.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

வள்ளலார் வாழ்க்கை வரலாறு..!

வாழ வழிகாட்டும் வள்ளலார்!

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தின் வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில், கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் மருதூர் என்னும் சிறிய கிராமம் .
அந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமைய்யா. இவர் மனைவி பெயர் சின்னம்மையார்,திருவள்ளூர் மாவட்டத்தில் போன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்தவர் .

இராமையாவுக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவர் சின்னம்மையார் .முன் திருமணம் செய்த ஐந்து மனைவியருக்கும் குழந்தை பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே இராமைய்யா இவரை ஆறாவது மனைவியாக மனம் புரிந்தார் .
இராமையா மனைவி சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.

சிதம்பர தரிசனம் !

பிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச சென்று வழிபடுவது அக்கால வழக்கம் .அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் மாதம் இராமையா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார்கள் .சிதம்பரத்தில் உள்ள சிற்சபையில் நடராஜ பெருமானை வழிப்பட்ட பின் சிதம்பர சகசியம் என்னும் திரையை தூக்கி தரிசனம் காட்டப் பெற்றது .அனைவரும் தரிசித்தனர் .அந்த சமயம் ,

கைக் குழைந்தையாகிய இராமலிங்கமும் தரிசித்தார் .அனைவருக்கும் இரகசியமாய் இருந்த சிதம்பர ரகசியத்தை பார்த்த இராமலிங்கம் கல கல வென்று சிரித்தது..அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர் .சிதம்பரம் கோயில் பூசகராக இருந்த அப்பையா தீஷ்சதர் என்பவர் குழந்தை சிரிப்பு ஒலியைக் கண்டு கேட்டு ஆச்சரியப்பட்டு போயினர் .பல ஆண்டுகளாக இக்கோயிலில் நான் வேலைப் பார்க்கிறேன் பல குடும்பங்கள் குழைந்தைகளுடன்   தரிசனம் பார்க்க வந்துள்ளார்கள் .இப்படி ஒரு ஞான குழைந்தையை நான் பார்த்ததே இல்லை எனக்கருதி ,இராமையாவிடம் ,இக்குழைந்தையை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதின் பேரில், குருக்கள் வீட்டிற்கு,இராமையா குடும்பத்துடன் சென்றார் .

குருக்கள் வீட்டில் நடந்தது !

அப்பையா தீஷ்சதர் குழைந்தையை பெற்று கீழே படுக்க வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து குழைந்தை இராமலிங்கத்தை வணங்கினார் .அதைப் பார்த்த இராமையா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் அதிசியத்தினர்.பின் அவர்களுக்கு தேநீர் கொடுத்து மகிழ்ந்தார் .

இக் குழைந்தை சாதாரணக் குழைந்தை அல்ல கடவுளின் குழைந்தை அருள் ஞானக் குழைந்தை,இக்குழைந்தை என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு அடியேன் என்ன புண்ணியம் செய்தோனோ என்று மனம் உருகி ஆனந்தக் கண்ணீர் தழும்ப வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் அப்பைய தீஷ்சதர்.

ஆண்டவர் காட்சி கொடுத்தல் !

அனைவருக்கும் இரகசியமாக இருந்த சிதம்பர ரகசியத்தை ஐந்து மாதக் குழைந்தையாக இருந்த இராமலிங்க பெருமகனார்க்கு வெட்ட வெளியாக புலப்பட்டது. இறைவன் ரகசியத்தை வெளிப்படையாகக் காட்டி அருளினார் திரை தூக்கத் தாம் வெளியாகக் கண்ட அனுபவத்தை அவருடைய நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டில் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் அருள் விளக்க மாலை என்னும் தலைப்பில் அருட்பாடலாக எழுதி வெளிப்படுத்துகிறார் . 

அருள் விளக்க மாலை பாடல் ;--44,   

தாய் முதலோரோடு சிறு பருவத்திற் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
மேய் வகைமேற் காட்டாதே என்தனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய்யுருவாம் பொருளே
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே
தூய்வகை யோர் போற்ற மணி மன்றில் நடம் புரியுஞ்
ஜோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்து அருளே !

என்ற பாடல் மூலமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும்.இராமலிங்கப் பெருமானை சிறு வயதிலேயே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆட்கொண்டார் என்பதை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும். வள்ளலார் யார் என்பதை பின் வரும் வரலாற்றில் காண்போம் .தொடர்ந்து வரலாற்றைப் பார்ப்போம் .

குடும்பம் சென்னைக்கு செல்லுதல் !
ராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான  போன்னேரிக்குச சென்றார் சிலகாலம் பொன்னேரியில் வாழ்ந்த பின்பு தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார்.பின் புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற் பொழிவு களுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.

ஓதாது உணர்தல் !

இராமலிங்கப் பெருமானுக்கு பள்ளிப்பருவம் எய்தியதும் அண்ணன் சபாபதி தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார் .பின்னர் தான் பயின்ற ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார் .அடுத்து நடந்தது என்ன ?

ஆசிரியர் சபாபதி சக மாணவர்களுடன் அமரச் சொன்னார் .இராமலிங்கமோ தனியாக அமர்ந்து கொண்டார் அதை கவனித்த ஆசிரியர் கண்டு கொள்ளாதது போல் பாடம் நடத்த ஆரம்பித்தார் .அன்று இராமலிங்கத்திற்கு முதல் நாள் முதல் பாடமாகும் .ஆசிரியர் சொல்ல அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும் .ஆசிரியர் சொன்ன பாடல் .

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்

என்ற பாடலை ஆசிரியர் சொல்ல,இராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் சொன்னார்கள்.இராமலிங்கம் சொல்லாததைக் கவனித்த ஆசிரியர் ஏன் நீ சொல்ல வில்லை என்று கொஞ்சம் அதட்டலான குரலில் கேட்டார்.அதற்கு தயங்கி பதில் சொல்லாமல் இருந்தார் இராமலிங்கம் .மீண்டும் நான் கேட்கிறேன் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறாய் வாய் திறந்து பேசுடா என்று மிரட்டுவது போல் கேட்டார் ஆசிரியர் .

இராமலிங்கம் பதில் சொல்ல ஆரம்பித்தார் !

ஐயா நீங்கள் நடத்திய பாடத்தில் ஒவ்வொரு வரியிலும் அமங்கலமான வார்த்தையில் முடிகிறது ஆதலால் நான் அப்படி சொல்ல விருமப வில்லை என்று பதில் அளித்தார் .ஆசிரியருக்கு கோபம வந்து விட்டது .என்ன அருமையான கருத்து கலந்த வரிகள் உள்ள பாடலாகும் அதைப்போய் அமங்கலம் என்று சொல்கிறாய் ,அப்படியானால் நீ பெரிய அறிவாளியா ?உங்கள் அண்ணன் சபாபதி என்னிடம் பயின்று இன்று பெரிய புராண சொற் பொழிவாளராகி குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறார் .அவருடைய தம்பியாகிய நீ இப்படி குதற்கமாக பேசுகிறாயே என்று வினவியதுடன் .அப்படியானால் நீயே ஒரு பாடலை சொல் பார்ப்போம் என்று கிண்டலாக அதட்டி கேட்டார் .{இவை யாவும் மற்றவர்கள் எழுதி வைத்தவையாகும் அருட்பாவில் ஆதாரம் இல்லை }

இராமலிங்கம் மிகவும் மிகுந்த மரியாதையுடன் பாடலை பாட ஆரம்பித்தார் .அவர் பாடிய பாடல் வருமாறு ....

ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்

வேண்டும் வேண்டும் என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் .அதைக் கேட்ட ஆசிரியர் அதிசயித்து போயினர்.அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் அமைதி யாயினார்கள் .இராமலிங்கம் உனக்கு பாடம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை.ஏதோ சிறு பிள்ளை என்று மிரட்டி விட்டேன் என்னை மன்னித்துவிடு என்று குரல் கம்மிடவும் குறு நா உளறவும் படபடத்து பதில் உரைத்தார் .

இராமலிங்கரின் அறிவுத் தரத்தையும் ,பக்குவ நிலையையும் ,கந்தக் கோட்டஞ் சென்று கவி பாடும் திறமையையும் கண்ட மகா வித்துவான்,---இராமலிங்கம் கல்லாது உணரவும்,சொல்லாது உணரவும்,உணர்த்தவும் வல்லவர் என்று உணர்ந்து கல்விக் கற்பிப்பதை கைவிட்டு விட்டார்

அன்றிலிருந்து பள்ளிக்கு செல்லாமல் சென்னையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச சென்று கந்த கோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார் இளம் வயதிலேயே இறைவன் மீது பல பாடல்களை இயற்றிப் பாடினார்..

இராமலிங்கப் பெருமான் எந்த பள்ளியிலும் பயின்றது இல்லை!,எந்த ஆசிரியரிடத்தும் படித்தது இல்லை! .கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார் கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்!.கல்வியும் ,கேள்வியும் கருத்தும் இறைவனிடமே பெற்றதே தவிர வேறு யாரிடமும் கற்கவில்லை !,வேறு எந்த நூல்களிl இருந்தும் படித்து தெரிந்து கொள்ள வில்லை என்பதை உலக மக்கள் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். .

இறைவன் இராமளிங்கப் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினார்.குமாரப்பருவத்திலே என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்திற் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்வியை, என் உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று உரைநடைப் பகுதியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில் எழுதி வைத்துள்ளார் .மேலும்

மேலும் பாடலில் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!.

வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
மிகச் சிறிய பருவத்தே வியந்து நினை நமது
பெம்மான் என்று அடிகுறித்துப் பாடும் வகை புரிந்த
பெருமானே நான் செய்த பெருந் தவ மெய்ப்பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறு நெறியிற் சிறிதும்
செலுத்தாமல் பெரு நெறியிற் செலுத்திய நற்றுணையே
அம்மானே என்னாவிக் கான பெரும் பொருளே
அம்மலத் தென்னரசே என் அலங்கல் அணிந்தருளே !

சிறுவயதிலேயே இறைவன் தனக்கு,-- அருளை வியந்து அளித்த பெருமையைப் பற்றி போற்றி புகழ்ந்ததோடு அல்லாமல் ,இச்சிறியவனை,சிறு நெறியிற் செலுத்தாமல் --அனைவராலும் போற்றும் பெருநேறியில் செலுத்திய நற்றுணையே என போற்றி புகழ்கின்றார்

அடுத்து

கருவிற் கலந்த துணையே என் கனிவிற் கலந்த அமுதே என்
கண்ணிற் கலந்த வொளியே என் கருத்திற் கலந்த களிப்பே என்
உருவிற் கலந்த அழகே என் உயிரிற் கலந்த உறவே என்
உணவிற் கலந்து சுகமே என்னுடைய வொருமைப்பெருமானே
தெருவிற் கலந்து விளையாடும் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி யளித்த பெருங் கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருண இதுவென்றே
வாயே பறையாய் யறைகின்றேன் எந்தாய் கருணை வளத்தாலே !

என்னுடைய கருவிலே கலந்த கருணைக் கடல்,நீ --அதுமட்டும் அல்லாமல் ,கனிவிற் ,கண்ணில் ,கருத்தில்,உருவில்,உயிரில் ,உணர்வில் முதலிய அனைத்திலும் கலந்து என்னை பிரியாமல் ,உண்மை அறிந்துகொள்ளும் ''மெய்ஞ் ஞான சித்தி'' அளித்த பெருங்கருணை தேவே .உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுவென்றே --என்னுடைய வாயே பறையாய் {சத்தம் }யறைய வைத்து வேடிக்கைப் பார்க்கும் உம் பெருங் கருணை திறத்தை என்னென்று கருதி !என்னென்று துதிப்பேன் !என்கிறார் வள்ளார் .

சிறு வயதிலே பள்ளிக்கு செல்லாமல்,யாரிடமும் கல்விக் கற்காமல்,உலகில் உள்ள எல்லாவற்றையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றவராகும்.

தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி விளக்கி உள்ளார் !

மேலும் இடம்பத்தையும் ஆராவாரத்தையும் ,பெருமறைப்பையும்,போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது, பயிலுதற்கும்,அறிதற்கும்ம் மிகவும் லேசுடையதாய் ,சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருஅருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யாகிய தமிழ் மொழி யினிடத்தே மனதை பற்ற செய்து அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாட்டுவித்து அருளினீர் என்று தமிழ் மொழியின் சிறப்பினையும் தெளிவுப் படுத்துகிறார்

அச்சிறு பருவத்திலே ஜாதி ஆசாரம்,ஆசிரம ஆசாரம்,என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய் என்று அறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து ,அப்பருவம் ஏறுந்தோரும் எனது அறிவை விளக்கஞ் செய்து,செய்து என்னை மேனிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்க வைத்து அருளினீர் என்றும் .

உண்மைக கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதியர் !

வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்தானே ,அப்பருவத்திற்கு மிகவும் உரிய விரும்பும் இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்கு வித்து அருளினீர் என்றும்.

அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே ,எல்லா உயிர்களுக்கும் இன்பம் தருதற்கு அகத்தும் புறத்தும் விளங்கிகின்ற ''அருட்பெரும்ஜோதி உண்மைக கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய் அறிவை விளக்குவித்து அருளினீர் என்றும் .

வாலிபப் பருவம் தோன்றியபோதே சைவம் ,வைணவம் .சமணம்,பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு { கிருத்துவம்,இஸ்லாம் }பலப்பட விரிந்த அளவிறந்த சமயங்களும்,அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும் .கதிகளும்,தத்துவங்களும் தத்துவசித்தி விகற்பங்கள் என்றும் [அதாவது உண்மை அல்ல }அச்சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள் ,சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் ,உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆசாரங்களைச சிறிதும் அனுட்டியாமற் [பற்று வைக்காமல் }செய்வித்து அருளினீர் என்றும் .

அன்றியும் வேதாந்தம் ,சித்தாந்தம்,போதாந்தம் ,நாதாந்தம் ,யோகாந்தம்,கலாந்தம்,முதலாகப் பல பெயர்க் கொண்டு பலபட விரிந்த மதங்களும் ,மார்க்கங்களும்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய அனுபவத்தின் லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாமற் {அவைகளை பின்பற்றாமல் }தடை செய்வித்து அருளினீர் என்றும் தான் சிறுவயதில் எப்படி வாழ்ந்தேன் இறைவன் என்னை எப்படி கொண்டு சென்றார் என்பதை மிகத் தெளிவாக இமாலிங்கப் பெருமான் அவரே தன் வாழ்க்கை சரிதத்தை எழுதி வைத்துள்ளார் ,

அடுத்து அவரே சொல்லுவதை கேளுங்கள் .

அங்கனம் செய்வித்தும் அதற்கு மேல் என்னை --உலகியலில் உள்ள பொன்னாசை ,பெண்ணாசை,மண்ணாசை,முதலிய எவ்வித இச்சைகளிலும் என் அறிவை ஓர் அணுத்துணையும் பற்று வைக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி ,எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் வேண்டும் என்னும் கருணை நன் முயற்சியைப் பெருவித்துச சுத்த சனமார்க்கத் தனிநெறி ஒனறையே பற்றுவித்து எக்காலத்தும்,நாசமடையாத சுத்த தேகம் ,பிரணவதேகம் ,ஞானதேகம்,என்னும் சாகாக்கலை அனுபவ தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரும் வல்லபமும்,''கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,கருமசித்தி,யோகசித்தி,ஞானசித்தி, முதலிய எல்லாச சித்திகளும்,பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்கு திருவுளங் கொண்டு, ''அருட்பெரும்ஜோதியராகிய'' உண்மைக கடவுள் ,----நான் எவ்விதத்தும் ,அறிதற்கு அறிய உண்மைப் பேரறிவை அறிவிதத்தும் ,நான் கானபதற்கு அறிய உண்மைப் பெரும் காட்சிகளைக் காட்டுவித்தும்,நான் எவ்வித்த்தும் செய்தற்கு அறிய உண்மைப் பெருஞ் செயல்களைச செய்வித்தும் ,நான் எவ்விதத்தும் அடைதற்கு அறிய உண்மைப் பெரும் நன்மைகளை அடைவித்தும், நான் எவ்விதத்தும் அனுபவித்து அறிதற்கு அறிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவித்தும் ,எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்தில் இருந்து உயிரிற் கலந்து பெரும் தயவால் திரு நடம செய்து அருளுகின்றீர் ..
இங்கனம் செய்து அருள்கின்ற தேவriiரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன் .

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இராமலிங்கப் பெருமானை சிறுவயதிலேயே ஆட்கொண்டார் என்பதை யாரும் மறுக்க இயலாது .

அனைத்தும் இறைவனிடமே கேட்டுப் பெற்றதாக அவரே கூறும் பாடல்கள் !
ஆறாம் திருமுறையில் பாடிய பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம் !

ஏதும் ஒன்றும் அறியாப் பெதையாம் பருவத்தே என்னை யாட்கொண்டு எனை யுவந்தே
ஓதும இன்மொழியாற் பாடவே பணித்த ஒருவனே என் உயிர்த்துனைவா
வேதமும் பயனுமாகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான
போதகந் தருதற்கு இது தகுதருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே !

எனது உடலும் உயிரும் பொருளும் நின்ன தல்லவோ
எந்தாய் இதனைப் பெருக வென நான் இன்று சொல்லவோ
சின்ன வயதில் என்னை யாண்ட திறத்தை நினைக்குதே
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே !

ஆதியிலே எனை யாட்கொண்டு என் அறிவகத்தே யமர்ந்த
அப்பா என் அன்பே என் ஆருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம்
மிகப் பெரிய பருவமென வியந்து அருளி அருளாம்
ஜோதியிலே விழைவுறச செய்து இனிய மொழி மாலை
தொடுத்திடச செய்து அணிந்து கொண்ட துறையே சிற்பொதுவில்
நீதியிலே நிறைந்த நடத்தரசே என்றடியேன்
நிகழ்த்திய சொன்மாலையும் நீ நிகழ்த்தி யணிந்தருளே!

வெம்மாலைச சிறுவரோடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்து நினை நமது
பெம்மானென்று அடிக்குறித்துப் பாடும் வகை புரிந்த
பெருமானே நான் செய்த பெருந்தவ மெய்ப்பயனே
செம்மாந்தச சிறியேனைச சிறு நெறியிற் சிறிதுஞ்
செலுத்தாமற் பெரு நெறியிற் செலுத்திய நற்துணையே
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே
அம்பலத்தென் அரசே என் அலங்கல் அணிந்தருளே !

ஓதாது உணர்ந்திட வொளி யளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெரும்ஜோதி !

''கற்றதும் நின்னிடத்தே ,பின் கேட்டதும் நின்னிடத்தே ''

''பள்ளியில் பயிற்றாது எந்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்து ''

''ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீதான் '

''ஓதும் மறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி '

''ஓதி உணர்ந்தவர்கள் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்த்திய என் மெய் உறவாம் பொருளே '''
'
''ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் ''

எனபனப் போன்ற அகச்சான்றுகள் ஆறாம் திருமுறையில் குவிந்து கிடைக்கின்றன .இவை தெரியாமல் வள்ளலார் வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் அவரவர் கருத்துக்கு புலப்பட்டதை கண்டபடி எழுதி வைத்துள்ளார்கள் அருட்பாவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் ,மேலோட்டமாக படித்து விட்டு எழுதுவது முற்றிலும் தவறாகும்.வரலாறு எழுதுபவர்கள் எல்லாம் சமய வாதிகளாகவே உள்ளார்கள் .அவர்களுக்கு உண்மை விளங்காது.அதனால் முன்னுக்குப் பின் முரணாகவே எழுதுகிறார்கள் .

சாதி,சமயம் ,மதம் இனம் மொழி நாடு முதலிய எதிலும் பற்று இல்லாதவர்களுக்கு மட்டும்தான் திருஅருட்பாவின் கருத்துக்கள் உண்மையாக விளங்கும்.

அதேபோல் இராமலிங்கப் பெருமான் உலகியலில் எந்தப் பற்றும் இல்லாமல் இறைவனுடைய பற்றை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டார் என்பது அவர் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது. ..

சென்னை கந்தகோட்ட வழிபாடு!

கல்வி கற்க பள்ளிக்கு செல்லாத இராமலிங்கம் வீட்டிலும் தங்காமல் பள்ளிக்கும் செல்லாமல் நாள்தோறும் சென்னையில் உள்ள கந்த கோட்ட முருகப் பெருமானைப் பாடி வழிபடுவதை வழக்கமாக கொண்டார்கள். கந்தசாமிக் கோயில் என்று வழங்கப் பெற்ற அதனைக் கந்தக் கோட்டம் என வழங்கத் தொடங்கியவர் இராமலிங்கப் பெருமானாரே.

ஆடல செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்

அனைத்தும் இறைவனிடமே கேட்டுப் பெற்றதாக அவரே கூறும் பாடல்கள் !
ஒரு கட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.
பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

உணவு !

இராமலிங்கம் உணவைப்பற்றி எப்போதும் நினைத்ததில்லை ,பசி எனபது என்னவென்று தெரியாமல் இறைவன் மீது பற்றுக் கொண்டு தோத்திரம் செய்வதும் ,பாடல் இயற்றுவதுமே அவர் பெரும்பணியாகக் கொண்டார் .வீட்டில் உணவு இல்லாவிட்டாலும்,அவர் பசியை அறிந்து இறைவனே உணவு வழங்கி பசியைப் போக்கியுள்ளார் .

நான் பசித்த போதெல்லாம் தான் பசித்த தாகி
நல்லுணவு கொடுத்து என்னைச் செல்முற வளர்த்தே
ஊன் பசித்த விளைப்பொன்றும் தோற்றாதே வகையே
ஒள்ளிய தெள்ளமுதம் எனக்கு இங்கு வந்தளித்த வொளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வெனக்கே யாகியுற வரமளித்த பதியே
தேன் பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ் செய் யரசே என் சிறு மொழி ஏற்று அருளே !

என பல பாடல் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார் .இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே இராமலிங்கம் ,அவர்ப் பசியைப் போக்குவது இறைவன் கடமை அல்லவா ! ஆதலால் இறைவனே எக்காலத்தும் அவர் பசியைப் போக்கியுள்ளார் இருந்தாலும் தன்னுடைய அண்ணியார் அன்பில் கட்டுப்பட்டு வீட்டிற்கு வருகிறேன் என்று ஒப்புதல் அளித்தார் .
ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சி யளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

சொற்பொழிவு !

சென்னையில் மிகவும் பிரபலமானவர் சோமு என்பவராகும் ,தங்கம் வைரம் வியாபாரம் செய்யும் தொழில் உடையவர்,அவர் ஒவ்வொரு வருடமும் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பெரிய பெரிய வித்துவான்களை வரவழைத்து சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம்.

அந்த வருடம் இராமலிங்கம் அண்ணார் சபாபதியை புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.சபாபதி சொற்பொழிவு என்றால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு,அன்று உடல்நலம் குன்றியதால் ஒப்புக் கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்றைய தினம் சபாபதியின் சொற்ப் பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடி யிருந்தனர். அண்ணன் சொன்ன படியே,அண்ணாருடைய நிலைமையை சோமு ஐயா அவர்களிடம் எடுத்துரைத்தார்,வேண்டா வெறுப்பாக சம்மதித்து ஒப்புக் கொண்டார்.சபாபதி அவர்கள் வரவில்லை என்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சியை இழந்தனர்,கூட்டத்தில் சலசலப்பு காணப்பட்டது .

இராமலிங்கம் விழா மேடைக்கு வந்தார்.எல்லோரும் அதிசியமும் ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தார்கள் .

இராமலிங்கம் சேக்கிழார் பாடிய ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன்,நிலவுளாவிய நீர் மலிமேனியன் ,அலகில் சோதியன் அம்பலத்து ஆடுபவன் .அவன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் '' என்ற பாடலை மனமுருகப் பாடி அதற்கு விளக்கம் சொன்னார் .அவற்றைக் கேட்ட மக்கள் உணர்வின்றி மெய்சிலிர்த்துப் போனார்கள் .அதுதான் இராமலிங்கத்தின் கன்னி சொற்பொழிவாகும்.அதன்பின் அவரிடம்,--சோமு ஐயா அவர்களும் மற்றும் உள்ள பெரியவர்களும்,--மறுநாளும் நீங்களே வந்து ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்றும்,மற்றும் அங்கு கூடியிருந்தோர் அனைவரும் வெகுநேரம் வற்புறுத்தினர். ராமலிங்கமும் அதற்கு அண்ணாரைக் கேட்டு ஒப்புதல் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார் .

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

மறுநாள் காலையில் சோமு ஐயா அவர்கள் ,தன்னுடைய சவாரி வண்டியில் சபாபதி வீட்டிற்குச் சென்றார்.சாபாபதியைப் பார்த்து இன்று உன்னுடைய தம்பி இராமலிங்கத்தை சொற்பொழிவு செய்ய அனுப்பவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் .சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை .சரிங்க ஐயா அப்படியே அனுப்பி வைக்கிறேன் என்று ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்தார் .

தன்னுடைய மனைவி பாப்பாத்தியை அழைத்து ,இது என்ன அதிசம என்று ஒருவருக்கொருவர் பேசி அதிசயித்துப் போனார்கள் இராமலிங்கமா! என் தம்பி இராமலிங்கமா! --எனக்கு ஒன்றும் புரியவில்லை உனக்கு ஏதாவது புரிகிறதா தெரிகிறதா என்று தன மனைவியிடம் கேட்டார்.எனக்கு இராமலிங்கத்தைப் பற்றித் தெரியும் ஆனால் இப்படி இந்த அளவிற்கு தெரியாதுங்க என்று கண்களில் நீர் பெருக உணர்ச்சி வசப்பட்டவராக பதில் அளித்தார் .

மறுநாள் சொற்பொழிவு நிகழ்ச்சி !
ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்து வந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே
சென்று வழிபடுவது வழக்கமாகக் கொண்டார்.

வழிபடும் காலங்களில் கருத்தாழமுள்ள பக்திப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் பாடியும் எழுதியும் வைத்துள்ளார் .கருத்து வேறுபாடு இல்லாமல் அனைத்து தெய்வங்கள் பற்றியும் பாமாலை இயற்றி உள்ளார்,அவை அனைத்தும் மக்களுக்காக பாடியதாகும் .தான் பாடிய பாடல்கள் அனைத்தும் பக்தி பாடல்களாக இருந்தாலும்,உண்மையான தெய்வத்தை தேடிக்கொண்டே இருந்தேன்,இந்த சிலைகள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார் ..மாயை என்னும் இந்த உடம்பில் வாழ்ந்ததால் தத்துவ உருவங்களைப் பற்றி பாடல்பாட நேர்ந்தது .ஆன்மாவின் விழிப்பால் உண்மையான தெய்வத்தை தேடிக் கொண்டு உள்ளேன்.உலகில் அனைத்தையும் உன்னுடைய சாயையால்தான் பார்க்கிறேன் .என்பதை பதிவு செய்துள்ள் பாடில் இதோ ;--

மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல் உன்தன்னையே மதித்துன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே யல்லாற்
தலைவா வேறு எண்ணிய துண்டோ
தூய பொற்பாதம் அறிய நான் அறியேன்
துயர் இனிச் சிறிதும் இங்கு காற்றேன்
நாயகா வெனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவது உன்கடனே !

மேலும் பல வடிவங்கள் வண்ணங்கள் உடைய கடவுள்களின் உருவங்கள்ப் பற்றிப் பதிவு செய்துள்ள பாடலை பதிவு செய்துள்ளார் !

வண்ணம் வேறு எனினும் வடிவம் வேறு எனினும்
மன்னிய உண்மை யொன்று றென்றே
எண்ணிய தல்லாற் சச்சிதா னந்தத் திறையும்
வேறு எண்ணியது உண்டோ
அண்ணனின் பாதம் அறிய நான் அறியேன்
அஞர் இனிச் சிறிதும் இங்காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணை என்தன்னைத்
தெளிவித்துக் காப்பது உன்கடனே !

எனப் பாடல்கள் வாயிலாக இறைவன் உண்மையைத் தேடிக் கொண்டே உள்ளார் வள்ளலார் .எல்லாவற்றுக்கும் காரண காரிய மாக ஒன்று இருக்க வேண்டும் ,அதை எனக்கு தெரிய தெளிவுப் படுத்துவது ,மெய்ப்பொருளான உன்னுடைய கடமை கடனாகும் என்பதை ஆணை {சத்தியம் }வைத்து கேட்கும் ,அவருடைய தேடுதலை அறிய முடிகிறது.சிறுவதில் இருந்தே ஆன்மா விளக்கம் அடைய வேண்டும் ,ஆன்மாவின் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்னும்,''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை'' பேராசைப் பற்றியே தேடிக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .

உலகில் உள்ள அருளாளர்கள் யாரையும் வள்ளலார் பின் பற்றவில்லை ,வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் ''ஒருவர் அல்லர்''எனபதை ,அவர் பதிவு செய்துள்ள பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே !இறைவனே அவர் ஆனாமாவின் உள் ஒளியில் இருந்து இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

திருமணம் !
பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார்.

ஏன் திருமணம் செய்து கொண்டார் ? தன்னுடைய தாய் உலக வழக்கப்படி தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் தன்னுடைய கடமை தீர்ந்து விடும் எண்ணத்தில் செயல் படுகிறார் .உலக வாழ்க்கையில் விருப்பம் இல்லாத இராமலிங்கம் திருமணம் வேண்டாம் என்கிறார்.அனைவருடைய வற்புறுத்துதலின் பேரில் ஒப்புக் கொள்கிறார் எனபதைத்தான் நாம் படித்துள்ளோம் .

தன்னுடைய அக்காள் மகள் தனக்கோட்டி, "தன்னுடைய தாய் மாமன் வள்ளலாரைத் திருமணம் செய்து கொள்வதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் உள்ளார் என்பதை அறிந்து கொள்கிறார் வள்ளலார்.!தனக்கோட்டியின் குணம் இராமலிங்கத்திற்கு தெரியும் ! இராமலிங்கத்தின் குணம் தனக்கோட்டிக்குத் தெரியும் .ஆதலால் இருவரும் சமத்திக்கின்றனர்,உலக வழக்கபடி திருமணம் நடைபெறுகிறது .

முதல் இரவில் என்ன நடந்தது ?

இருவரும் உள்ளே சென்று அமைதியுடன் உட்கார்ந்து இருக்கிறார்கள் --பருவத்தின் தலைவாசலில் கால் வைத்திருக்கும் கன்னிப் பெண் தனக்கோடி எத்தனை ஆயிரம் ஆசைகளை செஞ்சிலே தேக்கிக் வைத்துக் கொண்டு இங்கே வந்து அமர்ந்திருப்பாள் என நினைக்கத் தோன்றும் .அவள் அமைதியாக அமர்ந்து இருக்கிறாள் .

இராமலிங்கம் பேச தொடங்குகிறார் !''தனக்கோடி'' யைப் பார்த்து .திருமணம் ஆன பெண்ணும் ,ஆணும் --உள்ளம் கலந்து ,உயிர்கலந்து ,பின் உடல்கலந்து மகிழ வேண்டும் என்பதற்கே இந்த முதல் எனற ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.ஆனால் நமக்காக உருவாக்கி உள்ள இந்த ''முதல் இரவு ''நீயும் நானும் தனிமையில் சந்தித்துப் பேசும் ''கடைசி இரவு ''என்பதை நீ அறிவாயா ?என்று கேட்கிறார் .

{அவள் அலறுவாள் !அதிர்ச்சி அடைந்து கண்ணீர் வடிப்பாள் !என்று எதிர்ப்பர்ப்போம் !} அவை எதுவும் நடைபெற வில்லை !

இராமலிங்கம் அறிவாயா ?என்று கேட்ட கேளிவிக்கு எல்லாம் எனக்குத் தெரியும் என்கிறார் தனக்கோடி,

மேலும் இராமலிங்கம் பேச்சைத் தொடங்குகிறார் ,--''தனக்கோடி ''நான் உனக்குத் தாலிக் கட்டியது கடவுளின் கட்டளை !காலத்தின் கட்டாயம் ! திருமணம் முடிந்தாலும் உன்னை மனைவியாகப் பார்க்க முடியவில்லை.!நான் வணங்கும் தெய்வமாக பார்க்கிறேன் ,என்னுடைய ஆன்மாவும் உன்னுடைய ஆன்மாவும் ஒரே தன்மை உள்ளதாக பார்க்கிறேன் ,நீ என்ன நினைக்கிறார் என்று கேட்கிறார் .

தனக்கோடி வாய் விட்டு சிரிக்கிறாள் !மகிழ்ச்சியோடு சிரிக்கிறாள் ! மேலும் பேசத் தொடங்குகிறார் ."'

''நீங்கள் ஆசைகளை வென்றவர் !....நான் ....ஆசைகளைக் கொன்றவள் !...என ஆசைகள் செத்து விட்டன ..! உங்களை நான் கடவுளாகக் கருதினேன் !இது யாருக்கும் தெரியாது ! எனக்கு மட்டும்தான் தெரியும் ! எப்படியும் உங்களை கணவனாக அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவிடமும் .பாட்டியிடமும் சொல்லி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன் ! அதன்படி நம்முடைய திருமணம் நடந்தது !.

இராமலிங்கம் பிரமை பிடித்தவராக, தனக்கோடி சொல்வதை மேலும் கேட்டுக் கொண்டு உள்ளார் !

''உங்களை முழுவதுமாக உரிமை கொண்டாட வேண்டும் எனற பேராசைதான் உங்கள் மேல் காதலாக மலர்ந்தது.இப்போதுதான் என உள்ளம் குளிர்ந்த்து.உங்களை என்னைத் தவிர வேறு யாரும் தொட்டுவிடக் கூடாது ,

''தனக்கோடி நீ...நீயா ...பேசுகிறாய் "'

''ஆமாம் தனக்கோடி தான் பேசுகிறேன்....முன்னைவிட இப்போது எனக்கு உயர்வாகத் தோன்றுகிறீர்கள் !..எல்லா ஆண்கள் போல் இந்த முதல் இரவில் நீங்கள் என்னைத் தொட்டுத் ...தழுவி ...உறவு கொண்டிருந்தால் நீங்கள் சராசரி மனிதனாகப் போயிருப்பீர்கள் ,உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் .

''சிற்றின்ப ஆசையை வேறு அறுத்து ...ஆனடவனின் பேரின்ப வீடு நோக்கி பெரும் பயணம் போகும் உங்களுக்கு நான் தடையாக நிற்கமாட்டேன்!என்னை ஆட்கொண்ட தெய்வம் நீங்கள் ..இனி உங்கள் வழியே என்வழி !என்னை வாழ்த்தி வரம் அருளுங்கள் ! என்று இராமலிங்கம் காலில் விழுந்து வழிபடுகிறாள் தனக்கோடி அம்மையார் !

இராமலிங்கம் கண்களுக்கு தனக்கோடி வடியுடை நாயகியாக,சரஸ்வதியாக,பார்வதியாக மகாலஷ்மியாக ,அருள் தெய்வமாக காட்சித் தருகிறார் .''தாயே'' என்று கண்ணீரோடு கரம் குவிக்கிறார் .

தன்னை இராமலிங்கம் வணங்குவதை விரும்பாத தனக்கோடி ....

"'சுவாமீ !'' என்று இராமலிங்கம் கூம்பிய கரங்களைத் தொடுகிறார் !

உடனே..... அவர் ஸ்பரிசம் பட்டவுடனே அருள் வந்தவள் போல் ஆகிறாள் .இருவருடைய கண்களிலும் ஒளி பிரகாசம் தோன்றுகிறது .

இராமலிங்கத்தின் உடலில் ஏறப்பட்ட ஒளி தனக்கோடியின் கைவழியாக அவள் மேனியிலும் பரவுகிறது..இருவரும் ஒன்றும் புரியாமல் திகைத்து போயினர் .இதுவே முதல் இரவில் நடந்த செயலாகும்.{இதன் விபரங்கள் முழுவதும் நான் அறிந்த வள்ளலார் எனற தலைப்பில் எழுதி வரும் வலைபூவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் }

தனக்கோடி அம்மையார், இராமலிங்கத்தின் அருள் பயணத்திற்கு எந்த தடையும் வராமல்,மன மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கிறார் .தனக்கோடி இராமலிங்கத்தின் கரம் பட்டவுடனே பிறவிப் பயனை அடைந்து விடுகிறார் .[தனக்கோடி புண்ணியம் செய்த ஆன்மாவாகும் }

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;;--

முனித்த வெவ் வினையோ நின்னருட் செயலோ
தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி யொருசார் மடந்தையர் தமக்குள்
ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக்
கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தன நினைக்குந் தோறும் உள்ளுடைந்தேன்
பகர்வதென் னெந்தை நீ யறிவாய் !

என்பதன் மூலம் விளக்கம் அளிக்கிறார் {வள்ளலார் } ஒரு பெண்ணைத் தொட்டுள்ளேன் கலப்புக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858ஆம் ஆண்டு சென்னை யிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.

அங்கே அவரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் ஊரில், தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப் பட்ட ராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார்.

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண் கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக் கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பி வைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப் படுத்தி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார்.

அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும் போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!

கருங்குழியில் தங்கி யிருந்தபோது 1865 ஆம் ஆண்டு ராமலிங்கம் "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்" என்று மாற்றியமைத்தார்.

 இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர் அறிவித்தவை, மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை:

கடவுள் ஒருவரே.

கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.

சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.

மாமிச உணவை உண்ணக்கூடாது.

ஜாதி, மத வேறுபாடு கூடாது.

பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.

பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்பும் மாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் வேண்டாம் !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேம்டாம் !

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.!

வேதம் ஆகமம் ,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம் !அதில் உண்மையை சொல்ல வில்லை !

பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங் களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த ராமலிங்க அடிகள், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.

வள்ளலார் பிறந்த இடம்

கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867--ஆம் ஆண்டு, மே மாதம் 23{வைகாசி மாதம் பதினொன்றாம் தேதி }ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே Ôசமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலைÕ எனப் பெயர் மாற்றம் செய்தார்.

இந்தத் தருமச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி, மத, மொழி, இன, நிறம் நாடு,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்கிறது.

ராமலிங்க அடிகள் Ôவள்ளலார்Õ என அழைக்கப் படலானார். வேட்டவலம் ஜமீன்தாரான அருணாசல வசந்த கிருஷ்ண வாணாதிராய அப்பாசாமி பண்டாரியார் (கொஞ்சம் நீளமான பெயர்தான்!) என்பவருக்கு இரு மனைவியர்.

வள்ளலார் தண்ணீரால் விளக்கேற்றிய வீடு...

ஒருவரை நோயும் இன்னொருவரைப் பேயும் பிடித்துத் துயரப்படுத்தி வந்தன. பல்வேறு மருந்து, மந்திர பூஜைகளுக்குப் பிறகு கடைசியாக வள்ளலார் வேண்டி அழைக்கப்பட்டார்.
வேட்டவலம் ஜமீன்தார் இல்லத்தில் வள்ளலார் அடி வைத்ததும் பேய் விலகியது. அவர் தம் திருக்கரத்தால் மருந்து அளித்ததும் நோய் இறங்கியது. இதன்பிறகு, வேட்டவலம் அம்மன் கோயிலில், வள்ளலார் சொல்படி உயிர்ப்பலி நிறுத்தப்பட்டு, பால் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரைச் சுற்றிக் கூட்டம் பெருகியது. தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிலிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்களாக உபயோகப் படாமல் இருந்துவந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். தாம் தங்கிய அந்த இடத்துக்கு Ôசித்தி வளாகத் திருமாளிகைÕ என்றுபெயர் சூட்டினார்.

தண்ணீரால் விளக்கேற்றிய இடம் இதுதான் (வீட்டின் உள்ளே)

அங்கேஅவர் அடிக்கடி பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் தேகத்தை அக்னிதேகமாக்கி வந்தார்.

இறைவனை ஒளி வடிவாகப் போற்றிய வள்ளலார், சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஓர் ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் வருடம் அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை’ என்று பெயர் சூட்டினார்.

கல்பட்டு ஐயா திருச்சந்நிதி 25.1.1872, தை மாதம் 13|ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது.

20.10.1873, செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு சித்திவளாகத் திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு நீண்ட அருளுரை வழங்கினார் வள்ளலார். அந்த அருளுரையே ‘பேருபதேசம்’ என்று சொல்லப்படுகிறது.

கொடியேற்றியதற்கு அடுத்த கார்த்திகை மாதம், திருவண்ணாமலை தீபத் திருநாளில், தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கைச் சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார்.

மக்களிடம் தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொல்லிவிட்டு, Ôஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்கு கிறபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் கண்டு ஆராதியுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்Õ என்று செய்தி அளித்தார்.

1874-ஆம் வருடம் தை மாதம் 19|ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்களான தொழுவூர் வேலாயுதமும்,மற்ற தொண்டகர்களும் மூடப்பட்ட அறையின் வெளிப்புற கதவைப் பூட்டினார்கள்.

அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல், அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

சத்திய ஞானசபை உலகில் வேறெங்கிலும் இல்லாத தனிப்பெரும் அமைப்பு இது. ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் வந்து பிரார்த்தனை செய்யத் தகுந்த இடம் இது. எண்கோண வடிவிலான இந்தக் கட்டடத்தை வள்ளலாரே வடிவமைத்தார்.

மையத்தில் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபமும் அதன்மீது பன்னிருகால் மண்டபமும், ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. நாற்கால் மண்டபத்தின் மையத்தில் தான் ஆண்டவர் ஜோதி வடிவில் இருக்கிறார்.பன்னிருகால் மண்டபத்தில் ஒரு சுற்றுப் பிராகாரமும் பக்தர்கள் உட்கார்ந்து ஆண்டவனைத்வள்ளலார் நினைவிடம் மருதூர்...

இந்த முறையைப் பின்பற்றி, வாழைக் கிழங்கின் சாறில் ஊறவைத்து, நிழலில் காயவைத்த மிளகை, அதன்பின் இளநீரில் மூன்று நாள், கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் மூன்று நாள், பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் மூன்று நாள், பசுங்கோமயத்தில் மூன்று நாள், பசும்பாலில் மூன்று நாள் எனத் தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் காயவைத்து, தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தினம் காலையில் ஐந்து மிளகுகளை உட்கொண்டால் வலுவான, திடமான சரீரம் அமையும்.

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை

1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.

2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங் ளையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்கு களையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.

3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக் கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.

5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.

6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக் கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக் கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப் படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.

9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரா அன்னங்களை அடிக்கடி சாப்பிடக் கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.

10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

11. பருப்பு வகைகளில் துவரம் பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.

13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.

14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.

15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். தோத்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவ காரங்களைப் பற்றிப் பேசலாம்.

16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.
17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக் கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.

18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது |

20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப் படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.

21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்கக்கூடாது.

22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.

24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.

25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.

26. புகை, கஞ்சா, கள், சாராயம்,மாமிசம் போன்றவை கூடாது.

27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.

வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலக மெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன.

 மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:

"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."

பொன்னான மண்! பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு. அம் முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையும் இழந்தார்.

ஒரு நாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க அடிகளார். சென்றார். அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச் சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையை யெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறைய தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்தது. தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

வள்ளலார் சொன்னார்: இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான். ஆனால் ஒன்றே ஒன்று, மண்ணாசை, பொன்னாசை,பெண்ணாசை அறவே அற்ற வர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும் என்றார் .

நீங்கள் இதுவரையில் சாப்பிடாத ஒரு உணவு பதார்த்தம் உங்கள் முன் இருக்கிறது. அதன் ருசியை அனுபவிக்க வேண்டும், எப்படியாவது அதை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை உங்கள் உள் மனதிற்குள் எழும்புகிறது. இது இயல்பு. அந்த பதார்த்தத்தை நீங்கள் வாயில் போட்டு உண்ணும் வரையில் அதன் ருசி உங்களுக்குத் தெரியாது. அதுவரையில் அதன் மீதிருக்கும் ஆசை கூடிக்கொண்டு போகுமே தவிர சற்றும் குறையாது.
அதேபோல் இறைவன் நமக்கு பிடித்த மானவராகவே இருக்கிறார்.

 அவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதால் மட்டும் நாம் அவரை அடைந்துவிட முடியாது. அவரை நாம் இந்திரியங்கள்,கரணங்கள்,ஜீவனைக் கடந்து ஆன்மாவில்,மனதை வைத்து, அனுபவித்து மகிழ்ந்தால் தான் இது சாத்தியமாகும்.ஆன்மாவில் இருக்கும் அருள் அமுதம் சுரந்து ,அதை அனுபவித்தால் தான் இறைவனுடைய சுவை என்ன என்பதை அறிய முடியும். எனவே, இறைவனை அடையவேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் செயல்படுங்கள். அவர் மீது வைத்திருக்கும் ஆசையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

இறைவன் உருவமாக இல்லாமல், ஒளி வடிவில்தான் அருள் செய்கிறான். மேல் உலகம், கீழ் உலகம், நடு உலகம்,என அளவிடமுடியாத அண்டங்கள் உள்ள அனைத்து உலகங்களிலும் நிறைந்திருந்து,அருள் விளக்கமாக அவர் அசைந்தாடுகின்ற,அனைத்தையும் ஆட்டுவிக்கின்ற ''அருட்பெரும்ஜோதி கடவுள்'' ஒருவரே யாகும்.என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார் .
வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்!

அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தமக்கு அறிவித்த வண்ணம் ,....உத்தரஞான் சித்திபுரம் என்றும் ,உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளால் ஆக்கச் சிறப்புப் பெயர்களும் ,பார்வதி புரமென்றும்,''வடலூரென்றும்'' உலகியலாற் குறிக்கப் பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியின் இடத்தே ,இயற்கை விளக்க நிறைவாகி உள்ள .ஓர் சுத்த சிவானுபவ ஞான வெளியில் ''சத்திய ஞானசபை ''..அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கட்டளைப்படி நிறுவுகிறார் .

இது ஒரு கோயில் அல்ல !இறைவன் வந்து அமர்ந்து உலக மக்களுக்கு அருளை வழங்கும் ,''ஞான சிங்காதன பீடமாகும் '',இங்கே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒளியாக வீற்று யிருக்கின்றார் என்பதை விளக்கும்,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான'' சபையாகும்.

ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் சிற்சபையாகும்,ஆதாவது ஆன்மா இருக்கும் இடமாகும்.--நமது தலைபாகமாகும் .என்பதை வள்ளலார் விளக்கியுள்ளார் .ஆன்மாவை அறிந்தவர்கள் இறைவனை அறியலாம் ,இறைவனுடைய அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம் என்பது வள்ளலார் முக்கிய கொள்கையாகும்,மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்

ஆன்மாவும் ஒளியாக உள்ளது ! இறைவனும் ஒளியாக உள்ளார் !ஒளியும் ஒளியும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக ...ஒளிக் கடவுளான உண்மைக் கடவுளை ,உலக மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதற்க்காக தோற்றுவிக்கப் பட்டதுதான்,''சத்திய ஞானசபை ''யாகும் .

''சத்திய ஞான சபை '' என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் என்று பறை சாற்றுகின்றார் வள்ளலார் .நான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் பேராசையாகும்.

பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
ஜோதி யளித்து என்னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே !

நான் அடைந்த பேரின்பத்தை இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் பெற வேண்டும் ,என்று இறைவனிடம் உலக உயிர்களுக்காக வேண்டுகிறார் .

ஒளியாகிய ஜோதியில் ஐக்கியமாகி இறைவன் இருக்கிறான்.-- இந்த உண்மையை தெரிந்துகொண்டு அந்த ஜோதியையே உண்மைப் பிதாவாக எண்ணி வழிபடுங்கள். தன்னை ஜோதி வடிவினனாக வழிபடு வதைத்தான் இறைவனும் விரும்புகிறான். — வள்ளலார் தைப்பூசம் வள்ளலார் சித்தியடைந்த நாள்
1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்குச் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்.

25 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள சியான் விக்ரம்..!



பாலாவின் சேது திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டி, அதன் பிறகாக விருதுகளையும், ரசிகர்களையும் குவித்த சியான் விக்ரம் திரைத்துறையில் தனது இருபத்தைந்தாவது வருடத்தில் காலடி எடுத்துவைத்துள்ளார். சியான் விக்ரம் தனது நடிப்பாற்றலால் தேசிய
விருதுகளையும், தமிழக அரசின் விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

நடிகர் விக்ரமை சியான் விக்ரமாக அறிமுகம் செய்தது பாலாவின் சேது திரைப்படமாகும். அதற்கு முன்பே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்
சேது திரைப்படமே விக்ரமின் திரைப் பயணத்தைத் திசைதிருப்பியது எனலாம். அப்படத்திற்குப் பிறகாக அவர் தமிழ் சினிமாவில் மிக முக்கிய ஹீரோவாக உயர்ந்தார். அவரின் தில், தூள், சாமி போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததுடன் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் பலமடங்காக மாற்றியது.

இயக்குனர் ஷங்கரின் அந்நியன் திரைப்படம் இவரின் நடிப்பாற்றலை மேலும் மெருகேற்றியது. அத்திரைப்படத்தில் ஒரே சமயத்தில் மூன்று கதாபாத்திரமாக மாறி மாறி நடித்தது ரசிகர்களாலும், இதர நடிகர்களாலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

சியான் விக்ரம் தற்பொழுது மீண்டும் இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும்
நிறைவுற்றிருக்கும் நிலையில் விரைவில் இப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் ..!



மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் 

அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 5-வது இடத்தையும் பிடித்தனர்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' நாளிதழ் சார்பில் 'யுகவ்' என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர் பற்றி கருத்து கணிப்பு நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

30 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில், சச்சின் (5), பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி (7), பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (9), குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் (10) சமூக சேவகர் அண்ணா ஹசாரே (14) டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் (18), தொழிலதிபர் ரத்தன் டாடா (30) ஆகிய 7 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பில் கேட்சுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 2-வது இடத்திலும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் 3-வது இடத்திலும் உள்ளனர். போப் பிரான்சிஸ் (4), சீன அதிபர் ஜி ஜின்பிங் (6), தலாய் லாமா (13), அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட் (8) உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.

ராணி எலிசபெத் (17), ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி (19), அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினி ஓபரா வின்பிரே (20), ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (26), ஹிலாரி கிளின்டன் (27) மற்றும் சீன பாடகர் பெங் லியுவான் (28) ஆகிய 6 பெண்களும் இதில் இடம் பிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இப்பட்டியலில் டெண்டுல்கர் மட்டுமல்லாது, கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி (15), கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான் (21), கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ (22), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (12) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தனி பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை எடுத்துக் கொண் டால் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஒபாமா, மோடி, பில் கேட்ஸ், அமிதாப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

கோல்டன் குளோப் விருதுகள் - சிறந்த நடிகர் '' டிகாப்ரியோ ''



கோல்டன் குளோப் விருதுகள் - சிறந்த நடிகர் '' டிகாப்ரியோ ''

ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சின்னதிரை படைப்புகளுக்காக வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்து முடிந்தது. லியார்னடோ டிகாப்ரியோ சிறந்த நடிகராகவும், அமெரிக்கன் ஹஸல் சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கோல்டன் குளோபில் விருது பெற்றவர்களுக்கு ஆஸ்கரில் விருது பெறவும் வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்து நிலவுவதால், ஆஸ்கரைப் போலவே, ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் விருதுகளும் சினிமா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கும்.

 இந்த வருடத்திற்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடந்தது.இதுவரை ஒன்பது முறை கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ, இரண்டாவது முறையாக, வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருதினைத் தட்டிச் சென்றார்.

காமெடி மியூசிக்கல் வகையில் சிறந்த திரைப்படமாக அமெரிக்கன் ஹஸல் திரைப்படமும், டிராமா வகையில் சிறந்த படமாக 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருதை, உலகம் முழுவது வெற்றிகரமாக ஓடி, விமர்சகர்கள் பாராட்டையும் பெற்ற கிராவிட்டி படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸோ காரன் பெற்றர்.

சென்ற வருடம் கோல்டன் குளோபில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற ஜெனிஃபர் லாரன்ஸ், இந்த முறை சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.


முழு விருது விவரங்கள் பின்வருமாறு:
  • சிறந்த திரைப்படம் (டிராமா) - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்
  • சிறந்த திரைப்படம் (காமெடி/மியூசிக்கல்) - அமெரிக்கன் ஹஸல்
  •  சிறந்த நடிகர் (டிராமா) - மேத்யூ மெக்கானஹே (டாலஸ் பையர்ஸ் க்ளப்
  •  சிறந்த நடிகர் (காமெடி/மியூசிக்கல்) - லியார்னடோ டிகாப்ரியோ (வொல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்)
  • சிறந்த நடிகை (டிராமா) - கேட் ப்ளான்செட் (ப்ளூ ஜாஸ்மின்)
  • சிறந்த நடிகை (காமெடி/மியூசிக்கல்) - ஏமி ஆடம்ஸ் (அமெரிக்கன் ஹஸல்)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன்
  • சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம் - தி கிரேட் பியூட்டி (இத்தாலி)
  •  சிறந்த உறுதுணை நடிகர் - ஜாரெட் லிடோ (டாலஸ் பையர்ஸ் க்ளப்)
  •  சிறந்த உறுதுணை நடிகை - ஜெனிஃபர் லாரன்ஸ் (அமெரிக்கன் ஹஸல்)
  •  சிறந்த இயக்குநர் - அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி)

அனிருத் மீது ஒய் திஸ் கொலவெறி..?



இளம் இசையமைப்பாளரான அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றன.

ஒய் திஸ் கொலவெறி பாடலின் மூலம் உலகையே ஆட்டம்போட வைத்த இசையமைப்பாளர் அனிருத். இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்துவரும் இவர் மீது மோசடிப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் பரவிவருகின்றன.

காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி மோகன் தற்பொழுது இயக்கிவரும் வாய் மூடி பேசவும் திரைப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழ்து இப்படத்திற்கு ராகவேந்திரா என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் அவர் இப்படத்திற்கு இசையமைக்கவில்லை என்றும், முன்பணத்தைத் திரும்பப் பெற்றுத்தரக் கோரியும் இப்படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன.

வாய் மூடி பேசவும் திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிவருகிறது. தல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர்.

கம்பியில்லாமல் மின் இணைப்பு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...!



கம்பியில்லா முறையில் மின் சாதனங்களுக்கு மின் இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின் னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.

 இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.

மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும்.

செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங் களுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

Wednesday, January 15, 2014

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்..!



சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும்.

உங்கள் துணிகளை தொழில் ரீதியான சலவைகாரர்களிடம் கொடுத்தும் கூட சலவை செய்யலாம். ஆனால் அதற்கு அதிக அளவில் செலவாகும். ஏன் நீங்களே எளிய முறைகளை பின்பற்றி சலவை செய்து, சலவை செலவுகளை குறைக்க கூடாது? கண்டிப்பாக இதற்கு சற்று நேரத்தை நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும். ஆனால் வேலை முடிந்து விட்டால் உங்களை நினைத்து நீங்களே பெருமை அடைவீர்கள். மேலும் உங்கள் துணிகளும் கூட தூய்மையாகவும் நற்பதமாகவும் விளங்கும்.

 துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்..!!!

இந்த மிகப்பெரிய வேலையை செய்து முடிக்க பல வழிகள் இருக்கிறது. உங்கள் தேவைக்கு எது வசதியாக உள்ளதோ அந்த வழிமுறையை நீங்கள் உங்கள் அனுபவத்தில் தேர்ந்தெடுத்து விடலாம். நாங்கள் இங்கே உங்களுக்கு சொல்லப்போவது ஒன்றும் ராக்கெட் செய்யும் வித்தையல்ல. சொல்லப்போனால், எளிய முறையில் சிறப்பாக சலவை செய்ய சில அடிப்படை வழிகளே இவைகள். சிறப்பாக செயல்படாவிட்டால் எளிய முறையை பின்பற்றி பயந்தான் என்ன?

 வாஷிங் மெஷின் (சலவை இயந்திரம்)

சலவை செய்ய சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்குகிறது வாஷிங் மெஷின். இது உங்கள் நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற டென்ஷன் மற்றும் மன உளைச்சலை நீக்கும். சந்தையில் பல வகையான வாஷிங் மெஷின் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், டாப் லோட், ஃப்ரண்ட் லோட், ஆட்டோமாட்டிக் (தானியங்கி), செமி ஆட்டோமாட்டிக் (பகுதித் தானியங்கி), சிங்கிள் டப் மற்றும் ட்வின் டப்.

 லேபிலை படியுங்கள்

ஆடையை பராமரிக்க அதனுடன் சேர்ந்து வரும் பராமரிப்பு லேபிலை படிக்க தவற விடாதீர்கள். பொக்கிஷமான உங்கள் ஆடைகளை பற்றிய முக்கிய தகவல்களை அது வைத்திருக்கும். உங்கள் ஆடை நல்ல தரத்துடன் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால், அதில் துவைப்பதற்கு கொடுத்திருக்கும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுங்கள். இல்லையென்றால் தவறான தண்ணீர் வெப்ப நிலை அல்லது தவறான சோப்பு தூளால் உங்கள் ஆடைகள் பாழாகி விடும்.

வகைப்படுத்துங்கள்

ஒரு முறை துவைக்கப் போகும் போது அதில் நிறம், துணி வகை மற்றும் பயன்பாட்டு வகை என பல வகையான ஆடைகள் கலந்திருக்கும். உங்கள் சலவையை சுலபமாக்க வேண்டுமானால் உங்கள் ஆடைகளை கண்டிப்பாக வகைப்படுத்த வேண்டும். வெண்ணிற ஆடைகளை பிற நிற ஆடைகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். முக்கியமாகவும் முதன்மையாகவும் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இது. அதே போல் மென்மையான ஆடைகளை எல்லாம் தனியாக துவைக்க வேண்டும்.

 கறைகள்

 சில நேரங்களில், முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில், கையாளுவதற்கு கடினமாக இருக்கும் கறைகள் உண்டாகும். உங்கள் சலவையை சுலபமாக்க, கரையை நீக்கும் பொருட்களின் பட்டியலை எப்போதும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பட்டியலில் அடிப்படியான பொருட்களாக வினீகர், பேக்கிங் சோடா அல்லது கறைகளை அகற்ற சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்துவதற்கு தேவையான பிற பொருட்கள் கருதப்படுகிறது. கறைகளை நீக்க பல வலைத்தளங்கள் பல விதமான டிப்ஸ்களையும் அளித்து வருகிறது.

 டிடர்ஜெண்ட்

 திரவ வடிவில் இருக்கும் டிடர்ஜெண்டை பயன்படுத்துவது உங்கள் ஆடைகளுக்கு நல்லது. இதனால் ஆடைகளில் சோப்பு தூளின் எச்சம் தேங்குவதில்லை. சலவையை சிறந்த முறையில் செய்ய வேண்டுமானால், நீங்கள் எவ்வளவு ஆடைகளை துவைக்க போகிறீர்களோ அதற்கேற்ப அளவில் டிடர்ஜெண்டை பயன்படுத்துங்கள். டிடர்ஜெண்டை அதிகமாக பயன்படுத்தினால் கூடுதல் சுத்தம் கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல.

 உலர்த்தி இஸ்திரியிடுதல்

ஆடைகளை வரிசையாக தொங்கப்போட்டு காய வைப்பதே சலவையில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் ஆற்றலை திறனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆடைகளையும் நற்பதமாக வைக்கும். இதை செய்த பின்னரும் உங்கள் ஆடைகள் சுருக்கமாக இருந்தால், அவைகளுக்கு இஸ்திரி போடுங்கள். இந்த கட்டத்தில் நீராவி பயன்படுத்த தேவையில்லை என்பதால், இஸ்திரி போடுவதும் சுலமபாக இருக்கும்.

சிறிதளவு உழைப்பு மற்றும் மேற்கூறிய அடிப்படை வழிகளை பின்பற்றினால் துவைப்பதனால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சலை தவிர்க்கலாம். சலவையை சுலபமாக்க உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அந்த வழிமுறைகளை பின்பற்றி பயனை அடையுங்கள்.

’அஜித்தின் பெருந்தன்மை’ - வியக்கும் வீரம் படக்குழு..!




            ஸ்டண்ட் சில்வாவிடம் வீரம் திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கியது குறித்து கேட்டபோது “வீரம் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியின் போது ரயிலில் தொங்கியபடியே செய்யவேண்டிய ஆக்‌ஷன் காட்சி ஒன்று இருந்தது.

 அந்த காட்சி ரொம்பவும் ரிஸ்கான காட்சி என்பதால் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்கலாம் என்று முடிவெடுத்தோம். இதுகுறித்து அஜித் சாரிடம் சொன்னபோது அவர்,

‘எதுக்கு டூப் போட்டு ஷூட் பண்ணனும். டூப் போட்றவரும் மனிதர் தான் நானும் மனிதன் தான். தவறாக ஏதாவது நடந்தால் அவருக்கு உண்டாகும் காயம் தான் எனக்கும் ஏற்படும். அவருக்கு அடிபடலாம் எனக்கு அடிபடக் கூடாதா? இந்த படத்தில் நடிப்பது மூலம் பெயர் கிடைக்கப்போவது எனக்கு தானே தவிர அவருக்கு இல்லை.

 இந்த காட்சியில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். இதைக்கேட்டு யூனிட் முழுவதும் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், ஒரு விதமான பயம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சி அற்புதமாக வந்திருக்கிறது. அனைவரையும் ஒரே சமமாக மதிக்கும் அஜித் சாரின் பெருந்தன்மையை யூனிட்டே புகழ்ந்தது” என்று கூறினார்.


ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம் – பெண்களே எதையும் நன்கு திட்டமிடுவார்களாம்..!




பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அதனை ஆண்களை விட பெண்களே மிகவும் வேகமாக செய்து முடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது பல வேலைகளை ஒன்றாக கொடுத்து இவற்றை முடியுங்கள் என்று கூறினால், அவற்றை திட்டமிட்டு, எதனை முதல் செய்வது எதனை பின்னர் செய்வது என்று ஒழுங்கு படுத்திச் செய்வதில் ஆண்கள் மிகவும் தாமதமாக இருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த விடயத்தில் இப்போது இரு கேள்விகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். முதலாவது கேள்வி இது ஏன் என்பதாகும். அடுத்தது எந்த வேலையை கொடுத்தாலும் இந்த நிலைமைதானா அல்லது சில வேலைகளில் மாத்திரந்தான் இந்த நிலைமையா என்பதாகும்.

இதற்கான விடைகளை கண்டுபிடிக்கும் போதுதான் வேலைத்தளங்களை எப்படி ஏற்பாடு செய்வது என்பதில் சரியான திட்டங்களைத் தீட்ட முடியும். பல வேலைகளை ஒன்றாக அடுத்தடுத்து முடிப்பது என்பது வேலைத்தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், அதுதான் எமது வேலை தொடர்ச்சியாக நடப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

முன்னைய ஆய்வுகள்


முன்னர் இந்த விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைத் தந்துள்ளன. சீனாவில் நடந்த ஒரு ஆய்வில் பெண்கள், ஆண்களை விட பல வேலைகளை ஒன்றாக முடிப்பதில் மிகவும் வேகமனவர்கள் என்ற பதில் வந்திருக்கிறது. ஆனால் சுவீடனில் நடந்த ஆய்வில் ஆண்கள்தான் வேகமானவர்கள் என்ற முடிவு வந்திருக்கிறது.

இதற்காக இன்னுமொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சில அலுவலக வேலைகளை, அதாவது மின்னஞ்சல்களை படிப்பது, அதற்கு பதிலளிப்பது, தொலைபேசிகளுக்கு பதிலளிப்பது, அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்துகொள்வது என பல வேலைகள் இருதரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. அதேபோல வீட்டுவேலைகள், அதாவது, சமைப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்ளவது, வீட்டு தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் சொல்வது என்று பல வேலைகள் ஒன்றாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஒற்றை வேலையைச் செய்வதில் இருவரும் சமம் இதில் ஒவ்வொரு வேலையாகச் செய்யச் சொன்னால், இரு தரப்பாரும் ஒரே வேகத்திலேயே செய்தார்கள். ஆனால் எல்லா வேலைகளை ஒன்றாகக் கொடுத்த போது, அவற்றை ஒவ்வொன்றாக செய்து முடிப்பதற்கும் ஒரு வேலையில் இருந்து அடுத்த வேலைக்கு மாறும் போதும் இருதரப்பாரும் சிரமப்பட்டார்கள், ஆனாலும் பெண்கள், ஆண்களை விட அவற்றை வேகமாக முடித்தார்கள். இந்த வேறுபாடு மிகவும் சிறியதுதான் என்றாலும், தொடர்ச்சியாக வாரக்கணக்கில் இவற்றைச் செய்யும்போது அது மிகவும் அதிகமாகிவிடும்.

நன்கு திட்டமிடும் பெண்களும் அவசரக்குடுக்கையான ஆண்களும்

அதன் பின்னர் 8 நிமிடத்துக்குள் சில வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டும் என்று இரு தரப்பாருக்கும் கொடுக்கப்பட்டது. உண்மையில் அந்த அனைத்து வேலைகளையும் 8 நிமிடத்தில் முடிக்க முடியாது. இப்போது, வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவற்றை திட்டமிடுவதற்கு நீண்ட நேரத்தை பெண்கள் எடுத்துக்கொண்டார்கள், ஆனால் ஆண்கள் அவசரக் குடுக்கையாக, நிறைய யோசிக்காமல் வேலையில் குதித்துவிட்டார்கள்.

ஆனால் இங்கும் பெண்கள்தான்முன்னணியில் இருந்தார்கள். இதில் இருந்து எந்த அழுத்தமான நிலைமைகளிலும் நின்று நிதானமாகச் சிந்தித்து, திட்டமிட்டு, செயற்படும் திறன் பெண்களுக்கே அதிகம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தார்கள்.

அதுமாத்திரமன்றி ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள், பல வேலைகளை ஒன்றாகக் கையாள்வதில் தாம் உண்மையில் எவ்வளவு திறமையானவர்களோ, அதனைவிட அதிகமாகவே தம்மிடம் திறமை இருப்பதாக அவர்கள் தம்மைப் பற்றி நினைத்துகொள்வதாகவும், ஆனால் பெண்களோ மறுபுறமாக, தமக்கு இந்த விடயங்களில் இருக்கும் உண்மையான திறமையின் அளவை விட குறைவாகவே தமக்கு திறமை இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொள்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தம்மிடம் அதிக திறமை இருப்பதாக அளவுக்கு அதிகமாக ஆண்கள் நினைப்பதால்தான் அவர்கள் சிந்திக்காமலேயே வேலையைத் தொடங்கிவிட்டு முடிக்க முடியாமல் தடுமாறுகிறார்களாம்.

என் ’முதல்வன்’ மாதிரி டெல்லி அரசியல் - ஷங்கர்..!

என் ’முதல்வன்’ மாதிரி டெல்லி அரசியல் - ஷங்கர்!



பிரம்மாண்டமான தமிழ்ப்படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கிய இந்தியன், முதல்வன், அந்நியன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மக்களின் மத்தியில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

தற்போது பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் ஐ படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ஷங்கர்  நீண்ட நாட்கள் கழித்து தனது ஃபேஸ்புக் சமூகவலைதள அக்கவுண்டில் ப்திவு ஒன்றை போட்டிருக்கிறார்.

 இந்த பதிவில் ஷங்கர் “நான் இங்கு வந்து அதிக நாட்கள் ஆனதற்கு காரணம் வேலைப் பளு தான். 2013-ஆம் வருடம் எனக்கு நல்ல வருடமாக முடிந்திருக்கிறது.

எனது முதல்வன் திரைப்படத்தில் வருவது மாதிரியே டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். விக்ரம், உபன் படேல் நடிக்கும் க்ளைமேக்ஸ் காட்சியை ஒரிசா, விசாகப்பட்டினம் அகிய பகுதிகளில் படமாக்கிவருகிறோம்.

 ஐ படப்பிடிப்பின் கடைசி நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
 

ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறைகின்றது..!



அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக ஆண் குழந்தைகளை பெறுவதால் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

 அந்த ஆய்வில் அதிக ஆண் குழந்தைகள் பெறுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தாய்மார்கள் விரைவில் வயதானவர்கள் ஆகின்றனராம்.

ஆண் குழந்தைகள் பெறுவதால் தாய்மார்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரிக்கிறதாம். அதனால் தாய்மார்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களின் உடல் வீக்காகிவிடுகிறதாம்.

இதனால் அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிக பெண் குழந்தைகள் பெறுவதால் தாய்மார்களின் ஆயுள் குறைவதில்லையாம்.

பின்லாந்தைச் சேர்ந்த தாய்மார்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கும் எனக்கும் போட்டி..! விஜய் பேச்சு

அஜித்துக்கும் எனக்கும் ஆரோக்கியமான போட்டி உள்ளது...! விஜய் பேச்சு
 
 
 
'ஜில்லா' படம் விஜய் ரசிகர்களை திருத்திபடுத்தியுள்ளது என்றும் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுத்து உள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விஜய் ஜில்லா படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் ரசிகர்களால் தான் என் படங்களின் வெற்றி சாத்தியமாகிறது என்றும் தெரிவித்தார்.

சமீபகாலமாக பண்டிகை நாளில் ஒரு படம் தான் ரிலீஸ் செய்யவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இந்த பொங்கலுக்கு வீரம், ஜில்லா என்று இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. வீரம் வெற்றியடைந்ததாக கேள்விப்பட்டேன். அஜீத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

இதை எங்களுக்குள் இருக்கிற ஆரோக்கியமான போட்டியாகவே நினைக்கிறேன். இதை ஆரோக்கியமான போட்டியாகவே ரசிகர்களும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
 
 
 

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்..!

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்..!!!



ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் உதடுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதடானது ஒருசில பருவக் காலத்தில் அதிகம் வறட்சி அடையும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு வறட்சி ஏற்படும் போது உதடுகளைச் சுற்றி வெள்ளையாக இருப்பதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில சமயங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை மட்டுமின்றி, உதடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உதடுகள் அதன் இயற்கை அழகை இழந்து அசிங்கமாக காணப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்க எந்த பொருட்களைக் கொண்டு உதடுகளை பராமரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைக் கொண்டு உதடுகளை பராமரித்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்யாக் எணணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதோடு, உதடுகளின் இயற்கை அழகும் பாதுகாக்கப்படும்.

கற்றாழை

கற்றாழை ஜெல் கூட உதடு வறட்சியைத் தடுக்கும் அருமையான பொருள். எனவே தினமும் உதடுகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வாருங்கள்.
உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

ரோஜாப்பூ

ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து, அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால், உதடுகளின் நிறம் அதிகரிப்பதோடு, உதடுகளில் ஈரப்பதமும் தக்க வைக்கப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும், உதடுகளின் வறட்சி தடுக்கப்படும். உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்!!!

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதை அதிகரிப்பதோடு, உதடுகளும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

தேன்

தேன் ஒரு அருமையான மாய்ஸ்சுரைசர். எனவே தினமும் தேனைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால், உதடுகளில் உள்ள வறட்சியுடன், வெடிப்புகள் விரைவில் குணமடைந்து, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயும் அருமையான ஒரு பொருள். ஆகவே இதனையும் உதடுகளுக்கு தடவலாம்.

கிளிசரின்

1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் போது உதடுகளில் தடவி ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டனை நீரில் நனைத்து உதடுகளை துடைத்து எடுக்க வேண்டும். இதுவும் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று இருக்கும்.

க்ரீம் மில்க்

க்ரீம் மில்க்கை உதடுகளுக்கு தடவி வந்தாலும், உதடுகளில் பிரச்சனை ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.


வேஸ்லின் மற்றும் தேன்

வேஸ்லின் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை உதடுகளுக்கு தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தாலும், நல்ல பலன் கிடைக்கும்.

கமலஹாசனுடன் இணையும் கே.பாலசந்தர்...!



கே.பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் சமீபத்தில் ‘ரெட்டை சுழி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். ‘பொய்’ என்ற படத்திலும் கவுரவ தோற்றத்தில் வந்தார். அடுத்து கமலுடன் நடிக்க இருக்கிறார்.

கமல் நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் முடிவடைந்துள்ளது. இப்படம் ரிலீசானதும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு துவங்குகிறது. இது குறித்து கமலஹாசன் கூறும் போது:

‘நான் நடிக்க உள்ள அடுத்த படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார். இதில் கே.பாலசந்தரும் என்னுடன் இணைந்து நடிக்கிறார். இதற்காக அவர் தாடி வளர்த்து வருகிறார். ‘விஸ்வரூபம் 2’ படம் ரிலீசானதும் உத்தம வில்லன் படப்பிடிப்பு துவங்கும்’ என்றார்.

வீரம் வசூல் எவ்வளவு..?



அஜித்தின் வீரம் படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த வீரம் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் திகதி வெளியானது.

நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜித் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்திற்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வீரம் வெளியான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. வீரம் படத்திற்கு குட்டீஸ்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

 மேலும் இப்படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளது.

வார இறுதி நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூலித்துள்ளது.

என்னையும் கொஞ்சம் கவனிங்க... பாஸ்...! லேப்டாப்...!!




லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!

கணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல், கணினி போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் லேப்டாப்..

லேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில் படிக்கும் மாணவர்களுக்காக அரசும் இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. ஆக, லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது என்பதில் சந்தேகமில்லை..

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் மிக எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடிவதால் மேசைக் கணினிகளில் பயன்பாடு வெகுவாக குறைந்துவருகிறது.. லேப்டாப் பயன்பாடு அதிகரிக்கும் அளவிற்கு அதை பராமரிப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை..

நன்கு பராமரிக்கப்படும் லேப்டாப் விரைவில் பழுதடைவதில்லை.. பராமரிப்பில்லாமல் பயன்படுத்தும் லேப்டாப் விரைவில் பழுதடைந்துவிடும். அவ்வாறு விரைவாக லேப்டாப் பழுதடையாமல் இருக்கச் செய்வதற்கான பயனுள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.

மடிக்கணினி திரைப் பாதுகாப்பு:

கணினியில் மிக முக்கியமானதொரு பாகம் கணினித் திரைதான்.. அதில் பார்த்துதான் அனைத்தை வேலைகளையும் மேற்கொள்கிறோம். கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மெல்லிய 'சில்க்' துணிகளைப் பயன்படுத்தலாம்.. அல்லது அதற்கென இருக்கும் Screen Cleaning Liqued பயன்படுத்தி காட்டனால் துடைத்தெடுக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை:
கரடு முரடான துணிகளையோ, அல்லது வெறும் கைகளையோ பயனபடுத்தி துடைக்க கூடாது. இதனால் கணினித் திரையில் கீரல் விழும், கைத்தடங்கள் அதில் பதிந்துபோகும். மேலும் அழுத்தமாக துடைப்பதால் கணினித் திரைக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

தூசி மற்றும் ஈரப்பதம்:
பொதுவாகவே அனைத்து கணினிகளும் தூசி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கபடுகின்றன. குறிப்பாக பயணங்களின்போது லேப்டாப்பை பயன்படுத்தக்கூடிய இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. அதோடு அங்கு ஈரப்பதம் இல்லாம் சாதாரண சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. தொடர்ந்து ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமில்லாத இடங்களில் லேப்டாப் கணினியை பயன்படுத்தும்போது அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆண்டி வைரஸ் ரொம்ப முக்கியம்:

வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதும் நம் கடமை. பல ஆயிரம் மதிப்பு வாய்ந்த மடிக் கணினியை பாதுகாக்க ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வாங்குவது தவறில்லை. அதனால் நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்வேர் ஒன்றை வாங்கி இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு கட்டண வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்தும்பொழுது வைரஸ் தாக்குதல்களிலிருந்து உங்களுடைய லேப்டாப்பிற்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

உணவுப் பொருட்களை தவிருங்கள்:
மடிக் கணினியைப் பயன்படுத்திக்கொண்டே சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதோ, டீ, கூல்டிரிங்ப் போன்ற பான வகைகளை அருந்துவதோ கூடாது.. அவ்வாறு செய்வது உங்கள் லேப்டாப்பிற்கு நீங்களே உருவாக்கும் ஆபத்து..

லேப்டாப் பேக்:

வெளியில் பாதுகாப்பாக லேப்டாப்பை எடுத்து வைக்க தகுந்த லேப்டாப் பேக்கைப் பயன்படுத்துங்கள். லேப்டாப்பின் அளவிற்கு தகுந்த மாதிரியான போதுமான அளவில் லேப்டாப் பேக் இருக்க வேண்டும். முதுகில் மாட்டிச் செல்ல ஏதுவான லேப்டாப் பேக் லேப்டாப்பை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும்.

ஹபர்னேட் நிலை:

பணிக்கு இடையே சிறுது நேரம் அவசகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், (உதாரணமாக உணவு எடுத்துக்கொள்ள செல்வதற்கு முன்பு, தொலைபேசியில் அதிக நேரம் பேசும் சூழல்) உங்கள் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையில் வைப்பது சிறந்தது.. இதனால் அதிக மின்சாரம் சேமிக்கப்படுவதுடன் லேப்டாப்பும் பாதுகாக்கப்படும்.

தொடர்ச்சியான பயன்பாட்டை தவிருங்கள்:
தொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகபட்சமாக 8 மணி நேரம் வரைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் கணினியை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் விரைவில் மடிக் கணினி வெப்பமடைந்துவிடும். இதனால் விரைவிலேயே கணினியின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது.

ஃபையர் வால் பாதுகாப்பு:

பொதுவாக எல்லா மடிக்கணினிகளிலும் ஃபையர்வால் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகிறது. ஃபையர்வால் பாதுகாப்பு மிக முக்கியம். கணினியின் தலைமைக் காவலனாக இது செயல்படுகிறது.. எந்த வகையிலும் உங்கள் கணனி சேதாரமாகாமல் இருக்க இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் பையர்வால் இல்லையெனில் தனியாக வாங்கியோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ உங்கள் கணினியல் நிறுவிக்கொள்ளுங்கள்.

பரிசோதனை:

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய லேப்டாப்பை சர்வீஸ் செய்வது நல்லது.. அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் லேப்டாப்பை கொடுப்பது புத்திசாலித்தனம்.

லேப்டாப் மேடை:
வீடுகள், மற்றும் அலுவலகங்களில் லேப்டாப்பை பயன்படுத்தும்பொழுது, அதற்கென தயாரிப்பட்ட மேடைகளைப் பயன்படுத்துங்கள். தற்பொழுது லேப்டாப் ஸ்டேன்டுகள் பலவிதங்களில் கிடைக்கிறது. அதனால் லேப்டாப் சூடேறுவதை குறைப்பதோடு, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும்.

மீண்டும் இணைகிறதா விஜய் - நேசன் கூட்டணி ?



இளைய தளபதி விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.டி. நேசன் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது.

இளையதளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்ககும் ஜில்லா திரைப்படம் தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான ஆர்.டி. நேசனிடம் விஜய் “ உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அஷோக், ஸ்ருதி சர்மா நடிப்பில் வெளியான முருகா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நேசன். ஜில்லா அவரது இரண்டாவது படமாகும்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் ஜில்லா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப்
பெற்றிருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபீசில் இணையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"ப்ரூஸ் லீ" - ன் மறுபக்கம்...?






தற்காப்பு கலையின் முடிசூடா மன்னன் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் "ப்ரூஸ் லீ" ஒரு சிறந்த நடன கலைஞரும் கூட என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

அவருடைய 14 வயதில் குங்ஃபூ படித்து கொண்டிருத்த கால கட்டத்தில், Cha Cha Cha நடனத்தின் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு வந்து, அதற்க்கேன நேரம் ஒதுக்கி மிக விருப்பத்துடன் கற்று கொண்டார் ப்ரூஸ் லீ. ஹாங்-காங்கில் 1958-ம் ஆண்டு நடைபெற்ற மிக பிரமாண்ட Cha Cha Cha நடன போட்டியிலும் பங்கெடுத்து சாம்பியன்ஷிப் பட்டதையும் வென்றார் ப்ரூஸ் லீ.

Martial Arts கற்றுகொள்வதர்க்கு காண்பித்த அதே ஆர்வத்தையும், உழைப்பையும் Cha Cha Cha நடனம் கற்று கொள்வதிலும் காட்டியிருக்கிறார் ப்ரூஸ்லி.

 தன்னுடைய நோட்டில் Cha Cha Cha-வின் 108 ஸ்டெப்களை குறித்து வைத்திருந்திருக்கிறார் அவர். அமெரிக்காவிற்கு சென்ற ப்ரூஸ் லீயின் முதல் வேலை "dancing instructor"-தான்.

என்ன மனுஷன் இவர்..! அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா..!



பொங்கல் படமாக வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'வீரம்'.இப்படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலாவுக்கு இத்தனை நாளாக நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருடலை 'வீரம்' பட வெற்றி அறுவை சிகிச்சை இல்லாமேலேயே அகற்றியிருக்கிறது.

இந்த பாலா நம் மண்ணின் மைந்தன். தமிழில்தான் 'அன்பு' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 'காதல்கிசுகிசு' 'அம்மா அப்பா செல்லம்' போன்ற சில படங்களில் நடித்தார். இங்கே படங்கள் வெற்றி பெறாததால் மலையாளப் பக்கம் போனார்.

'பிக்'பி' என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடன் நடித்தார் முதல் படத்திலேயே வெற்றியும் பாராட்டும் விருதும் கிடைத்தன.அதன் பிறகு மளமளவென படங்கள். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி,ப்ருத்விராஜ் என பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பிறகு தனி நாயகனாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில் 9 படங்கள் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பானார். மலையாளத்தில் தொடர்ச்சியாக 40 படங்கள் நடித்துள்ளார். 'வீரம்' இவரது 44 வது படம் என்றால் பாருங்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்று நம்புகிறவர்கள் நம்மவர்கள். வேற்று மொழியினர் எவரையும் எளிதில் உள்ளே விடாதவர்கள் மலையாளத் திரையுலகினர். பாலாவுக்கு எப்படி அங்கு ஒரு இடம் கிடைத்தது?

"அதை என் விதி என்பதா தலையில் எழுதப்பட்ட வாய்ப்பு என்பதா அதிர்ஷ்டம் என்பதா பாக்யம் என்பதா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

நான் அறிமுகமாகி தமிழில் நடித்த படங்கள் ஓடவில்லை. அதனால் எனக்கு இங்கே வாய்ப்பு வரவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிப்பு, திறமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான். வெற்றி பெற்றால்தான் மறு பேச்சு. வெற்றி பெறவில்லை என்றால் அவ்வளவுதான். இதுதான் இங்கு உள்ள நிலைமை. ஆனால் மலையாளத்தில் நிலைமையே வேறு. அங்கு வெற்றியைப் பார்ப்பதில்லை. வேலையைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்குத்தான் அங்கு மரியாதை.நடிகரைவிட நடிப்புத் திறமையைத்தான் பார்ப்பார்கள். நிஜமான திறமைசாலியை அங்கீகரிப்பார்கள். ஆதரிப்பார்கள். அதனால்தான் என்னை ஏற்றுக் கொண்டார்கள். " என்கிற பாலா,"எனக்கு மொழி ஒரு தடையில்லை. இருந்தாலும் பிற மொழியிலிருந்து, என்னை மாதிரி பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபமாக மலையாளத்தில் வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்காது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.என்னை ஏற்றுக்கொண்டு தங்களில் ஒருவராக பார்க்கிற அவர்களின் அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்வது? என் ஒவ்வொரு படத்திற்கும் அவர்கள் கொடுத்த வரவேற்புக்கும் விமர்சனத்துக்கும் என்னால் நன்றி என்று மட்டும் கூறி விட முடியாது." என்று நெகிழ்கிறார்.

பாலாவின் தந்தை ஜெயக்குமார் 426 ஆவணப் படங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் இயக்கியவர். தாத்தா ஏ. கே. வேலன் தயாரிப்பாளர். சகோதரர் சிவா இயக்குநர். இருந்தாலும் இவருக்குள் ஒரு சங்கடம் தொண்டைக்குள் பந்தாக இதுநாள் வரை உருண்டு கொண்டிருந்தது. அதை 'வீரம்' படம் அகற்றியுள்ளது. சங்கடத்தைத் துடைத்து இருக்கிறது.

"நான் தமிழில்தான் அறிமுகமானேன். இங்கு சரிவர படங்கள் அமையாததால்தான் மலையாளப் பக்கம் போனேன். அங்கு பலதரப்பட்ட படங்கள். வியாபாரரீதியில் வெற்றி பெற்ற 'பிக் பி', 'புதியமுகம்' 'ஸ்தலம்' 'திஹிட்லிஸ்ட்' 'அலெக்சாண்டர்' தி கிரேட் போன்ற படங்களாகட்டும்

'வேனல்மரம்' 'பத்தாம் அத்தியாயம்' யோன்ற ஆர்ட் பிலிம் களாகட்டும் ஒவ்வொருபடமும் ஒவ்வொரு அனுபவமாக என்னை செதுக்கியது உண்மை. அப்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு இங்கு நம்மைப் பாராட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள். திறமைக்கு இங்கு மரியாதைஉ.ள்ளது.ஆனால் தாய் மொழியில் நமக்கென்ன மரியாதை உ.ள்ளது என்று நினைப்பதுண்டு.அப்படிப்பட்ட நேரத்தில்தான் 'வீரம்' படவாய்ப்பு வந்தது.

இயக்குநர் சிவா என் அண்ணன்தான். நானும் மலையாளத்தில் ஒரு படம் இயக்கிவிட்டடேன். ஆனாலும் நான் அவரிடம் வாய்ப்பு கேட்டதில்லை. அவரும் என்னைப்பற்றி விசாரித்து பேசியதில்லை. அப்படிப்பட்ட சுதந்திர வெளியில் இருந்தோம்.

'வீரம்' படத்தில் நடிக்கக் கேட்ட போது அண்ணனின் படத்தில் நடிக்கும் தம்பி என்கிற வகையிலும் அஜீத் சாரின் தம்பியாக நடிக்கிறேன் என்கிற வகையிலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிந்தது. படமும் வெற்றி பெற்றது எனக்கு நீண்டநாள் நெஞ்சுக்குள் கிடந்த ஏக்கம், சங்கடம், உறுத்தல், விலகிய உணர்வில் இருக்கிறேன். "என்கிறார்

வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்ட போது ' நிறைய சொல்லலாம் சொல்வது அவ்வளவையும் எழுத முடியாதே' என்ற படி தொடங்கினார்.

"அஜீத் சார் பற்றி நிறைய சொல்லலாம். நானும் 44 படங்கள் முடித்து விட்டேன். அஜீத்சார் மாதிரி அற்புதமான மனிதரைப் பார்த்ததில்லை. அப்படி இயல்பாகப் பேசிப் பழகுவார். 'வீரம்' படம் தொடங்க 4 நாட்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் படப்பிடிப்புக்கு முன்பே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு அழைத்தார்.

அழைத்தவர் எல்லாருடனும் அன்பாக மனம் விட்டு அன்னியோன்யமாகப் பேசிப் பழகினார். 'நாம் அண்ணன் தம்பியாக நடிக்கப் போகிறோம். நமக்குள் நல்ல ஹெமிஸ்ட்ரி வரவேண்டும் என்றால் நாம் சகஜமாகப் பேசிப் பழகவேண்டும். இடைவெளி இருக்கக் கூடாது'. என்றார்.

நாள் முழுக்க நாங்கள் அவருடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். காலையில் எழுவது சாப்பிடுவது ஒர்க் அவுட் செய்வது ஸ்விம்மிங் என்று எல்லாவற்றிலும் கூடவே இருக்கவைத்தார். சில நாட்களில் நிஜ அண்ணன் தம்பிகள் போலாகி விட்டோம். 110 நாட்கள் இப்படியே போனது. அது ஜாலியான சந்தோஷமான அனுபவம்.

அஜீத் சார் நல்ல குக். பிரமாதமாக சமைப்பார்.சிக்கன் பிரியாணி அருமையாக சமைத்துப் போட்டார். 'ஆரம்பம்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் எங்களுக்கு மீன் வறுவல் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன மனுஷன் இவர் என்று வியப்பாக இருந்தது. அவர் பலருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் வெளியில் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். நான் இது பற்றிக் கேட்ட போது மனிதர் செய்வது மனிதருக்குத் தெரியக் கூடாது என்பார். கடவுளுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பார். 'இது எனக்கும் கடவுளுக்கும் உள்ள கணக்கு' என்பார்.'இப்போது அவரை மிஸ் பண்ணுவதாக உணர்கிறேன்.''இப்படி அஜீத் பற்றிக் கேட்டால் மூச்சு விடாமல் பேசுகிறார் பாலா.

'வீரம்' படத்தின் மூலம் அஜீத் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ள கூடுதல் பூரிப்பு பாலாவுக்கு.

பாலா தான் இயக்கிய 'தி ஹிட் லிஸ்ட்' பட அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது எனக்கு 30 வயதில் கிடைத்த வாய்ப்பு. நானே தயாரித்தேன். 40 நடிகர்கள் என் மீதுள்ள அன்புக்காக நடித்தார்கள். ஒரு பத்தாண்டுகால அனுபவம் ஒரு படத் தயாரிப்பில் கிடைத்தது. எல்லா நடிகர்களும் ஒரு படம் தயாரித்தால் நல்ல மனிதராக மாறிவிடுவார்கள். "என்கிற பாலாவின் மனைவி அம்ருதா, பாடகியாக வந்து காதலியானவர். இவர் நினைக்கிற ஸ்வரத்தில் தாம்பத்யசங்கீதம் பாடுகிற பாடகி. ஒரே மகள் அவந்திகா.இதுதான் பாலா.

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை...!

30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை - படிப்பதில் மாணவர்களுக்கு...!


 இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான். இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது.

ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.

தாவும் மனம்

இணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது மனம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.

பெரும் புரட்சி

அண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர்.

 இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”

‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.

ஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.

நிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா?

நிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.

ஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது.

 அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.

முப்பது நொடிகள்தான்

தன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.

பெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை.

அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள்..!


ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது..!


குழந்தைகளின் பிரியா பிஸ்கெட் ஆகிவிட்டது ஓரியோ.

கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!



இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.

ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.

நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

டேப் டான்ஸ் பயின்ற கார்த்திகா..!



புறம்போக்கு படத்திற்காக கார்த்திகா டேப் டான்ஸ் பயின்றுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் நடிக்கும் படம், புறம்போக்கு. இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். படத்திற்காக டேப் டான்ஸை பயின்றுள்ளார் கார்த்திகாக. அவருக்கு இந்தப் பயிற்சி ஐந்து நாட்கள் அளிக்கப்பட்டதாம். தமிழ் சினிமாவுக்கு இந்த நடனம் புதுமையாக இருக்கும் என்கிறது படக்குழு.

யுடிவி நிறுவனத்துடன் ஐனநாதன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு வர்ஷன் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று குலுமணாலியில் துவங்கியது.

படத்தில் கார்த்திகா போல்டான கேரக்டரில் வருகிறாராம். இதற்காக அவர் பைக் ஓட்டி பழக போகிறாராம்.இதற்கும் மேலாக படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகளும் உண்டாம்.

‘இசை’ - புது அவதாரம்.?




‘தமிழில் நான் படம் இயக்கி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஏன் இந்த இடைவெளி என்பதற்கான காரணம் என்னிடம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. என் படத்தை, என் மீது கொண்ட நம்பிக்கையை கொண்டாடிய ரசிகர்களை மீண்டும் சந்தோஷப்படுத்த வேண்டும். பனி படர்ந்திருக்கும் இந்த அழகான குளிர் காலத்தைப்போல என் மீது படிந்திருக்கும் கவனத்திற்கு ‘இசை’ திரைப்படத்தின் வழியே கொஞ்சமும் குறைவில்லாமல் திருப்தியை கொடுப்பேன்!’’ என்று உறுதியாகச் சொல்கிறார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.

மே முதல் தேதி தன் ‘இசை’ படத்தை வெளியிட பம்பரமாய் உழைத்துக் கொண்டிருந்த  அவரை,  சந்தித்து பேசியதிலிருந்து…

இசையமைப்பாளர் ஆனதால்தான் ‘இசை’ படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறதா?

கதை தயாராக இருந்தது. இதை தற்போது கையில் எடுக்கவேண்டுமா என்ற முடிவுக்காக 6 மாதங்கள் எடுத்துக்கொண்டேன். படத்தின் சில முக்கியமான காட்சிகளை கொடைக்கானலில் சர்ஜ் செட் போட்டு படம் பிடித்திருக்கோம். அங்கே என் கதைக்கு வேண்டிய குளுமைக்காக 6 மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த குளுமைக்காகவும், மலையின் அழகியலுக்காகவும் வேண்டி கொஞ்சம் காலத்தை செலவழித்தேன். மொத்தமாக ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்புக்காக மட்டுமே எடுத்துக்கொண்டேன்.

இசையை கற்றுக்கொள்வதற்காக 8 மாதங்கள். இப்போது எடிட்டிங் 4 மாதங்கள். எடிட்டர் ரியாஸுடன் அமர்ந்து தினம்தினம் செதுக்கிக்கொண்டிருக்கிறேன். அற்புதமான எடிட்டர், இவர். ஆண்டனியின் உதவியாளர். படம் வந்தால் உங்களுக்கு நிச்சயம் பிடித்தவராக இருப்பார். இப்படித்தான் கடந்த 4 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு என்னுடைய ‘இசை’ தயாராகி வருகிறது. எதிலும் என்னை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் வேலையை தொடர்ந்தேன். அதற்கான பலன், படத்தில் தெரியும்.

எஸ்.ஜே.சூர்யாவை ஒர் இயக்குநராகவே பார்க்க விரும்புவதாக வரும் விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு தொடர்கிறோம். இன்னொரு இடத்தை ஆண்டவன் வேற ஒரு மாதிரி கொடுக்கிறான். ‘நியூ’ படத்தில் ஒரு நல்ல நடிகனாகத்தான் என்னை நிரூபித்திருக்கிறேன். வெளியில் நமக்கு கிடைக்கும் வெற்றியை எல்லோரோடும் சேர்ந்து ஷேர் பண்ணிக்க வேண்டும். தோல்வியை நாம் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல நடிகனாக நிரூபிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்தப்படத்தில் அதற்கான போராட்டம் நிறைய இருக்கும். இயக்குநர் ஒரு பயிற்சியாளர் மாதிரி. வீரர் நடிகர்தான். என் விளையாட்டு ‘இசை’ யில் புதிதாக இருக்கும். அதன்பின் இப்படியான விமர்சனங்களுக்கு அவசியம் இருக்காது.

படத்தில் இளையராஜாவாக சத்யராஜும், ஏ.ஆர்.ரஹ்மானாக நீங்களும் நடித்திருப்பது உண்மை தானா?

வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நம்மை ஏதாவது ஒன்று ஆட்சிசெய்யும். அது அரசியல், விளையாட்டு ஏன்.. அது ஒரு பள்ளிக்கூடமாகக்கூட இருக்கும். அந்த துறையில் ஒருவர் சீனியர், ஜீனியர் என்றும் இருப்பார்கள். அந்த சூழலில் ஒரு பயணம். அதில் சில அனுபவங்கள் உண்டு. அப்படியான காலகட்டத்தில் அந்த சீனியர், ஜூனியருக்குள் ஒரு பொறாமை உணர்வு உண்டாகும். அந்த உணர்வால் நிகழும் மாற்றங்கள்தான் என் கதை. எனக்கு இசை பிடிக்கும். பார்த்து பழகிய அனுபவம் இருப்பதால் இதை கதையின் களமாக ஆக்கிக்கொண்டேன். இதில் இவர்கள் இருவரையும்தான் குறிப்பிட்டுள்ளேன் என்பதெல்லாம் முற்றிலுமான வதந்தி.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ராஜா சார் இசைப்பயணத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். என் படத்தில் சித்தரிப்பதால்தான் அவரது வெற்றி இருக்கிறதா என்ன? நான் இங்கே யார் மனதையும் புண்படுத்த வரவில்லை. எனக்கு படம் செய்ய ஒரு களம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். இந்தப்படத்துக்கும், என் கதைக்கும் அப்பார்ப்பட்ட ஜீனியஸ் ராஜா சார். மற்றவை எல்லாம் நான் முன் சொன்னதைப்போல வதந்தி.

ஹிந்தியில் சல்மான்கானிடம் வைக்கும் கேள்வியை உங்களிடமும் வைக்கிறோம். கல்யாணம் எப்போது?

இத்தனை ஆண்டுகளாக ஏன் செய்துகொள்ளவில்லை என்பதற்கான பதில் என்னிடம் இல்லை. நம் அலைவரிசைக்கு ஏற்றவரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மனதுக்கு பிடித்த வேலையை இத்தனை ஆண்டுகளாக தொடர்கிறேன். இப்போது கூட 8 மாதங்கள் மாணவனாக மாறி இசையையும் புதிதாக எடுத்திருக்கேன். அதேபோல மனதிற்கு பிடித்த பெண்ணை இதுவரைக்கும் தேட முயற்சி எடுக்கவில்லை. அது இயல்பாக அமையும்போது பார்த்துக்கொள்ளலாம்.

சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன் வரைக்கும் சினிமாவில் வளர்ந்து வருகிறார்களே. இவர்களை வைத்து எப்போது படம் கொடுக்கப் போகிறீர்கள்?
ஒவ்வொரு காலத்திலும் யாராவது ரெண்டு பேர் ரூல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் வரைக்கும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒரு கதை யாரைத்தேடுகிறதோ அவர்களுடன் சேர்ந்து அதை சரியாக செய்ய வேண்டியதுதான். இப்போ அந்த வேலையை நானே செய்வதால் அதற்குள் போக விருப்பமில்லை. என்னோட இடத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான தேடலில் என் வேலைகளை கவனித்து வருகிறேன். சினிமா எப்பவுமே நன்றாக இருக்கிறது. அதில் நாம இருக்கிறோமா? இல்லையா என்பதை செக் பண்ணி பார்த்துக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல், மியூசிக்கில் அட்வான்ஸ் என்று வளர்ந்துகொண்டே போகிறது. அதை அப்டேட் பண்ணிக்கொள்ளும் வேலையே இங்கு அதிகம் இருக்கே. அதை நோக்கி என் பயணமும் இருக்கு. வெளிநாட்டோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் இன்னும் 10 ஆண்டுகள் பின்னுக்குத்தான் இருக்கிறோம். இங்கே, இப்போ பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்கள், மாடர்ன் டி.டி.எச். சினிமா வெளியிடும் நுட்பங்கள் எல்லாம் அங்கு வந்தாச்சு. ஒரு படத்தை வீட்டிலும் பார்க்கிறார்கள், தியேட்டர்களிலும் பார்க்கிறார்கள். காலத்துக்கு தகுந்த விஷயங்கள் அவ்வபோது மாறிக்கொண்டேதான் இருக்கும். சினிமாவும் அதில் ஒன்றுதானே.

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சாவித்ரி என்று அறிமுக நாயகியை சொல்லியிருக்கிறீர்களே?
நாயகிக்காக 124 பேரை ஆடிஷன் எடுத்து அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவங்க இந்த சாவித்ரி. மும்பை பெண். தமிழ்நாட்டில் சாவித்ரியாகவே வலம் வரட்டும் என்று அவங்களோட நிஜ பெயரைக்கூட யார்கிட்டயும் சொல்லவில்லை. யூத்ஸ் பலர் நோகப்போறாங்க. முதல் பாகத்தோட காதல், ரெண்டாவது பகுதியின் கதை எல்லாவற்றிலும் அழகா அசத்தியிருக்காங்க… அந்தப்பொண்ணு.

இசையை அடுத்து?

அடுத்த படம் கதை ரெடி. முக்கால்வாசி இசையில் பயணித்த அதே டீமாகக்கூட இருக்கலாம். அது இயல்பாகவே அமைந்தால் சந்தோஷப்படுவேன். இனி தாமதம் இருக்காது. இசை வெளியான ஆறாவது மாதத்தில் அடுத்த காதல் பயணமும் திரைக்கு வந்துவிடும்.

பெண் நோயாளிகளிடம் வரம்பு மீறும் ஆண் டாக்டர்கள் - புகார் கொடுக்க...




 இந்தியாவில் மருத்துவ சிகிச்சை முறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ கம் மருத்துவத்துறையில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மிகவும் அரிதானதாக சொல்லப்படும் இதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக குறைந்த செலவில் சென்னையில் செய்யப்படுகிறது.

ஆனால் தனியார் மருத்துவ மனை மற்றும் தனியார் கிளினிக்கு களுக்கு சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளிடம் ஒரு சில டாக்டர் கள் வரம்பு மீறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை பெரும் பாலான பெண் நோயாளிகள் வெளியே சொல்ல தயங்குகின்ற னர். இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் சிலர், தங் களது அத்துமீறல்களைத் தொடர் கின்றனர்.

ஒரு சில பெண் நோயாளிகள் வெளியே சொல்லும் போது, சம்பந் தப்பட்ட டாக்டர் கைது செய்யப் படுகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி திருவேற்காடு அடுத்துள்ள வேலப்பன்சாவடி பள்ளிக்குப்பம் பகுதியில் தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் நோயாளியிடம், அங்கு பணியில் இருந்த டாக்டர் சித்தார்த்தசீலன் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அந்த பெண் திருவேற்காடு போலீஸில் புகார் அளித்ததின் பேரில், டாக்டர் சித்தார்த்தசீலனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத் தனர். இதுபோல ஒரு சில டாக் டர்கள் செய்யும் தவறால், ஒட்டு மொத்த டாக்டர்களுக்கு மட்டு மின்றி தமிழக மருத்துவத் துறைக்கே அவப்பெயர் ஏற்படு கிறது. இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கீதாலட்சுமி, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவ மனை ஆர்.எம்.ஓ. டாக்டர் கலை வாணி ஆகியோர் கூறியதாவது:

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது,  -கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.

பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்; இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புகார் கொடுக்கலாம்
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

செபி தீவிர நடவடிக்கை -முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய....




 பிபிஓ எனப்படும் வெளிப்பணி ஒப்படைப்பு மையங்கள் மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஓ-க்களிடம் இதற்கு ஆகும் செலவு குறித்து அழைப்பு டெண்டரை கோரியுள்ளது.

200 ஏஜென்டுகளையும் ஒருங்கிணைத்து உதவி மையத்தை இத்தகைய பிபிஓ-க்கள் செயல்படுத்த வேண்டும். இதற்கான அழைப்பு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எனப்படும் தொலைபேசி வழி குறைகேட்பு மையத்தை குறைவான பணியாளர்களின் உதவியோடு அதாவது 50 பணியாளர்களுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். இப்போது 50 ஏஜென்டுகளை ஒருங்கிணைக்கும் வகையிலான இந்த ஹெல்ப்லைன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பணியாளர்களாக விரிவுபடுத்தப்படும் என்றும் செபி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு 14 பிராந்தித மொழிகளில் உதவிகளை அளிக்கும் வகையில் இந்த தொலைபேசி வழி குறைகேட்பு மையங்கள் இருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், வங்காளம், மலையாளம், தெலுங்கு, உருது, கன்னடம், ஒரியா, பஞ்சாபி, காஷ்மீரி ஆகிய பிராந்திய மொழிகள் இதில் அடங்கும். ஏற்கெனவே கட்டணமில்லா தொலைபேசி சேவையை வாடிக்கையாளர்களுக்கு செபி ஏற்படுத்தித்தந்துள்ளது. இத்தகைய சேவை 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சேவையை விரிவுபடுத்தும் வகையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்தித் தர முன்வரும் நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவலை 21 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள், வாடிக்கையாளரிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஏற்ப பதில் அளிக்க வேண்டும். யாரிடம் புகார் தெரிவிப்பது மற்றும் வர்த்தக கணக்கு தொடங்குவது உள்ளிட்ட தகவலை அளிக்க வேண்டும்.

இது தவிர, ஏஜென்டுகள் தங்களது வாடிக்கையாளர் பற்றிய முழு தகவலை அதாவது பங்கு பரிவர்த்தனை குறித்த அளிப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இது அமைய வேண்டும். இந்த ஹெல்ப்லைன் வசதியில் வாடிக்கையாளர்கள் கோரினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பற்றிய தகவலும் அளிக்கப்படும். குறிப்பிட்ட நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதா இல்லையா என்ற தகவலை அளிக்கும். அத்துடன் நிறுவனம் செயல்படுகிறதா அல்லது நொடித்து போய் மூடப்பட்டுள்ளதா, நிறுவனமே இல்லையா அல்லது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லையா என்ற தகவலும் அளிக்கப்படும்.

செபி-யின் வரம்புக்குள் வராத அதேசமயம் பிற புலனாய்வு அமைப்புகள் மூலம் திரட்டப்பட்ட தகவலும் இதில் அளிக்கப்படும். இந்த ஹெல்ப்லைனில் முதலீடு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட மாட்டாது. இந்த ஹெல்ப்லைனில் பதிவாகும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அது 24 மணி நேரத்துக்குள் செபி-க்கு அனுப்பப்பட வேண்டும். இத்தகைய சேவை அளிக்க முன்வரும் நிறுவனங்கள் பற்றிய மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் சிறந்த நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இத்தகைய சேவை அளிக்க அனுமதி அளிக்கப்படும்.

விருப்பத்தின் பேரில் இது 5 ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்படக்கூடும். இத்தகைய சேவை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் எத்தகைய புகாரிலும் சிக்காத நிறுவனமாக இருத்தல் அவசியமாகும். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் இந்நிறுவன வருமானம் ரூ. 50 கோடிக்கும் குறைவாக இருக்கக் கூடாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனமாக இருக்கக் கூடாது என்று செபி தெரிவித்துள்ளது.

ஹெல்ப்லைன் மையத்தில் இரண்டு செபி அதிகாரிகள் நிரந்தரமாக நியமிக்கப்படுவர். குறிப்பிட்ட நிறுவனம் நாஸ்காமில் பதிவு பெற்ற சாப்ட்வேர் நிறுவனமாக இருக்க வேண்டும். ஹெல்ப்லைன் சேவை அளிக்க முன்வரும் நிறுவனங்களிடம் தடையற்ற பேச்சுத் திறன் கொண்ட பணியாளர்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் செயல்பாடு மாதந்தோறும் செபி-யால் ஆய்வுக்குட்படுத்தப்படும். ஹெல்ப்லைன் சேவை அளிக்க முன்வரும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன் எந்த குற்ற பின்னணி கொண்டவராக இருத்தல் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

குரு – சிஷ்யன் ...!


துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான்.

சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான்.

 கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.

”காற்று” என்றான் இளைஞன்.

”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.

நீதி :முதலில் தகுதியாக்கிக் கொள். பின்னர் ஆசைப்படு (First Deserve & then Desire)

'அனேகன்' ஷூட்டிங்கில் தனுஷ் பிசி - பொங்கல் கொண்டாட்டம் மிஸ்



அனேகன் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் பொங்கல் கொண்டாட்டத்தை மிஸ் பண்ணுகிறார்.

கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்னதான் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தனுஷ் படப்பிடிப்பில் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பாலிவுட் படமான இஷாக் மூலம் அறிமுகமான அமீரா நடிக்கிறார். அனேகன் படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான லுக்கில் வருவார் என்று கே.வி. ஆனந்த் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

காதல், ஆக்ஷன் கலந்த அனேகன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைப் பணியை கவனக்கிறார்.

Tuesday, January 14, 2014

விஜய் சேதுபதியின் '' வசந்தகுமாரன் '' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதியின் வசந்தகுமாரன் ஃபர்ஸ்ட் லுக்..!


கோலிவுட்டின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டாரான விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் வசந்தகுமாரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டுடியோ 9 தயாரித்துவரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக லக்‌ஷ்மி மேனன் நடித்துவருகிறார். ஆனந்த்குமார் இப்படத்தினை இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயனண் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ரம்மி திரைப்படம் ஜனவரி 24லிலும், பண்னையாரும் பத்மினியும் திரைப்படம் பிப்ரவரி ஏழாம் தேதியும் வெளியாகவுள்ளன.

விஜய் சேதுபதி தற்பொழுது ஆர்யா மற்றும் ஷ்யாமுடன் புறம்போக்குபடத்திலும், இடம் பொருள் ஏவல், வன்மம், மெல்லிசை, ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்களிலும் தொடர்ச்சியாக நடித்துவருகிறார்.

சூர்யாவின் அஞ்சான்..!

சூர்யாவின் அஞ்சான்..!


சூர்யா- லிங்குசாமி கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.

சிங்கம் -2 படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்துவருகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

சூர்யா நடித்துவரும் இப்படத்திற்கு மன்னார் அல்லது ராஜு பாய் என்று தலைப்பிடப்படலாம் என்று வதந்திகள் பரவிவந்தன. மேலும் இப்படத்தின் டைட்டிலை அறிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துவந்தது. முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுபோல இப்படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியின் நம்பியார் ட்ரெய்லர்..!



ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படமான நம்பியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கோல்டன் பிரைடே பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கணேஷ் இயக்கிவருகிறார். இவர் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவராவார்.

ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான் விஜய், சுப்பு மற்றும் பலர் நடித்துவரும் இப்படம் நகைச்சுவையை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

நம்பியார் ட்ரெய்லர்..!



இப்படத்திற்கு விஜய் ஏண்டனி இசையமைத்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா...!

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா பொன்வன்னன்


நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனை, தேசிய விருது வென்ற நடிகையான சரண்யா பொன்வன்னன் டம்மி பீசு என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.

விஜய் வசந்த், மஹிமா,சரண்யா பொன்வன்னன், பிரபு முதலானோர் நடிப்பில் ராஜபாண்டி இயக்கிவரும் திரைப்படம் என்னமோ நடக்குது. காதல் த்ரில்லர் படமான இப்படத்தினை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துவருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இப்படத்தின் பேட்டி ஒன்றில் தான் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறித்து சரண்யா பொன்வன்னன் பேட்டியளித்தார். அப்பொழுது பிரேம்ஜியை காமெடியனாகவே, டம்மி பீசாகவே பார்த்த தனக்கு, அவரை இசையமைப்பாளராக, தனது குருவாகப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாகவும், அவரா இவர் என்று நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை செல்லமாக டம்மிபீசாக தான் நினைத்துக் கொண்டதையும் விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

என்னமோ நடக்குது திரைப்படத்தின் இசைவெளியீடு கடந்த டிசம்பர் 16ல் வெளியானது நினைவிருக்கலாம். இளைய திலகம் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!




முருகதாஸின் சம்பளத்தை பார்த்து விஜய்யே அதிர்ந்து போய்யிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் வெற்றி பெற்ற பட வரிசையில் துப்பாக்கி முக்கிய இடம் பிடித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அத்துடன் சென்னை மற்றும் கோவை உரிமையும் விஜய் பெறவுள்ளார் (அந்த உரிமை சுமார் 45கோடி வருமாம்).

ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸோ விஜய்யை காட்டிலும் அதிகம் சம்பளத்தை கேட்டு பெற்றிருக்கிறாராம். அதாவது விஜய் சம்பளத்தைவிட இரண்டு கோடி அதிகமாக ரூ 20 கோடி சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம் முருகதாஸ். இதை கேட்ட விஜய் முதலில் அதிர்ந்து போனாராம்.

பின்னர் இதையெல்லாம் கேட்டும் கேட்காமல் இருப்பது தான் நல்லது என அமைதியாக போய் விட்டாராம். ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்

இயக்குனர் எம்.ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும் அறிமுகமானார். அறிமுகப் படமே அட்டகாசமான வெற்றியைத் தந்ததால், அப்படத்திற்குப் பிறகு இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

சசிக்குமாரின் சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது கதிர்வேலன் காதல். உதயநிதி ஸ்டாலினுக்கும் இது இரண்டாவது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா உதயநிதியின் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தினைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் ”காதலித்த பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்ககூடாது; இது பசங்களுக்கும் சரி, பொண்ணுங்களுக்கும் சரி நல்ல விசயம்தான்” என்று விளையாட்டாகத் தெரிவித்தார்.

இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ல் வெளியாகவுள்ளது.

கணினியில் இருந்து கண்களைக் காக்க ..!

கணினியில் இருந்து கண்களைக் காக்க..!


கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணிபுரிவீர்கள் என்று கூறவும். அப்போது மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியை வடிவமைப்பார்கள்.

3. மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணிபுரிந்து கொண்டிருந்தால், அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்குப் புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை கண் சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4. கணினியில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள்.

இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6. ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடலாம்.   

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

 

இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.

 ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும். அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர். வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும்.

 * பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும்.

 * உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது.

 * எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்.

 * சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர். ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 
back to top