.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 18, 2014

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - IGNOU



இப்பல்கலைக்கழகம்1985ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மற்றும் 35 அயல்நாடுகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு கல்விச் சேவை புரிந்துள்ளது. 11 வகையான தனித்துவமிக்க கல்வி நிறுவனத்தின்கீழ் 100க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மொத்தம் 58 மண்டல மையங்கள், 7 மண்டல துணை மையங்கள், ஆயிரத்து 400 கல்விமையங்கள் 41 சர்வதேச மையங்களைக் கொண்டுள்ளது. கல்வி தவிர, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தரமான  தொலைநிலைக்கல்வி வழங்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தேசிய வளமையமாகவும் செயல்படுகிறது.

இளநிலை பட்டப்படிப்பு:-

பி.ஏ.,
பி.காம்., வணிகவியல்
பி.எஸ்.சி., கணிதம்
பி.எஸ்.சி,. வேதியியல்
பி.எஸ்.சி., இயற்பியல்
பி.எஸ்.சி,. விலங்கியல்
பி.எஸ்.சி., தாவரவியல்
பி.எஸ்.டபிள்யூ., சமுகப் பணி (சோசியல் வொர்க்)
பி.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.எட்., கல்வி
பி.டெக்., கன்ஸ்ட்ரக்சன் மேனேஜ்மென்ட்
பி.டெக்., வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம்
பி.எஸ்சி (ஹானர்ஸ்)., ஆப்டோமேட்ரி அண்ட் ஆப்தல்மிக் டெக்னீசியஸ்
பி.ஏ., டூரிசம் ஸ்டடீஸ்
பி.பீ.பீ ., பிரிப்ரேட்டரி புரொகிராம்
பி.பி.ஏ., ரீடைலிங் வித் தி மாடுலர் அப்ரோச்

முதுநிலை பட்டப்படிப்புகள்:-

எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., ஹிந்தி
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொருளியல்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., பப்ளிக் பாலிசி
எம்.காம்., வணிகவியல்
எம்.எஸ்.சி., டயட்டெடிக்ஸ் மற்றும் புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட்
எம்.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
எம்.எல்.ஐ.எஸ்., நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
எம்.எச்.ஏ., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் அட்மினிஷ்ட்ரேஷன்
எம்.ஏ., தொலைநிலைக்கல்வி
எம்.ஏ., சுற்றுலா மேலாண்மை
எம்.பி.ஏ., மனிதஆற்றல் /நிதி/ ஆப்ரேஷன்ஸ்/மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., வங்கி மற்றும் நிதி
எம்.ஏ., கிராமப்புற மேம்பாடு
எம்.ஏ., கல்வி
எம்.காம்., நிதி மற்றும் வரி விதிப்பு
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ்
எம்.ஏ., பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட்
எம்.ஏ., உளவியல்
எம்.எஸ்சி., கவுன்சிலிங் அண்ட் பேமிலி
எம்.ஏ., எக்ஸ்டென்ஷன் அண்ட் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (மாடுலர் புரோக்ராம்)
எம்.ஏ., அடல்ட் எஜுகேசன்
எம்.ஏ., மானிடவியல்

டிப்ளமோ படிப்புகள்:-

கிரியேட்டிவ் ரைட்டிங் இன் இங்கிலீஷ்
கிரியேட்டிவ் ரைட்டிங் இன் ஹிந்தி
ஏர்லி சைல்டுஹுட் கேர் மற்றும் எஜூகேஷன்
எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்
கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்
பிரைமரி எஜூகேஷன்
மேனேஜ்மென்ட்
டூரிசம் ஸ்டடீஸ்
யூத் இன் டெவலப்மென்ட் வொர்க்
அக்வாகல்ச்சர்
நாட்டிக்கல் சயின்சஸ்
வுமன்ஸ் எம்பவர்மென்ட் மற்றும் டெவலப்மென்ட்
சிவில் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
வேல்யூ ஏடெடு புராடக்ட்ஸ் இன் புரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ்
டெய்ரி டெக்னாலஜி
மீட் டெக்னாலஜி
புரொடக்சன் ஆப் வேல்யூ ஏடெட் புராடக்ட்ஸ்
நர்சிங் அட்மினிஷ்ட்ரேஷன்
டிப்ளமோ
உருது
பிஷ் புராடெக்ட் டெக்னாலஜி

அட்வான்ஸ்ட் டிப்ளமோ படிப்புகள்:-

கன்ஸ்டரக்டிவ் மேனேஜ்மென்ட்
வாட்டர் ரிசோர்ஸ் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்டெக்ரேட்டடு மேனுபாக்சரிங்
பவர் டிஸ்டிரிபூசன் மேனேஜ்மென்ட்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:-

லைப்ரரி ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங்
மொழிபெயர்ப்பு
ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
ரேடியோ பிராசரன்
ஆடியோ புரொகிராம் புரொடக்சன்
மெட்டேனல் மற்றும் சைல்டு ஹெல்த்
ஆஸ்பிட்டல் மற்றும் ஹெல்த் மேனேஜ்மென்ட்
ஜிரியேட்டிரிக் மெடிசின்
ரூரல் டெவலப்மென்ட்
ஹையர் எஜூகேஷன்
டிஸ்டன்ஸ் எஜூகேஷன்
ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்
பினான்சியல் மேனேஜ்மென்ட்
ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மென்ட்
மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்
இன்டலச்சுவல் பிராப்பர்ட்டி ரைட்ஸ்
என்விரான்மென்ட் மற்றும் சஸ்டைனபில் டெவலப்மென்ட்
கம்யூனிட்டி கார்டியோலஜி
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
புட் சேப்டி அண்ட் குவாலிட்டி மேனஜ்மென்ட்
பிளாண்டேஷன் மேனஜ்மென்ட்
பார்டிசிபேட்ரி டெவலப்மென்ட்
இன்டர்நேஷனல் பிசினஸ் ஆப்ரேஷன்ஸ்
அனல்டிகல் கெமிஸ்ரிட்
எஜூகேஷ்னல் டெக்னாலஜி
ஸ்கூல் லீடர்ஷிப் அண்ட் மேனஜ்மென்ட்
எஜூகேஷ்னல் மேனஜ்மென்ட் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன்
டீச்சிங் ஜெர்மன் அஸ் எ பாரின் லேங்குவேஜ்
சமூக சேவை

சான்றிதழ் படிப்புகள்:-

கம்ப்யூட்டிங்
லிட்ரசி கரிக்குலம் மற்றும் இன்ஸ்டரக்சன்
எச்.ஐ.வி., மற்றும் பேமிலி எஜூகேஷன்
நீயூட்டிரசன் மற்றும் சைல்டு கேர்
புட் மற்றும் நியூட்ரிசன்
புட் சேப்டி
ரூரல் டெவலப்மென்ட்
கைடன்ஸ்
டீச்சிங் ஆப் பிரைமரி ஸ்கூல் மேத்மெடிக்ஸ்
டீச்சிங் ஆப் இங்கிலீஷ்
பிரைமரி டீச்சிங்
சூ அப்பர் ஸ்டிச்சிங்
சூ அப்பர் கட்டிங்
சூ லாஷ்டிங் மற்றும் பினிசிங்
டூரிசம் ஸ்டடீஸ்
கிராப்ட் மற்றும் டிசைன்
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
என்விரான்மென்டல் ஸ்டடீஸ்
ஹூமன் ரைட்ஸ்
கன்ஸ்யூமர் புரொடக்சன்
லேப்ரேட்ரி டெக்னிக்ஸ்
காம்பெடன்சி என்ஹேன்ஸ்மென்ட் பார் ஏ.என்.எம்/எப்.எச்.டபிள்யூ
ஹெல்த்கேர் வேஸ்ட் மேனேஜ்மென்ட்
மோட்டார் சைக்கிள் சர்வீஸ் மற்றும் ரிப்பேர்
ஜெர்மன் லாங்குவேஜ்
பிசினஸ் ஸ்கில்ஸ்
நியுபார்ன் மற்றும் இன்பேன்ட் கேர்
மெட்டர்னல் மற்றும் சைல்டு ஹெல்த் கேர்

முதுநிலை சான்றிதழ் படிப்புகள்:-

பார்ட்சிபேடரி மேனேஜ்மென்ட் ஆப் டிஸ்பிலேஸ்மென்ட் ரீசெட்டில்மென்ட் மற்றும் ரீஹெபிலேஷன்
காப்பிஎடிட்டிங் மற்றும் புரூப்ரீடிங்
ரைட்டிங் பார் டெலிவிஷன்
ரூரல் சர்ஜரி

விழிப்புணர்வு படிப்புகள்:-

இன்டெலெக்சுவல் ப்ராப்பர்ட்டி ரைட்ஸ்
அப்ரிசியேஷன் கோர்ஸ் ஆன் என்விரான்மென்ட்

தொடர்புகொள்ள:-

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ)
மெய்டன் கார்ஹி, டெல்லி 110 068

தொலைபேசி : 011 29532321
பேக்ஸ் : 011 29536588
வெப்சைட் : www.ignou.ac.in


காணவில்லை..! - உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது



 வருடந்தோறும் குழந்தைகள் காணாமல் போகிறார்கள், பெற்றவர்களைத் தவிரத் துடிப்பவர் யாருமில்லை இங்கே.

நம்முடைய உறவு ஒன்று இறந்து விட்டால், சிறிது காலத் துயரத்திற்குப் பின் மனம் ஒரு வகையில் அந்த இழப்பில் இருந்து மீண்டுவிடும். ஆனால், நம்மைச் சேர்ந்தவர் ஒருவர் காணாமல் போய்விட்டால், அதுவும் நம் குழந்தைக் காணாமல் போய்விட்டால், அந்தத் துடிப்பு, அந்தச் சோகம் வாழ்நாள் முழுமைக்கும் ஆறாது, வாழ்நாள் என்று பெற்றோருக்கு மிச்சம் இருந்தால்...

சிறு வயதில் படித்திருக்கிறேன், 'சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம், துரோகத்தில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்' என்று. அந்தப் புத்திர சோகத்தை, இருபத்தைந்து வயதில் மனநிலைத் தவறிக் காணாமல் போய்விட்டத் தன் மகனை எண்ணி இன்று வரை கண்ணீர் விடும் ஒரு தாயிடம் கண்டிருக்கிறேன்.

ஓர் ஐந்து வயது குழந்தையோ ஐம்பது வயது குழந்தையோ, மறைந்து விட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ, பெற்றவர் படும் வேதனை மற்றவருக்குப் புரியாது, என் குழந்தை இந்த மடியில்தான் உறங்கியது, இங்கேதான் விளையாடியது, இப்படித்தான் என்னிடம் கொஞ்சியது, உணவுக் கிடைத்ததோ, இல்லையோ, அதன் உறுப்புக்கள் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ, பால் குடித்ததோ, பசியால் அழுகிறதோ, விபச்சாரத் தொழிலில் விட்டனரோ, இல்லை கொன்றுப் புதைத்தனரோ என்று ஒரு பெற்றவளின், தந்தையின் மனம் படும் பாடு திருடுபவனுக்கும், தேடும் கடமையில் இருக்கும் சிலருக்கும் புரிவதேயில்லை.

இந்தச் சோகத்தைக் கண்டும் காணாமல், புகார் பதியாமல், அல்லது இதுபோல் எத்தனையோ? இதில், இது வேறா என்று சில அதிகாரிகள் காட்டும் அலட்சியம், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு, மக்கள் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் பிச்சைகாரர்களைப் போல் துரத்தியடிக்கும் சிலரின் அலட்சியம் இவைகள்தான் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது.

1,17,480 குழந்தைகள், 352 மாவட்டங்களில் இருந்து, கடந்த ஜனவரி 2008 முதல், ஜனவரி 2010 வரை, காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களில் 41,546 குழந்தைகள் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது, அது நீதிக் கேட்டுப் போராட்டம் தொடங்கியபிறகும், தமிழ்நாடு, குஜராத், மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர்கள் இன்னும் வழக்குக்காக நேரில் செல்லவில்லை என்பதுதான் வேதனையான செய்தி. அட இங்குதான் ஒரு பசுவின் கன்றைக் கொன்றக் குற்றத்திற்கு, தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்திருக்கிறான்.

நாட்டில் முக்கியமான அறிக்கை விடும் செயல்கள் பல இருக்க, குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுவது அந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நடக்கும். முக்கியஸ்தர்கள் வீட்டில் இதுபோல் நிகழ்வுகள் நடப்பதில்லை, காரணம் திருடுபவனுக்கு ஒரு பயம் இருக்கலாம், செய்தால், கண்டுபிடித்துக் கழுத்தைத் திருகிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். யாரைக் கொலை செய்தாலும், எந்தக் குழந்தையைத் திருடினாலும் நாட்டில் நீதி எல்லோருக்கும் பொது என்ற நிலை இருந்தால், இங்கே குற்றங்களும் குறைந்து விடுமே.

இருக்கும் நீதியை நிலைநாட்டுவதில், நினைவுப்படுத்துவதில் உள்ள போராட்டம், குழந்தையைத் தேடி அலையும் அலைச்சலை விட மிகக் கொடுமையானது.

நம் நாட்டில் இருக்கும் சட்டத்தைத் தட்டி எழுப்ப, குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஒரு போராட்டம், வேறொரு நாட்டில், அநீதியான ஒரு சட்டத் தீர்ப்புக் கண்டு ஆரம்பித்திருக்கிறது.

ஐந்து வயதான பெண் குழந்தை 'லாமியா காம்தி'யைக் கற்பழித்துக் கொலை செய்த 'ஃபையான் காம்தி' என்ற சவூதியரேபிய மத குரு. இவன் பெற்ற தண்டனை, "குருதிப் பணம்" என்று சொல்லப்படுகிற வெறும் அபராதம் மட்டுமே, அதுவும் அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்கு.

அந்தக் குழந்தைப் பெரும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறது, பாலூட்டும்போது இறந்த குழந்தைக்காக ஒரு சிறுமியைக் கொன்ற சட்டம், பெற்ற பெண் குழந்தையை வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டு, தாய்க்குப் பணம் கொடுத்தால் போதும் என்கிறது! திரைப்படத்தில் காட்டும் நிழலுக்காய் பொங்கியவர்கள், இந்த உண்மை சுடுகிறது என்று ஒளிந்து கொண்டனரோ?

நீதி கேட்டுப் போகும் இடத்திலும், பெண்ணைப் புணர்ந்து வதை செய்கின்றன சில காவல் நிலையங்கள். ஆந்திராவில், சித்தூரில், விசாரணை என்ற பெயரில் ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்திருக்கிறான் ஒரு வெறிப் பிடித்த காவலன். இன்னும் எத்தனை எத்தனையோ வேதனை தரும் நிகழ்வுகள் உண்டு. பெண்ணென்றால் புணர்ச்சி, ஆண் குழந்தை என்றால் பணம், குழந்தையைக் கடத்தி வதைக்கும், பெண்களை நாசமாக்கும் ஒருவனுக்கு, அவனின் தாயோ அவன் வீட்டுப் பெண்களோ நினைவிற்கே வரமாட்டார்களா? சில நிமிடங்களில் அடங்கிப் போகும் உணர்விற்கு இத்தனை மிருகத்தனமா?

குழந்தைகளிடம் வன்முறையைக் காட்டுபவர்கள் யாரும் வாழத் தகுதி இல்லாத, முதுகெலும்பில்லாத கோழைகளே.

இப்படிப்பட்ட மிருகங்கள் வாழும் நாட்டில், தாய்மை உணர்வு மதிக்கப்படாத நாட்டில், ஒரு குழந்தைக் காணாமல் போனால், அந்தத் தாய்ப் படும் பாடு, எந்தப் பண, உடல் வெறிபிடித்த எந்த அயோக்கியர்களுக்கும் தெரியாது.

எந்த மதமோ, எந்த இனமோ, எந்த மொழியோ, எந்த நாடோ, குழந்தைகள் எல்லோரும் பறிக்கும் பூக்கள் இல்லை, முகர்வதற்கும், பின் வாடவிட்டுக் கொல்வதற்கும்! எத்தனையோ பந்தங்களை உடையாமல் காத்து, ஒரு புதிய உலகை படைக்கவிருக்கும் அழகான சிற்பிகள் அவர்கள்!

ஒருவரிடம் இருந்து அவர் சொத்தைக் களவாடினால், அவரின் சோகம் இழந்தப் பொருளின் மீது சிறிது காலத்திற்கே, மீண்டும் உழைத்துச் செல்வத்தைச் சேர்த்திடுவார். ஆனால் ஒருவரின் குழந்தையைக் களவாடினால், அவர் உயிரையே களவாடுவது போலத்தான், அந்தக் குழந்தைக் கிடைக்கும்வரை அங்கே உயிரே இருக்காது.

நிச்சயமாய் நாம் மனு நீதிச் சோழனைக் கேட்கவில்லை, மனசாட்சி கொண்ட மனிதர்களைத்தான் வேண்டுகிறோம். குழந்தையைத் தின்னும் நாகரிக மிருகங்கள் நாசமாய்ப் போகட்டும், இனியேனும் இங்கே தாய்மையும் மனிதமும் மலரட்டும்!

உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது, தன் வீட்டில் நெருப்பெரியும் வரை தீயின் கருகும் வாசம் அவர்களைச் சேராது. ஆள்பவர்களும், சட்ட அமைப்புகளும் நீதியை எல்லோருக்கும் சமமாய் வழங்கினால், பணத்தை விட உயிர் பெரிது என்று நினைத்தால், இழந்தவர் நிலையில் தன்னை நிறுத்திப் பார்த்தால், இங்கே குற்றம் குறையும், கண்ணீர் குறையும், இல்லையென்றால் இது போன்ற சட்டப் போராட்டங்களே நம் வாழ்க்கையாய் மாறிப்போகும், போராடுவோம், நாளை சந்ததியேனும் நிம்மதியாய் வாழட்டும்!

வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்..!



தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். அதேபோல், அதிக அளவில் நீலம் கலந்த டிடர்ஜெண்ட் பவுடரைப் பயன்படுத்தும் போது துணிகளை ப்ளீச் செய்வதுபோல, கைகளையும் அது ப்ளீச் செய்வதால், சிலருக்கு தோல் உரிந்துவிடும்.

இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!


ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.

வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் பளிச்சென்று ஆகும்.

மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.

சாதாரணமாகவே கைகள் இறுக்கிப் பிடிக்கும்போது கன்னிப் போவது சகஜம். டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை.

நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

பந்தா பேச்சுகள்தான் இன்னமும் குறையாத சிம்பு..!




விரல்வித்தை நடிகர் நடித்த படம் ஓடி ரொம்ப காலமாயிற்று. இருப்பினும் நடிகர் பேசும் பந்தா பேச்சுகள்தான் இன்னமும் குறைந்தபாடில்லை. தற்போது இரண்டு படங்களில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த படங்கள் எப்போது திரைக்கு வரும் என்பதே புரியாத புதிராக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பசங்க டைரக்டரின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் விரல்வித்தை, அப்படத்தில் தானே தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். என்றபோதும், கையிலிருந்து காசை இறக்கத்தான் ரொம்ப கஷ்டப்படுகிறாராம்.

என் படத்துக்கு மார்க்கெட்டில் ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. என் படங்களின் வியாபாரம் குறைந்தபட்சம் 40 கோடி வரை செல்கிறது. அதனால், உள்ளூர், வெளியூர் மற்றும் தொலைக்காட்சி ரைட்சுக்கான பணத்தை வாங்கியே படத்தை முடித்து விடலாம் என்கிறாராம்.

இதையடுத்து, விநியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். என்றபோதும் கடைசியாக நடிகரின் நடிப்பில் வெளியான மூன்று படங்களுமே ஊத்திக்கொண்டதை காரணம் காட்டி, தம்பியின் படத்தை நம்பி இறங்கி வர தயங்கி நிற்கிறார்களாம்.

``கலவரம்`` - திரை விமர்சனம்..!



மதுரையில் அடியாட்களை வைத்துக்கொண்டு தனக்கென்று தனிராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் தணிகலாபரணி. இவர் அரசியலில் இல்லாதபோதும் அங்கு செல்வாக்குள்ளவராக இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் நடக்க, இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏவை எதிர்த்து போட்டியிட்ட வேட்வாளர் வெற்றி பெறுகிறார். இதனால், மிகவும் கோபம் அடையும் தணிகலாபரணி வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏவை வெட்டி சாய்த்து விடுவதால் இவரை போலீஸ் கைது செய்ய முயற்சி செய்கிறது.

தணிகாலபரணி, தன் ஆதரவு ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோரை அழைத்து, என்னை கைது செய்த பிறகு மதுரையில் கலவரம் உருவாக வேண்டும். மதுரையே ஸ்தம்பிக்க வேண்டும், பல உயிர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்.

அதன்படி அவர் கைது செய்யப்பட, மதுரையில் கலவரம் நடக்கிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர். குறிப்பாக 4 கல்லூரி மாணவிகள் கொல்லப்படுகின்றனர். இதன் பிறகு தணிகாலபரணி ஜாமீனில் வெளிவருகிறார்.

கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை போலீஸ் கைது செய்துவிடுகிறது. லஞ்சம் கொடுத்து ரவுடிகளை தணிகாலபரணி ஜெயில் இருந்து மீட்கிறார். ரவுடிகளை மீண்டும் கைது செய்ய கோரி கொல்லப்பட்ட 4 கல்லூரி மாணவிகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்த, மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரியான சத்யராஜை பணி நியமனம் செய்கின்றார். இச்சம்பவங்களை பற்றி விசாரணை செய்யவும் அவர் உத்தரவிடுகிறார். தீவிர விசாரணையில் ஈடுபடும் சத்யராஜ் கலவரத்திற்கு காரணம் 3 ரவுடிகள் மற்றும் இவர்களுக்கு பின்னணியில் தணிகாலபரணி என்று தெரிந்து கொள்கிறார். இவர்களை பற்றிய விசாரணை அறிக்கையை அமைச்சரான ராஜ்கபூரிடம் கொண்டு செல்கிறார். இதை அமைச்சர் தட்டி கழிக்கிறார். நீ ஊருக்கு செல் விசாரணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் சட்டத்தின் முன் இவர்களை ஒன்றும் பண்ணமுடியாது என்று நினைத்து அந்த அறிக்கையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்.

இந்நிலையில் கலவரத்தில் 4 தோழிகளை பறிகொடுத்த 3 கல்லூரி மாணவர்கள் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றனர். அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றவொருவரும் இவர்களுடன் சேர்கிறார். சட்டத்தின் முன் ரவுடிகளை தண்டிக்க முடியாத சத்யராஜ், சட்டத்திற்கு எதிரான முறையில் அவர்களை தண்டிக்க முயற்சிக்கும் அந்த நால்வருடன் இணைகிறார்.

இறுதியில் இவர்களை பழிவாங்கினார்களா? என்பதே மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் இளமை மாறாத சத்யராஜ் போல் கண்முன் தோன்றுகிறார். வில்லனான தணிகாலபரணி, ஆதிமூலம் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். ரவுடிகளை பழிவாங்கும் நினைக்கும் அஜய்ராகவ், அஜய், யாசர், ராகவேந்தர் ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டை சுரேஷ், கட்டத்துரை எனும் கதாபாத்திரத்தில் மிரளவைக்கிறார்.

படத்தை சந்திரன் ஒளிப்பதிவு செய்தவிதம் அருமை. 2 பாடல்கள்தான் என்றாலும் பின்னணி இசையில் கலக்குகிறார் இசையமைப்பாளர் பைசல். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்களை திறம்பட வேலையை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.

மொத்தத்தில் ‘கலவரம்’ கொலைக்களம்.

உயர்க்கல்விக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?



 உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

வெளிநாட்டில் கல்வி கற்க வேன்டும் என்பது படிக்கும் மாணவர்கள் பலரின் கனவாக இருந்தாலும், வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சிலருக்குத் தான் நனவாகிறது.

வெளிநாட்டுக் கல்வியானது திட்டமிட்டவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாகிவிடுகிறது. திட்டமிடாமல் கடைசி நேரத்தில் முயற்சி செய்பவர்களுக்கு பதட்டத்தோடு, பண விரயமும் அதிகமாகிறது. கடைசி நேரத்தில் முயற்சி செய்பவர்கள் பலரும் உதவித்தொகைகளை பெறுவதற்கான காலத்தை கடந்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

நாட்டைத் தேர்ந்தெடுங்கள்


நீங்கள் குறிப்பிட்ட பாடம்தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் அந்த படிப்பிற்கு எந்த நாடுகள் சிறந்த நாடுகள் என்பதை முடிவு செய்யுங்கள். சில பாடங்களுக்கு சில நாடுகளின் பல்கலைக்கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. எதோ ஒரு நாட்டில் படிக்கலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயம் அது தவறான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

நாட்டைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? அந்த பல்கலைக்கழகங்களின் கட்டண விபரங்கள், பகுதி நேர வேலை விபரங்கள் மற்றும் குறிப்பாக அந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் உதவித்தொகைகள் குறித்த விபரங்களை முதலில் அறியுங்கள்.

சேகரித்த தகவல்களையெல்லாம் கொண்டு ஒரு அறிக்கை தயார் செய்யுங்கள். உங்களுக்கு தேர்ந்தெடுப்பது எளிதானதாக இருக்கும்.

விண்ணப்பியுங்கள்

உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கும்பொழுது இதற்கு விண்ணப்பிக்கலாம், இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பிரிக்கும் வேலையில் இறங்க வேண்டும். உதவித்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என கருதும் உதவித்தொகைக்கும் தயங்காமல் விண்ணப்பியுங்கள்.

உதவித்தொகைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதிகளை வைத்திருக்கும். அஞ்சல் வழியாக விண்ணப்பங்களைப் பெறலாம் என்று காலத்தை வீணாக்காதீர்கள். அதே போன்று விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கூர்ந்து படியுங்கள்.

வெற்றிகரமாக எழுதுங்கள்

உதவித்தொகையை பெறுவதற்காக உதவித்தொகை வழங்கும் நிறுவனத்திற்கு வரக்கூடிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமான அளவு இருக்கலாம். உங்கள் விண்ணப்பம் தனித்து தெரியவேண்டும் என்றால் நீங்கள் உங்களைப் பற்றிய ஒரு கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

நீங்கள் எழுதும் கடிதத்தில் உங்களின் தனித்திறன்கள், இதற்கு முன் கல்வியில் நீங்கள் சாதித்த சாதனைகள், உங்கள் விருப்பங்கள், எதிர்கால லட்சியங்கள், மொழித்திறன், உங்களின் உறுதி போன்றவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

நீங்கள் பெறப்போகும் உதவித்தொகை உங்களுக்கு எந்தவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் விவரித்து எழுதுங்கள். ஏனெனில் ஒரு சிறந்த சுய விபரக் கட்டுரை உதவித்தொகை எளிதாகப் பெறுவதற்கு துணை புரியும்.

பரபரப்பு வேண்டாம்

உங்கள் விண்ணப்பத்தை சிறப்பாக கட்டமைத்தப் பின்னர் உடனடியாக உதவித்தொகை வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்புங்கள். முதலாவதாக வரும் விண்ணப்பங்களை ஆழந்து படித்து முன்னுரிமை அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கடைசி நேரத்தில் பரபரப்புடன் சரியாக பூர்த்தி செய்யாமலோ, இறுதி நாளுக்குப் பிறகோ அனுப்பினால் உங்களுக்கு உதவித்தொகை கிடைப்பது அரிதான காரியமாகிவிட வாய்ப்பிருக்கிறது.

காத்திருங்கள்

உதவித்தொகைகள் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு உதவித்தொகை வழங்கும் நிறுவனத்தை தொடர்புகொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம், அமைதியாக காத்திருங்கள்.

நீங்கள் தகுதியுள்ள நபராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

‘ சிப் ' - ஐ வைத்து சீப்பா நடக்கும் நாடுகள்...!



இனிமேல் ஒரு பயல் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பான்? ஓலைச்சுவடியில் கோட் வேர்ட்ஸில் கடுதாசி எழுதி மஞ்சள் பொடி போட்டு, மெழுகு தேய்த்து டீகோட் செய்து வாசித்துக்கொள்ள வேண்டியதுதான். கணக்கு வழக்குகள் இதர விவரங்கள் அனைத்தையும் கையாலெழுதும் காலம் திரும்பி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள். கோப்புகளை டிஜிடல் வடிவில் சேமித்து வைத்தால் சாவு கிடையாது என்று எண்ணியிருந்தால் நீங்கள் செத்தீர்கள். மானசீக மர்ம தேசத்தில் பட்டுத்துணி சுற்றி ஏதாவது பாதாள அறைக்குள்தான் புதைத்து வைக்கவேண்டியிருக்கும்.

எல்லாம் கலியின் சதி. மீண்டும் அமெரிக்கா ஓர் அக்கப்போரில் சிக்கியிருக்கிறது. அயோக்கியத்தனத்தின் அடுத்த நீட்டல் விகாரம் ஒரு பெரும் விவகாரமாக வெடித்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து பரதேசங்களுக்கு சப்ளையான சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தலா ஒரு ரகசிய 'சிப்' சொருகி அனுப்பியிருக்கும் சங்கதி இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இணையத் தொடர்பே இல்லாதிருக்கும் கம்ப்யூட்டர்களையும் இந்த திருட்டு வசதியின்மூலம் ஹேக் செய்ய இயலும். உள்ளே இருக்கிற சங்கதிகளை எடுத்துப் படித்துக் கள்ளத்தனம் செய்யலாம்.

மேற்படி ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள் சென்று சேர்ந்திருக்கும் இடங்களைப் பாருங்கள். பிரதானமாக சீன ராணுவம். அடுத்தபடியாக ரஷ்ய ராணுவம். மூன்றாவதாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த வர்த்தகக் குழுக்கள். கட்டக்கடைசியாக சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற தேசங்களைச் சேர்ந்த உளவுத்துறை அலுவலகங்கள். இதில் இந்தியாவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தி, ஏற்றுமதியாகும் கம்ப்யூட்டர்களுக்கு முன்னதாகவே தாலி கட்டி அனுப்பிவைக்கிற சங்கதி. எந்தெந்தக் களவாணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இதில் உடந்தை என்று இனிமேல்தான் தெரியவரும். இது இவ்வாறிருக்க, இந்தத் திருப்பணியை அமெரிக்காவுக்கு முன்பாகவே சீனா ஆரம்பித்துவிட்டது என்றும், அமெரிக்காவுக்கே அவர்கள் பலமுறை இவ்வித இனிய அல்வா கொடுத்ததன் விளைவாகவே அமெரிக்கா இந்த ரகசிய சிப் சொருகல் விவகாரத்தில் தீவிரமாக இறங்கியது என்றும் சொல்கிறார்கள்.

எப்படியானாலும் இந்த அருவருக்கத்தக்க, அபாயகரமான அத்துமீறல் நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருப்பதை மறுக்க முடியாது. டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடங்கி கம்ப்யூட்டர் ஹேக்கிங் வரை சகலமான சாத்தியங்களிலும் அமெரிக்கா தனது அழுகிய உளவுக் கரங்களை உலகெங்கும் நீட்டுவது தாங்க இயலாத அபாய எல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எதைக் கேட்டாலும், என்ன கேட்டாலும் தேசியப் பாதுகாப்பு என்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஒரே பாட்டை ஒரே சுருதியில் பாடிவிடுவார்கள். இல்லாவிட்டால் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று ஆத்ம சுத்தியுடன் பொய் சொல்லவும் ரெட்டை ரெடியாக நிற்பார்கள். இந்த விவகாரத்திலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதைத்தான் செய்திருக்கிறது. விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த மறுகணமே, அதெல்லாம் இல்லை; சுத்தப் பொய் என்று மறுத்துவிட்டார்கள். காசா பணமா? ஒரு மறுப்பு. தீர்ந்தது விஷயம்.

ஆனால் அமெரிக்க அச்சு மீடியாவே இந்தா இந்தா என்று ஆதாரங்களை எடுத்து வீசிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் NSA வின் மறுப்பு அர்த்தமற்றதாகவே உள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் அமெரிக்காவின் இந்தத் தொடர் அத்துமீறல்களுக்கு எதிராக உடனடியாகத் திரண்டு எழாத பட்சத்தில், நாளைக்குக் கூடி உட்கார்ந்து ஒப்பாரி வைக்க நேர்ந்தால் அதுதான் கேலிக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும்.

இண்டர்வியூ போகும் போது இப்படிதான் இருக்கணும்..!



பல்வேறான நேர்முகத் தேர்வுகளில், இறுதி கேள்வியாக, "நீங்கள் எங்களிடம் எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?" என்பதாகவே இருக்கும். அதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டால், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஜனநாயகத் தன்மையுடனும், நன்கு பக்குவமடைந்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆனால் அதுபோன்ற கேள்விக்கு, "என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை என்றும், கமிட்டி உறுப்பினர்கள்தான், நேர்முகத் தேர்வில் கேள்விகளை கேட்க வேண்டும்" என்ற பதிலை கட்டாயம் சொல்லக்கூடாது.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, முடிந்தளவு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால், அதுபோன்ற நேரங்களில் தரப்படும் வாய்ப்பை பயன்படுத்தி கேள்விகளை கேட்டு அவர்களை ஆச்சர்யப்பட வைக்க முடியும். இதனால் உங்களின் முக்கிய சந்தேகங்களும் தீர்க்கப்படும்.

நிறுவனத்தின் நடப்பு புராஜெக்ட்டுகள், எதிர்கால திட்டங்கள், நீங்கள் பணியமர்த்தப்படக்கூடிய இடம் மற்றும் பணியில் சேர வேண்டிய தேதி(தேர்வு செய்யப்பட்டால்) போன்றவை கேட்கப்படக்கூடிய சில முக்கிய கேள்விகள்.

மன அழுத்த சூழல்கள்

நேர்முகத் தேர்வின்போது, பல தேர்வு கமிட்டி உறுப்பினர்கள், கலந்துகொள்ளும் நபரிடம் மனஅழுத்தத்தை உண்டாக்க முயல்வார்கள். இதன்மூலம் அவர் எவ்வாறு react செய்கிறார் என்பதை அறிந்துகொள்வது அவர்களின் நோக்கம்.

ஏனெனில், ஒரு நிறுவனப் பணி என்பது, ரோஜா மெத்தையில் படுத்திருப்பது போன்றதோ அல்லது தென்றலில் இளைப்பாறுவது போன்றதோ அல்ல. அதிக சவால்களும், நெருக்கடிகளும், இக்கட்டான சூழல்களும் நிறைந்தது. இதற்கேற்ப ஒரு பணியாளர் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்.

எனவே, உங்களிடமிருந்து சரியான reaction வருகிறதா என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். வருங்காலத்தில், பணியமர்த்தப்படக்கூடிய ஒருவரின் மனநிலையை சரியாக அறிந்துகொள்ளும் வகையில், Electro encephalograph போன்ற மருத்துவ உபகரணங்களை நிறுவனங்கள் பயன்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதுபோன்ற சோதனையில், நீங்கள் வாயைத் திறந்து எதையும் பேசவில்லை என்றாலும்கூட, உங்களின் மாறும் முகபாவனைகள், உங்களின் உடல் மொழிகள் போன்றவற்றை ஆராய்ந்து அவர்கள் மனநிலையை கணித்து விடுவார்கள்.

ஒரே நேரத்தில்...


உங்களின் மனவலிமையை அறியும் சோதனையில், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஒருவர் பின் ஒருவராக உங்களிடம் கேள்விகளை கேட்காமல், ஒரேநேரத்தில், பலவிதமான கேள்விகளை அனைவரும் கேட்பார்கள்.

இதுபோன்ற சூழலில், நீங்கள் இப்படி சொல்லக்கூடாது, "இப்படி கேட்டால் நான் எதற்கு பதில் சொல்வது? என்னால் பதில் சொல்ல இயலாது. தயவுசெய்து ஒவ்வொன்றாக கேளுங்கள்" என்பதுதான் அது.

மேலும், முக்கிய அம்சம் என்னவென்றால், உங்களின் முக பாவனையை கடுமையாகவும், குழப்பமாகவும் மாற்றி வைத்துக்கொள்ளக்கூடாது. உடலில் கலவரம் இருக்கக்கூடாது. நீங்கள் ஏதோ இக்கட்டில் மாட்டிக் கொண்டதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.

ஏனெனில், நேர்முகத் தேர்வு என்பது போர்க்களமல்ல. உங்களை சோதிக்கும் ஒரு களம்தான் என்பது எப்போதுமே மனதில் இருத்தப்பட வேண்டும்.

மாறாக, நீங்கள் இவ்வாறு கூறவேண்டும், "நீங்கள் அனைவரும் கேட்ட கேள்விகளில், இந்த கேள்விக்கு முதலில் பதிலை சொல்கிறேன். பிறகு இந்த கேள்விக்கும், அதனையடுத்து, மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்" என்று எந்த பதட்டமும் இல்லாமல், மிருதுவாக கூற வேண்டும்.

இதைத்தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பார்கள். நேர்முகத் தேர்வு எவ்வளவு நேரம் நீடித்தாலும், நீங்கள் எந்தவித எரிச்சலையோ, சலிப்பையோ அல்லது சோர்வையோ, எந்த வகையிலும் கட்டாயம் வெளிப்படுத்தவேக் கூடாது. அப்படி வெளிக்காட்டினால், அதுவே தகுதியிழப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

ஒரு முக்கிய தாரக மந்திரத்தை நினைவில் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியம். அது நேர்முகத் தேர்வுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை முழுவதற்கும்தான்.

"எப்போதும் உனது நிதானத்தை இழந்துவிடாதே" என்பதுதான்

ஹாலிவுட் படங்களுடன் போட்டிப்போடும் 'வீரம்'..!



அஜீத், தமன்னா, சந்தானம், நாசர் மற்றும் பலர் நடித்த ‘வீரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 10ம் தேதி வெளியாகி தொடர்ந்து ‘ஹவுஸ் ஃபுல்’ காட்சிகளாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியா தவிர, யு.எஸ்.ஏ, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் இப்படம் வெளியாகியது.

ஆந்திராவில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் ‘வீரம்’ திரைப்படம் ‘ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபிஸ்’-ல் வெளியான முதல் வாரத்தில் 20 படங்களில் ஒன்றாக இடம் பிடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

76,320 டாலர்களை வசூலித்துள்ள இப்படம் ஹாலிவுட் திரைப்படங்களுடன் போட்டி போட்டு 16வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு தமிழ்ப் படம் ஆஸ்திரேலிய நாட்டின் ‘பாக்ஸ் ஆபிஸ் – டாப் 20’ல் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



ஆஹா கல்யாணம் ஆடியோ வெளியீடு



நான் ஈ திரைப்படத்தின் மூலம் தமிழில் நன்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் நானி மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்துவரும் ஆஹா கல்யாணம்
திரைப்படத்தின் இசை வருகிற ஜனவரி 21ல் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா இப்படத்தினை தயாரித்துவருகிறார். அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கிவரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டுவருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மனீஷ் ஷர்மா இயக்கத்தில் வெளியாகி வெற்றிவாகை சூடிய ஹிந்திப் படமான பாந்த் பஜா பாரத் திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் முதல் படம்பிடிக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற பிப்ரவரி 7ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 20ல் இப்படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் தரண்குமார் போடா போடி, விரட்டு, தகராறு, இங்க என்ன சொல்லுது முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகிறதா வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்..?



அறை எண் 305ல் கடவுள் மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களுக்குப் பிறகு சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துவரும் திரைப்படம் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

கடந்த 2010ல் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும்வெற்றியடைந்த மர்யாத ராமண்ணா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக்கான இப்ப்படத்தினை பி.வி.பி.சினிமாவுடன் இணைந்து  தயாரித்துவருகிறார். இப்படத்தினை நகைச்சுவை நடிகரும், முத்திரைதிரைப்படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத் இயக்கிவருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. மும்பை மாடலான ஆஷ்னா சவேரி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

புதுமுக இயக்குனர்களின் மிக முக்கியப் படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் இப்படம் வருகிற தமிழ்ப் புத்தாண்டு ரிலீசாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானும் வெளியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, January 17, 2014

வீரம் படத்தை மறுபடியும் பார்க்கணும் - சிம்பு



தல அஜித் நடித்து கடந்த ஜனவரி 10ல் வெளியாகியிருக்கும் வீரம் திரைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் வசூலையும் அள்ளிவருகிறது. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அஜித்தின் வீரம் படத்தினை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்த சிம்பு கடந்த ஆண்டின் இறுதியில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கும் படம் மற்றும் வாலு போன்ற பல படங்களில் நடித்துவரும் சிம்பு, செவன் அப் விளம்பர மாடலாகவும் நடித்துவருகிறார். இதனால் மிகவும் பிசியான ஷெட்யூலில் இருந்ததால் அஜித்தின் வீரம் திரைப்படத்தினை வெளியாகி ஆறு நாட்களுக்குப் பிறகே பார்த்திருக்கிறார்.

வீரம் திரைப்படத்தினை பார்த்ததும் சிம்பு தான் வீரம் திரைப்படத்தினை வெகுவாக ரசித்ததாகவும், அஜித்தின் பிரபலத்தை நன்றாகப் புரிந்து கொண்டு
அதற்கேற்றாற்போல் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா என்றும் பாராட்டியுள்ளார். மீண்டும் இப்படத்தினைப் பார்க்க
விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்துடன் நடிக்கும் வாய்ய்பை இழந்தேன்..! - சிவகார்த்திகேயன்



பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களின் மனத்திலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் மனத்திலும் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தல அஜித்துடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரிப்பில் , ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, நவ்தீப் மற்றும் பியா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏகன். அஜித் இப்படத்தில் சி.பி.ஐ. ஆபீசராக நடித்திருந்தார்.

தல அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் தான் நடிக்கவிருந்ததாகவும், இறுதிக் கட்டத்தில் தனது கதாபாத்திரம் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டதால் தன்னால் அஜித்துடன் இணைந்து நடிக்கவியலாமல் போனது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் வரும்காலங்களில் தனக்கு அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எவ்வளவு பெரிய இக்கட்டான சூழலாக இருந்தாலும், எதற்காகவும் அந்த வாய்ப்பினை நழுவ விடமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தல அஜித்துடன் நடிக்கும் இளம் நடிகர்கள் அஜித்தின் பெருந்தன்மையைப் பற்றிப் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்…!




இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

 சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

 திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

 முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க..!



உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.

இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்

உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.

உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

அதற்கு cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :

  •     பெயர்(NAME)
  •     முகவரி(ADDRESS)
  •     போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  •  அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  •     கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  •     உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  •     எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  •     போனின் அடையாள எண் (IMEI)

ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.

Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.

அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும்.

விரக்தியில் கேப்டன் மகன்...!



கேப்டனின் மகன் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவரை போடலாம் என முடிவெடுத்தவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளாராம்.

 முதற்கட்டமாக, மயிலு நடிகையின் மகள் நடிக்க தயாராகி வருகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் அவரிடம் போய் கேட்டிருக்கிறார்கள். அண்டங்காக்கா குயிலுக்கு ஆசைப்படலாம். ஆனா மயிலுக்கு ஆசைப்படலாமா என்பதுபோல், கேட்டவுடனே நடிகையின் தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இருந்தாலும் சூசகமாக சொல்லவேண்டும் என்பதற்காக ரூ.1 கோடி கொடுத்தால் நடிக்க தயார் என்று கூறியிருக்கிறார்கள். இதைக் கேட்டவுடனே கேப்டன் தரப்பு பின்வாங்கிவிட்டது.

தனக்கு ஜோடியாக அவரை போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்த கேப்டன் மகன் இதனால் தற்போது விரக்தியில் உள்ளாராம்.

இசைக்கு மட்டுமே தனது திரை உலக பணி..!


இளம் இசை அமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது . நடிக்க வரும் பல வாய்ப்புகளை தட்டி கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரை உலக பணி  என்று திட்ட வட்டமாக இருக்கும் அனிருத் , அதை உரக்க சொல்லியும் வருகிறார் . "ஆக்கோ" _ சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்து ,கேட்டு வியந்த கதை . தன்னுடைய பங்களிப்பு ஒரு இசை அமைப்பாளராக மட்டுமே , என்று கூறியதோடு மிக சிறந்த பாடல்களை இசை அமைத்து கொடுத்து  இருக்கிறார்.

இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குனர் ஆ .ஷ்யாம் மாரும்  தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில்  அனிருத்தை பிரதான படுத்தி கசைளவ டழழம ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே  அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.

இந்த படத்தின் தலைப்பு மிகவும் வித்தியாசமாக  இருக்கிறது. "ஆகோ" என்றால் ஆர்வ கோளாறு . மூன்று ஆர்வ கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் சாரம்சமே "ஆர்வ கோளாறு"  படத்தின் கதை  என்று கூறும் இயக்குனர் ஷ்யாம்,  ஆக்கோ நகைசுவை கலந்த ஒரு யஉவழை% படம். இது எந்த குறிப்பிட்ட வயதினரையோ, வகுப்பினரையோ கவர மட்டுமே எடுக்க பட்ட படமல்ல . எல்லோரையும் எப்போதும் கவரும் படம் இது. அனிருத்தின் பாடல்கள் 2014 ஆண்டின் மிக சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார்.

வசூல் வேட்டையில் வீரம் - ஜில்லா



பொங்கலுக்கு வெளியான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி கொலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி வெளியாகின.

இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன.

வீரமும் , ஜில்லாவும் வெளியான முதல் வார இறுதி நாட்களில் மொத்தமாக ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் திரிநாத் தெரிவித்துள்ளார்.

வீரம் மற்றும் ஜில்லா படங்களின் தயாரிப்பாளர்கள் வசூல் விவரங்களை துள்ளியமாக தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். பொங்கல் விடுமுறை இரண்டு படங்களுக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் கேரளாவில் சுமார் 200 திரையரங்குகளில் வெளியானது.

மேலும் வீரம் படத்தில் அஜித்தின் கிராமத்து கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.

தத்துவ ஞானி சாக்ரடீஸ் - வாழ்க்கை வரலாறு



கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.

சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.

பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.

இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.

நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.

நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)

நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின! தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!

‘இது கதிர்வேலன் காதல்’ - காதலர் தினத்தில் ரிலீஸ்.....






உதயநிதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14–ந் தேதி காதலர் தினத்தில் ரிலீசாகிறது. முதல் தடவையாக இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். இதன் பாடல் வெளியீடு 20–ந் தேதி நடக்கிறது.

இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இவர் சசிகுமார், லட்சுமிமேனனை வைத்து சுந்தரபாண்டியன் ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.

உதயநிதி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் அறிமுகமானார். அதில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இரண்டாவதாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீசான ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’ படம் வருகிறது.

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலச்சந்திரன் கதை படமாகிறது...



விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன். சிங்கள ராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதாக கடந்த வருடம் வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

பாலச்சந்திரனை ராணுவ பதுங்கு முகாமில் பிடித்து வைத்து சுட்டுக் கொன்று இருந்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். இக்கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சினிமா படமாகிறது. பிரவின்காந்த் நடிக்கும் புலிப்பார்வை படத்தில் இந்த காட்சிகள் சேர்க்கப்படுகின்றன. பாலச்சந்திரன் கேரக்டரில் நடிக்க 100 சிறுவர்களை பரிசீலித்து இறுதியில் பொருத்தமான சிறுவனை டைரக்டர் தேர்வு செய்துள்ளார்.

விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவத்தினர் இடையே நடந்த சண்டைகள் இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் போன்றவையும் இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகிறது.

விஜய்,மோகன்லால் - மீண்டும்....






மீண்டும் மோகன்லாலுடன் மலையாளத்தில் விஜய்!

ஜில்லா திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் நன்றி சொல்லிவருகிறார் விஜய்.

சமீபத்தில் நடந்த ஜில்லா சக்சஸ் மீட்டில் துவங்கிய இந்த நன்றி-கூறும் படலம் தற்போது சமூக வலைதளங்கள் வரை தொடர்ந்துள்ளது.

முன்னணி சமூகவலைதளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு விஜய் பதில் கூறினார். அப்போது ஒரு ரசிகர் ‘நீங்க பாலிவுட்டுக்கு எப்ப போக போறீங்க?’ என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு விஜய் ‘நமக்கு எப்பவும் நம்ம நாடு தான்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும்  ‘நீங்கள் எப்போது மலையாள படத்தில் நடிப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு, மோகன்லாலுடன் சேர்ந்து ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஆசை’ என்று கூறியிருக்கிறார்.

 கேரள ரசிகர்களிடையே விஜய் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. மோகன்லால் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததற்கு முக்கிய காரணமும் அதுதான். 

எனவே மறுபடியும் விஜய்யும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதில் ஆச்சர்யம் இல்லை என்கிறது கோடம்பாக்கம்

செல்போனில் புயல் அறிகுறி:வி.ஐ.டி.மாணவர்களின் லேட்டஸ்ட் சாதனை!



புயல் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு பதிலாக புயல் ஏற்படுவதற்கான அறிகுறிகளை உடனடியாக அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளில் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விவேக் வித்யாசாகரன் மற்றும் சந்தீப் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டனர்.

வி.ஐ.டி. இயந்திரவியல் மற்றும் கட்டிட அறிவியல் பள்ளி பேராசிரியர் சத்யஜித் கோஷ் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர்கள் செல்போன் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 929 மில்லியனிலிருந்து 2014–ம் ஆண்டில் 1.15 பில்லியன் அளவிற்கு உயரும் வாய்ப்பு உள்ளது.

செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலமாக புயல் போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகும் வகையில் அதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

செயற்கைகோள் தொழில்நுட்ப வசதியின் மூலம் புயல் அறிகுறிகளை வானிலை ஆராய்ச்சி மையத்தினர் பெற்று அதனை தொலைகாட்சி மற்றும் வானொலி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வழியாக மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு பதிலாக செல்போன் மற்றும் இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான புதிய தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்தனர்.

ஆராய்ச்சி பற்றிய முழு அறிக்கையை அம்மாணவர்கள் இங்கிலாந்தில் உள்ள ராயல் மெட்ராலாஜிக்கல் சொசைட்டியில் சமர்ப்பித்தனர். அதனை ஆய்வு செய்த ராயல் மெட்ராலஜிக்கல் சொசைட்டி அதனை ஏற்றுக்கொண்டு வானிலை அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.வி.ஐ.டி. மாணவர்கள் விவேக் வித்யா சாகரன், சந்தீப் சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள இந்த ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புயல் பற்றிய அறிகுறிகளையும், அதன் வேகம், பலம் மற்றும் அமைப்பு பற்றிய தகவல்களை செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

ஹீரோக்களுக்கு டிமிக்கி கொடுத்த - நயன்தாரா...!



நயன்தாராவை காதலிக்க கதாநாயகர்கள் பலர் சுற்றுகின்றனர். ஆனால் அவர் யாரிடமும் சிக்கவில்லை. இரண்டுமுறை காதலில் தோற்றதால் எச்சரிக்கையுடன் இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முதல் காதல் சிம்புவுடன் நடந்தது. இருவரும் ஆழமாக காதலித்தனர். திருமணத்துக்கும் தயாரானார்கள். திடீரென அது முறிந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறைகளை அள்ளி வீசி விட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு நயன்தாராவும், சிம்புவும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் தோல்வியில் தவித்துப் போய் இருந்த நயன்தாரா வாழ்க்கையில் இரண்டாவதாக பிரபு தேவா வந்தார். அவரின் ஆறுதல் பேச்சில் மனதை இழந்தார். இருவரும் காதலித்தார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வந்து நெருக்கத்தை பகிரங்கப்படுத்தினர்.

மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயன்தாராவை மணக்க பிரபுதேவா தயார். ஆனால் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த நிலையில் இவர்களும் பிரிந்தார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவருமே இதுவரை சொல்ல வில்லை.

இதனால் விரக்தியின் உச்சிக்கு போன நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பழைய மார்க்கெட் சரியவில்லை. பெரும் தொகை சம்பளம் கொடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

தற்போது ஆர்யாவுக்கு நயன்தாரா மேல் காதல் துளிர்த்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. வீட்டில் அழைத்து விருந்து கொடுத்தார் என்றும் கூறப்பட்டது. இது போல் இன்னாரு இரண்டெழுத்து ஹீரோவும் அவரை விரும்புகிறாராம்.

 அத்துடன் பெரிய தொழில் அதிபர்கள் சிலரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது விட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஆனால் யாருடைய காதலையும் நயன்தாரா ஏற்கவில்லை. எற்கனவே பட்ட அனுபவங்கள் மூலம் இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று சொல்லி விலகி போகிறாராம்.

விஜய் டுவிட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள்...?





நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ‘ஜில்லா’ படம் வெற்றி பெற்றது பற்றி உங்கள் கருத்து?

பதில்:– ‘ஜில்லா’ படம் பெரிய வெற்றி படமாக காரணமாக இருந்த எனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே:– தமிழ் படஉலகில் உடம்பை வருத்தி கடுமையாக உழைக்கும் நடிகர் யார்?

ப:– சீயான் விக்ரம்.

கே:– உங்கள் ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதே?

ப:– தயவுசெய்து இதுபோன்ற தகராறுகளில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற மோதல்கள் ஆரோக்கியமானது அல்ல.

கே:– ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:– உங்கள் வேலையை நன்றாக செய்யுங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கே:– மோகன்லாலுடன் நடித்தது பற்றி?

ப:– மோகன்லாலுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. மலையாள படமொன்றில் அவருடன் இணைந்து நடிக்க ஆசை.

கே:– இந்தி படத்தில் நடிப்பீர்களா?

ப:– நமக்கு எப்பவும் நம்ம நாடுதான்னா...

கே:– உங்களை எதிர்க்கும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள்?

ப:– அவர்களையும் நான் விரும்புகிறேன்.

இவ்வாறு விஜய் கூறினார்.

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?



மேக்-அப் பிரைமர் என்பது மேக்-அப் செய்வதற்கு முன் போடக்கூடியது. பொதுவாக இதனை மேக்-அப் வெகுநேரம் முகத்தில் தங்குவதற்காக போடுவார்கள். இது தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது.

 மேக்-அப் போடும் முன் இதை தடவுவதால், முகத்தின் தன்மை மேக்-அப்பிற்கு ஏற்றார் போல் மாறி, மேக்-அப் போட வசதியாக இருக்கும். இதன் மூலம் மேப்-அப் போட்டிருந்தாலும் இயற்கையான சருமத்தை போன்ற அமைப்பை பெற முடியும்.

 இதனால் முகத்திற்கு போடும் மேக்-அப் வெகு நேரத்திற்கு கலையாமல் இருப்பதுடன், மிகவும் அழகாகவும் காட்டும். மேலும் இந்த மேக்-அப் பிரைமர் போட்டால், முகத்தில் அதிக மேக்-அப் வழிவதை கட்டுப்படுத்தும். குறிப்பாக இதனை மேக்-அப் வெகுநேரம் தங்காத இடத்தில் தடவ வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தாடை, கண் இமைகள், உதடு மற்றும் முகத்தை சுற்றி இதை போட வேண்டும். எந்த வகையான மேக்-அப்பாக இருந்தாலும், போடும் முன்னர் முகம் சுத்தமாக இருப்பது அவசியம்.

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?

 * முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதிலும் சோப் அல்லாத ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

* பின் மென்மையான மற்றும் சுத்தமான துணியை வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.

 * அடுத்து ஈரப்பதம் தரும் க்ரீமை தடவி, சருமத்தில் அது காயும் வரை விட வேண்டும்.

 * காய்ந்தவுடன் பிரைமரை தடவ வேண்டும். அதிலும் முகத்தில் மேக்-அப் அதிக நேரம் தங்காத இடத்தில் கவனமாக பூச வேண்டும். கண் இமை, உதடு மற்றும் தாடை போன்ற இடங்களில் அதிக கவனம் கொண்டு பூசவும்.

* பிறகு முகம் முழுவதும் பூச வேண்டும். பிரைமரானது நன்கு முகத்தில் காய்ந்தவுடன், ஃபௌண்டேஷன் க்ரீம் (foundation cream) பூச வேண்டும். பிறகு பாருங்கள் நீங்கள் தேவதை தான்.

உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்...!



உலகில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்சித்திருப்பார்கள்.

இருப்பினும் எந்த பலனும் கிடைத்ததாக இருக்காது. ஆனால் தினமும் தேன் மற்றும் பட்டை நீரை குடித்து வந்தால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் பருமனானது குறைந்துவிடும் அதிலும் இதனை இரவு மற்றும் காலையில் குடித்து வர வேண்டும்.

இப்போது அந்த தேன் மற்றும் பட்டை நீரை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.

 உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர் .

தேவையான பொருட்கள்:

தேன் - 2 டீஸ்பூன்

 பட்டை - 1 டீஸ்பூன்

 தண்ணீர் - 1 கப்

செய்முறை:

 * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்க கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

 * பின் அதில் பட்டையை போட்டு, வெதுவெதுப்பாகும் வரை தனியாக மூடி வைக்க வேண்டும்.

 * நீரானது வெதுவெதுப்பானதும், அதில் தேன் சேர்த்து கலந்து, அதில் பாதியை இரவில் படுக்கும் முன்பும், மீதியை மூடி வைத்து, மறுநாள் காலையில் எழுந்தும் குடிக்க வேண்டும்.

குறிப்பு:
காலையில் குடிக்கும் போது அதனை சூடேற்ற வேண்டாம்.

ஆசிரியர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..?



நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.???

ஆசிரியர் பிள்ளைகளை கேள்விகள் கேட்டார்..

அக்னி.. நீ சொல்லு.. நமக்கு பால் எங்கேருந்து கிடைக்குது..?

மாடு புல்லைத் தின்று பால் கறக்கிறது. பால்காரர் அதை நமக்குத் தருகிறார்.

வெரி குட்..
மனோஜ் .. நீ சொல்லு.. மழை எப்படிக் கிடைக்கிறது..?

கடல் நீர் ஆவியாகிறது.. மரங்கள் வெளிய்யிடும் ஆக்சிஜனால் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு, மழை பொழிகிறது..

சுட்டி.. நீ சொல்லு.. நமக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது..?

மூதேவிப் பசங்க கிட்டேருந்து சார்..!!

மூதேவிப் பசங்களா..? என்ன சொல்றே..?

ஆமாம் சார்.. எப்போ கரண்ட் நின்னாலும் எங்கப்பா சொல்லுவார்..

"மூதேவிப் பசங்க.. கரண்டை நிறுத்திட்டானுக.. எப்போ விடுவானுகளோ..?"

ஆபிஸ் போகும் பெண்களெ...! உங்களுக்காக சில டிப்ஸ்...



அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்;

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்

"வாய் துர் நாற்றத்திற்கு பாய் சொல்லும் ‘ஆயில் புல்லிங்’....!



“என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை! நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்! அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர்.

நான் பேசத் தொடங்கியதும், அருகில் உட்காரமுடியாமல் சிலர் எழுந்து போய்விடுவார்கள். ‘நான் பேச ஆரம்பித்தவுடன் ஏன் அவர்கள் எழுந்து போகிறார்கள்’என்று காரணம் தெரியாமல் ஆரம்பத்தில் அவதிப்பட்டேன். பின்னர்தான் தெரிந்தது... ‘என்னுடைய வாயில் இருந்து வெளிவரும் நாற்றம்தான் அதற்குக் காரணம்’என்று.

நீண்டநேரம் பல் துலக்குவேன். அப்படியாவது, ‘வாயிலிருந்து வரும் துர்நாற்றம் போய்விடாதா?’ என்று நப்பாசை. ஆனால், அப்படியும் நாற்றம் போகவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் நண்பரை நான் சந்திக்க நேரிட்டது.

மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுபவர் ஆயிற்றே, அவரிடம் என் குறையைக் கூறினால், அதற்கு ஒரு விடிவு பிறக்கும் என்று எண்ணினேன்.

எனக்கு இருக்கும் வாய் துர்நாற்றம் பற்றி அவரிடம் கூறினேன். தாமதிக்காமல் சொன்னார்: ‘தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல் போவதை நீங்களே உணர்வீர்கள்’என்றார்.

அவர் கூறியதில், அப்போது எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தும், போகாத துர்நாற்றம், நல்லெண்ணெய்யால் எப்படி போகப் போகிறது என்று கிண்டலாக நினைத்தேன்.

இருந்தாலும், அதையும் செய்துதான் பார்த்து விடுவோமே என்று, மறுநாளில் இருந்தே, ‘ஆயில் புல்லிங்’செய்யத் தொடங்கினேன். பத்து நாட்களில் படிப்படியாக என்னுடைய வாய் துர்நாற்றம் இல்லாமல் போவதை நானே உணர்ந்தேன்.

பதினைந்து நாட்கள் கடந்தபிறகு, நூறு சதவீதம் துர்நாற்றம் மறைந்து விட்டிருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை! ‘நல்லெண்ணெய்க்கு இப்படியொரு மகத்தான மருத்துவ குணமா..?’

இப்போது நண்பர்கள் என்னுடன் அமர்ந்து, சிரித்த முகத்துடன் கலகலப்பாக உரையாடுகிறார்கள்.

‘வாயில் இருந்த துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று எல்லோரும் கேட்டார்கள்.

நான், ‘ஆயில் புல்லிங்’பற்றி சொன்னேன். அவர்கள் நம்பிக்கையில்லாமல் என்னைப் பார்த்தார்கள்.

‘நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், இப்போது முழுமையாக நம்புகிறேன். பலனை உண்மையாகக் கண்டபிறகுதான் நல்லெண்ணெய்யின் சிறப்பே எனக்குத் தெரிய ஆரம்பித்தது’என்றேன்.

இதற்கு இடையில், எனக்கு ஆலோசனை கூறிய நண்பர், மருத்துவக் கல்லூரி பேராசிரியரை ஒருநாள் உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். என் வாய் துர்நாற்றம் முழுமையாக பறந்தோடிவிட்ட செய்தியைக் கூறி, அதற்கு மூலகாரணமாக இருந்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன்.

சந்தோஷ முகத்துடன் என்னைப் பார்த்தார்... ‘நல்லெண்ணெய்யால் வாய் துர்நாற்றம் எப்படி இல்லாமல் போனது?’ என்று அவரிடமே கேட்டேன்.

அதற்கு, ‘பாக்டீரியாக்கள்தான் வாயில் துர்நாற்றம் உண்டாகக் காரணம். பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்தி, நல்லெண்ணெய்க்கு இருக்கிறது. நல்லெண்ணெய் இருக்கும் இடத்தில், பாக்டீரியாவால் உயிர் வாழமுடியாது.

நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து, துர்நாற்றம் இல்லாமலே போய்விடும்’என்றார்.

இப்படி, மிகக் குறைந்த செலவில் குணப்படுத்தக் கூடிய நல்லெண்ணெய்யின் சிறப்பு தெரியாமல், இவ்வளவு காலமும் இருந்திருக்கிறேனே!

எனக்கு நல்லெண்ணெய் வைத்தியத்தை அறிமுகம் செய்த பேராசிரிய நண்பருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறி முடித்த சுந்தர்ராஜன் முகத்தில் வாய்கொள்ள முடியாத அளவு சிரிப்பு ரேகை படர்ந்திருந்தது!

எலுமிச்ச பழச் சாறையும், புதினாச் சாறையும் சரிபாதியாக அரை லிட்டர் நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் உடையவர்கள் ‌கிரா‌ம்பை வா‌யி‌ல்போ‌ட்டு மெ‌ன்று வ‌ந்தா‌ல் அ‌ந்த தொ‌ல்லை‌யி‌லிரு‌ந்து ‌விடுபடலா‌ம்.

வாய் நாற்றத்தை போக்க எலுமிச்ச பழத்தை ஒரு தம்ளர் நீரில் பிழிந்து அதனுடன் சிறிது அளவு உப்பு கலந்து சாப்பிட்டு வரவும். அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தாலும் நல்லது.

"வாய் துர் நாற்றம்" உடையவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிறில் குறைந்தது நாலு_ட்ம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாயை உப்புகரைத்த நீரில் கொப்புளித்து சுத்தமாக_வைத்திருப்பதும், பற் குழிகளை பல் மருத்துவர்களிடம் சென்று அடைத்துகொள்வதும், தினம் இரண்டு முறை பல் துலக்குவதும் வாய் நாற்றத்தை தவிர்க்க உதவும்.

அமலாபாலின் - புது ஆசை....



சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக அமலாபால் தெரிவித்தார். அனுஷ்கா, தமன்னா போன்றோர் ராணி, இளவரசி வேடங்களில் நடிக்கின்றனர்.

நயன்தாராவும் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். சிலர் விலைமாது வேடத்தில் நடித்து விருதுகள் வாங்கியுள்ளனர்.

அமலாபாலுக்கு காதல் பட வாய்ப்புகளே கிட்டியுள்ளன. கதாநாயகர்களுடன் ‘டூயட்’ ஆடவே பயன்படுத்தப்பட்டு உள்ளார். இது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

அமலாபால் வீர சேகரன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சிந்து சமவெளி படத்தில் மாமனாரை காதலிக்கும் பெண்ணாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

‘மைனா’ படத்தின் வெற்றி அவரை பிரபலபடுத்தியது. தெய்வ திருமகன், காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், ‘தலைவா’ போன்ற படங்களில் நடித்தார்.

 தற்போது ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில், தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி படங்களில் நடிக்கிறார்.

அமலாபால் கூறும் போது, ‘கிராமத்து கதையம்சம் உள்ள படத்தில் நான் அறிமுகமானதால் அது போன்ற படவாய்ப்புகள் நிறைய வந்தன. ஒரே மாதிரி நடிக்க பிடிக்கவில்லை.

சரித்திர கதையம்சம் உள்ள படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது. அது போன்ற கேரக்டரை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்’ என்றார்.

நடிகை சுசித்ராசென் காலமானார்....



பழம்பெரும் நடிகை நடிகை சுசித்ரா சென் காலமானார்.

அவருக்கு வயது 82  கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

முதல்வர் மம்தாபானர்ஜி 7 முறை அவரை மருத்துவனையில்  சென்று பார்த்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 8.30 மணி அளவில் அவர் காலமானார்.

 இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் பெண் நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குள் வசைபாடாதீர்: அஜித், விஜய் ரசிகர்களுக்கு சேரன் அறிவுறுத்தல்...



 நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரது ரசிகர்கள் தங்களுக்குள் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது என்று இயக்குநர் சேரன் குறிப்பிட்டுள்ளார்.

வீரம், ஜில்லா படங்களையொட்டி அவர் தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட நிலைத்தகவல்:

"தலயா? தளபதியா?

அஜித்தா? விஜய்யா?

பொங்கல் போட்டியில யாருக்கு வெற்றி?

ஜில்லாவா? வீரமா?

இந்த ஆரோக்கியமான போட்டி சினிமா உலகத்துக்கு சம்பாரிச்சு தரப்போறது எத்தனையோ கோடிகள். முதல் இடம் இரண்டாம் இடம் தாண்டி ரெண்டு பேருமே தனக்காக உருவாக்கி வச்சுருக்க ரசிகர் கூட்டம் இவுங்க ரெண்டுபேரோட படங்களையும் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்காங்கன்ற நிலைமை தான் இவ்வளவு கோடிகளை திரையுலகத்துக்கு சம்பாரிச்சு தருது. ஒரு வகையில் இது ஆரோக்கியம்தான்.

ஆனாலும் அந்த சராசரி பாமர ரசிகன் இன்னும் எதிர்பார்க்கிறான் என்பதே உண்மை. அந்த எதிர்பார்ப்பை இரண்டு படங்களும் பூர்த்தி செய்ததா?

இந்தக் கேள்விகளை, அதற்கான பதிலை எப்ப்படி சொல்வது என தெரியாமல் இன்று நமது வலைதளங்கள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற எல்லா நெட்வொர்க்கிலும் ஒவ்வொருவரின் ரசிகர்களும் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது.

உங்களை போன்ற ரசிகர்களால்தான் அவர்கள் இருவரும் இந்த உயரம் போனார்கள். அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை எழுதினால் அதற்கு செவிசாய்க்க மாட்டார்களா? இருவருக்குமே அந்தப் பக்குவம் இருக்கிறது.

ஆகவே ரசிகர்களே... உங்கள் தேவை அவர்களிடம் என்ன என்பதை உணர்த்துவது தான் நாகரீகம். மாறாக, கிண்டல் செய்து எழுதுவதை மாற்றி இன்னும் அவர்களை உயரம் கொண்டுபோக வித்திடுங்கள். இதனால் உங்களுக்கு நல்ல படங்களும், திரையுலகுக்கு நிறைய வருமானமும், நல்ல சிந்தனை உள்ள புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கலாம்.

இவ்வாறு இயக்குநர் சேரன் குறிப்பிட்டுள்ளார்.

சவுரவ் கங்குலி , மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு : அரசியலில் ஈடுபட திட்டமா?



முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான சவுரவ் கங்குலி அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

அவர் மம்தாவை சந்தித்தது அரசியலில் ஈடுபடப்போவதற்கான அறிகுறி என அனைவரும் கருதிய வேளையில் மறுபடியும் அவர் இதை மறுத்துள்ளார்.

தான் ராஜர்ஹட் பகுதியில் சேட்டிலைட் பகுதியில் தொடங்கவுள்ள தனது பள்ளிக்கூட திட்டம் சம்பந்தமாக தான் பேசியதாகவும், மற்றபடி அரசியல் சம்பந்தமாக மம்தாவிடம் எதுவும் பேசவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அம்மாநில இளைஞர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருப் பிஸ்வாசும் கங்குலி பள்ளி சம்பந்தமாக தான் முதல்வரிடம் பேசியதாக தெரிவித்தார்.

மணிரத்னம், நாகார்ஜுனா - ரீ என்ட்ரி...



தெலுங்கு ஹீரோக்கள் மகேஷ்பாபு, நாகார்ஜுனா-- நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

கார்த்தி மகன் கவுதம் அறிமுகமான கடல் படத்தை அடுத்து மணிரத்னம் இந்திப் படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.

ஆனால், இப்போது தெலுங்கு ஹீரோக்களான மகேஷ் பாபு மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றி மணிரத்னம் தரப்பில் விசாரித்தபோது, ஆக்ஷன் கதையான இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. 

தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தமிழ் மற்றும் மலையாள முன்னணி நடிகர்களும் இதில் நடிக்க இருக்கிறார்கள் என்றனர். படத்துக்கு  தயாரிப்பாளர் இன்னும் முடிவாகவில்லை.

நாகார்ஜுனா நடிப்பில் இதயத்தை திருடாதே படத்தை மணிரத்னம் ஏற்கனவே இயக்கி இருந்தார்.

விஜய் மற்றும் மகேஷ்பாபு நடிப்பில், கல்கியின் பொன்னியின் செல்வனை ஏற்கனவே படமாக்க இருந்தார் மணிரத்னம். சில காரணங்களால் அது நின்றுபோனது குறிப்பிடத்தக்கது

நீண்ட காலத்திற்கு பின் கைகுலுக்கிக்கொண்ட ஹிந்தி நடிகை ...!



ஹிந்தி திரைப்பட துறையில் அரிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ரேகாவும், ஜெயாபச்சனும் சந்தித்து நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர்.

அமிதாப் பச்சன் திரைப்பட துறை வாழ்க்கையில் குவித்த வெற்றிகளை பாராட்டி அவரை கவுரவப்படுத்திய விழாவில் தான் இவ்விருவரும் சந்தித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

"லைப் ஓ.கே" திரை விருது விழங்கும் நிகழ்ச்சியில் ரேகா பங்கேற்று அதை ரசித்து பார்த்துகொண்டிருந்தபோது, அமிதாப், ஜெயாபச்சன் மற்றும் அபிஷேக் ஆகியோர் அங்கு வந்தனர். அபிஷேக் ஊடகத்துறையினருடனும், அமிதாப் விருந்தினர் ஒருவரிடமும் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயாபச்சன் எதேச்சையாக ரேகாவின் இருக்கைக்கு அருகே வந்தார். ரேகாவை பார்த்தவுடன் விலகிச் செல்லாமல் அவரை பார்த்து புன்னகைக்க அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்.

பின்னர் தனது இருக்கையிலிருந்து எழுந்த ரேகா ஜெயாவுடன் கைகுலுக்கியதுடன் இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அமிதாப்பும் ரேகாவும் இணைந்து நடித்த பல படங்கள் ஹிந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1981 ஆம் ஆண்டு வெளியான "சில்சிலா" படமே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாகும். இப்படத்தில் ஜெயாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ரெடியா...? நாசா அறிவிப்பு....



செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த விண்கலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் சோதனை ஓட்டம் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை இது தாங்கிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.

மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் இது உருவாகும்.

நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து இதுவரை எந்த விண்கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் முதல் விண்கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா தான் இப்போ செல்லப்பிள்ளை..!



வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகையாகி விட்டார். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதர்வாவுடன், ஈட்டிஜி.வி.பிரகாஷ் குமாருடன், பென்சில் உட்பட, 4 படங்களில் நடித்து வருகிறார்.

இதில், ஈட்டி படத்தில், முதன்முறையாக காமெடி காட்சிகளிலும் நடித்து உள்ளாராம். இந்த காமெடி காட்சிகளில், ஸ்ரீதிவ்யா வெளுத்து வாங்கியுள்ளாராம்.

மேலும், கோடம்பாக்கத்தில், இயக்குனர்கள் சொல்வதை கச்சிதமாக நடித்து முடித்து விட்டு, எந்தவித அலட்டலும், ஆடம்பரமும் இல்லாமல், அடக்கம் ஒடுக்கமாக இருக்கிறார், ஸ்ரீதிவ்யா. இதனால்,இயக்குனர்களின் செல்லப் பிள்ளையாகவும், அவர் உருவெடுத்து உள்ளார்.

ரூ.90 கோடியை தாண்டியது வீரம் வசூல்..?



அஜீத் நடித்த வீரம் திரைப்படம் ரிலீஸான ஆறு நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இது முந்தைய படத்தின் சாதனையான ஆரம்பம் வசூலை முந்திவிட்டதாக கூறப்படுகிறத்.

அஜீத், தமன்னா, விதார்த் நடித்த ‘வீரம்’ படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழில் மட்டும் இந்த படம் ரூ.7 கோடி வசூல் செய்தது. அதன்பின்னர் பொங்கல் விடுமுறை நாட்கள் என மொத்தம் நேற்று வரை உள்ள ஆறு நாட்களின் மொத்த வசூல் ரூ.40 கோடி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே ரூ.17.8 கோடி வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆரம்பம் படத்தின் வசூலைக்காட்டிலும் ரூ.6கோடி அதிகம் என கூறப்படுகிறது.

வீரம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.45 கோடி ஆகும்., இதன் தற்போதைய வசூல், இன்னும் எதிர்ப்பார்க்கப்படும் வசூல், சாட்டிலைட் உரிமை வசூல், மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு வசூல் என சேர்த்து மொத்தம் ரூ.,90 கோடி வசூலாகும் என கூறப்படுகிறது.

மேலும் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக வீரம் படம் கூடுதலாக அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கோவை விநியோகிஸ்தர் கூறினார். ஆரம்பம், வீரம் என தொடர்ந்து இரு வெற்றிகளை கொடுத்துள்ளதால் அஜீத் மிகவும் குஷியாக இருக்கிறார்.

தனது கால் ஆபரேஷனை கூட தள்ளிவைத்துவிட்டு அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை தரும் பெரிய சம்பளம்..!




பெயர்தான் சின்னத்திரையே தவிர அது நட்சத்திரங்களுக்கு கொடுக்கும் சம்பளம் ரொம்ப பெருசு. இந்தி உலகில் கோடிகணக்கில் சம்பளம் சர்வசாதாரணம். அதுவும் ரியாலிட்டி ஷோக்களுக்காக இந்தி நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் தலைசுற்ற வைக்கும்.

  • பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 5 கோடி. 
  • கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் வாங்கும் சம்பளம் 4 கோடி.
  •  மாதுரி தீட்சித்தின் சம்பளம் ஒரு கோடி, மல்லிகாஷெராவத்தின் சம்பளம் 80 லட்சம், 
  • அக்ஷய் குமார் வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை.

  • தமிழ் நாட்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்கு சூர்யா வாங்கியதுதான் அதிக பட்ச சம்பளம் எபிசோடுக்கு பத்து லட்சம்.

Thursday, January 16, 2014

குளிரிலும் மிளிர வேண்டுமா..?



இந்த ஆண்டு, குளிர் கொஞ்சம் அதிகம் தான். வீடு, அலுவலகம் என்று காலில் சக்கரம் கட்டி, சுற்றிக் கொண் டிருக்கும் பெண்களால், தங்களின் உடல் அழகைப் பராமரிக்க, நேரம் கிடைப்ப தில்லை. கிடைக்கும் நேரத்தில், வீட்டிலேயே அழகைப் பராமரித்து, பொலிவுடன் ஜொலிக்க...

 இதோ சில டிப்ஸ்!

பனிக் காற்று, சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கும். குறிப்பாக, கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி சுருக்கம் ஏற்படும். வறண்ட சருமமாக இருந்தால், அதிக திறனுள்ள மாய்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். இத சருமத்தில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை அடைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங் கள்.

மேக்கப் செய்யும் முன், இதனை, கண் மற்றும் உதடுகளை சுற்றி போடவும். இதனால், நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்கும்.

கண்களைச் சுற்றி சுருக்கம் ஏற்படாமல் இருக்க, சாதாரண பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தேய்த்து, மோதிர விரலால், ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பின், 15 நிமிடம் கழித்து, மென்மையான பஞ்சுத் துணியால் துடைத்து விடுங்கள்.

 இது, கரு வளையத்தை போக்க உதவும். வெள்ளரி ஜூஸ் மற்றும் தக்காளி ஜூஸ் இரண்டையும் சமமான அளவு கலந்து கண்களுக்குக் கீழே தேய்த்து, 15 நிமிடம் வைத்திருந்தால் போதும், கண்கள் கவிபாடும்.

பனி நிறைந்த காலைப் பொழுதும், குளிர்ந்த காற்றும் சருமத்தை சொரசொரப்பாக்கி விடும். இதிலிருந்து விடுபட, சருமத்திற்கு நீர்ச் சத்து அவசியம். ஆலிவ் ஆயில் அல்லது உங்கள் சருமத்திற்கு ஒத்துப் போகும் ஏதேனும் ஒரு எண்ணெயை, ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில், கல் உப்பை எண்ணெயில் முழுமையாக நிரம்பும் அளவிற்கு சேர்க்கவும். இந்த கலவையை கழுத்தில் இருந்து உடல் முழுவதும் பொலிவு இழந்த சருமத்தின் மீது, வட்ட வடிவமான அசைவில் தேய்க்கவும்.

இதனால், சருமத்தின் சொரசொரப்பு குறைவதோடு, நீர்ச் சத்தும் கிடைக்கும். வறண்ட சருமத்திற்கு கிரீம் கலந்த சோப் வகைகளே சிறந்தது. குளித்த பின், பாடி லோஷன் தேய்த்து, பின், பவுடர் உபயோகித்தால், சருமம் மிருதுவாக இருக்கும்.

உடலின் மொத்த பாரத்தையும் பாதங்கள் தாங்குவதால், அதிக அழுத்தங்களைச் சந்திக்கிறது. உடலின் முக்கிய நரம்பு மண்டலங்களுடன் இணையும் பிரஷர் பாயின்டுகளும் பாதங்களில் தான் இருக்கின்றன. இதனால், வாரம் ஒரு முறை, மசாஜ் செய்தால், இந்த அழுத்தத்திலிருந்து பாதங்கள் விடுபடும். ஒரு அகன்ற பாத்திரத்தில், வெது வெதுப்பான தண்ணீரில், "எக்சோட்டிக் பாத் கிரிஸ் டல்சை' கரைக்கவும்.

 இதில், 10 முதல் 15 மார்பிள் கல் துண்டுகளைப் போடவும். பாதங்களை இந்த தண்ணீரினுள் வைத்து, மார்பிள் கல்லில் குதிகால்களைத் மெதுவாகத் தேய்க்கவும். இது உங்கள் பாதங்களை மிருதுவாக வைப்பதோடு, பித்த வெடிப்புகளும் வராது. தினமும் பாடிலோஷன் பயன்படுத்துவது, அதிக பலனை தரும்.

வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்வதை விட, வேறு எந்த சிறந்த சிகிச்சையும் கூந்தலுக்கு இருக்க முடியாது. தேங்காய் எண்ணெயை சூடாக்கும் முன், அதில் கால் பாகம் ஆலிவ், பாதாம் அல்லது விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். வறண்ட வானிலை நிலவும் போது, இந்த ஆயில் மசாஜ், கூந்தலுக்கு தேவையான சத்தை தரும்.

நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்......?

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?

 
back to top