிதரூரின் உதவியாளரும், பத்திரிகையாளருமான நளினி சிங்கிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கிடைத்த வாக்குமூலங்கள், மருத்துவர் அறிக்கைகள், நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்து சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் இறந்தாரா, அல்லது தற்கொலை நோக்கத்துடன் அதிக மாத்திரைகள் எடுத்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், சுனந்தா அறையில் தங்கியிருந்த போது அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள், இமெயில்கள், டுவிட்டர்கள் ஆகியவற்றையும் சிறப்பு புலனாய்வு படையினர் சேகரித்துள்ளனர். இவற்றை சிறப்பு புலனாய்வு படை தலைவர் அசோக் சர்மா ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையையும், ரசாயன பரிசோதனை அறிக்கையையும் இன்று மாலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

 இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், ரசாயன பரிசோதனை செய்த நிபுணர்கள் ஆகியோருடன் சிறப்பு புலனாய்வு படையினர் விவாதிக்கவுள்ளனர்.இதற்கிடையே, ரசாயன மருத்துவ நிபுணர் குழு தலைவர் சுதீர் குப்தா கூறுகையில், எங்களது ஆய்வுகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

சுனந்தாவின் உடலில் விஷம் எதுவும் கலக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இதயத்தை ஆய்வு செய்ததில் சில மருத்துவ தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பிரேத பரிசோதனை அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.மேலும் தடயவியல் நிபுணர்களும் அறையில் எடுத்த மருந்துகள், கைரேகைகள், வியர்வை துளிகள், ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு செய்வர். பின்னர் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, போலீசாரின் விசாரணை அறிக்கைகளுடன் சேர்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!



1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.


2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.


3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.


4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.


8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்

பாலிவுட்டில் ‘சுப்பிரமணிபுரம்’..!



இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது சசிகுமாரின் சுப்பிரமணிபுரம்.

கடந்த மூன்று வருடங்களில் தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று சுப்பிரமணியபுரம்.

கதை சொன்னவிதமும், காட்சிகளின் நேர்த்தியும் உலகத்தரத்தில் அமைந்திருந்தன.
இந்தப்படத்தினை சசிகுமாரின் லைஃப் டைம் படம் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தின் பாதிப்பில் நிறைய படங்கள் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியாயின.

அனைவரையும் கவர்ந்த இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தனது எண்ணத்தை சசிகுமார் சமீபத்தில் தெரியப்படுத்தினார்.

இந்தியில் தானே ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்காக படத்தின் ரீமேக் உரிமையை இதுவரை தன்னிடமே வைத்துள்ளார். பலர் கேட்டும் சுப்பிரமணியபுரத்தின் ரீமேக் உரிமையை அவர் தரவில்லை.

சுப்பிரமணியபுரம் இந்தி ரீமேக்கில் அனுராக் காஷ்யபும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் வசனத்தில் பங்களிப்பு செலுத்துவார் என தெரிகிறது.

மேலும், அனுராக்கின் தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்..!



தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.

படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது.

இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.

சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள்.

 அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலில் பேசவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.

நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.

இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.

இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.

லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருகின்றனர் – ஆய்வில் தகவல்..!



லேசான தாடி வளர்க்கும் ஆண்கள் பெண்களை கவருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் நூதனமாக ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதன்படி 5 மற்றும் 10 நாட்கள் முக சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்கள் போட்டோவை பெண்களிடம் காட்டினர். இவர்களில் உங்களை கவருபவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. 351 பெண்கள் மற்றும் 177 திருநங்கைகளிடம் இதற்கு பதில் அளிக்கும்படி கோரப்பட்டது.

அதற்கு 10 நாட்களாக முகச்சவரம் செய்யாமல் லேசான தாடியுடன் கூடிய ஆண்களே தங்களுக்கு பிடித்ததாக பெண்களும், திருநங்கைகளும் தெரிவித்தனர். 5 நாள் தாடி வளர்த்து இருந்த ஆண்களை பிடித்ததாக மிக குறைந்த அளவிலான பெண்கள் கருத்து கூறியிருந்தனர்

சிம்புக்கு ஏன் இந்த வம்பு..?




சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி  என்பது போல் ஆகப்போகிறது நம்ம சிம்புவின் வாலு படத்தில் உள்ள லேட்டஸ்ட் சாங்.

புதுசு புதுசா புது ட்ரெண்ட்களை தன்னுடைய பாடல்கள் முலம் முதன்முதலில் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு தான்.

தன் வழியை பின்பற்றி இன்று  உலகளவில் சில பேர் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீண்ட நாள் கனவான லவ் அந்தம் என்ற ஆல்பத்தை மாபெரும் உலக இசைக் கலைஞர்  எகான் வைத்து எடுத்தும் முடித்து விட்டார்.

பிறகு என்ன? தற்போது நடித்து முடித்து இருக்கும் வாலு படத்தின் ஒரு பாடலில்  அவரின் வால் தனத்தை காட்டி விட்டார் சிம்பு.

தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

அதில் நயன்தாரா வேண்டாம், அண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்து உள்ளன என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

ஏற்கனவே எவன் டி உன்ன பெத்தன் பெத்தன் என்ற பாடலை ரசிகர்களின் மத்தயில் பலத்த வரவேற்பு பெற்றுது போல் இந்த பாடலும் மிக பெரிய ஹிட் ஆகும் என  நம்பிக்கை தெரிவித்து உள்ளார் சிம்பு.  இப் பாடலை சிம்புவின் பிறந்த நாளான பிப்வரி 3ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  விவகாரத்துக்கு பேர் போன சிம்பு விவரமான ஆளும் கூடங்க!!!!

வில்லனிடம் இருந்து ஹீரோவை காப்பாற்றிய நயன்தாரா…



பொதுவாக தமிழ்ப்படத்தில் கதாநாயகியை வில்லன் கடத்திக்கொண்டு சென்றுவிடுவார். ஹீரோ அவரை கஷ்டப்பட்டு பல சண்டைகள் போட்டு காப்பாற்றுவார். முடிவில் சுபம் என்றுதான் இதுவரை நாம் தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கின்றோம். முதல்முறையாக ஹீரோவை வில்லன் கடத்திக்கொண்டு செல்கிறார். அவரை பல சாகசங்கள் செய்து ஹீரோயின் காப்பாற்றுகிறார். இப்படி ஒரு கதைதான் தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது.

கடத்தப்பட்ட காதலனாக கணேஷ் வெங்கட்ராமனும், அவரை மீட்கும் காதலியாக நயன்தாராவும், கடத்தும் வில்லனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். ஜெயம் ராஜா இயக்கும் இந்த த்ரில்லிங் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது பெங்களூரில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்குகிறது.

நயன் தாரா முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஜெயம் ரவியுடன் அவர் மோது அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளும் க்ளைமாக்ஸில் இருக்கின்றதாம். வில்லன் வேடத்தை அதுவும் நயன் தாராவுடன் மோதும் வில்லன் வேடத்தை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என ஜெயம் ரவியிடம் கேட்டால் படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் இந்த கேரக்டரை நான் எதற்காக ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில் செல்வகுமார் கலையில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்துக்கு பொருத்தமான பெயரை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஜெயம் ராஜா. -

சிம்புவின் காதலை சொல்லும் பாடல்..!



ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

மீண்டும் நேசன் இயக்கத்தில் விஜய்....



ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.

விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.

பாம்பு பாதி-பெண்ணில் பாதி' கலந்து பிறந்த சிறுமி...!!!



தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும், தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர்.

இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி, 'செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ்’ அல்லது 'ஜிங் ஜிங் நோய்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து நாட்டின் மருத்துவ வல்லுனரான டாக்டர் பிங் லாவ் என்பவர் கூறியுள்ளார்.

பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வை தரிசிக்கவும், அவளது உடலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

அவர்கள் வழங்கும் காணிக்கை பணத்தின் மூலம் அந்த பெண்ணின் குடும்ப வருமானமும், வாழ்க்கை தரமும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும், அவர்களின் நிம்மதியும், தனிமையும் தொலைந்துப் போனதாக மய் லி ஃபே-வின் நெருங்கிய உறவினர் ஒருவர் தாய்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

பாலசந்தர் பாராட்டிய த்ரிஷ்யம்....!






 மோகன்லால் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்திவிட்டு இயக்குநர் பாலசந்தர் அப்படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பலர் பல்வேறு மொழிகளில் ரீமேக் உரிமைக்கு போட்டியிட்டு வருகிறார்கள்.

சென்னையில் இப்படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர் 'த்ரிஷ்யம்'படக்குழுவினரைப் பாராட்டி இ-மெயில் ஒன்றினை அனுப்பியிருக்கிறார்.

அதில், " பார்வையாளனைக் குறைவாக மதிப்பிடாமல் புத்திசாலித்தனத்தோடு எடுக்கப்பட்ட படம். நடிகர்களும் இயக்குநரும் இணைந்து ஒரே நோக்கில் பணியாற்றினால் படம் எவ்வளவு நன்றாக வரும் என்பதற்கு உதாரணம் ‘த்ரிஷ்யம்’. " எனத் தெரிவித்துள்ளார்.

விமர்சகர்கள் மத்தியில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் 'த்ரிஷ்யம்' பெறும் வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ஜாக்கிங் செல்பவரா நீங்கள்? - எச்சரிக்கை..!!!




உடல் பருமனாக உள்ளவர்கள் தங்கள் எடையை குறைக்க ஜாக்கிங் செல்கின்றனர். ஆனால் அது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியதாவது:-

உடல் எடையை குறைக்க பெரும்பாலானவர்கள் மெதுவாக ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) எப்போதும் சிறந்ததாக இருக்காது. பொதுவாக உடல் எடை அதிகரிப்பதில் கொழுப்பின் பங்கு அதிகம் உள்ளது. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

கொழுப்பு முக்கியமானது. இது தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது. அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது.

எனவே இது மேலும் உடல் எடையைதான் அதிகரிக்கும். அதே வேளையில் மிக வேகமாக ஓடலாம். இது திறமையை வளர்க்க உதவும். அதற்காக குறைந்த அளவிலேயே சக்தி செலவிடப்பட்டு சில கலோரிகளே வீணாகும். ஆனால் கால் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

" மாமியாரின் அன்புப் பரிசு...!!!




ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்
ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு
படகுப் பிரயாணம் போனாள்..
நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா வ
விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம்
புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..

அதன் கண்ணாடியில்
ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..
" மாமியாரின் அன்புப் பரிசு..

"ரெண்டாவது மருமகனுக்கும்
இந்த சோதனை நடந்தது.. அவரும்
ஒரு மாருதி கார் வென்றார்.."
மாமியாரின் அன்புப் பரிசாக..
".
மூன்றாவது மருமகனுக்கும் இந்த
சோதனை நடந்தது.. அவர்
கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு'
உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார்-லாம் வேணாம்.. சாவுற வரைக்கும்
சைக்கிள்ல போயிக்கிறேன்..த்து பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"

மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன்
வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ROLLS ROYCE கார்
நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு"
என்ற அட்டையோட….!

மீண்டும் அஜீத்துடன் இணைகிறார் சிவா....




பொங்கலுக்கு வந்த 'வீரம்' ஹிட்டால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார்.

ஜோடியாக அனுஷ்காவை தேர்வு செய்துள்ளார்கள். முதல் தடவையாக இருவரும் இப்படத்தில் இணைகின்றனர்.

இதில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.

அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு அஜீத்தும் டைரக்டர் சிவாவும் மீண்டும் இணையப் போகிறார்களாம்.

கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை!- ஆர் டி ஐ தகவல்!




”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ”என்று மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த ஜோதி ஷெகராவத் என்பவர், டெல்லி மாநில அரசின் உள்துறையில் பணிபுரியும் தனது கணவரின் சம்பள விபரத்தை கேட்டு கணவரின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், தனது சம்பள விபரத்தை தெரிவிக்க கூடாது என பெண்ணின் கணவர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார். அதை தொடர்ந்து பெண்ணின் கோரிக்கையை அலுவலகம் நிராகரித்தது.

இதனால் அந்த பெண், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ கணவரின் சம்பள விவரத்தை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இது போன்று வரும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் நிராகரிக்க கூடாது.

அது ஆர்டிஐ சட்டத்திற்கு எதிரானது. மேலும், அபராதத்திற்குரிய செயல் என டெல்லி உள்துறை அலுவலகத்திற்கு தகவல் ஆணையர் கண்டனம் தெரிவித்தார்.

இது பற்றி மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு,”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது.

மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், மக்களின் வரி பணத்திலிருந்து தான் வழங்கப்படுகி றது. மேலும், அவர்களின் சம்பள பட்டியலை தெரிவிப்பது ஆர்டிஐ சட்டத்தின்படி கட்டாயமாகும். எனவே, இதுபோன்று சம்பளவிபரத்தை தெரியபடுத்துவது மூன்றாவது நபருக்கு தெரிவிப்பதாக கருத இயலாது.

இது போன்று சம்பள விபரம் கேட்டு வரும் விண்ணப்பங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்க இயலாது என கூறி நிராகரிக்க முடியாது”என்று அவர் தெரிவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர் எஸ்.பி.பி-க்கு உடல் நலக்குறைவு...



தென் ஆப்ரிக்காவில் சர்வதேச இந்திய திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா இந்திய மற்றும் தென்னாப்ப்ரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிகளுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சனிக்கிழமை இரவு அன்று தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து அவரை தனிவிமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

பெற்றோரால் பேஸ்புக்-கில் இருந்து வெளியேறிய ’டீன்’களின் எண்ணிக்கை 110 கோடி..!



கட்ந்த ஆண்டில் பெற்றோருக்கு பயந்து அல்லது பெற்றோர்ககளின் கண்காணிப்பையடுத்து பேஸ்புக் சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக ‘டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்’ வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.

அண்மையில் இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தின் “அட்வர்டைசிங் பிளாட்பார்மில்” உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர். தற்போது 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளனர்.

இது கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும்போது 110 கோடி குறைவு. மேலும் இந்த வலைதளத்தில் இருந்து வெளியேறிய கல்லூரி மாணவ, மாணவியர், தற்போது “வாட்ஸ்அப்”, “டுவிட்டர்” மற்றும் “ஸ்நாப்ஷாட்” போன்ற வலைதளங்களில் கணக்குகளைத் துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடம் நடத்திய ஆய்வில் ”தங்களுடைய பெற்றோரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகளை வைத்திருப்பதால் தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொள்வதால்.ஏனைய வலைதளங்களில் இதே போன்ற கணக்குகளை துவக்கி தனிப்பட்ட வாழ்க்கை முதல் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

‘எனக்கான இடம் காத்திருக்கிறது’ - விதார்த் நம்பிக்கை



 புதிதாக வரும் நடிகர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருப்பவர் நடிகர் விதார்த். ‘மைனா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அனைவரது பாராட்டையும் பெற்றவர், தற்போது வீரம் படத்தில் அஜித் ‘தல’ ரசிகர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டிருக்கிறார். “சினிமாவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் தவறிப் போகாது” என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் விதார்த்தை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

‘மைனா' பார்ட் 2-ல நடிச்சுட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்?
‘மைனா’ பார்ட் 2-ல்லாம் கிடையாது. ‘மைனா ‘ மாதிரி ஒரு கதையில நடிச்சிட்டிருக்கேன், அவ்வளவுதான். இன்னைக்குத்தான் ஷுட்டிங் தொடங்குச்சு. ‘காடு’ன்னு படத்துக்கு பெயர் வச்சிருக் கோம். ‘மைனா’ படத்துல என்னோட நடிச்ச தம்பி ராமையா கூட திரும்பவும் நடிக்கிறேன். ஸ்டாலின் ராமலிங்கம் தான் இயக்குநர். அவரோட வாழ்க்கையை சினிமாவா எடுக்கிறார். ‘மைனா’ மாதிரியே காட்டுக்குள்ளே நடக்குற காதல் கதை தான். இந்தப் படத்துல சமூகத்திற்கான ஒரு விஷயத்தையும் பதிவு பண்றோம்.

ரெண்டு வருஷத்திற்கு முன்னாடியே இந்தப் படத்தோட கதை தெரியும். கடைசியா பார்த்தப்போ, இந்த படத்தோட முழுக்கதையையும் ஸ்டோரி போர்டு பண்ணிட்டார். அதுக்குப் பிறகு முக்கியமான காட்சிகள் எல்லாத்தையும் இப்படித்தான் எடுக்கப் போறேன்னு அனிமேஷன் பண்ணி எனக்கு லேப்டாப்புல போட்டு காண்பிச்சார். எனக்கு புதுசா இருந்தது. எல்லாரும் படம் முடிஞ்ச உடனே பண்ற வேலைகள் எல்லாத்தையும், இவரு படத்துக்கு முன்னாடி பண்றதைப் பார்த்து பிரமிச்சு போயிட்டேன். இப்போ ஷுட்டிங் தொடங்கியாச்சு. ‘வீரம்’ வெற்றிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தோட ஷுட்டிங்ல புது வருஷத்தை தொடங்கியிருக்கேன்.

வீரம் ஹிட் ஆன பிறகு அஜித் உங்ககிட்ட பேசினாரா?

பட ரிலீஸுக்கு முந்தின நாள்தான் சென்னைக்கு வந்தார் அஜித். பட ரிலீஸ் அன்னைக்கு காலைல 7 மணிக்கு எல்லாம் போன் பண்ணிட்டார். நியூ இயர், பொங்கல் வாழ்த்துகள் எல்லாம் சொல்லிட்டு, படம் பாத்திட்டீங்களான்னு கேட்டார். ‘இல்ல சார்.. ஷுட்டிங்ல இருக்கேன். நாளைக்கு தான் போறேன்’னு சொன்னேன். முதல் ஷோ பாத்தவங்க எல்லாம் நெட்ல நல்லாயி ருக்குன்னு எழுதினதைப் பார்த்து அவரு பயங்கர உற்சாகமாக பேசினார். எல்லாம் பேசிட்டு முடிச்சிட்டு, ‘நீங்க ஒரு தனி ஹீரோ. என்கூட சேர்ந்து நடிச்சதுக்கு ரொம்ப நன்றி’ அப்படினு சொன்னார். ‘சார்.. உங்களோட தீவிர ரசிகன் நான். உங்க கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்ததிற்கு நான் தான் நன்றி சொல்லணும்’னு சொன்னேன். போனை கட் பண்ணும் போது கூட, ‘படம் முடிஞ்சுருச்சுனு விட்றாதீங்க. அப்பப்போ போன் பண்ணுங்க. சென்னை வந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு வாங்க’ன்னு சொன்னார்.

நீங்க ஒரு ஹீரோ. ‘வீரம்’ படத்துல 4 தம்பிகள்ல ஒருத்தரா நடிக்க எப்படி சம்மதிச்சீங்க?
நான் அஜித்தோட தீவிர ரசிகன். இயக்குநர் சிவா என்கிட்ட கதை சொல் றேன்னு சொன்னப்போ கூட, ‘அஜித் கூட நடிக்கிறேன். போதும் கதை எல்லாம் வேண்டாம்’னு சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு அஜித்தை அவ்வளவு பிடிக்கும். ‘மைனா' படத்துக்கு பிறகு அவரை சந்திச்சு பேசணும்னு ஆசைப்பட்டேன். அவர்கூட நடிக்க வாய்ப்பு வரப்போ எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும்.

‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’ படத்துல காமெடில பட்டைய கிளப்பியிருக்கீங்கனு இயக்குநர் சொல்லியிருக்காரே?

காமெடி படங்கள் பண்றது எனக்கு பிடிக்கும். ஏன்னா காமெடி எனக்கு நல்லா வரும். 'பட்டைய கெளப்பணும் பாண்டியா' படம் 100 சதவீதம் காமெடி படம்தான். நானும் சூரியும் சேர்ந்து செம காமெடி பண்ணியிருக்கோம். எனக்கு காமெடியும் வரும்னு நம்பிக்கையை கொடுத்த படம். கண்டிப்பா என்னை விட சூரிக்கு பெரிய ப்ரேக் கிடைக்கும்.

‘மைனா’ படத்தோட வெற்றிக்குப் பிறகு பெரியளவிற்கு உங்களோட படங்கள் ஹிட்டாகல. அதுக்கு என்ன காரணம்?

என்னை பொறுத்தவரை படங்களை சரியா கொண்டு போய் சேர்க்கலைன்னுதான் நினைக்கிறேன். ‘மைனா’க்கு பிறகு நான் நடிச்ச படங்கள் வந்ததே நிறைய பேருக்கு தெரியல.அதுமட்டுமல்லாம, ‘மைனா’ படத்துக்குப் பிறகு நிறைய பேர் அதே பாணியில் என்கிட்ட படங்கள் எதிர்பார்க்கு றாங்க. இது எனக்கு மட்டுமல்ல.. எல்லா ஹீரோக்களுக்கும் இதே மாதிரி நடக்குது. ஒரு படம் ஹிட்டாயிட்டா உடனே அதே சாயல்ல படம் பண்ணுங்கனு சொல்றாங்க.

என்னை பொறுத்தவரை ஒரு படம் நடிச்சா, ஒரு நடிகனா நல்லா பண்ணியிருக்கனா அதை மட்டும்தான் பாக்குறேன். 'மைனா' வெற்றிக்கு நிகரா ஒரு படம் கொடுக்கல அப்படிங்குறது உண்மை தான். அதை ‘ஆள்', 'காடு' படங்கள் கண்டிப்பா பூர்த்தி பண்ணும்.

படத்துல நடிக்க உங்க வீட்ல எதிர்ப்பு வந்திருக்குமே? எப்படி சமாளிச்சீங்க?

எங்க வீட்டுல எங்கப்பாதான் எல்லாமே. வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்த குடும்பம்தான். சிங்கப்பூர், மலேசியா, கனடால எல்லாம் எங்கப்பா வேலை பார்த்துதான் கொஞ்சம் மேலே வந்தோம். அதனால எங்கப்பா எப்போதுமே, எல்லாமே பசங்க விருப்பம்தான் அப்படினு விட்டுருவார். உனக்கு என்ன தோணுதோ பண்ணுனு சொல்லிடுவார். முதல்ல டிரைவராகப் போறேன்னு சொன்னேன். சரினு லைசன்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்தார். அப்புறமா.. நடிகனாக போறேன்னு கூத்துப் பட்டறைல சேர்ந்தேன். சரிப்பானு சொன்னார். குடும்பத்துல இருக்குறவங்கதான் நடிகன் எல்லாம் வேண்டாம் சொன்னாங்க. எங்கப்பா என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தார். நான் நடிகனாக ஆனதற்கு எங்க வீட்டுல இருந்து எதிர்ப்புனு எதுவுமே இல்ல.

இப்போ சினிமால உங்களோட வளர்ச்சியைப் பார்த்து உங்கப்பா என்ன சொல்றார்?

ரொம்ப சந்தோஷமாக இருக்கார். ‘ஜன்னல் ஓரம்’ படத்தை நான் நைட் ஷோ பாத்துட்டு வீட்டுக்கு அதிகாலை 3 மணிக்கு போனேன். எங்கப்பா படம் பாத்துட்டு தூங்காம காத்திருந்தார். நான் கதவை திறந்து உள்ளே போனதுமே, என்னை கட்டிப்பிடிச்சு “நல்லா பண்ணிருக்கடா... சூப்பர்.. பிரமாதம்.. இன்னும் பண்ணணும். விட்டுறதே..” அப்படினு சொல்லிட்டு தூங்க போயிட்டார். எங்கப்பா சொன்ன வார்த்தையைக் கேட்டு நான் அன்றைக்கு தூங்கவே இல்லை. அந்த வார்த்தைகள் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அது தான் எனக்கு உரம். கண்டிப்பா எனக்கான இடம் காத்துக்கிட்டு இருக்கு.

டயாபட்டிக்ஸ் பிரச்சினையை நொடிக்கு நொடி அறிய உதவும் கான்டெக்ட் லென்ஸ்.!



உலகத்தில் 19 பேரில் ஒருவருக்கு இருக்கும் இலுப்பு நீர் (டயாபட்டிக்ஸ்) பிரச்சினையை நொடிக்கு நொடி அறிந்து கொள்ள கான்டெக்ட் லென்ஸ்..ரெடியாகியுள்லது..கூகுள் கண்ணாடிக்கு பிறகு கூகுள் ஒரு புரோட்டோ டைப் கான்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கியுள்ளது.

இதை கண்ணில் அணிந்தால் இதனுள் இருக்கும் அப்டிக்கள் சென்ஸார் மற்றூம் சர்க்யூட் மூலம் உங்கள் உடம்பின் ஒவ்வொரு நிம்ட சர்க்கரை லெவல் மாற்றத்தை கண்டு கொள்ள முடியும்.


தற்போது நிறைய பேர் மருத்துவ பர்சோதனை செய்து கொள்வது இல்லை. இன்னும் பல பேர் ரத்தம் குத்தி சோதனை செய்ய தயக்கம். இன்னும் சில பேருக்கு ரத்த மாதிரி எடுக்கும் போது சரியாக இருக்கும் அப்புறம் வேலை காட்டும். அவர்கள் அடுத்த முறை எடுக்கும் போது டயாபாட்டிக்ஸ் அதிகரித்து இருக்கும்.

இன்னிலையில் இனிமேல் இதெல்லாம் இல்லாமல் லென்ஸை போட்டா தனக்கே தெரியும். இதில் எல் ஈ டி லைட் பொருத்தி சுகர் லெவலுக்கு ஏற்ற மாதிரி ஏற்ற லைட் எரியும்படி செய்ய போகிறார்கள். இனிப்பான செய்தி தானே.

Sunday, January 19, 2014

நம்மாழ்வாரை உயிர்ப்பித்த ‘உழவன் தாத்தா’ பாடல்…

நம்மாழ்வாரை உயிர்ப்பித்த ‘உழவன் தாத்தா’ பாடல்…



‘உழவன் தாத்தா வந்திருக்கேன்
உழவன் தாத்தா வந்திருக்கேன்
அறிவை வாங்கி பரிமாறு
அழிவை நோக்கி போராடு
உரமான உடலோடு
உரமில்லா பயிரோடு…
என்று தொடங்குகிறது அந்த பாடல்…’

தாஜ்நூரின் மயக்கும் இசையில் ஈசன் இளங்கோவின் ஈர்க்கும் வரிகளில் வேல்முருகனின் உருக்கும் குரலில் சேலம் மாநகரமே இந்த பாடலுக்கு ஆட்டம் போட, பொங்கல் திருவிழா அமர்க்களமாக அரங்கேறியது. இதுவரை பொங்கல் தினத்தன்று சினிமா பாடல்களை மட்டும் ஒலிபரப்பி அதற்கு ஆட்டம் போட்டு வந்த பலரும், இது என் பாட்டு என்கிற சந்தோஷத்தோடு ஆடிப் பாடினர்.

இப்படியொரு பாடல் உருவாக காரணமாக இருந்த ஈசன் இளங்கோ என்ன சொல்கிறார்?

“சமீபத்தில்தான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை பறிகொடுத்தோம். அந்த ஒரு காரணத்தாலேயே இந்த பொங்கல் ஒருவகையில் துக்ககரமானது என்றாலும், நம்மாழ்வாரின் பணிகளை ஒவ்வொருவரும் தொடர வேண்டும் என்ற வேட்கை மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது.

அவரையே உழவன் தாத்தாவாக ஒவ்வொருவரும் நினைத்து வழிபட வேண்டும். இனி வரும் காலங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி, காந்தி தாத்தா மாதிரி எங்கள் நம்மாழ்வாரும் உழவன் தாத்தாவாக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக ஒரு பாடலை நானும் மருத்துவர் சசியும் இணைந்து எழுதினோம்.

எங்கள் சேலம் மண்ணை சேர்ந்த தாஜ்நூர் சென்னையில் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார். அந்த பாடலை செல்போனிலேயே அவரிடம் படித்துக் காட்டினேன். என் ஆசையையும் அவரிடம் சொன்னேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் இதை பாடலாக உருவாக்கி எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். வேல்முருகன் குரலில் கம்பீரமாக வந்திருந்த அந்த பாடல்தான் இன்று சேலம் நகர் முழுவதும் திரும்ப திரும்ப ஒலிபரப்பப்பட்டது. தமிழர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் தோற்றத்தில் பலருக்கும் மேக்கப் போட்டு தெருக்களில் உலவ விட்டோம். நம்மாழ்வார் தாத்தா குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் இனிப்பு வழங்கினார். தாரை தப்பட்டை மேளங்கள் முழங்க அவரை வீதி வீதியாக அழைத்து சென்றோம். சேலம் நகரில் எங்கு திரும்பினாலும் ஒலித்த இந்த உழவன் தாத்தா பாடல் இனி உலகத் தமிழர்களின் இல்லங்களில் எல்லாம் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசை என்றார் ஈசன் இளங்கோ.

பாடலை ஒருமுறை யார் கேட்டாலும் அதை ஒலிக்க விட்டு ஆடப்போவது நிச்சயம்.

“கே.பாக்யராஜ் ஊசி போடுவதில் கில்லாடி…” - மன்சூர் அலிகான்



ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ளபடம் ’3 ஜி’ எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’.

இதில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான், சசிதரன், சங்கீதா, கவிதா,  மாஸ்டர் மித்ரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபாஸ்ரீ ஆகியோருடன் நம்ம ஊர் கே. பாக்யராஜ் முக்கியமான விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்துள்ளார். பி.கே.ராஜ் இயக்கியுள்ளார். இசை ஆதிஷ் உத்ரியன், பாடல்கள் குகை.மா.புகழேந்தி .

இந்த 3 ஜீனியஸஸ் எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசும் போது தன் மலேசிய அனுபவத்தைக் கூறினார்

“நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன். இந்த முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள்.

நான் மலேசியா  நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

‘ஒன் மலேசியா’ என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை. ‘என்னய்யா ஊரு இது விடிய  விடிய சாப்பிடறாங்க…’ என்று ஆச்சரியப் பட்டேன்.

மூன்றாவது விஷயம் அங்கு மூணுநாளைக்கு ஒரு முறை, நாலு நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது. எனக்குப் பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது..? அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்…” இவ்வாறு பேசினார்.

நடிகர்  மன்சூர் அலிகான் பேசும்போது “இந்தப் படம் நல்ல முயற்சி. மலேசியாவைக் கண்ணாடி போல காட்டியுள்ளார்கள். பார்க்க அருமையாக வந்துள்ளது. இளம் விஞ்ஞானிகள் பற்றிய கதை. இதில் பாக்யராஜ் அவர்கள் விஞ்ஞானியாக வருகிறார். கையில் ஊசியுடன் தோன்றுகிறார். அவர் ஊசி போடுவதில் பெரிய கில்லாடி.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊசி போட்டார். அதோட தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது. போட்டது முருங்கைக்காய் என்கிற ஊசி. அதற்கு முன்னாடி எல்லாம் முருங்கைக் காயை எவனும் சீந்த மாட்டான். கண்டுக்கவே மாட்டான். ஆனால் அவர் போட்ட போடுல உலகம் முழுக்க முருங்கைக்காய் கலக்கியது. எங்க ஊர் பக்கத்திலிருந்தெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று கலகலப்பூட்டினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மலேசியாவில் நடனப் பள்ளி நடத்திவரும் குருஸ்ரீ .ஆர். சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.இது அனைவரையும் கவர்ந்தது.

2011ல் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்ற லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் கௌசியா, பவானி இருவரும் சிடி வெளியீட்டு விழாவில் சிடியைப் பெற்றுக் கொண்டனர். பரிசளித்தும் பாராட்டப் பட்டனர்.

தயாரிப்பாளராகும் அஜித்..?



தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் அல்டிமேட் ஸ்டார் அஜித்.

தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் தங்களது தயாரிப்பில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.

இந்த பட்டியலில் விரைவில் அஜீத்தும் சேருகிறாராம். ஒரு நேரத்தில் தான் நடித்த படங்கள் சறுக்கி வந்தபோது, தன்னை வைத்து தைரியமாக படம் தயாரித்தவர்களுடன் சேர்ந்து தானும் பங்குதாரராக செயல்பட்ட அஜித், இந்த முறை, தனக்காக தயாரிப்பாளராகவில்லையாம்.

நல்ல திறமையான நடிகர், இயக்குனர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தயாரிப்பாளராகிறாராம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. என்றபோதும், தலயின் தாராள குணமறிந்த சில இளவட்ட நாயகர்கள் ஆதரவு கேட்டு தலசமூகத்தை நாடியுள்ளார்களாம்.

எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்..!



ரவிச்சந்திரன்–கே.ஆர்.விஜயா நடித்து, பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘நினைவில் நின்றவள்.’ இதே பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அஸ்வின் சேகர் ஏற்கனவே ‘வேகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இது, அவருக்கு இரண்டாவது படம்.

படத்தை பற்றி எஸ்.வி.சேரிடம் கேட்டபோது,”இது, கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவரை சொல்லப்படாத ஒரு காதல் கதை. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இப்படி ஒரு கணவர் வரவேண்டும் என்று ஆசைப்படுகிற மாதிரி, கதாநாயகனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில், அடுத்த காட்சி என்ன என்று யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த கவிஞர் வாலி, என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அதன் அடையாளமாக அவர் இறப்பதற்கு முன், இந்த படத்துக்காக 4 பாடல்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். சென்னை, ஏற்காடு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

படத்தில் கீர்த்தி சாவ்லா, காயத்ரி ஆகிய 2 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள். சின்னி ஜெயந்த், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘‘நிலா அது வானத்து மேலே’’ என்ற பழைய பாடல், ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்டுள்ளது. சீர்காழி சிவசிதம்பரம் பாடியிருக்கிறார். அந்த பாடலுக்கு கவர்ச்சி நடிகை சோனா, கீர்த்தி சாவ்லா ஆகியோருடன் அஸ்வின் சேகர் நடனம் ஆடியிருக்கிறார்.

கே.மணிகண்டன் குமரவேல், டாக்டர் சித்ரலட்சுமி குமரவேல் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தை டைரக்டு செய்த அகத்திய பாரதி புற்று நோய் காரணமாக மரணம் அடைந்து விட்டார். அவருடைய 2 மகள்களின் படிப்பு செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு ‘கட்’ கூட கொடுக்காமல், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.’’ என்றார்

ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜின் புதிய தொடர்..!



 ஒவ்வொருவருக்குமே தாங்கள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில், ஒர் அலாதியான சுகம் இருக்கிறது. முக்கியமான நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து மாட்டிக்கொள்வதற்கும், டைரி எழுதுவதற்கும் கூட, ஒரு பின்னணி காரணம் இருக்கிறது. நம் நினைவுக் குளங்களில் படர்ந்திருக்கும், பாசியின் மேல் கல்லெறிவதில் ஒரு பேரானந்தம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உணர்வைதான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது நான் நடந்து வந்த பாதை அல்லது எனது வாழ்க்கையை பற்றிய சுயதம்பட்டமோ அல்ல. இது நான் மனக்கிடங்கில், சேமித்து வைத்த நினைவுகளின் அணிவகுப்பு. இதில், நான் மட்டும் தெரியப் போவதில்லை... நீங்களும்தான்.

எனது பால்யம் என்பது எனது பால்யம் மட்டுமா? அது உங்களுடையதும்தான்! எனது அவமானம், வெற்றி, தோல்வி, விருது எல்லாம் என்னுடையது மட்டுமா என்ன? அவை அனைத்துமே நம்முடையது.

அப்படி இந்தத் தொடர் மூலம் உங்கள் இளமைக்கால நினைவுகள் மயில் தோகையாக மனதில் விரியலாம், ஞாபக அடுக்குகளில் என் வார்த்தைகள் பொருத்திப்போடும் தீக்குச்சிகள் பழைய நினைவுகளை சுட்டு எரிக்கலாம், சூத்திரவாலு, அறுந்தவாலு, கரட்டான் மண்டையன், பொண்ணுக்கு வீங்கி, அதிரடி குசுவுனி, அவசர குடுக்கை, வீத்தக்குட்டி, அராத்து என பட்டப்பெயர் வைத்து அழைத்து மகிழ்ந்த நண்பனும் தோழியும், நினைவில் வந்து போகலாம். சிமிட்டுக்கண்ணி, சில்க் சுந்தரி, புட்டம்மா சிட்டு ,

வேப்பெண்ணை தேச்ச தேவதை என நமது முதல் காதலிகள் கனவில் கடந்து போகலாம்,

ஒரு இலைய கட்டிக்கிறேன்,

ரெண்டு இலைய கட்டிக்கிறேன்,

மூணு இலைய கட்டிக்கிறேன்,

நாலு இலைய கட்டிக்கிறேன்,

அஞ்சலைய கட்டிக்கிறேன்னு

பாடி மகிழ்ந்து, டேய்... இவன் அஞ்சலை புள்ளைய கட்டிக்கிறேன்னு சொல்றான்டா, என கேலி செய்து அஞ்சலைய வெக்கப்பட வைத்து... உதிர்த்த சிரிப்பொலிகள் காதுகளில் ஒலிக்கலாம், ரெடியோர் ரெடி, கிளியோர் கிளி, கிக்கிலி பிக்கிலி, மக்கான், சுக்கான், பாலு பறங்கி, நாட்டும சீட்டும அதிரி , எங்க மாடு எளச்சு போச்சு, தண்ணிங்குடுறா கொள்ளப் பயலே... விளையாண்ட விளையாட்டுக்களும், மென் கவிதை, மென் தூறல் கவிதை, என ரசனை மாற்றம் ரசவாதமாய் நிகழ்ந்த காலம்..

மயிலிறகு ஒளித்து, குட்டி போடும் நாள் பார்த்து காத்திருந்தது, கட்டிபோட்டா குட்டி போடும் இலை சுமந்த புத்தங்களை நாம் சுமந்தது, 1001 முறை ஓம் முருகா ஓம் முருகா! என எழுதி அனுப்பி கந்த சஷ்டி புத்தகம் வாங்கியது, தேங்காய் உடைக்கப்போகும் அம்மாவிடம் டம்ளர் எடுத்து போய் தேங்காய் தண்ணீர் வாங்கி தேவாமிர்தம் போல் குடித்து மகிழ்ந்தது, மெட்ராஸ் ஐ வந்ததும் நண்பர்கள் கண்ணை நேருக்கு நேராய் பார்த்து ஒனக்கும் ஒட்டி விட்டுருவேன்... என மிரட்டி தாத்தாவின் கண்ணாடியை பாட்ஷா கண்ணாடியாய் நினைத்து போட்டு ஸ்டைலாய் திரிந்தது, உள்ளூர் டூரிங் டாக்கீஸில் குடும்பத்தோடு அத்தை மகள் படம் பார்க்க செல்கிறாளே என அடம்பிடித்து... ‘இதயம்’ படம் குடும்பத்தோடு பார்த்தது,

ஊருக்கு முன்னாடி பள்ளிகூடத்துக்கு வந்து விட்டு இன்னைக்கு நான்தான் ஸ்கூல் first-னு தம்பட்டம் அடித்து திரிந்தது, பேரன், பேத்தி எடுத்துருந்தாலும்... ஏதோ ஒரு நினைவில்... தனக்கு பிடித்த ஒரு வாத்தியார்... நினைத்துப் பார்க்கும் ஒரு தருணம் வரும். அப்படி நமக்கு பிடித்த... குரு..! திருவுருவமாய் வந்து செல்லலாம்..! கொத்து கொத்து மாங்கா கோமாரி மாங்கா மதுரைக்கு போனாலும் வாடாத மாங்கா, அது என்ன? பல நேரம் விடை தெரியாத விடுகதை போட்டு சுற்றி திரிந்த காலங்கள், 13ம் நம்பர் பஸ்ஸில் “மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் பாடலை”, பஸ்ஸை ஒரு பல்லாக்கு போல நினைத்து மேடு பள்ளங்களில் ஆடி ஆடி அசைந்து மிதந்து சென்றபடி நாங்களும் ராஜ ஊர்வலம் சென்று ரசித்த நாட்கள், “ஆசைய காத்துல தூதுவிட்டு” பாடலை தேசியகீதம் போல சிலோன் வானொலியில் கேட்டு கிறங்கி கிடந்த நினைவுகள், என பழசெல்லாம் படபடபடனு ஞாபகத்திற்கு வரப்போகிறது,

முடிவடையும் 'மான் கராத்தே' படப்பிடிப்பு..!



 பஞ்சாப்பில் இந்தி படங்களின் பாடல்கள் படமாக்கப்படும் இடத்தில் 'மான் கராத்தே' படத்தின் பாடல்களை படமாக்கி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மான் கராத்தே'. ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை எழுத, திருக்குமரன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில், காதலர் தினத்தன்று படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில், இரண்டு பாடல்களை பஞ்சாப்பில் பிருந்தா நடன அமைப்பில் படமாக்கி வருகிறார்கள்.

ஷாருக்கான், கஜோல் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Dilwale Dulhaniya Le Jayenge' படத்தின் பாடல்கள் படமாக்கப்பட்ட இடத்தில் இப்படத்தின் பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது, கோதுமை வயல் பரப்பில் இப்படத்தின் பாடல்களை எடுத்து வருகிறார்கள். இப்பாடலில் ஹன்சிகா லுங்கி கட்டிக்கொண்டு நடனமாடுவது போன்று காட்சிபடுத்தி வருகிறார்களாம்.

இரண்டு பாடல்கள் முடிந்து விட்டால், மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும். ஏப்ரல் 11ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் கெளதம் மேனன் மீது வழக்கு..?



திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தின் இயக்குநர் கெüதம் வாசுதேவ் மேனன். இந்தப் படத்தை ஜெயராமன் என்பவர் தயாரித்திருந்தார். இதை ஹிந்தி மொழியில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெயராமனுக்கும் கெüதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.

இப்படத்தின் லாபத்தில் 25 சதவீத பங்கு ஜெயராமனுக்கு தரப்படவேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தனக்குரிய பங்கை கெüதம் மேனன் தரவில்லை என்று போலீஸில் ஜெயராமன் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இந்த புகாரின் பேரில் கெüதம் மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கெüதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர்கள் 5 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

2005 உலக தடகள பைனல்: அஞ்சு ஜார்ஜுக்கு தங்கம்!


மொனாக்கோவில் 2005-ல் நடைபெற்ற உலக தடகள பைனலில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற ரஷிய வீராங்கனை தத்யானா கோட்டோவா ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அவருடைய சாதனை அழிக்கப்பட்டு, அந்தப் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முதலிடத்தைப் பிடித்ததாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச தடகள சம்மேளனத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் தங்கப் பதக்கமும், அமெரிக்காவின் கிரேஸ் உப்ஷா வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் யூனிஸ் பர்பர் வெண்கலப் பதக்கமும் வென்றதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலக தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அஞ்சு பாபி ஜார்ஜ் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அஞ்சு பாபி ஜார்ஜ், “2005 உலக தடகள பைனல் போட்டியில் நான் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டிருப்பதாக இந்திய தடகளம் சம்மேளனம் தெரிவித்தது.

அதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். எனது 9 ஆண்டுகால காத்திருப்புக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. எனது காலத்தில் நீளம் தாண்டுதலில் பங்கேற்ற ரஷிய வீராங்கனைகள் சிலர் மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் என நினைத்தேன்” என்றார்.

தமிழ் படம் இயக்கும் ஆஸ்திரேலிய இயக்குனர்..!



ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் தமிழ் படம் இயக்குகிறார். பழமையான இசை கருவி யாழ். இந்த பெயரில் தமிழ் படம் இயக்குகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்.எஸ்.ஆனந்த். அவர் கூறியதாவது:

யாழ் என்பது இலங்கையின் பழமையான இசை கருவி. இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்களின் கலாசாரத் துக்கும் யாழ் என்றுதான் பெயர். இந்த கலாசாரத்தை பற்றி இலங்கை இறுதி போரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

மறக்கப்பட்ட இக்கலாசாரத்தின் சமகாலத்து நிலைமையை படம் விளக்குகிறது. இதில் வினோத், சசி, மிஷா, ரக்ஷனா, லீமா பாபு ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். கருப்பையா, நசீர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். பாரதி, அருணகிரி இசை அமைத்திருக்கின்றனர்.

Saturday, January 18, 2014

குட்டையாக இருக்கும் ஆண்களுக்கான சில டிரஸ்ஸிங் டிப்ஸ்....!


குட்டையாக இருக்கும் ஆண்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் மனப்பான்மையும் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் குட்டையாக இருப்பதால் உலகமே முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தமில்லை என்பதை முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 குட்டையாக இருப்பவர்களுக்கும் பல விதமான ஆடை அணியும் விதங்கள் இருக்கிறது. அவைகளை பின்பற்றினால் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் இழந்த தன்னம்பிக்கையையும் மீண்டும் பெறுவார்கள். நீங்கள் அணியும் ஆடையுடன், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு உங்கள் வங்கி இருப்பை கரைக்க வேண்டும் என்று எண்ணி விடாதீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உணர்வுடைய முயற்சி இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தேர்ந்தேடுக்கும் ஆடைகள் உங்கள் தோற்றத்தை மந்தமாக காட்டாமல் உங்களை முழுமையாக காட்சிப்படுத்த வேண்டும்.

கொடகொடவென இருக்கும் பேண்ட்டிற்கு பதிலாக சரியான அளவிலான பேண்ட்டை தேர்ந்தெடுத்து அணிந்தால் உங்களை சற்று உயரமாக காட்டும். மாறாக கொடகொடவென இருக்கும் பேண்ட்டை அணிந்தால் குட்டையாக தெரிவீர்கள். அதே போல் சற்று உயரமான ஹீல்சை கொண்ட ஷூக்களை பயன்படுத்துங்கள். ஆனால் அவை பெண்கள் பயன்படுத்துவதை போல் மிகவும் உயரத்துடன் இருக்க கூடாது.

 அப்படி அணியும் போது அவர்களின் உயரம் சற்று அதிகரிப்பதோடு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் என்று வரும் போது முடிந்த வரை நேர்கோடுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட சட்டைகள் மற்றும் பேண்ட்களை பயன்படுத்துங்கள். அப்படி செய்யும் போது நீங்கள் குட்டையாக இருப்பது மறைக்கப்பட்டு, பார்ப்பதற்கு சற்று உயரமாக தெரிவீர்கள்.

 மேலும், குட்டையாக இருக்கும் ஆண்கள் இதர அலங்கார பொருட்களின் மீதும் கவனம் செலுத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த தோற்றமும் மேம்படும். பார்ப்பவர்களின் கவனத்தையும் உங்கள் மீது ஈர்த்து உங்களை உச்சி முதல் மாதம் வரை கவனிக்க செய்யலாம்.

நீட்டு வடிவில் இருக்கு வடிவமைப்புகள்

 நீட்டு வடிவத்தில் இருக்கும் வடிவமைப்புகள் உங்களை உயரமாக காட்டும். அதற்கு காரணம் நம் கண்கள் அந்த கோடுகளை உங்கள் உயரத்தோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கும். பாதியிலேயே துண்டித்து போகாமல் கடைசி வரை உள்ள நீட்டு வடிவு கோடுகளை கொண்ட ஆடைகளை கொண்டு உங்களை உயரமாக காட்டுவது ஒரு சிறந்த வழியாகும். நல்ல டிசைனோடு உள்ள ஆடையில் மேலயும் கீழேயும் விழுகின்ற நேர் கோடுகளை கொண்ட ஆடைகளை அணிவித்தால் பார்ப்பதற்கு உயரமாக மட்டுமல்லாமல் ஸ்டைலாகவும் இருப்பீர்கள்.

சரியான அளவிலான ஆடைகள் முடிந்த வரைக்கும்,

 உங்கள் உடலமைப்புக்கு பொருந்துகின்ற சரியான அளவிலான ஆடைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் அணியும் ஆடைகள் தொளதொளவென இருக்க கூடாது. ஒவ்வொரு ப்ராண்ட் ஆடைக்கும் தனித்துவமான அளவு இருக்கும். அதனால் ஸ்லிம் ஃபிட் வகை ஆடைகளை விற்கின்ற பிராண்டை தேர்ந்தேடுத்து, அது உங்கள் உடல் அமைப்புக்கு பொருந்துகிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். ஒரு வேளை, ரெடிமேட் ப்ராண்ட் எதுவுமே உங்களுக்கு பொருத்துமாக இல்லையென்றால் நல்லொதொரு டெய்லர் மூலமாக உங்கள் உடல் கட்டமைக்கு பொருந்துகின்ற வகையில் ஆடைகளை தைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

 ஒற்றை நிற ஆடைகள்


 பல விதமான நிறங்களை கொண்ட ஆடைகளை தவிர்த்தால் உங்கள் தோற்றம் நெறிப்படும். ஒரே குடும்பத்தை சேர்ந்த நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். முடிந்த வரை நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் ஒரே வகை நிறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கருமையான நிறத்தை தழுவி இருப்பது நல்லது. இது உங்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்டும்.

 சிறிய விகிதங்கள்

உங்கள் ஆடைகளின் சில பகுதிகள் ஒன்றின் மீது ஒன்று மடிந்து இருக்கும் போது உங்கள் தோற்றத்தை எடுத்து காட்டுவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் மேல் பகுதியில் சொல்ல வேண்டுமானால், உங்கள் சட்டை காலர் மற்றும் ஜாக்கெட் முன்படிப்பு (நீங்கள் ஜாக்கெட் அணிந்திருந்தால்). இவை இரண்டையுமே குறுகலான பக்கம் வைத்திடுங்கள்.

 சரியான ஆடைகள்


 ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் அல்லது சூட் வகை ஜாக்கெட் அணிந்தால் உங்கள் தோள்பட்டை கனமாக தெரியும். இப்படி இருக்கும் போது அது உங்கள் உயரத்தை அதிகரித்து காட்டும். பேண்ட் அணியும் போது இயற்கையான இடுப்பு கோடுகளில் நிருகுமாறு அணியுங்கள். மாறாக இடுப்புக்கு கீழே அணிவித்தால் உங்கள் கால்கள் குட்டையாக தெரியும். பொதுவாக குட்டையான ஆண்களுக்கு அவர்களின் மற்ற உயரமான பாகங்களை விட அவர்களின் கைகளும் கால்களும் சின்னதாக இருக்கும். அதனால் தான் அவர்கள் குட்டையாக இருக்கிறார்கள். அதனால் உங்கே உடம்பின் மேல் பகுதியில் அணியும் ஆடையின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 கொஞ்சம் உயரத்தை அதிகரித்திடுங்கள்


 அதிகமாக இல்லாமல், குறைந்த அளவில் கொஞ்சம் உயரத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அப்படி உங்கள் உயரத்தை அதிகரிக்க சற்று உயரமாக இருக்கும் காலணிகளை அணியலாம். அல்லது லிஃப்ட், தடிமனான காலனி சோல், உயரமான ஷூ போன்ற உபகரணங்களை பயன்படுத்தலாம். இவை அனைத்தினாலும் உங்கள் உயரத்தை சிறு அளவிற்கு உயர்த்திடலாம்.

சுருட்டுப் பிடிக்கும் சுடலை ஆச்சியாக நடிகை நளினி!



ஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் படமாக்கப்பட்டது.

அப்போது நாயகி ஸ்ரீபிரியங்காவை ரத்தக்காட்டேரியிடமிருந்து காப்பாற்ற நளினி மந்திர உச்சரிப்பு செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை வேடிக்கைப் பார்க்க வந்த பெண்களுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சாமி வந்து ஆட ஆரம்பிக்க படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.

இப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகிய தெரிந்த முகங்களும் நடிக்கின்றனர்.

சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கும் இப்படத்தின் இசையை பிப்ரவரியில் வெளியிடவுள்ளனர்.

நாமளா நாடிப்போனா குறைவு ; அதுவா தேடி வந்தா அதிகம்;



ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்..

ஹீரோயின்கள் செம சூப்பர் - கார்த்திக் பேச்சு....!


கடல் கவுதம் நடிக்கும்  படம் என்னமோ ஏதோ. ரகுல் பிரீத் சிங், நிகிஷா படேல் ஜோடி. ரவி தியாகராஜன் டைரக்டு செய்கிறார். கார்கி பாடல். டி.இமான் இசை. பி.ரவிகுமார். பி.வி.பிரசாத் தயாரிப்பு.

 இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கவுதம் தந்தை நடிகர் கார்த்திக் பேசும்போது, இன்றைய தினம் திரையுலகம் இளைஞர்கள் வசம் இருக்கிறது. திறமையாக பணியாற்றுகின்றனர். சிறந்த படங்களை தருகின்றனர்.

 சாதனையாளர் வைரமுத்து மகன் கார்கி அருமையாக பாடல்கள் எழுத, டி.இமான் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். என் மகன் கவுதம் எனக்கு செல்லப் பையன்.

அவனுக்கு திரையுலகினர் ஆதரவு தரவேண்டும். இப்போது வரும் ஹீரோயின்கள் அழகாக செம சூப்பராக இருக்கிறார்கள். அவர்களை பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது என்றார்.

டப்பிங் படம் வெளியிடும் மாபியா கும்பல் பிரகாஷ்ராஜ் கட்டம்..?




கர்நாடகத்தில் டப்பிங் படங்கள் மூலம் மாபியா கும்பல் கொள்ளையடிக்கிறது. அப்படங்களை திரையிடக்கூடாது என்று பிரகாஷ்ராஜ்  கண்டனம் தெரிவித்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ். சில கன்னட படங்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை. தமிழில் நடித்த பிறகுதான் தேசிய அளவில் பிரபலமாகி, இந்தி படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். கர்நாடகாவில் சமீபகாலமாக தமிழ் உள்பட பிறமொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 இது தொடர்பாக போராட்டம் நடத்தவும் கர்நாடக திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் பேசிய பிரகாஷ்ராஜ் டப்பிங் படங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் பேசியதாவது: டப்பிங் படங்கள் கன்னட படங்களை அழிக்கும் பேய். இதுபோன்ற படங்களுக்கு பெரிய மாபியா கும்பல் உடந்தை யாக உள்ளது.

டப்பிங் படங்களுக்கு கன்னட திரையுலகில் பெரிய ஆதரவு இருப்பதை கேட்டு வருத்தம் அடைகிறேன்.  இந்தநேரத்தில் ராஜ்குமார் உயிரோடு இருந்திருந்தால் நிலைமையே வேறுமாதிரி இருந்திருக்கும். கன்னட படங்களுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நான் குரல் கொடுப்பேன்.

 கன்னட படங்களால் வாழ்வு பெற்றுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் டப்பிங் படங்களால் பாதிக்கப்படுவார்கள். எனவே கன்னட திரையுலகில் டப்பிங் படங்கள் வருவதை கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சில டிப்ஸ்..!



சலூனுக்குச் சென்று அல்லது விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அக்குள் முடிகளை எடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். முடியை எடுக்க உதவும் கிரீம்களின் விலையும், மற்ற இடங்களுக்கு சென்று அதை எடுக்க ஆகும் செலவுகளும் மிகவும் உயர்நது விட்டன.

ஆனால் இப்பொழுது, நாம் வீட்டிலிருந்த படியே அதிகம் செலவு செய்யாமல், கருமைத் தோற்றத்தைத் தரும் அக்குளில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும். இதை செய்யும் முறையை நாம் கீழ் காணும் பகுதியில் பார்க்கலாம். உங்களுடைய அக்குளில் உள்ள முடிகளை ஆபத்தில்லாமல் நீக்கும் வகையில் இயற்கையான கலவைகளை இப்பொழுது உங்களால் பெற முடியும். இதற்கு தேவையான பொருட்களை சரியான அளவுகளில் எடுத்து பயன்படுத்தினால் தான் நமக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான வழிமுறைகள்:


  •  இரண்டு கோப்பை சர்க்கரை, ¼ கப் தண்ணீர், ¼ கப் தேன், மற்றும் ¼ கப் புதிய எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு செப்பரேட்டரில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • அந்த சாஸ்பேன் அல்லது செப்பரேட்டரை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். குறைந்த நெருப்பில் இதை கொதிக்க செய்யுங்கள். இதை ஏறத்தாழ அரை மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். அப்போது இதன் நிறம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திற்கு மாறி விடுகின்றது. 246 டிகிரி வரும் வரை கொதிக்க விடுங்கள். இப்போது அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து அறை வெப்பநிலையில் வைத்து குளிரச் செய்யுங்கள்.

  • உங்கள் அக்குள் பகுதியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் கழுவியதும் நன்கு துடைத்து உலர வைத்து வியர்வை வராத அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குழந்தைகள் பயன்படுத்தும் பவுடரை அங்கு போடுங்கள். இது இவ்விடத்தில் உள்ள எஞ்சிய ஈரத்தையும் எண்ணை பதத்தையும் உறிந்து கொள்ளும்.

  • இப்போது இயற்கையாக செய்யப்பட்ட இந்த மெழுகு கலவையை ஒரு ஸ்பூன் அல்லது கைகளை வைத்தே அக்குளில் தடவ வேண்டும். ஒரு வேளை நீங்கள் இதை முதல் முறையாக பயன்படுத்தினால் உங்கள் உடம்பில் ஒரு சிறிய பகுதியில் முதலில் பயன்படுத்தி பாருங்கள். இவை எந்த விதத்திலாவது அலர்ஜியை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது. முடி உள்ள கையின் மேல் பகுதி அல்லது கால் ஆகிய இடங்களில் இதை பயன்படுத்தி எவ்வாறு செய்வது என்று உறுதியாக கற்றுக் கொண்டு பின்னர் அக்குளில் பயன்படுத்தி தேவையற்ற முடியை எடுக்க முயலுங்கள். இது எந்தவிதமான அலர்ஜியையும் ஏற்படுத்தவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த கலவையை உங்களுடைய அக்குளில் தைரியமாக தடவலாம்.

  • அக்குளில் தடவிய கலவையை சிறிது நேரம் கழித்து அடுத்த கையை வைத்து எடுங்கள். ஆதை எடுக்கும் போது அக்குளின் தோலை மிக உறுதியாக இழுத்து பிடிக்க வேண்டும். அப்போது தான் வலி ஏற்படாது. விரைவாக அங்கு ஒட்டியிருக்கும் மெழுகு போன்ற கலவையை பிடுங்கி எடுக்க வேண்டும். இவ்வாறு அழுத்தமாக இழுக்கும் போது தான் அந்த இடத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

  •  அனைத்து முடியையும் எடுத்த பிறகு மெழுகு கலவை ஏதேனும் மீதமிருந்தால் அதை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கழுவி விட வேண்டும். இந்த காரியத்தை செய்த பின் நல்ல மாய்ஸ்ட்ரைஸரை பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் தோலை மிருதுவாகவும் மற்றும் மென்மையாகவும் வைக்கும்.
இந்த மெழுகு போன்ற இயற்கையான கலவையை குளிர்ந்த இடத்தில் வைத்து, எப்போதெல்லாம் முடியை எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இதை எடுத்து பயன்படுத்த முடியும்.

இதை உங்கள் கால், கைகள் மற்றும் அக்குள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம்.

இதனை செய்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்து நெடுநாட்களுக்கு பயன்படுத்தலாம்.

மன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பொழுதுப்போக்குகள்..!




வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்கு தான். பணம் சம்பாதிப்பது நம் தேவைக்காக, பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே மன அழுத்தமும் வந்து சேர்கிறது.

இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலா தனிமம் ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும், அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்டு ஒரு ஆறு பொழுதுபோக்குகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள்.

புத்தகம் படிப்பது


புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

யோகாசனம்

 தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் போது, மனமானது சாந்தமாகி பின் அமைதி அடையும்.

இசையை கேட்பது

 கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு ரசிப்பதே. வேறு எதையும் விட, இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.

தோட்டக்கலை


 தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று, செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்.

சமைப்பது


சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து, மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.

எழுதுவது

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம் அல்லது சிறு கதைகளாவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணிப்பொறி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும். இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும்.

இது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுவதால், மன பாரம் குறையும். ஆதலால் மனம் விரும்பும் பொழுதுப்போக்கை தேர்ந்தெடுத்து, மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியுடன் இருங்கள்.

மாற்றுமொழி மார்க்கெட் பிடிக்க ஹீரோக்கள் கடும் போட்டி..!



அஜீத், விஜய் நடித்த படங்கள் கேரளாவில் வெளியாகி வசூல் அள்ளுகிறது. சமீபத்தில் வெளியான ஜில்லா, வீரம் போன்ற படங்களால் மல்லுவுட் படங்களின் ரிலீஸ் கேரளாவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கெட் மீது சக ஹீரோக்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோரும் குறி வைத்துள்ளனர்.

அவர்களும் தங்கள் பட புரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா சென்று பங்கேற்கின்றனர். சிங்கம் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஆந்திரா, கேரளா, சென்றார் சூர்யா. அதேபோல் பிரியாணி படத்துக்காக கார்த்தி, பாண்டியநாடு படத்துக்காக விஷாலும் ஆந்திரா, கேரளா சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

 இதனால் பாதிக்கபட்டிருக்கும் மல்லுவுட் ஹீரோக்கள் தங்களின் பார்வையை கோலிவுட் மார்க்கெட் மீது திருப்பி இருக்கின்றனர்.

தாங்கள் நடிக்கும் மலையாள படங்களில் தமிழ் ஹீரோக்களை புக் செய்யத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான்,  சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற டாப் ஸ்டார்கள் கோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்ற தமிழ் நாட்டுக்கு விசிட் அடித்து பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி மார்க்கெட்டுக்குள் என்டர் ஆகும் எண்ணத்தில் சூர்யா தான் நடித்த சிங்கம் 2 இந்தியில் டப்பிங் செய்துவெளியிட்டார்.

நடிகர் தனுஷ் நேரடி இந்தி படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். பாலிவுட் ஹீரோக்களில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். ஆமிர்கான், ஹிருத்திக் தமிழில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் படங்களும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த போட்டியால் இந்தியா முழுவதும் சினிமா மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

ஒரே படத்தில் 3 நிஜ சம்பவம்..!



3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது  கற்பவை கற்றபின். இதுபற்றி இயக்குனர் பட்ராம் செந்தில் கூறியதாவது:

 ஈழ தமிழர்கள் பிரச்னைக்காக உயிர் தியாகம் செய்த இளைஞர், தகாத உறவால் அவமானத்தில் தற்கொலை செய்யும் ஜோடி, கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் பெண் என 3 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.

 தற்கொலை செய்யக்கூடாது என்று அட்வைஸ் சொல்லும் ஸ்கிரிப்ட்டாக இல்லாமல் தற்கொலை செய்பவர்கள் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்ற மாறுபட்ட கோணத்தில் இதன் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

  சந்தீப்-தருணா, மது - அபினிதா ஆகிய 2 ஜோடிகளுடன் சிந்துகுமாரி மற்றும் சிங்கம்புலி, விசித்ரன், அம்மு, யுவான் சுவாங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கே.வி.கணேஷ் ஒளிப்பதிவு. இந்திரவர்மன் இசை. கார்த்திகேயன், செந்தில் தயாரிப்பு. ஊட்டி, திருச்சி மற்றும் ஆந்திராவில் ஷூட்டிங் நடந்துள்ளது.

என்னுடன் நடிக்க ஸ்ருதிக்கு அனுபவம் போதாது..! - கமல்



என்னுடன் நடிக்க ஸ்ருதிக்கு அனுபவம் பத்தாது என்றார் கமல்ஹாசன். விஸ்வரூபம் 2ம் பாகம் படத்தை முடித்த கையோடு உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

இதில் கமல் மகள் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. தற்போது அதிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். இதுபற்றி கமல் கூறியதாவது: உத்தமவில்லன் படத்தில் என்னுடன் ஸ்ருதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் தேதி ஒத்துவரவிரவில்லை.

ஒருவகையில் அது நல்லதுதான். இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்ருதியும் நானும¢ சேர்ந்து நடிப்பது என்பது போதிய அவகாசம் இல்லாத சூழலாக உள்ளது.

அப்படி சேர்ந்து நடித்தால் அது எங்கள் இருவர் மீதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும், மிகுந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும். சினிமாவில் அவர் இன்னும் சில காலம் அனுபவம் பெற்ற பிறகு என்னுடன் நடிப்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

 படத்தில் அவர் எனது மகளாகவே நடிக்கவிருந்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நடிப்பார். இதற்காக 3 பேரை தேர்வு செய்துவைத்திருக்கிறோம். அவற்றில் பொருத்தமானவர் நடிப்பார். எனது மகனாக புதுமுக நடிகர் நடிப்பார். இவ்வாறு கமல் கூறினா

பெண்களே உஷார் உஷார்...

பெண்களே உஷார் உஷார்...
 

வெளி இடங்களில் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்...!

துபாயில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட்டின் பெண்கள் பயன் படுத்தும் டாய்லெட்க்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்ற பெண் ஒருவர், உள்ளே சலவைத்தூள் டப்பாவுக்குள் இருந்த செல்போன் மணி அடிப்பதை கேட்டு திடுக்கிட்டார்.

செல்போனை எடுத்து பார்த்த அந்த பெண் , அதில் டாய்லெட்டை பயன்படுத்திய 6 பெண்களின் நிர்வாண படபதிவுகள் இருப்பதை கண்டு அதிர்ந்து, சூப்பர் மார்கெட்டின் நிவாகியிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்த செல்போன் அங்கு பணிபுரியும் ஒரு இந்தியருக்கு சொந்தமானது என்று தெரியவந்து,

அவர் கைது செய்யப்பட்டு 3 மாதம் ஜெயில் என்றும் தீர்ப்பாகியது, அதுக்குபிறகு துபாயை விட்டும் வெளியேற்ற படுவார்.

வெளியே எந்த இடங்களிலும் டாய்லெட் பயன்படுத்தும் பெண்களே உஷாராக இருங்கள்.

பட்டன் சைஸ் கேமராக்கள் எல்லாம் உலா வரும் காலம் இது. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டில் கூட வெளி ஆட்களை கொண்டு ரிப்பேர் போன்ற வேலைகள் (குறிப்பாக டாய்லெட், பெட்ரூம் போன்ற இடங்களில்) முடிந்தபின்பு அந்த இடங்களை சோதனை செய்து பார்த்துகொள்ளுங்கள்.
நன்றி:முக்கியசெய்திகள்

குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம் ..!



தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

* தொலைபேசியில் பேசத் தொடங்கும்போது, ஹலோ அல்லது வணக்கம் என்ற வார்த்தைகளுடன் தொடங்குவது அவசியம். பிறரை நாம் அழைக்கும்போதும் சரி அல்லது நம்மை பிறர் அழைக்கும்போதும் சரி, இந்தப் பண்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

* முதன்முதலில் ஒருவரிடம் பேசும்போது, தன்னை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேச வேண்டும்.

* அதேபோன்று, புதிய நபரிடம் பேசும்போது, தாங்கள் பேசும் நபர்களைப் பற்றிய அறிமுகத்தைப் பெற வேண்டும்.

* பிறருக்கு வந்த அழைப்பை நாம் பெற நேரும்போது, பேசியவரை, தயவுசெய்து காத்திருக்கச் சொல்லி, சம்பந்தப்பட்டவரை அழைத்து வருவதாக கூற வேண்டும். அதை செய்யாமல், தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டே, கூப்பிட வேண்டிய நபரை சத்தமாக அழைக்கக்கூடாது.

* தொலைபேசியில் ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்ள நேர்ந்தால், அதை மிகவும் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும். கவனக் குறைவாகவும், அரைகுறையாகவும் கேட்டுக் கொண்டு தவறான தகவல்களை தந்துவிடக்கூடாது.

* பேசிவிட்டு, தொலைபேசியை வைக்கும்போது, நன்றி என்று மறக்காமல் கூறிவிட்டு வைக்க வேண்டும்.

 
back to top