.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 14, 2014

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!
 

இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்…..

• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

• நிறைய பெண்களுடன் தொடர்புடைய ஆணுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.

• பெண்களுக்கு தினமும் குடிக்கும் ஆண்களை பிடிக்காது. ஏனெனில் அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற காரணத்தால் தான்.

• தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது.

• பெண்கள் சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

• பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

• ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். பெரும்பாலான ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

• ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

• சில ஆண்கள் எப்பொழுதும் வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் போதும், மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

சிவகார்த்தி கேயனைவிட நான் மட்டமா என்ன..? – தயாரிப்பாளரிடம் சீறித்தள்ளிய ஜீவா..!



கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்..புகழடைய வேண்டும்..! என்பதே சினிமாவில் நடிக்க வருகிறவர்களுக்கு லட்சியமாக இருக்கும்.

ஆர்.பி. சௌத்ரியின் மகனான ஜீவா நடிகரானதற்கு இவை எதுவுமே காரணமாக இல்லை போலிருக்கிறது.

அவரைப் பற்றி காதுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் சொல்வதென்றால்…

முன்னணி கதாநாயகிகளை கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற ஒரே காமத்தினால்… ஸாரி…காரணத்தினால்தான் இவர் கதாநாயக நடிகரானாரோ என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இப்படி சொல்லுமளவுக்கு என்ன நடந்தது?

‘ஆசைஆசையாய்’ படத்தில் அறிமுகமான காலத்திலிருந்தே ஜீவாவிடம் ஒரு பழக்கம் இருக்கிறது.

அவரிடம் கதை சொல்லப்போகும் இயக்குநர்களிடம், கதை என்ன, சம்பளம் என்ன என்ற கேள்விகளுக்கு முன் ஜீவா கேட்கும் ஒரே கேள்வி… ‘ஹீரோயின் யாரு?’ என்பதுதான்.

கதாநாயகி விஷயத்தில் அறிமுகநிலையிலேயே இப்படி அநியாயத்துக்கு ‘ஆர்வம்’ காட்டிய ஜீவா வளர்ந்த பிறகு எப்படி இருப்பார் என்று சொல்லவா வேண்டும்?

ராம், டிஷ்யூம், ஈ போன்ற படங்களில் நடித்த பிறகு தன்னை புக் பண்ண யார் வந்தாலும், ‘எனக்கு ஜோடியாக நடிக்க பெரிய ஹீரோயினாக கமிட் பண்ணுங்க’ என்பதை ஓட்டை ரெக்கார்டு போல சொல்லிக் கொண்டே வந்தார்.

அப்போது அவரது மார்க்கெட் இருந்த லட்சணத்தில், ‘உன்னை வச்சு படம் எடுக்கிறதே பெரிய விஷயம்.. இதுல உனக்கு பெரிய ஹீரோயின் கேக்குதா?’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு ஜீவாவின் இந்த ஆசையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதன்பிறகு, ‘த்ரிஷாவை கமிட் பண்ணுங்க’ என்று திரி கொளுத்த ஆரம்பித்தார்.

ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஜீவாவின் இந்த ஆசை அண்மையில்தான் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் நிறைவேறியது.

ஜீவாவின் கேரியரிலேயே ‘என்றென்றும் புன்னகை’ படம் சுமாரான வெற்றிப்படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது. ப்ளாப் படங்களில் நடித்தபோதே த்ரிஷாவைக் கேட்டவர், சுமாரான வெற்றிப்படம் கொடுத்துவிட்டு சும்மா இருப்பாரா?

தற்போது அவரை அணுகும் இயக்குநர்களிடம் காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, அமலாபால் ஆகியோரது பெயர்களைச் சொல்லி இவர்களில் ஒருத்தரை எனக்கு ஜோடியாக கமிட் பண்ணுங்கள் என்கிறாராம்.

‘நீங்க சொல்ற ஹீரோயின்ஸ் சம்பளம் எல்லாம் ஒரு கோடிக்கு மேல இருக்கு..நம்ம பட்ஜெட்டுக்குக் கட்டுப்படியாகாது’ – என்று ஒரு தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார்.

அதைக் கேட்டதும் ஜீவா டென்ஷனாகிவிட்டாராம்.

‘நேத்து வந்த சிவகார்த்திகேயன் எல்லாம் ஹன்சிகா, அமலாபால்னு போய்க்கிட்டு இருக்காங்க. நான் என்ன சிவகார்த்திகேயனைவிட மட்டமா?’ என்று எகிறியவர், ‘அப்ப ஒண்ணு பணணுங்க..சில வருஷம் வெயிட் பண்ணுங்க. நான் இன்னும் பெரிய ஹீரோவா ஆனப்புறம் வாங்க. அப்ப கால்ஷீட் தர்றேன்.’ என்று கடுப்படித்துவிட்டு போனை கட் பண்ணிவிட்டாராம் ஜீவா.

நடிகைகங்களை கட்டிப்புடிக்கிறதுக்காக இப்படியா கண்ணு மண்ணு தெரியாம நடந்துக்கிறது?

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!

கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!


பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்.

 * இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 * ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.

 * மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

 * ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.

 * குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

``விடியும் வரை பேசு`` - திரைவிமர்சனம்



கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு நாயகி) பேசுகிறார். இந்த மிஸ்டு கால் நட்பு தொடர்கிறது.

காலப்போக்கில் இந்த நட்பு, பார்க்காமலேயே காதலாக மாற... அனித் தனது மாமா மகளினை வைதேகியை முழுவதுமாக மறந்துவிட்டார். மாறாக, நன்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நன்மாவோ, அந்த அளவுக்கு தீவிரமாக இல்லாமல், பொழுதுபோக்கிற்காகவே மட்டுமே அனித்துடன் பேசி வருகிறார்.

இந்நிலையில், சென்னைக்கு வரும் தாய்-தங்கையிடம் நன்மாவை வரவழைத்து அறிமுகம் செய்ய நினைத்தார் அனித். ஆனால், கடைசி நேரம் வரையில் நன்மா வரவேயில்லை. இதனால் விரக்தியடையும் அனித், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். எந்த வகையிலும் நன்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்மா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அனித்தின், மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்களைக் கண்டாலே, அவர்களின் செல்போன்களை பிடுங்கி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுகிறார்.

இறுதியில் இவர் பித்தம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தாரா? நன்மாவின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

அறிமுகமாகியிருக்கும் நாயகன் அனித், நன்மாவிடம் செல்போனில் பேசும் காட்சிகள், அவரை நினைத்து உருகும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ஹீரோவுக்குரிய நல்ல உடல் அமைப்பு இருந்தாலும் அவருக்கான ஆக்சன் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

அறிமுக நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டை பெறுகிறார்கள். குறிப்பாக பேச்சிலேயே நாயகனுக்கு சூடேற்றி விடும் காட்சியில் நன்மா நன்றாக நடித்திருக்கிறார். வைதேகியோ, துறுதுறுவென கிராமத்துப் பெண்ணாக வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போனால் நடக்கும் அவலங்களையும், கலாச்சார சீரழிவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் காட்சிகள் மற்றும் படத்தொகுப்பு ரசிகர்களை சுண்டி இழுக்காமல் போனது படத்திற்கு பின்னடைவு. மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் உள்ளிட்ட சிறு கதா பாத்திரங்கள் படத்துடன் ஒன்றியுள்ளனர்.

மோகன்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். கன்னிப்பொண்ணு மனசு அது கரும்புடா... ஏதாவது நீயாக..., யாரோ அவள், யாரோ... பெண் மனது... என 4 பாடல்களே இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் நான்கும் நான்கு முத்துக்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் விடியும் வரை பேசு, கடலை போடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை..!

கமல்ஹாசனுடன் நடிகராகிறாரா லிங்குசாமி..?




விஷ்வரூபம் -2 படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் லிங்குசாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு இயக்குனராக தொடர் வெற்றிகளைத் தந்து கொண்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமி சமீபமாகப் பல படங்களைத் தயாரிப்பதிலும், வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இயக்குனர், தயாரிப்பாளர் என்ற தனது அடையாளங்களைத் தாண்டி, கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் ஒரு நடிகராகவும் மாறுவார் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

கமல்ஹாசனின் நீண்ட நாள் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம் உத்தமவில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இயக்குனர் லிங்குசாமி தற்பொழுது சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் புதிய படத்தைத் தயாரித்து, இயக்கிவருகிறார். இப்படத்தின் தலைப்பு
விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

முஸ்லிம்கள் தொப்பி, பர்தா அணிந்து படமெடுத்தால் அடையாள அட்டை இல்லை...!



அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். (13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விஷயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2014ம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை, இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும், கலர் புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும்.

எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது என தெரிவித்தார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹூஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்..!


இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்..!



இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.

ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:


 * இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

 * இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.

 * இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.


இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய் முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:

மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:


இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:


தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டுபாதுகாக்கப்படுகின்றது.

சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

  • தூய இரத்தம் – 35 நாட்கள்
  •  இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்
  •  இரத்தத் தட்டுக்கள் – 5 நாட்கள்
  •  பிளாஸ்மா – 1 வருடம்

 இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது. இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் நிறுவனங்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும் வருடா வருடம் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், அரசு பொது மருத்துவமனையும் இணைந்து ஊக்குவிப்புப் பாராட்டு விருதுகளை வழங்கி வருகின்றனர். தமிழ் நாட்டில் நிறைய தன்னார்வ அமைப்புகள் உள்ளன அவற்றில் சத்யா சாய்(www.sathyasai.org) என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து தமிழ் நாட்டில் இரத்த தானத்தில் முதலிடம் வகித்தது ,ஆனால் தற்போது தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்(TNTJ - www.tntj.net) என்ற முஸ்லிம் அமைப்பு கடந்த ஏழு வருடங்காளாக முதலிடம் வகிக்கிறது , இந்த அமைப்பின் சாராம்சம் என்னவென்றால் நீங்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியிலும் இருந்தாலும் சரி , இவர்களுடைய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் போதும் இந்த அமைப்பை சார்ந்தவர்கள் களத்தில் இறங்கி எந்த சாதி மதம் இனம் பாராமல் எந்த பொருள் செலவையும் எதிர் பாராமல் ரத்த தானம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; கொடுப்பவரின் தன் நலன் காப்பதற்கு உதவுவதோடு அவர்களின் உடல்நலன் மேம்படுவதற்கும் அது உதவுகிறது. இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதன்மூலம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவதால், இரத்தத்தில் தேங்கும் அசுத்தங்கள், இறந்த செல்கள் போன்றவை நீக்கப்பட்டு உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு ஏற்படும் மயக்கம் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பதுதான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவர்.

இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!
பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.
ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!

இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!

இருநூறு ப்ளஸ் கோடி...



இனி அந்த பருப்பு வேகாது. 2013ம் ஆண்டு அதை சுத்தமாக மாற்றிவிட்டது. யெஸ், இனி நூறு ப்ளஸ் கோடி வசூலை எந்தப் படம் கடந்தாலும் அது சுமாரான வெற்றிதான். எந்தப் படம் குறைந்தது 200 ப்ளஸ் கோடியை கடந்து கல்லாவை நிரப்புகிறதோ அதுவே சூப்பர் ஹிட் மூவி.

இதை ஆரம்பித்து வைத்தப் புண்ணியம் ஷாருக் கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை சாரும். இதை உறுதிப்படுத்திய பெருமை சென்ற ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3ஐ போய்ச் சேரும்.

நம்புங்கள் ஸ்வாமி, முதல் மூன்றே நாட்களில் தூம் 3 நூறு ப்ளஸ் கோடி ரூபாயை வசூலில் கடந்துவிட்டது. அதுவும் இந்தியத் தாய்த் திருநாட்டில் மட்டும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது என்றெல்லாம் நரம்பு புடைக்க சவுண்ட் விட்டது சினிமாவுக்கு பொருந்தாது போல.

ரைட், இப்படியாக சென்ற ஆண்டு குத்த வைத்து வசூலில் கும்மிய இந்தித் திரையுலகம் இந்த வருடம் எப்படியிருக்கும்? அதே ஜெகஜோதியாகத்தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள். லேசாக கண்களுக்குத் தெரியும் கீற்றுகள் அந்த பிரகாசத்தைதான் மெய்ப்பிக்கின்றன.

சென்னை எக்ஸ்பிரஸ் கொடுத்த எனர்ஜியில் ஹேப்பி நியூ இயர் என களம் இறங்குகிறார் ஷாருக் கான். இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடி அதே தீபிகா படுகோன்தான். இயக்கியிருப்பவர் ஷாருக்கானின் ஆருயிர் தோழியும், இந்தியாவின் முக்கியமான நடன இயக்குநர்களில் ஒருவருமான ஃபாரா கான். ஓம் சாந்தி ஓம் ப்ளாக் பஸ்டருக்கு பிறகு அதே கூட்டணி கைகோர்த்திருப்பதால் ஏரியா பரபரவென இருக்கிறது.

வழக்கமாக ரம்ஜான் பண்டிகை சல்மான் கானின் பட ரிலீஸ் இல்லாமல் பூர்த்தியாகாது. கடந்த சில ஆண்டுகளாகவே இதுதான் நிலை. சல்மான் கானே நம்பிக்கை வைக்காத பாடிகாட் கூட ரசிகர்களின் வரவேற்பில் சக்கைப்போடு போட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி செல்போனும் சிம்கார்டும் போல் இருந்த ரம்ஜானும் சல்மான் கானும் சென்ற ஆண்டு கா விட்டுக் கொண்டார்கள். சல்லு பாயின் படம் கடந்த ஈத்தில் வெளியாகவில்லை. இதை பிரஸ்டீஜ் இஷுவாக நினைப்பவர், 2014ல் வட்டியும் முதலுமாக அதை ஈடுகட்ட வருகிறார். தெலுங்கில் கிக் என பம்பர் ஹிட் ஆகி தமிழில் தில்லாலங்கடி என சூப்பர் ஹிட் ஆன படம், இப்போது சல்மான் கான் நடிப்பில் கிக் என்ற பெயரிலேயே தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டெலிவரியை ரம்ஜான் அன்றுதான் குறித்திருக்கிறார்கள். இதுபோக மென்டல் என்னும் படமும் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது. வெளியாகும்போது இந்த டைட்டில் மாறலாம்.


இன்றைய தேதி வரையில் அதிக நூறு ப்ளஸ் கோடி வசூல் படங்களை இயக்கியிருப்பவர் என்ற பெருமைக்குரிய இயக்குநர் ரோஹித் ஷெட்டி, இந்த ஆண்டும் தன் பங்குக்கு ஓர் படத்தை சமூகம் முன் படைக்கப்போகிறார். அதுதான் சிங்ஹம் 2. சந்தேகமே வேண்டாம். தமிழ் சிங்கம் 2வின் ரீமேக்தான். முதல் பார்ட்டில் ஹீரோவாக நடித்த அஜய் தேவ்கன்தான் இதிலும் நாயகன்.

போலவே ரவுடி ராத்தோர் படத்துக்கு பிறகு எந்த ப்ளாக் பஸ்டரையும் கொடுக்காத அக்ஷய் குமார், இந்த ஆண்டு சொல்லி அடிக்கும் கில்லியாக இரு படங்களுடன் களம் இறங்குகிறார். இரண்டுமே வெற்றிப் பெற்ற தமிழ்ப் படங்களின் ரீமேக்தான் என்பதால் நாம் காலரை உயர்த்திக் கொள்ளலாம். அதில் ஒன்று ரமணா ரீமேக். தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருக்கும் இந்த நேரத்தில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக ஒரு பேராசிரியர் தன் மாணவர்களை திரட்டி போராடியதை சரசரவென விவரிக்கும் இந்தப் படம் தோற்கவா செய்யும்? அதே போல் விஜய்யின் இமேஜை சர்வதேச அளவில் உயர்த்திய துப்பாக்கி படமும் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் தயாராகிறது. இயக்கம் அதே ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படமும் பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

இந்த நிமிடம் வரை ஆமிர் கானின் அடுத்தப் படம் எதுவென்று மீடியாவுக்கு தெரியாது. அதற்கு அவசியமும் இல்லை. ஆண்டு இறுதியில் வெளியான தூம் 3 இன்னும் மூன்று மாதங்களுக்கு இண்டு இடுக்கெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும். எனவே ரிலாக்ஸாக அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு செல்வார். ஒருவேளை அது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு
தொடக்கத்தில் வெளியாகலாம்.

பிறகு இருக்கவே இருக்கிறார் நம்ம பிரபுதேவா. இந்தி சினிமாவின் ஒன் அண்ட் ஒன்லி மினிமம் கேரண்டி இயக்குநர். ஒருவகையில் 1980களில் தமிழ்ச் சினிமாவில் வீடு கட்டி அடித்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் எக்ஸ்டென்ஷனாக இவரை சொல்லலாம். தப்பில்லை. கடந்த ஆண்டு ராமய்யா வஸ்தாவய்யா, ஆர்... ராஜ்குமார் என இரு படங்களை கொடுத்தார். இரண்டுமே முறையே அறிமுக நாயகன், மூன்றாம் நிலை நாயகன் என்று அறியப்பட்டவர்களை ஆக்ஷன் ஹீரோக்களாக உயர்த்திய படங்கள். நூறு ப்ளஸ் கோடியை எல்லாம் வசூலிக்கவில்லைதான். ஆனால், பி, சி சென்டர்களை இரண்டுமே வாழ வைத்தது. தயாரிப்பாளர்களையும் காப்பாற்றியது. எனவே இவரும் தன் பங்குக்கு எதையாவது கொடுப்பார் என்று தீர்மானமாக நம்பலாம். அதிகபட்சம் நான்கு மாதங்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்யும் வித்தையை கற்றவர் அல்லவா இவர்?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஆண்டு தொடக்கத்தில் ஷோலே படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதுவும் 3டியில். இந்திய திரையுலக வரலாற்றிலேயே குறைந்தது 15 வெளிநாட்டுப் படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு ஒரு படத்தை உருவாக்கலாம் என்பதை நிரூபித்த முதல் படமும் இதுதான். பரந்த அளவில் மெகா ஹிட் அடித்த மெகா பட்ஜெட் படமும் இதுவேதான். அப்படிப்பட்ட லேண்ட் மார்க் படம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் மறு வெளியீடு காண்பது ஒருவகையில் எதிர்கால இந்தி சினிமாவின் போக்கை கட்டியங்கூறும் விஷயம்தான்.

இந்த ஆண்டும் இருநூறு ப்ளஸ் கோடி ரூபாயை அனைத்துப் படங்களும் வசூலிக்க வாழ்த்துகள்.

ரசிகர்கள் கொடுத்த வெற்றி - விஜய் நெகிழ்ச்சி



 விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படம் 10ம் தேதி ரிலீசானது. இப்படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

அப்போது விஜய் பேசியதாவது:பொதுவாக நான் படத்தின் வெற்றி சந்திப்புகளில் கலந்துகொள்வது இல்லை. என்றாலும், ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்காக இதில் கலந்துகொண்டேன். என் நண்பர்கள் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு சென்று, அங்கு எடுத்த வீடியோ காட்சிகளை எனக்கு காட்டினார்கள்.

 அதில் என் ரசிகர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டர் வாசலில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவதை பார்த்து நெகிழ்ந்தேன்.

படத்துக்கான நல்ல ஓப்பனிங்கும், வெற்றியும் அவர்கள் கொடுத்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக சொன்னார்கள். அவர்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம்தான்.

அனைவருக்கும் என் நன்றி.‘வீரம்’ படமும் நன்றாக இருப்பதாகவும், நன்றாக ஓடுவதாகவும் சொன்னார்கள். அஜீத், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளருக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகள்.இவ்வாறு விஜய் பேசினார். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குனர் ஆர்.டி.நேசன், நடிகர்கள் மஹத், சூரி, இசையமைப்பாளர் இமான் உடனிருந்தனர்.

அதுதான் நல்ல நட்பு ..! -



வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான் .அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது .அதற்க்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன் >இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல் அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது .

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது அதற்க்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்குகொள்ளவேண்டும் அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்..

என்றும் பாகற்காய்! எதிலும் பாகற்காய்!...




நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு(கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக..? எச்சரிக்கை..!



நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா?

நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது.

பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

‘ஜில்லா’வில் மாற்றம்..?


ஜில்லா படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட 10 நிமிட காட்சி குறைக்கப்பட்டுள்ளது.

இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள இந்தப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான்.

நேற்று படம் பார்த்த பல ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளத்தை தற்போது 10 நிமிடம் குறைத்துள்ளனர்.

நீளம் குறைக்கப்பட்ட படம் இன்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படவுள்ளது.

Monday, January 13, 2014

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய...?

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..?


இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள்.

 உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி :  http://www.tineye.com/

உறவுகள் வளர்வதற்கும் மனநிலையே முக்கியம்...!!!



வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார்.

உரமிட்டார். நீர் பாய்ச்சினார்.

செடிகள் பெரிதாக வளரவில்லை.

பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.

இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.

வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.

அதே தண்ணீர். அதே உரம்.அதே இடம்.இது எப்படி சாத்தியம்?

கிழவர் சொன்னார்,

“அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள்.

நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று.

உறவுகள் வளர்வதற்கும் மனநிலையே முக்கியம்...!!!

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!!



இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.


இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.


இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது.


தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு  Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.


நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.


அழைக்க வேண்டிய எண் - 155223

உஷாரய்யா உஷாரு..! ஆன்லைன் ஷாப்பிங் டிப்ஸ்..!

ஆன்லைன் ஷாப்பிங்… ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்..!


எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா

”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.


  • கவர்ச்சி விளம்பரங்கள்..!

கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.


  • இரண்டு நிமிட நிபந்தனை..!

இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம்,  வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம்.  ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.


  • மறைமுக கட்டணங்கள்..!


இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.


  • ஷிப்பிங் கட்டண மோசடி..!

உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.  அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை  நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.


  • நோ ரிட்டர்ன், ப்ளீஸ்..!

பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.


  • விதிமுறைகளில் மோசடி..!

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.


  • கூரியர் மோசடி..!

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.


  • வாரன்டி இருக்கிறதா..?


பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.


  • உஷாரய்யா உஷாரு..!


ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.

* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..

*பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.

* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.  இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.

* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.

* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.”

விமர்சனங்களைத் தாண்டி பொங்கல் ரேஸில் அபாரமாய் ஜெயித்த விஜய்..! அஜீத்..!



ஒரு ரேஸில் ஒரே நேரத்தில் இருவர் முதலிடத்தில் வந்து ஜெயிப்பதைப் போல, இந்தப் பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் இரண்டு படங்களுமே அபாரமான வரவேற்பு பெற்றுள்ளன ரசிகர் மத்தியில்.

 இது தயாரிப்பாளர்களையும், சினிமா உலகினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒரு ஹீரோவின் படம் தோற்றால், எதிர் முகாம் ரகசிய பார்ட்டி வைத்துக் கொண்டாடும் மோசமான மனநிலை பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை நிலவுகிறது.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் ரஜினி - கமல் படங்கள் சிலவற்றுக்குதான் இதுபோன்ற வரவேற்பும் கூட்டமும் குவிந்துள்ளது.

கர்ம வீரரின் அரிய தகவல்...!!




1953 ல், பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.

தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான். இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார். கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர்.

எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார். வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்லரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது’ -என்று மனம் வருந்தினார்.

டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருக்கிறது. காமராஜ் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது.

 இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்! வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது. விமானத்தை விட்டு காமராஜ் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர். எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார்.

அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர்பாடு கமிசனர்பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். எப்படியோ தலைவரை எதிர்ப்பார்த்த ஜெனரல் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார். காமராஜரை வெறுக்கவில்லை.

 மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார். இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள்.

அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்தகோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார். ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும்போல் எதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர்.

 இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்கும் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம்.

 ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே நமது அரசியல் தலைவனின் நினைவிடத்தில் மட்டுந்தான். 

கேப்டனின் அறியாத வாழ்க்கை வரலாறு..?




‘புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார்.

 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘என்னாசை மச்சான்’, ‘உளவுத்துறை’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களாகப் போற்றப்படுகின்றன.

2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், ‘விருத்தாசலம்’ தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ‘ரிஷிவந்தியம்’ தொகுதியிலும் வெற்றிப்பெற்று, தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் நாட்டு அரசியலில் தே.மு.தி.க கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்ட விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா, அரசியல் பணிகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952

இடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு  

‘விஜயராஜ்’ என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை  மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் ‘கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும்’ ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை.

 இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

திரைப்படத்துறையில் விஜயகாந்தின் பயணம்


1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில், முதன் முதலாக ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.

அதன் பிறகு சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 1981 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.

 அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வந்தார்.


கேப்டன் எனப் பெயர்வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.


இவர் நடித்த சிலத் திரைப்படங்கள்


‘இனிக்கும் இளமை’ (1978), ‘ஓம் சக்தி’ (1979), ‘சட்டம் ஒரு இருட்டறை’ (1981), ‘சாட்சி’ (1983), ‘100வது நாள்’ (1984), ‘சத்தியம் நீயே’ (1984), ‘தீர்ப்பு என் கையில்’ (1984), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே’ (1985), ‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘அம்மன் கோயில் கிழக்காலே’ (1986), ‘ஊமைவிழிகள்’’ (1986), ‘கரிமேட்டுக் கருவாயன்’ (1986), ‘தழுவாத கைகள்’ (1986), ‘சட்டம் ஒரு விளையாட்டு’ (1987), ‘சிறை பறவை’ (1987), ‘செந்தூரப் பூவே’ (1988), ‘தென்பாண்டி சீமையிலே’ (1988), ‘பூந்தோட்ட காவல்காரன்’ (1988), ‘சத்ரியன்’ (1990), ‘சந்தனக் காற்று’ (1990), ‘புலன் விசாரணை’ (1990), ‘கேப்டன்  பிரபாகரன்’ (1991), ‘மாநகர காவல்’ (1991), ‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஏழைஜாதி (1993), ‘கோயில் காளை’ (1993), ‘செந்தூரப் பாண்டி’ (1993), ‘ஆனஸ்ட் ராஜ்’ (1994), ‘என் ஆசை மச்சான்’ (1994), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994), ‘அலெக்ஸ்சாண்டர்’ (1996), ‘உளவுத்துறை’ (1998), ‘வானத்தைப்போல’ (2000), ‘ரமணா’ (2002), ‘சொக்கத்தங்கம்’ (2003) போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களாகும்.


இல்லற வாழ்க்கை


1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.


அரசியல் வாழ்க்கை


தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ‘புரட்சி கலைஞன்’ என பெயர்பெற்ற அவர், எம்ஜிஆரின் தீவிர ராசிகனாக மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்து, அரசியலிலும் கால்பதிக்க துவங்கினார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவரின் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது.

 விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, களம் கண்ட இவருடைய கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தி.மு.க கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது.

ஆனால் குறுகிய நாட்களுக்குள் அ.தி.மு.க-வுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியை முறித்துகொண்ட விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு..?



தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த வருடம் மட்டும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டதில் தனுஷுற்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம். தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படம்தான் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல் சிவகார்த்திகேயனின் மார்கெட் உயரச் சென்றதோடு மட்டுமல்லாமல் கோடிகளை சம்பளமாகவும் பெறத் துவங்கிவிட்டார்.

ஒருபுறம் சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவரை வளர்த்துவிட்ட தனுஷின் நிலையோ இறங்குமுகமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டில் தனுஷ் நடித்து வெளிவந்த ‘மரியான், நய்யாண்டி’ இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் தனுஷின் நெருங்கிய வட்டாரங்களுக்கு அவர் சிவகார்த்திகேயனை வளர்த்து விடுவது பிடிக்கவில்லையாம்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்கள் எல்லாமே நீங்கள் நடிக்க வேண்டிய படங்களைப் போலவே உள்ளன. உங்களுக்குப் போட்டியாக நீங்களே ஒருவரை உருவாக்கி, தோல்வியை சந்தித்துக் கொள்கிறீர்களே என்கிறார்களாம். இது, தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ், சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் லேசாகப் புகைய ஆரம்பித்துள்ள இந்த விவகாரம் தீப்பிடித்து எறியும் என்கிறார்கள்

ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!



பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகியுள்ள ஜில்லா மற்றும் வீரம் படங்கள் இணையதளத்தில் லீக்காகி உள்ளன.

பொங்கல் விருந்தாக அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டுமே பெரிய நடிகர்களின் படம் என்றாலும் ஜில்லாவும், வீரமும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன.

தங்கள் தல, தளபதி படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் முண்டியடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் பிரிய நடிகர்களின் படத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வீரம், ஜில்லா படங்களை எடுத்துள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸான 3 நாட்களுக்குள் இணையதளத்தில் இந்த இரண்டு படங்களும் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

இணையதளத்தில் ஜில்லா, வீரம் படத்தை பார்த்துவிட்டோமே, பார்க்கப் போகிறோமே என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீல் அந்து போச்சிடா..! ஜில்லா-வீரம் பட பஞ்ச் வசனங்கள்..!

பட்டைய கிளப்பும் ஜில்லா-வீரம் பட பஞ்ச் வசனங்கள்


பொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் “வீரம்”, விஜய்யின் “ஜில்லா” படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

பஞ்ச் வசனம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியேரது படங்களில் பஞ்ச் கண்டிப்பாக இடம்பெறும். அதுபோலவே சமீப காலங்களாக அஜீத், விஜய் ஆகியோரது படங்களிலும் பஞ்ச் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும வீரம், ஜில்லா படங்களில் இந்த பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சில உங்களுக்காக,

“வீரம்” பஞ்ச் வசனங்கள்

• சந்தோஷம் வந்தா நாலுப்பேரோட பகிர்ந்துக்கணும். கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கணும். அவன்தான் மனுஷன்.

• சுடுக்காட்டுக்கு எப்படி போகணும்னு கேட்டாங்க. வழியைச் சொன்னேன். இந்நேரம் போய் சேர்ந்திருப்பாங்க.

• நம்மக்கூட இருக்கிறவங்களை நாமப் பார்த்துகிட்டா, நமக்கு மேல இருக்குறவன் நம்மைப் பார்த்துப்பான்.

• எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

• நீ என்ன ஜாதின்னு நினைக்கிறீயோ நான் அந்த ஜாதி. நீ தேவன்னு நினைச்சா நான் தேவன், நீ நாடார்னு நினைச்சா நான் நாடார், நீ தலித்னு நினைச்சா நான் தலித், நீ வன்னியர்னு நினைச்சா நான் வன்னியர். நான் உலகத்துல இருக்கிற ஒரே ஜாதி. உழைக்கிற ஜாதி’

“ஜில்லா” பஞ்ச் வசனங்கள்

• எதிரிய எதிர்ல வச்சுக்கலாம்- ஆனா துரோகிய தூரத்துலக்கூட வச்சுக்கக்கூடாது.

• ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒண்ணு குணமாகிப் போகனும், இல்ல பொணமாகிப் போகனும்.

• தீயிலயும், பகையிலயும் மிச்சம் வைக்கக்கூடாது.

• சிவனையும் பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போயிட்டே இருப்பேன்.

• நாட்டுல வண்டி ஓட்டத் தெரியாதவன் கூட உண்டு. பிகரை ஓட்டத் தெரியாதவன் யாரும் இல்ல.

• போலீஸ் அடிச்சுப்பார்திதிருப்பே. போலீசையயே அடிச்சு பார்த்திருக்கியா?.

• சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன். ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ணமாட்டேன்.

• மத்தவங்ககிட்டே தோத்தாத்தான் தோல்வி, சொந்தப்பையன்கிட்டே தோத்தாலும் அது வெற்றிதான்.

‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடல் கட்: ஆத்திரத்தில் திரையரங்கை சேதப்படுத்திய ரசிகர்கள்..!



பொங்கலையொட்டி கடந்த 10ம் தேதி அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா படங்கள் திரைக்கு வந்தன.

இரண்டு படங்களுமே நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. அதே சமயம் வீரம் படம் 2 மணி நேரம் 40 நிமிடமும் ஜில்லா 3 மணி நேரமும் ஓடக்கூடியதாக இருந்தது. ஜில்லா படத்தின் நீளம் குறித்து விஜய் ரசிகர்களும் விமர்சகர்களும் குறை தெரிவித்தனர்.

 இதையடுத்து உடனடியாக படத்தின் 10 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. அந்த பத்து நிமிட காட்சிகளில் ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலும் தூக்கப்பட்டு விட்டது.

இதனிடையே நீக்கப்பட்ட பாடலை மீண்டும் சேர்க்கும்படி தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கும் இயக்குனர் நேசனுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில் பெரம்பலூரில் திரையரங்கு ஒன்றில் ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடல் காட்சி ஒளிபரப்பாகாததால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் இருக்கைகள் மற்றும் திரையை சேதப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து அடுத்த காட்சிகளில் காவல் துறையினரின் தீவிர பரிசோதனைக்குப் பிறகே ரசிகர்கள் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜில்லாவில் க்ளைமாக்ஸுக்கு முன் இடம்பெறும் அந்தப்பாடலில் விஜய்யின் டான்ஸ் மூவ்மெண்ட்கள் அற்புதமாக இருக்கும்.

இந்த பொங்களுக்கு - சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை...




தேவையான பொருட்கள்:

தோல் நீக்கிய முழு உளுந்து – ஒரு ஆழாக்கு,

சாம்பல் பூசணிக்காய் – ஒரு துண்டு,

கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிது,

பெரிய வெங்காயம் – ஒன்று,

பச்சை மிளகாய் – ஐந்து,

உப்பு – சுவைக்கு,

பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.

செய்முறை:

வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வடை பக்குவத்தில் கல்லுரலில் நுரைக்க அரைத்துக் கொண்டு துருவிய வெள்ளை பூசணிக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள், பச்சை மிளகாய்த் துண்டுகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் சூடாகப் பொரித்து தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.

15 -ல் தொப்பையை குறைக்கலாம்.!!!!!!




1.நன்கு தூங்கவும்

நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.

2.உப்பை தவிர்க்கவும்

தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்.

3.காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்

இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.

4.கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும்

உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.

5.தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.

6.நன்கு மூச்சு விடவும்

தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

7.பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும்

இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம்.

8.தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும்.

9.நார்ச்சத்துள்ள உணவுகளை நண்பர்களாக்கவும்

நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10.நடக்கவும்

எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.

11.சைக்கிள் ஓட்டவும்

சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.


12.நீர்ச்சத்துள்ள பழங்கள்

நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.

13.மெதுவாக சாப்பிடவும்

எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல் இருக்கும்.

14.நன்கு வாய்விட்டு சிரிக்கவும்

தொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்பயிற்சியாகும். மேலும் வாய்விட்டு சிரித்தால், நோயின்றி வாழலாம்.

15.பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்யும் போது பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தொப்பை குறைவதில் நல்ல மாற்றம் தெரியும்.

கச்சிதமாக இருப்பதே அழகு!




நல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:

* பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி.

* கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா? தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள்.

* ஆடை அணிவது முதலில் வசதிக்காக என்பது நினைவிருக்கட்டும். உடை உடலை கவ்விப் பிடிக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டாம். ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.

* வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடிவதில்லை. சுடிதார், சல்வார் கமீஸ் சவுகர்யமாக இருக்கிறது. புடவை கட்ட முடியவில்லையே என்ற ஏக்கமின்றி அணியுங்கள்.

* வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், பணியிடத்தில் இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.

* கூந்தலில் சிக்கு விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.

* வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்யும்போது கூந்தலை இறுக்கிக் கட்டக்கூடாது. முடி அதிகமாக உதிரிந்து விடும். தூக்கி குதிரைவால் போட்டு கட்டலாம். ரப்பர் பாண்ட் போட வேண்டாம்.

* தலையை துடைக்க தனியாக டவல் வைத்துக்கொள்ளுங்கள். முகத்துக்கு அதே துண்டை பயன் படுத்தும்போது, தலையில் இருக்கக் கூடிய பொடுகு முகத்தில் பருக்கள் வரக் காரணமாகலாம்.

* பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால் கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.

* என்னதான் பொறுமையாக நடந்து கொண்டாலும் அதை மீறி ஆத்திரம் உண்டாக்கும் வகையில் யாராவது ஏதாவது பேசுவார்கள், செய்வார்கள். இது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் பொதுவானது. ஆனால் நம்மால் கோபத்தை வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். இதனால் உணர்ச்சிகள் உள்ளேயே அடக்கப்பட்டு டென்ஷன் நிறைந்திருக்கும். இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய சந்தர்ப்பத்தில் என்னதான் முயன்றாலும் நம்மால் அழகாக காட்சியளிக்க முடியாது. தியானம், யோகாசனம், இசை கேட்பது, பாடுவது, நடனமாடுவது போன்ற ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

நடிகை அஞ்சலிதேவி மரணம்.....





சிவாஜியுடன் “முதல் தேதி”, “நான் சொல்லும் ரகசியம்” படங்களிலும், எம்.ஜி.ஆருடன் “சக்ரவர்த்தி திருமகள்”, “மன்னாதி மன்னன்” ஆகிய படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பிரப்ல்மான இவர் . தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம்.அவருக்கு 5 வயது ஆனபோது, குடும்பம் காக்கிநாடாவில், குடியேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற்ற நாடகங்களில் பங்கு கொண்டார். காக்கிநாடாவில், இசை அமைப்பாளராகவும், நடன இயக்குனராகவும் இருந்த ஆதிநாராயணராவ் என்ற இளைஞர், நடன நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவியின் அழகும் நடனமும், அவரைக் கவர்ந்தன. தன் நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.

தமிழில் சிவாஜியுடன் “முதல் தேதி”, “நான் சொல்லும் ரகசியம்” படங்களிலும், எம்.ஜி.ஆருடன் “சக்ரவர்த்தி திருமகள்”, “மன்னாதி மன்னன்” ஆகிய படங்களிலும் நடித்தவர் ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த “காலம் மாறிப்போச்சு” சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித்தது. மற்றும் “இல்லறமே நல்லறம்”, “பூலோக ரம்பை”, “வீரக்கனல்” முதலான படங்களில் ஜெமினிகணேசனுடன் நடித்தார். தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார்.தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது “லவகுசா”. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. ராமராவ் ராமராகவும், அஞ்சலிதேவி சீதையாகவும் அற்புதமாக நடித்தனர்.

பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் அஞ்சலிதேவி நடித்தார். ஸ்ரீதர் தயாரித்த “உரிமைக்குரல்” படத்தில், எம்.ஜி.ஆருக்கு அண்ணியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. “அன்னை ஓர் ஆலயம்” படத்தில், ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தார்.தற்போது 86 வயதாகும் இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் இன்று காலமானார்.

இணையத்தில் கசிந்த சூப்பர் ஸ்டார் படம்..!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

மோகன்லால், மீனா, நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும் த்ரிஷ்யம் தொடர்ந்து திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாக ஒடிக் கொண்டிருக்கிறது.

படத்திற்கு வரவேற்பு இருப்பதால் திருட்டு விசிடிக்கள் வெளிவந்திருக்கிறது. இணையதளத்திலும் அப்லோட் செய்துவிட்டார்கள்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பாவூர் கேரள டி.ஜி.பி பாலசுப்பிரமணியத்திடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் பொலிசார் படத்தை நெட்டில் விட்டவரை தேடியபோது ஒரு பேஸ்புக் பக்கத்திலும் படம் அப்லோட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பேஸ்புக் முகவரியை தேடியபோது அது கொட்டாரக்கராவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் என்பது தெரியவந்தது. பேஸ்புக்கில் படத்தை அப்போட் செய்ததை அவன் ஒத்துக் கொண்டான். அவனது பேஸ்புக்கில் மட்டும் 10 ஆயிரம் பேர் படத்தை பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் வீட்டில் இருந்து கணனி, ஹார்ட்டிஸ்க், நிறைய புதுப்பட சி.டிக்கள், பென் டிரைவ்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கும் வெங்கட்பிரபு..!



உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு.

லிங்குசாமி படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்தப் படத்திற்கு கல்யாண ராமன் என்ற தலைப்பினை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இதே தலைப்பில் கமல்ஹாசன் நடித்து பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் சூப்பர்ஹிட்டாக அமைந்தது.

எனவே தான் இயக்கும் படத்துக்கு அந்த பெயரை வைப்பதற்கு அனுமதி தரும்படி கமலிடமும், பஞ்சு அருணாசலத்திடமும் கேட்க முடிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு.

இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்க உள்ளார்.

‘வீரம்’ படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்போவது - நீயா..? நானா..?




அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள ''வீரம்'' படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இயக்குனர் சிவா. அந்த ஹிட்டானதையடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அஜீத் குமாரை வைத்து பாசம், ஆக்ஷன், காதல் கலந்த வீரம் படத்தை இயக்கினார்.

படம் பொங்கல் விருந்தாக கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆனது.

செம மாஸ்:-

வீரம் படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் சிவாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். படம் செம மாஸ், சிவா இயக்கம் அருமை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

‘வீரம்’ சிவா:-

இத்தனை நாட்களாக அவர் ‘சிறுத்தை’ சிவாவாக இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல் அவர் ‘வீரம்’ சிவா என்று அஜீத் ரசிகர்கள் பெருமையாக தெரிவித்துள்ளனர்.

ரீமேக்:-

வீரம் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்து அதை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

ஆரம்பம்:-

தீபாவளி விருந்தாக வந்த அஜீத்தின் ஆரம்பம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்நிலையில் வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல டக்கரு..! பாராட்டிய விஜய்.....




சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா.

இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை ரெசிடென்சி டவர் ஹொட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், உலகம் முழுவதும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். மிகவும் சந்தோஷம்.

முதலில் எனது ரசிகர்களுக்கு நன்றி, படம் வெளியாகும் முதல் நாள் குளிரையும் பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்கு வந்து அலங்காரம் செய்துள்ள காட்சிகளை காணொளியில் பார்த்தேன். இதன் பின்னால் இருந்த எல்லோருக்கும் நன்றி.

மேலும் அஜித் அவர்களின் 'வீரம்' படமும் நன்றாக வந்துள்ளது என்று கேள்விப் பட்டேன். அதில் பங்குபெற்ற அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

 
back to top