.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 11, 2013

திருமண ஆல்பம் சுலபமாக தயாரிக்க - Wedding Album Maker!

திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளீக செய்யவும. இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.    இதில் நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள + பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.   இதில்...

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

 நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன். C  - Common O  - Oriented M  - Machine P  - Particularly U  - Used for T  - Trade E  - Education and R  - ResearchCOMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and...

பயமே கூடாது.........குட்டிக்கதை

ஒரு சிங்கமும் ...யானையும் நண்பர்களாக இருந்தது.ஒரு நாள் சிங்கம் யானையிடம் தனக்கு சேவல் கூவும்போது பயமாயிருக்கும் என்றது...அதைக்கேட்ட யானை...சிங்கத்தைப் பரிகசித்தது.. 'பல மிருகங்கள்,உன்னை காட்டுக்கு ராஜா எனக் கூறி உன்னிடம் பயப்படும் போது..கேவலம்..நீ..ஒரு சேவலுக்குப் பயப்படுகிறாய் என்றது..''அப்போது..ஒரு 'ஈ ' ஒன்று பறந்து வந்து..யானையின் காதருகே அமர்ந்தது..உடனே பயந்த யானை..தன் காதுகளை பலமாக ஆட்டியது. 'ஈ' க்கு பயந்த யானையைப் பார்த்து 'என்னை பரிகசித்த நீ கேவலம் 'ஈ' க்கு பயப்படுகிறாயே 'என்றது சிங்கம்.'அது என் காதிற்குள் போனால் ..நான் அவ்வளவு தான்' என்றது யானை.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் பயம்..ஆனால் பயம் என்பதே அர்த்தமில்லாதது...நாம் வழ்வில்...

இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி!

கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு, இலவச மொபைல் போன்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச டேப்லெட் கம்ப்யூட்டர்களை வழங்குவதற்கு, தொலைதொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், 2.5 கோடி பேருக்கு, மொபைல் போன்கள் வழங்கவும், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ்-2 மாணவர்கள், 90 லட்சம் பேருக்கு, டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இத் திட்டம், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு முன், துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தொலைதொடர்பு துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான தொலை தொடர்பு ஆணையம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இத் திட்டத்திற்கு ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இது விரைவில், மத்திய...

ஆரஞ்சு க்ரீன் ஐஸ் டீ!

 தேவையான பொருட்கள்: க்ரீன் டீ பேக் - 2 தண்ணீர் - 1 கப் ஆரஞ்சு ஜூஸ் - 1 கப் தேன் - 1 கப் எலுமிச்சை ஜூஸ் - 1/2 கப் இஞ்சி சாறு - 1/2 டீஸ்பூன் ஐஸ் கட்டி - 6  செய்முறை: • முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் க்ரீன் பேக்குகளை டீயின் நிறம் வரும் வரை ஊற வைத்து, குளிர வைக்க வேண்டும். • பின்னர் அதில் ஆரஞ்சு ஜூஸ், தேன், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். • பின்பு அதனை டம்ளரில் ஊற்றி, அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சூப்பரான ஆரஞ்சு க்ரீன் ஐஸ் டீ!!!&nb...

வேர்க்கடலை சாலட்!

 தேவையான பொருட்கள் : வேர்க்கடலை - 1 கப் வெங்காயம் - 1 வெள்ளரிக்காய் - 1 கேரட் - 1 மாங்காய் - 1 ப.மிளகாய் - 1 எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி தழை -  சிறிதளவு செய்முறை :• வேர்க்கடலையை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். • வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை ஒரே அளவில் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் • கேரட்டை துருவிக் கொள்ளவும். • ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை போட்டு கலக்க வேண்டும். • கடைசியாக எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்....

முயற்சி வேண்டும்.........குட்டிக்கதை

ராமன் பள்ளிப்பாடங்களை சரிவர படிக்கமாட்டான்.அதனால் அவனால்...அவன் நண்பன் லட்சுமணனைப்போல அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை.நாளை முதல் தேர்வு ஆரம்பம்.கடவுளிடம் ராமன் ..இந்த முறை லட்சுமணனைவிட அதிக மதிப்பெண்கள் கிடைக்குமாறு செய் என வேண்டினான்.ஆனால் தேர்வு முடிவு வந்ததும்...லட்சுமணனுக்கே அதிக மதிப்பெண்கள்.கோவிலுக்கு வந்த ராமன் ..'கடவுளே.. நான் உன்னை அவ்வளவு வேண்டியும் என்னை ஏமாற்றிவிட்டாயே!' என்றான்.ஆண்டவன் உடனே அவன் முன் தோன்றி..'ராமா..உனக்கே மதிப்பெண்கள் அதிகம் கிடைக்க வழி செய்ய நான் முனைந்தேன்..ஆனால் அதற்கு நீ படித்து..பதில்களை எழுதியிருந்தால் மட்டுமே என்னால் முடியும்.ஆனால் நீ எழுதியிருந்தவை எல்லாம் தவறு என்று தெரிந்து என்னால் எப்படி...

கையே சுகாதாரமானது.........குட்டிக்கதை

ராமனும்,லட்சுமணனும் நண்பர்கள்.ஒரு முறை அவர்கள் இருவரும் ஒரு நண்பனின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றார்கள்.ராமன்...உணவை,எடுத்து சாப்பிட ஒரு ஸ்பூனும்..ஒரு ஃபோர்க்கும் கேட்டான்.லட்சுமணனோ..தன் கையால் உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்...உடனே ராமன் அவனைப் பார்த்து 'ஸ்பூனை உபயோகித்து சாப்பிடு...அதுதான் சுகாதாரமானது...சுத்தமானது..'என்றான்.ஆனால் லட்சுமணன் சிரித்துக்கொண்டே...'இல்லை..ராமா..கைதான் சிறந்தது..இது தான் சுகாதாரமானது...ஏனெனில் என் கையை என்னைவிட வேறு எவரும் பயன்படுத்தி இருக்கமுடியாது'என்றான்.ராமன் வாய் மூடி மௌனியானான்.(உண்மையில் இது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும்...நம் நாட்டின் ஜனாதிபதியாயிருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த சம்பவம்)&nb...

காலி வாட்டர் பாட்டில் கொடுத்தால் ரயில் டிக்கெட்! – சீனா அதிரடி

காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 2 சப்வே ரயில் நிலையங்களில், காலி பாட்டில் சேகரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலி பாட்டிலை இயந்திரத்தில் போட்டால், 0.15 டாலர் அளவுக்கு ஒரு சிறு தொகை வாடிக்கையாளருக்கு கிடைக்கும். 15 பாட்டில் போட்டால், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு டிக்கெட் எடுக்கும் அளவுக்கு...

ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அமெரிக்கரான புனீத் தல்வாரை நாட்டின் மிக முக்கிய தூதரக பதவிக்காக பரிந்துரைத்துள்ளார். மத்தியக் கிழக்கு பகுதிகளுக்கான விவகாரங்களில் கடந்த 4 வருடங்களாக ஒபாமாவின் ஆலோசராக புனீத் தல்வார் விளங்கினார். அவரை, அரசியல் ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக நியமிக்க நேற்று ஒபாமா பரிந்துரைத்தார். அமெரிக்க அரசுத்துறையின் மிக உயரிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராக புனீத் தல்வார் விளங்குகிறார். கடந்த ஜூலை மாதம் நிஷா தேசாய் பிஸ்வால் என்பவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளியுறவு உதவி செயலாளராக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பதவிகளும் செனட் சபையால் உறுதி செய்யப்படவுள்ளது.மேலும்,”நாட்டின்...

ஆண்டவன் படைப்பில்.........குட்டிக்கதை

ஒரு காட்டில் இருந்த மான் தண்ணீர் குடிக்க தண்ணீர் அதிகம் இருந்த குளத்தருகே வந்தது.தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தது.தனக்கு ஆண்டவன் அளித்துள்ள அழகான உருவத்தையும்...புள்ளிகளையும் கொம்புகளையும் கண்டு மகிழ்ந்தது.அப்போது சிறுத்து நீண்ட தன் கால்களைப் பார்த்தது.என்னை இவ்வளவு அழகாக படைத்த இறைவன் ...கால்களை இப்படி படைத்துவிட்டாரே என வருந்தியது.அச்சமயம் ஒரு சிங்கம் ...அந்த மானை அடித்து சாப்பிட எண்ணி மானை நோக்கிப் பாய ...அலறி அடித்து மான் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடி தப்பியது.அப்போது அது.. ஆண்டவன் தனக்கு ஏன் இப்படிப்பட்ட கால்களைக் கொடுத்தான் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றியைச் சொன்னது.ஆண்டவன் படைப்பில் காரணமில்லாமல் எதையும் அவன் செ...

இந்திய இயக்குநரின் ‘தி சீக்ரெட் வில்லேஜ்’ மர்மத் திரைப்பட கதை + ஸ்டில்ஸ்!

இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் ‘தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார்.ஜோனாதன்பென்னட்-ன் 50வது படம்தான் இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘மெமோரியல்டே’, மீன்கேர்ள்ஸ்’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.அலிஃபால்க்னர்–“திடிவிலைட்சகா – பிரேக்கிங்டான் – பார்ட் 1” மற்றும் “பேட்கிட்ஸ்கோடூஹெல்”படத்திலும், ஸ்டெலியேசவன்டே–“ஏ பியூட்டிபுல்மைன்ட்,” “அக்லிபெட்டி” படத்திலும் நடித்தவர். ரிச்சர்ட்ரைல்-ன் 210வது படம்இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘ஹாலோவின்’, ஆபீஸ்ஸ்பேஸ்”...

டிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில் பணி வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: அதிகாரிகல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளார்க் பணியில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (HR BD), City Union Bank Ltd., Cenetral Office, 149, TSR (BIG) Street, KUMBAKONAM 612001, Tamil Nadu.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2013மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cityunionbank.com என்ற இணையதளத்தைப்ப...

புத்திசாலிச் சிறுவன்.........குட்டிக்கதை

ஒரு நாள் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் ஒரு சிறுவன் உதைத்த பந்து அருகில் இருந்த மரத்தின் பொந்திற்குள் விழுந்தது.பந்துக்கு சொந்தக்காரச் சிறுவன் அழ ஆரம்பித்தான்.அந்தப் பந்தை பொந்திலிருந்து எப்படி எடுப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.அப்பொழுது ஒரு புத்திசாலிச் சிறுவன் அருகிலிருந்த வீட்டிலிருந்து ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து பொந்திற்குள் கொட்ட பந்து எழும்பி தண்ணீரின் மேல் வந்தது. அந்த பந்தை எடுத்து உரிய சிறுவனிடம் ஒப்படைத்தான்.எந்த ஒரு காரியத்திற்கும் சற்று சிந்தித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்....

செய்யும் தொழிலே சிறந்தது.........குட்டிக்கதை

பரந்தாமன் கல் உடைப்பவன்.கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான்.ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'.'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும்..நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே'சூரியனாக வேண்டும் ' என்றான்.கடவுள் சம்மதம் தெரிவிப்பதற்குள் சூரியனை மேகம் மறைத்தது . உடனே 'மேகம் ஆக வேண்டும்' என்றான்.மேகத்தை மழை மேகங்கள் மறைக்க ..தான்' மழை மேகமாக' ஆக வேண்டும் என்றான்.மேகம் மழையாகப் பெய்தபின் 'மழையாக' வேண்டும் என்றான்.மழைநீர் நதியாக ஓடியதைப் பார்த்து 'நதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்பட்டான்.ஓடி வந்த நதியை ஒரு பெரிய பாறாங்கல் தடுத்ததைப் பார்த்து 'கல்லாக வேண்டும்'என்றான்.உடனே கடவுள் அந்தக் கல்லையே உடைக்கும்...

நாயும் ... எலும்புத்துண்டும்.........குட்டிக்கதை

டாமி என்ற நாய்க்கு....ஒரு நாள் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததுஎலும்பைக் கடித்து அதிக நாட்கள் ஆகிவிட்டபடியால் ..அது மிகவும் சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு ஓடியது.வழியில்...ஒரு ஆற்றின் பாலத்தை அது கடக்க நேரிட்டது...அப்போது ஆற்றின் நிழலில்.. இதன் நிழல் தெரிந்தது.ஆனால் டாமியோ..'வேறு ஒரு நாய் ஒன்று..தன்னை விட பெரிய எலும்புத் துண்டோடு..நிற்கிறது என எண்ணியது.தன்னிடமிருப்பதைவிட ..அந்த எலும்புத் துண்டு சற்று பெரிதாக இருப்பதாக எண்ணியது.தண்ணீரில் தெரிந்த தன் நிழலுடன் சண்டைபோட்டு ...அதை பறிக்க திட்டமிட்டு தன் நிழலைப் பார்த்து குரைத்தது.அப்போது ...அதன் வாயிலிருந்த எலும்புத்துண்டு தண்ணீரில் விழுந்தது.டாமி ஏமாந்தது.அதற்கு எதுவுமே இல்லாமல் போயிற்று.இதனால்...

கனடாவில் "சூப்பர்மேன்' நாணயம் வெளியீடு!

 சூப்பர்மேன் 75-வது பிறந்த நாளையொட்டி கனடா அரசு தங்க நாணயம் உள்ளிட்ட 7 வகை நாணயங்களை வெளியிடுகிறது.உலகம் முழுவதும் காமிக்ஸ் புத்தக வாசகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பது சூப்பர்மேன் கதாபாத்திரம்.1938 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஜோ சஸ்டர் என்பவர் உருவாக்கினார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்ரி சீகல்."சூப்பர்மேனின்' 75-வது பிறந்தநாளையொட்டி கனடா அரசு தங்கம், வெள்ளி, நிக்கல் உலோகம் உள்பட 7 வகை நாணயங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. 14 காரட் தங்க நாணயங்களில் சூப்பர் மேனின் உருவத்தை பொறிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி கனடாவின் குடியேற்ற அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் கூறும்போது, எங்களது அரசு கனடாவின் வரலாறு, பாரம்பரியம், போன்றவற்றை கொண்டாடுகிறது. சூப்பர்மேன் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றல், பண்புகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில்...

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க இந்தியர்கள் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர், விண்ணப்பித்து உள்ளனர்.செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி, பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றன."செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால், அந்தக் கிரகத்தில் உயிர் வாழ முடியும்' என, சில விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். றஇதற்கிடையே சில நிறுவனங்கள், செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவும், அங்கே குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளன.நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, "மார்ஸ் ஒன்' என்ற, செவ்வாய் கிரகப் பயணத் திட்ட நிறுவனத்தின் தலைவர், பாஸ் லேன்ஸ்டார்ப், 2023ம் ஆண்டுக்குள், சிவப்பு கிரகத்தில், மக்கள் குடியேற்றத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்.இதுகுறித்து, லேன்ஸ்டார்ப் கூறியதாவது:செவ்வாய்...
 
back to top