.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 7, 2014

ஒழுக்கம், பஞ்சுவாலிட்டி நிறைந்தவர் விஜய் - மோகன்லால் புகழாரம்

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளைய தளபதி விஜயை மனமாரப் புகழ்ந்துள்ளார். விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடித்தது குறித்து மோகன்லால் சமீபமாக அளித்துள்ள பேட்டியில் விஜயின் ஒழுக்கம், நேரம்தவறாமை மற்றும் உழைப்பு ஆகியவற்றை மனமாராப் பாராட்டியுள்ளார் மோகன்லால். ஜில்லா திரைப்படத்தில் விஜயின் அப்பாவாக நடித்துள்ளார் மோகன்லால். இப்படத்தின் கதையம்சத்தால் தான் அப்பாவாக நடிப்பதாகவும், அப்பாவாக நடிப்பதால் தனது ஹீரோ இமேஜ் பாதிக்கப்படாது என்றும் கூறியுள்ளார். மதுரை மண்ணின் மைந்தனாக தான் இப்படத்தில் தோன்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார...

ஷாருக்கானை மிஞ்சிய அமீர்கான்..!

அமீர்கான், கத்ரீனா கைப், உதய் சோப்ரா மற்றும் அபிஷேக் பச்சன் நடித்து கடந்த டிசம்பர் 20ல் உலகெங்கும் வெளியான தூம் 3 திரைப்படம் 500 கோடிகளுக்கும் மேலாக வசூலித்து இமாலய வெற்றியடைந்துள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் உருவான திரைப்படம் தூம் 3. பாலிவுட் ஏக்சன் படவரிசையான தூம் படத்தின் மூன்றாம் பாகமான இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்திருந்தார். இப்படம் உலகெங்கிலும் சேர்த்து மொத்தமாக சுமார் 500 கோடிகளுக்கும் மேலாக வசூல் சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 500 கோடிக்கும் மேலாக வசூல் செய்ததால் இந்தியாவில் தயாரான படங்களில் அதிகமாக வசூல் செய்த படங்களில் இப்படம் முதல் இடத்தைப்...

வெப்கேமில் சிக்கிய திருடன்

பொதுவாக நம்மூரில் விடுமுறைக்கு வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது பாதுகாப்பைற்காக அருகே உள்ள காவல் நிலையத்தில் த‌கவல் தெரிவிக்குமாறு சொல்வார்கள். அதனால் பயன் இருக்குமா என்பது வேறு விசஷயம்.நாமும் நம் திருப்திக்காக பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி வைப்போம். இவற்றோடு இனி வெப்கேமிராவையும் ஆன் செய்துவிட்டு செல்லலாம். அப்ப்டியாயின் எங்கிருந்தாலும் விட்டின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம். அப்படியே யாராவது தப்பித்தவறி திருடர்கள் நுழைந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். பொறி வைத்து எலியை பிடிப்பது போல வெப்கேமில் திருடனை பிடிப்பது எல்லாம் நட‌க்கிற கதையா என்று கேட்க வேண்டாம். அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது வெப்கேம் மூலம் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்த...

ஒரு ஊர்ல ஒரு ஊழல் கணக்கு ?

புள்ளி விவரங்கள் பொதுவாக போரடிக்கக்கூடியவை. சமயத்தில் அதுவே சுவாரசியம் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு. அக்கப்போர் விவரங்களாக இருக்கும் பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் கீழே கிடந்தால் எடுத்து அப்படியேவா கொடுத்துவிடுவோம்? அவசரமாகத் திறந்து ஒரு புரட்டு புரட்டமாட்டேன் என்றால் நீங்கள் மகாத்மா. நானெல்லாம் பாபாத்மா.இங்கே கவனியுங்கள். இது ஒரு புள்ளி விவரம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் போன்ற ஒன்று. இந்தியாவின் பக்கத்து வீட்டுக்காரர் சம்பந்தப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் 36,907 அரசு அதிகாரிகள் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த முப்பத்தி ஆறாயிரத்தி சொச்சம் பிரகஸ்பதிகளும்...

ஏழு அணிகள், ஏழு வீரர்கள் கொண்ட ஏழு ஓவர் கிரிக்கெட்!

துபையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும்.இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபையில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின்...

வீரம் படத்தைப் பற்றித் தனது அனுபவங்களைப் பகிர்கிறார் தமன்னா!

தல அஜித் மற்றும் தமன்னா நடிப்பில் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது வீரம் திரைப்படம். இப்படத்தை பற்றித் தமன்னா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது வீரம் திரைப்படம். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்குஇசையமைத்துள்ளார்.இப்படத்தில் அஜித்திற்குச் ஜோடியாக நடித்துள்ள தமன்னா தனது வீரம் திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுடன் நேரடியாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். நாளை மாலை 4 மணியளவில் ரசிகர்கள் தங்களது கேள்விகளைத் தமன்னாவிடம் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்கலாம்.தமன்னாவின் ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/Tamannaahநீண்ட...

வீரம் படத்தைப் பற்றித் தனது அனுபவங்களைப் பகிர்கிறார் தமன்னா !

தல அஜித் மற்றும் தமன்னா நடிப்பில் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது வீரம் திரைப்படம். இப்படத்தை பற்றித் தமன்னா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது வீரம் திரைப்படம். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்திற்குச் ஜோடியாக நடித்துள்ள தமன்னா தனது வீரம் திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுடன் நேரடியாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். நாளை மாலை 4 மணியளவில் ரசிகர்கள் தங்களது கேள்விகளைத் தமன்னாவிடம் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்கலாம். தமன்னாவின் ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/Tamannaah நீண்ட...

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' - பெண்கள் ...

காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' என்று காதலி கேட்டால், காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள்...

எனக்காகவும் கொஞ்சம்...!

எனக்காகவும் கொஞ்சம்...! ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம். அனைவரும் கொஞ்சம் இத படிங்க!! மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா? தந்தை: கேளேன்... மகன் : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிகிறீர்கள்? தந்தை: 100 டாலர் ... மகன் : அப்படீனா எனக்கு 50 டாலர் தாங்கப்பா! தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 டாலரை மகனிடம் கொடுத்தார். மகன் சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டான். அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தான். தந்தை: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்? மகன் : முன்பு என்கிட்ட...

அவசரப்படாதே.! கொஞ்சம் பொறுமையா இரு.!

*ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்." இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "" என்ன சொல்றே?நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.அப்பா...என்னம்மா... யார் இந்த பையன்இவர்தாம்பா அவர்அவர் ...ன்னாஅதுதான்...

விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.இந்த தகவல்களை எல்லாம் இணையத்தில்...

பெண்கள் ரயிலில் பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க தனி இ-மெயில்!

ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயிலிலும் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை.அத்துடன் பயணிகள் தங்கள் குறை களை ஹெல்ப் லைன்களிலும் (90031 61710, 044-25353999) தெரிவிக்கலாம்.மேலும் முக்கியமான 20 ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் தற்போது இரவு நேரத்தில் 96 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அப்போது பெரும்பாலும் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பெண்களை கேலி...

ஆக்ஸிஜன் பயன்பாடு…

பொது அறிவு: ஆக்ஸிஜன் பயன்பாடு… ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதன் சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். காரணம், ஆக்ஸிஜன் இல்லாமல் மனித மூளையால் செயல்பட முடியாது. நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்ஸிஜனில், சுமார் 20 சதவீதம் ஆக்ஸிஜனை நமது மூளையே பயன்படுத்துகிறது. சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனாலும், மனிதன் உணர்வற்ற நிலைக்குத் தள்ளப் படுவான். அடுத்த சில நொடிகளில் மூளையின் செல்கள் இறந்து, மனிதன் மரண நிலைக்குத் தள்ளப்படுகிறான். இருப்பினும் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மனித மூளைக்கு மிகக் குறைந்த ஆக்ஸிஜன் போதுமானது. காரணம், மிகக் குறைந்த வெப்பநிலையில் மூளையானது மிகக் குறைந்த ஆக்ஸிஜனையே உபயோகிக்கிறது. எனவே,...

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்!!! நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம். அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ...

‘வாய் துர்நாற்றமா..?’ பயம் வேண்டாம்..!

கொட்டிவாக்கத்தில் இருந்து வந்திருந்த சுந்தர்ராஜன் என்பவரின் அனுபவம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் சொன்னது: “என்ன காரணமோ தெரியவில்லை. சமீபகாலமாக என் வாயில் கெட்ட வாடை! நான் பேசும்போது, வாயில் இருந்து சகிக்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம்! அதனால், என்னுடன் அமர்ந்து உரையாடுவதற்கே பலரும் தயங்கினர். நான் பேசத் தொடங்கியதும், அருகில் உட்காரமுடியாமல் சிலர் எழுந்து போய்விடுவார்கள். ‘நான் பேச ஆரம்பித்தவுடன் ஏன் அவர்கள் எழுந்து போகிறார்கள்’என்று காரணம் தெரியாமல் ஆரம்பத்தில் அவதிப்பட்டேன். பின்னர்தான் தெரிந்தது... ‘என்னுடைய வாயில் இருந்து வெளிவரும் நாற்றம்தான் அதற்குக் காரணம்’என்று. நீண்டநேரம் பல் துலக்குவேன். அப்படியாவது, ‘வாயிலிருந்து வரும் துர்நாற்றம்...

தமிழ்ப்புத்தாண்டில் வருகிறார் கோச்சடையான்..!

இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ள அனிமேஷன் படம் ‘கோச்சடையான்’. கடந்த டிசம்பர் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாள் அன்றே இப்படம் திரைக்கு வருவதாக சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டு வந்தது. அதையடுத்து, டிசம்பரில் ஆடியோவை வெளியிட்டு பொங்கல் அன்று படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால், பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் திரைக்கு வருவது உறுதியானதால், தியேட்டர் பிரச்னை ஏற்படும் என்று கோச்சடையான் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கோச்சடையான் ஆடியோவை வாங்கியுள்ள சோனி நிறுவனம் ஆடியோவை பிப்ரவரி 15-ந்தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து படம் தமிழ்ப்புத்தாண்டு...

நான் சிவப்பு மனிதன் படத்துக்காக ஜிவி பிரகாஷ் இசை..!

நான் சிகப்பு மனிதன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம்பேக்டரி இணைந்து தயாரிக்கும் படம், நான் சிகப்பு மனிதன். திரு இயக்கும் இந்தப் படத்தில் விஷால் ஹீரோ. அவர் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் சுந்தர் ராமு, ஜெகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு தமன் இசை அமைப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இதுபற்றி யுடிவி தனஞ்செயன் கூறும்போது, முதலில் ஜி.வி.பிரகாஷ்குமாரிடம்தான் இசை அமைக்கக் கேட்டோம். அவர் மற்றப் படங்களில் பிசியாக இருந்ததால் முடியவில்லை. நாங்கள் படத்தை விரைவில் முடிக்கத் திட்டமிட்டு இருப்பதால் பிறகு தமனிடம் பேசினோம். அவரும்...

பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை....!

புதிய உலகத்தில்பெரியமனுசியாய்கடமைகளுடன்கால்தடம் பதிக்கிறாய்.வா.பெருமையுடனும்மரியாதையுடனும்வலிமை பொங்கநடந்து வா.இன்று முதல்நீ -நம் மக்களின் தாய்.நம் தேசத்தின் தாய்.பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின்...

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!             நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!           ...

உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?

என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி , பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.இரண்டில் "எது ஜெயிக்கும்?""நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்""எப்படி? உங்களுக்கு புரியவில்லையா?"எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்....சரி, நம்முடைய...

முதுகு வலி : 10 எளிய தீர்வுகள்..!

நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும். ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம். எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு...

அன்புள்ள கணவருக்கு...

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!! அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை. கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.. ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து...
 
back to top