
ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன.அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியே சென்றான்.ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது,இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டுபோகாதா என்று வியந்தான்.அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டுபோகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும்போதுஇந்த கயிற்றால்தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும்போது இந்தகயிறுகள் அறுக்கவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால்கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சிசெய்வதில்லை என்று பாகன் சொன்னான்.அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்,இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்தகயிற்றை அறுத்து கொண்டு போகலாம்...