.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 15, 2013

டைபாய்ட் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறை!

டைபாய்ட் காய்ச்சலைப் பரவும் கிருமி மனித உடலில் ஒரு முறை நுழைந்து விட்டால் அது நிரந்தரமாக மனிதக் குடலில் ஒட்டிக் கொள்கிறது.மிகக் கடுமையான காய்ச்சலை கொடுக்கும் டைபாய்ட் கிருமியிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.அதற்கு, பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே உண்ண வேண்டும்.நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும்.சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும்.எந்த பழங்களையும் கழுவாமல் சாப்பிடக் கூடாது.டைபாய்ட் காய்ச்சலுக்கு என்று இருக்கும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை போட்டுக் கொள்ள வேண்டும்.சாலையோரம் விற்கப்படும் குளிர்பானங்களில் ஐஸ் கட்டிகளை போட்டுக் கொள்வதை...

மிக உயர்ந்த தொட்ட பெட்டா சிகரம் - சுற்றுலாத்தலங்கள்!

            தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் என்றும், தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மலை என்றும் கூறப்படுகிறது தொட்ட பெட்டா. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் உள்ளது தொட்ட பெட்டா மலை. இது மிக அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மலையாகும்.இது தமிழக அரசின் சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்ட பெட்டா மலை அமைந்துள்ளது. இந்த மலையில் இருந்து சாமுண்டி மலை அழகாகக் கண்டு ரசிக்கலாம். சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் தொட்டபெட்டா, காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே பொது மக்களின் பார்வைக்காக...

ரூ.8 கோடி செலவில் வண்டலூரில் சைக்கிள் ரேஸ் உள் விளையாட்டரங்கம்!

 சைக்கிள் ரேஸ் பிரியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி... சென்னையில் முதல் முறையாக சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கம் கட்டப்பட உள்ளது. இந்த விளையாட்டரங்கத்துக்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.நகரின் மையப்பகுதியில் இந்த விளையாட்டு அரங்கம் அமைய வேண்டுமென்பதற்காக செனாய் நகர் திருவிக பூங்கா அருகே ஒரு இடத்தை தேர்வு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) கோரிக்கை வைத்தது. இந்த இடத்தையும், வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தையும் மாநகராட்சி ஆய்வு செய்தது. இறுதியில், வண்டலூரில் சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:செனாய்...

ஏரியாவில் பவர் கட்டா...? உடனே டயல் பண்ணுங்க!

கால் சென்டர் நம்பர்    155333    9445850829பெல்ஸ் ரோடு    25361336    9445850782பூக்கடை பஜார்    25340708    9445850783உயர் நீதிமன்றம்    25341964    9445850784புதுப்பேட்டை    28451469    9445850785நுங்கம்பாக்கம்    28330162    9445850786மயிலாப்பூர்        28112526    9445850787ராயப்பேட்டை    28419823    9445850788மந்தைவெளி    24941134    9445850789எழும்பூர்  ...

கொசு உற்பத்திக்கு காரணமானவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் அபராதம் வசூல்!

சென்னையில் எந்த ஏரியாவில் பார்த்தாலும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் என புதிய புதிய கட்டிடங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கட்டுமான பணி நடைபெறும் இடங்கள் சுகாதாரமாக இருப்பதில்லை.சாலையில் கழிவுநீர் தேங்குதல், தேவையற்ற டயர், பைப் உள்ளிட்ட உபகரணங்களை சாலையிலேயே போட்டு வைப்பது, கட்டுமான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது என கட்டுமானப்பணி நடக்கும் இடங்களால் சுற்றுப்புறப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. கொசுக்களால் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.இதனால்,...

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்!

                                       நம் வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இவை இரண்டையும் இரு கண்கள் என்றே கூறலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி வரும் நாள், நட்சத்திர, திதிகளை அனுசரித்தே ஒவ்வொரு விஷயமும், விசேஷமும் மேற்கொள்ளப்படுகின்றன. நம் வாழ்வில் நடக்கும்...

மதுரை மாவட்டத்தின் வரலாறு!

இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது. மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது. சீனப் பாசி கலந்த ஒரு வகை குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றலாப் பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய...

" ஆண்டவன் யார்.." (நீதிக்கதை)!

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு ஒரு நாள் கடவுள் என்பது யார்? அவரது ஆற்றல் எஎன்ன? என்ற சந்தேகம் எழுந்ததுஅந்த சந்தேகத்தை தீர்க்க அவனது அமைச்சர்கள் யாராலும் முடியவில்லை.அதனால் கோபம் அடைந்த அரசன்,தன் தலைமை அமைச்சரிடம் " என் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு... நாளை வரை அவகாசம் தருகிறேன்' என்றான்.தலைமை அமைச்சரும் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார்.அவர் வருத்தத்தை அறிந்த அவரது பத்து வயது மகள் 'நான் நாளை வந்து அரசரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் ' என்றாள்.அடுத்த நாள் அரச சபையில் அரசனிடம் அவள் ' அரசே ஒரு குடுவையில் பால் வேண்டும்' என்றாள்.பால் கொண்டு வந்து தரப்பட்டது.பால் கொண்டு வந்தவனைப் பார்த்து அவள்...'இந்தப் பாலின் நிறம் என்ன ' என்றாள்.'வெள்ளை நிறம்'  என்றான் அவன்.'இப்பாலைக் கறந்த மாடு என்ன நிறம்' என்றாள்.'கருப்பு நிறம்''அந்த கருப்பு நிற மாடு எதைத் தின்று இந்த பாலைத்...

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 4...!

பதின்மூன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:                              கி.பி 1260 ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்  Beatus world map, 1203   Ebstorf mappamundi, 1234Gervase of Tilbury    Matthew Paris' world map, 1250  Hereford mappamundi, 1290Richard de Bello of Haldingham       T-O map, from a 13 th century manuscriptoriented with East at the top பதினான்காம் நூற்றாண்டு உலக வரைபடம்:            உலக புகழ் பெற்ற அட்லஸ் உலக வரைபடம் ஆரம்பிக்க பட்டது...

இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்! – ஜெயலலிதா ஆணை!

சென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சி சென்னை சங்கமமாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகின்றன. தமிழரின் அறுவடைத் திருவிழா மற்றும் புத்தாண்டான பொங்கல் திருவிழாவினை ஒட்டி ஓரிரு வார காலத்திற்கு இது நடத்தப்படுகிறது.இதன் அமைப்பாளர்களின் கூற்றுப்படி இதுவே இந்தியாவில் நிகழும் நீண்ட மற்றும் பெரிய திறந்தவெளி கலைவிழாவாகும்.இந்நிலையில் அரசுத்துறைகள் மற்றும் தனியார் அமைப்புக்கள் இணைந்து தமிழகம் முழுவதும் புதிய கலைநிகழ்ச்சிகளை நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்..தமிழ்நாட்டின்...

டிகிரி முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டில் பணி வாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனமான Rubber Board நிறுவனத்தில் காலியாக உள்ள Director, Assistant Account Office, Scientific Assistant, Farm Assistant, Rubber Tapping Demonstrator & Junior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 63துறைவாரியான காலியிடங்கள் விவரம்:1. Director (P&PD) – 012. Assistant Account Officer – 023. Statistical Assistant – 014. Scientific Assistant – 035. Farm Assistant -146. Rubber Tapping Demonstrator -147. Junior Assistant – 28வயதுவரம்பு: 27 – 55-க்குள் இருத்தல் வேண்டும்.பணி வாரியான கல்வித்தகுதி விவரம்:Director (P&PD)...

இரவு நேரத்தில் நடந்த சோகம்! 52 பேர் பலி!

 பெரு நாட்டில் மலை சரிவிலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடான பெருவின் சான்டா தெரசா மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று மலை பாதையில் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே வந்த சரக்கு லாரிக்கு வழி விடுவதற்காக, ஒதுங்கிய போது மலை சரிவில் உருண்டு சவுபிமாயோ நதியில் விழுந்தது.நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பேருந்தில் இருந்த பயணிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.இந்த விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக பலியாயினர்.இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால், யாரையும் மீட்க முடியவில்லை.Peru 'bus' crash kills 51, including 14 children, on way home from...

ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம்!

ஆரோக்கியத்தை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் அன்றாட சந்தோஷத்தை சாட்டிலைட் சானல்களிலும் அடகு வைத்துவிட்ட இன்றைய சமூகம் நிழலைத் தொடரும் நிஜமாக இருக்கிறது.பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தாலும் குழந்தைப் பிறப்பில் எப்போதும் ஏற்றத்துடன்தான் இருக்கிறது. விஞ்ஞானம் இன்று ஒவ்வொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து விட்டுதான் குழந்தையை வெளியில் எடுக்கிறது. ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம் புகட்டப்படுகின்றன என்பது புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயாக சமூகத்தில் ஆகிக் கொண்டிருக்கிறது. திரைக்கடல் ஓடி திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைப்படத்திற்காக தற்கொலை செய்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறோம்.பகட்டுப் படிப்பு, 12 மணி நேர அலுவல், கைபேசிக்...

புது அம்சங்களுடன் G Pad 8.3 அறிமுகம்!

பிரபல எல்ஜி நிறுவனம் G Pad 8.3 என்ற புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.தென் கொரியாவில் விற்பனை செய்யப்படும் இந்த டேப்லெட், இந்தாண்டு இறுதிக்குள் 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்.இது கறுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் வரும்.முக்கிய அம்சங்கள்1.7Ghz Qualcomm Snapdragon 600 CPU.2GB RAM.16GB internal storage.microSD card slot.5 megapixel rear-facing camera.1.2 megapixel front facing camera.8.3 inch 1920 x 1200 HD IPS display.Android Jelly Bean 4.2...

கதவு எங்க போச்சு! நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் பரபரப்பு!

அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டரி விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. இதையடுத்து திரும்பி பார்த்த விமானி விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். விமானத்தை தாழ்வாக பறக்க செய்து கதவு எங்கே விழுந்திருக்கிறது என்று தேடினார். இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் தன்னுடைய ஹோட்டல் மீது விமானத்தின் கதவு விழுந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார். எனினும் இந்த...

உடல்நிலை சரியில்லாதபோது ஒதுக்க வேண்டிய உணவுகள்!

விடுமுறை நேரம், ஓய்வு நேரம் போன்ற நேரங்களில் நமக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்தோ அல்லது வெளியில் வாங்கியோ தருவார்கள்.நாமும் வஞ்சனை இல்லாமல் அனைத்தையும் ஒரு கட்டு கட்டுவோம். அதனால் பெரும்பாலும் இக்காலத்தில் அடிக்கடி வந்து போகும் சளியும், காய்ச்சலும் உங்களை பிடித்து கொள்ளும் காலம் இது.இந்த சளியை போக்க பூண்டு, இஞ்சி, நீர் சேர்த்தல் என பல இயற்கை சிகிச்சைகள் இருக்கத் தான் செய்கிறது.இருப்பினும் எந்த உணவு வகையை தவிர்த்தால் இப்படி நோய்வாய் படாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டால் இவ்வகை உணவுகளை கண்டுபிடித்து அவைகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால் வெகு விரைவிலேயே குணம் அடையலாம்.சாதாரண நேரத்தை விட நோய்வாய்...

எல்.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் வளைமேற்பரப்பினைக் கொண்ட G-Flex!

எல்.ஜி நிறுவனமானது வளைந்த மேற்பரப்பினை உடைய தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்துகின்றது.6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 0.44 மில்லி மீற்றர்கள் தடிப்பையும், 7.2 கிராம் நிறையையும் கொண்டதாகக் காணப்படுகின்றன. இதற்கிடையில் சம்சுங் நிறுவனமும் தனது வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க...

கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது என்று தெரியுமா?

கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம்(Operating System) என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான எம்.எஸ். ஆபீஸ்(M.S.Office), பேஜ்மேக்கர்(Pagemaker), கோரல் டிரா(Corel Draw), ஆட்டோகேட்(Autocat) போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம்(Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை1. உள்ளீடு/வெளியீடு(Input/ Output).2. நினைவக(Memory) மேலாண்மை.3. பணி(Task) மேலாண்மை.4. பைல்(File) மேலாண்மை.கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும்...

நம்பினார் கெடுவதில்லை (நீதிக்கதை )!

கந்தனின் தந்தையிடம் நூறு ஆடுகள் இருந்தன.தினமும் காலையில் அவர் அவற்றை மேய்க்க ஓட்டிக்கொண்டு காட்டிற்கு செல்வார்.....  மாலை ஆறு மணிக்கு பிறகு அவற்றை திரும்ப வீட்டிற்கு ஓட்டி வந்துவிடுவார். அப்படி செல்கையில் ஒரு நாள் மாலை மேய்ந்துவிட்டு வந்ததும் அவற்றை பட்டியலில் அடைக்கு முன் எண்ணிப் பார்த்தார்.  99 ஆடுகளே இருந்தன.ஒரு ஆடு குறைந்தது. எல்லா ஆடுகளையும் அடைத்துவிட்டு காணாமல் போன அந்த ஒரு ஆட்டைத் தேடி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றார்.கந்தனின் தாயோ ' இரவு நேரத்தில் காட்டிற்குள் செல்லவேண்டாம்...ஒரு ஆடு தானே காணும் .... பரவாயில்லை... மீதி 99 ஆடுகள் இருக்கிறதே என்றாள்.' ஆனாலும் கந்தனின் தந்தை அந்த ஒரு ஆட்டைத் தேடிச் சென்றார். ...

கவுதம் மீது சூர்யாவுக்கு என்ன கோபம்? பகீர் தகவல்!

கவுதம் மேனன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சூர்யா. சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தில் நடிக்க முடியாமல்போனால் அல்லது நடிக்க விரும்பாவிட்டால் பேசாமல் அதிலிருந்து விலகிவிடுவார்கள். கவுதம் இயக்க இருந்த படங்களே அதற்கு உதாரணம் கூறலாம். கவுதம் படத்தில் அஜீத் நடிக்க இருந்தார். ஆனால் அந்த முடிவை அஜீத் மாற்றி, சரணுக்கு வாய்ப்பு தந்தார். யோவான் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை கவுதம் இயக்க, விஜய் நடிக்க இருந்தார்.அந்த படமும் வேண்டாம் என விஜய் ஒதுங்கிவிட்டார். இதுபோல் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் இப்போது நடந்தது இண்டஸ்ட்ரிக்கே ஆச்சரியம் தருகிறது. திடீரென நேற்று முன்தினம் இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டார் சூர்யா. அதில், கவுதமின் திசை வேறு. எனது...

‘அல்லா’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக கூடாது:மலேசியா கோர்ட் தீர்ப்பு!

‘அல்லா’என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத பிறமதத்தினர் பயன்படுத்த முடியாது என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. மலேசியா நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் தங்களது கடவுள்களை குறிக்கும் வகையில் மலாய் மொழியில் ‘அல்லா’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சொல் அரபு மொழியில் இருந்து மலாய் மொழிக்கு மருவி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், மலாய் மொழியில் வெளியாகும் கத்தோலிக்க கிருஸ்துவ நாளிதழான ‘தி ஹெரால்ட்’ கடந்த 2009-ம் ஆண்டு கடவுளை குறிப்பிட ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தது.இதனையடுத்து, மலேசியாவில்...
 
back to top