.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 16, 2013

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் தடை செய்வது எப்படி ?

அன்பு சகோதரர்களே சகோதரிகளே !... அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி...

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..

ஆடம்பரத்திற்காக பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம் பேசுவதில்லை, நம் உடல்நலத்தை கெடுக்கும் குளிர்பானம், பீட்சா, பர்கர்,வெளிநாட்டு கோழிக் கறிகள்இவற்றை வாங்கும் பொழுது பேரம் பேசுவதில்லை,நம் அந்தஸ்த்தை காட்ட அணியும் அணிகலன்கள் வாங்கையில் பேரம் பேசுவதில்லை,ஆனால் நமக்காக நம் உடல்நலத்தை மனதில் கொண்டு நல்ல காய்கறிகளை உற்பத்தி செய்யும் ஏழ்மை பட்ட விவசாயிகளிடமும்,காய்கறிகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் காய்காரர்கள், கீரை விற்கும் பெண்மணியிடமும் பேரம் பேசுகிறோம்.அந்நிய நாட்டில் தயாரிக்கப் பட்டது என்றால் அது என்னவென்றே தெரியாவிட்டாலும் அதிக விலை கொடுத்து வாங்க முன்வரும்...

நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்!

 ஒட்டும் தன்மையற்ற (நான் ஸ்டிக்), சமையல் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவை உண்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,´நான் ஸ்டிக்´ சமையல் பாத்திரங்களில், ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க, சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப்பூச்சுகள், விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் போது, வேதிப்பூச்சுகள் உணவில் கலந்துவிடுகின்றன.இதனால், இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம், மனித உடலில் கேடுகளை விளைவிக்கின்றன. இதனால், ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உண்பவர்களுக்கு,...

என் பெயர் என்ன ???.

என் பெயர் என்ன ???. நீ அழுத போது  உன்னை தரதரவென்று  இழுத்துப் போய்  பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன்  படித்து பெரிய ஆளாக  வர வேண்டும் என்ற எண்ணத்தில்  இன்று நான் அழுகிறேன்  என்னை இழுத்துப் போய்  முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே  அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று  பத்துமாதம் உன்னை வயிற்றில்  சுமந்தபோது பாரமாக  நான் நினைக்கவில்லை  உன் பத்தினி வந்ததும்  உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக  இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே  நீ ஓடி ஓடி விளையாடிய போது  நீ செல்லும் இடமெல்லாம்  உன் பின்னாலே வந்து  உனக்கு சோறு ஊட்டி  உன் வயிறு நிறைந்ததில்  என் வயிறும் மனமும்...

பேஸ்புக்கே கதி என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்கு.....!

பேஸ்புக்கே கதி என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்கு.....!சில பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் என்று இதை பிரசுரிக்கின்றேன் குறித்த கணணியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடைசெய்வதற்குபிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் அதன்பயனாளர்களுக்கு சிலவழிகளில் நன்மை தருகின்ற போதிலும், வேறுவிதத்தில் தீமை விளைவிக்கக்கூடியதாக உள்ளது.எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம்.இவ்வாறு பேஸ்புக்தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது.இம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவியபின் ஒரேஒரு கிளிக்மூலம் பேஸ்புக்தளத்தை முடக்க முடியும்.இது தவிர கடவுச் சொற்களைக்கொடுத்து முடக்கும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.Block Facebook by using following features: DOWNLOAD:- http://www.facebooklimiter....

மூச்சுத்திணறலை விரட்டும்; மூலிகைகள்!

நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.அறிகுறிகள்:காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல்.சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம்.ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக...

கனா காண்கிறேன் - கவிதை!

பல்லாங்குழி ஆடிய திண்ணை  பாண்டி ஆடிய தெரு வீதி பட்டம் விட்ட மொட்டைமாடி பாடித் திரிந்த வயல் வெளிதுரத்திப் பிடித்த தும்பி பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி காத்துக் கிடந்த கனமழை விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி விரட்டிச் சென்ற டயர் வண்டி திருடித் தின்ன மாங்காய் தோப்பு  திட்டித் தீர்த்த காவல்காரன்  அசைந்தாடிய ஆலமர ஊஞ்சல்  ஆற்றைக் கடந்த பரிசல்  அல்லி பூத்தக் குளம்  அரசமரத் தடி பிள்ளையார்  என அத்தனை நினைவுகளையும் சுமந்து சென்ற நெஞ்சம் தேடுது, எங்கே தொலைந்தது? நான் பார்த்த ஊர் என..கனா காண்கிறேன்.....

உலகை வியக்கவைக்கும் ‘எக்ஸ்-ரே கண்ணழகி’!

உடலிலுள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.ஆனால், 1987ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஊடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள்.தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை ஊடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் காலப்போக்கில் உலகம் முழுவதும் படர்ந்து பரவியது.இதையடுத்து, இவரிடம் உள்ள அற்புத சக்தியை அறிந்த உள்ளூர் மக்கள், இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி படையெடுக்க...

ஆரோக்கியததை உறுதிப் படுத்தும் கீரை வகைகள்!

நம் முன்னோர்கள் பயன்படுத்திய, நூற்றுக்கணக்கான கீரை வகைகளின் பெயர்கள் தெரியாததால் அவை களைச் செடிகளாக மாறி விட்டன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாறுபாடு, பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால், பயன்பாட்டில் இருக்கும் கீரை வகைகளும், அழிய தொடங்கி விட்டதாம்.இதற்கிடையில் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் கீரையின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை இங்கே பார்ப்போம். * புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும்....

சூப்பர் பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை இல்லாமல்..!.

இதய நோயான மாரடைப்பு ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதய ஓட்டத்தை நிறுத்தா வண்ணம் பேஸ்மேக்கர் என்னும் ஒரு சாதனம் பொருத்த படுவது சகஜமான ஒன்றூ. இதன் மூலம் சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இதயம் சற்று நின்று போனாலும் ஒரு உசுப்பு உசுப்பி வேலை செய்ய வைக்கும் ஒரு அற்புத சாதனம். இநிலையில் இப்போது ஆஸ்த்ரியா நாட்டின் மெடிட்ரானிக் என்னும் நிறுவனம் உலகத்திலே அதி சிறிய பேஸ் மேக்கரை உருவாக்கி உள்ளார்கள்.அதாவது இது பழைய பேஸ்மேக்கரை விட பத்து மடங்கு சிறிது நீளம் வெறும் 24 மில்லி மீட்ட்ர் – அகலம் 0.75 கியூபிக் சென்டி மீட்டர் மட்டுமே கொண்டது இதில் இன்னொரு மகிழ்ச்சி விஷயம் இதை இம்ப்ளான்ட் செய்ய அறுவை சிகிச்சையெல்லாம் தேவையில்லை....

ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!

தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் “12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர். அதில், ஒரு போஸ்டரில் உள்ள படத்தில், ரஜினிகாந்த் அவரது மனைவி, மகளுடன் வாக்குச்சாவடியில் ஓட்டுபோடுவது போலவும், ஓட்டு போடுவதற்கு நிற்கும் ரசிகர் வரிசையில் விநாயகர், விஷ்ணு கடவுள்களும் காத்து நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.இந்து மத தெய்வங்களை அரசியலுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளனர். இந்து மதத்தை பின்பற்றுகிறவர்களின் மனதை, தமிழகம் முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்...

குளிர் கால எச்சரிக்கைகள்!

கோடை காலத்தை விட மழை மற்றும் குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். அதனால் நவம்பர் முதல் மார்ச் வரை உஷாராக இருப்பது நல்லது.ஆங்கிலத்தில், ‘சாட்’ எனப்படும் “சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு இந்த குளிர் காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் இது வைட்டமின் டி’ சத்து குறைவை ஏற்படுத்தி உடல்வலி காய்ச்சல் உட்பட எல்லாவித பாதிப்பையும் ஏற்படுத்தும். அந்த கால கட்டத்தில் வைட்டமின் டி’ சத்து உள்ள உணவு வகைகளை குளிர்காலத்தில், எடுத்துக் கொள்வது முக்கியம்.அது மட்டுமின்றி மழைக் காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக் கிருமிகள் தான். ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலோருக்கு வரும். அதனால் மழைக்காலத்தில்...

ஆர்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியான கார்த்திகா!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் 'புறம்போக்கு' படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை யு.டி.வியுடன், எஸ்.பி.ஜனநாதனின் 'பைனரி பிக்சர்ஸ்'ம் இணைந்து தயாரிக்கவுள்ளது.இதன் முதற் கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் குலுமணாலியில் துவங்குகிறது.இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக ராதா மகள்  கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார்.இரண்டு ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும் , ஒரு ஹீரோயின் தானாம். இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார், கார்த்திகா. ஆர்யா, விஜய் சேதுபதி இருவருடனும் ஒரு டூயட் பாடலாவது இருக்கும் என்பதால்,  அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கைப்பற்றிவிடலாம் என்று நம்வுகிறாராம் கார்த்திகா....

வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா? - இதப் படிங்க மொதல்ல!

‘சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுப் பவர்கள் குடிபெயர்வோர் பாதுகாவலரி டம் (Protector Of Emigrants) லைசென்ஸ் பெறவேண்டும். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா இந்த நான்கு மாநிலங் களுக்குமான குடிபெயர்வோர் பாதுகாவ லர் (பி.ஓ.இ) அலுவலகம் சென்னையில் இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல் படும்...

டிசம்பர் 17 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்!

தேதி : 17 DEC 2013 திரையரங்கம் : WOODLANDS 11:00 am : Inertia நீங்கள் உங்கள் காதலியை, துணையை எவ்வளவு நேசிப்பீர்கள்? கடலளவு? கடவுள் அளவு?. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியும்.. லூசியா அளவு முடியாது. இத்தனைக்கும் பிலிப் அவளை ஏமாற்றி கைவிட்டு ஓடிச் சென்றவன். அந்த பிலிப் இப்போது கிட்னி செயலிழந்து சாகக் கிடக்கிறான். ஒழிந்தான் துரோகி என லூசியா போய்விடவில்லை. நேசிப்பின் இலக்கணம் லூசியா. இசபெல் முனோஸ் என்கிற ஸ்பானிய பெண் இயக்குனரின் படம். 2:00 pm : What They Don't Talk About Men When They Talk About Love பேரைச் சொல்லவே அரை நிமிடம் ஆகும் இந்த இந்தோனேசியப் படத்துக்கு உலக அளவில் ஏகப்பட்ட விருதுகள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். கண் இல்லாதவர்களுக்கு காதல்...

கோதுமை தோசை - சமையல்!

தேவையானவை: கோதுமை மாவு - 1 கப், வெள்ளை ரவை - 4 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - 4, கேரட் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கெட்டி மோர் - கால் டம்ளர்.செய்முறை: ரவையை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். வெங்காயத்தையும் மல்லித்தழையையும் பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை கழுவி, துருவிக்கொள்ளவும். கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சரிசி மாவு, ஊறிய ரவை, மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதா தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கலக்கவும்....

அழகு குறிப்புகள்:பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்!தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா" - இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா?அம்மணி.... பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்!தண்ணீர் மருந்து"தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு" - நீங்கள் முனகுவது காதில் விழுகிறது.ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.எலுமிச்சை...

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்" - பழமொழி விளக்கம்

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்"நேர் விளக்கம்காத்து அடிக்கும்போது பதரோடுள்ள நெல்லை மேலிருந்து கீலாக கொட்டினால் பதர் நெல்லை விட்டு பிரிந்து காத்திலே பறக்க நெல் மட்டும் தணியாக கிழே சேகரிக்கப் படும். காத்து அடிக்கும் பொழுது இதை செய்து கொள்ள சொல்லி அன்றைய விவசாயிகளுக்கு சொன்னது. ( இப்போது நவீன நெல் ஆலைகளில் ராட்சத மிண்விசிறிகள் மூலம் இது நடக்கிறது)அறிந்த விளக்கம் :சாதகமான சூழ்நிலையை தவறாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.அறியாத விளக்கம் :1. காத்து [ காத்திருந்து ], உனக்கு இதை உணர்த்தும் பெரியோர் உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.2. உனக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.3. உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டு...

முள்ளம் பன்றியும் ஓநாய்யும்! - குட்டிக்கதைகள்!

தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்.ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.நீதி:             ...

பயம் .....?

நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, பள்ளி மாணவனுக்கு ஆசிரியரைக் கண்டால் பயம். பலகோடி ரூபாய் மூதலீட்டில் தொழில் செய்பவருக்கு வருங்காலத்தில் தொழிலின் முன்னேற்றம் குறித்து பயம். ஆக, பயம் உருவாகின்ற விதம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைவரின் மனதிலும் பயம் என்ற ஒன்று ஆழமாக குடிகொண்டு உள்ளது.உதாரணமாக, இங்கு இராமசாமி என்ற இளைஞனை எடுத்துக் கொள்ளலாம். இவனது வயது 18. பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். எங்கெல்லாம் உறவினர்கள், பெற்றோர்கள் தேடுவார்கள் என்று அறிந்து வேறொரு திசையில் நடக்க ஆரம்பித்தான். நன்றாக இருட்டிய நிலையில் ஓர் ஊரைக் கடந்து சென்றான். அந்த இடம் நிறைய மரங்கள் நிறைந்த வெட்ட வெளியாக இருந்தது. அங்கே சென்று பெரிய மரத்தின் கீழ் இழைப்பாறினான். மரத்தின் பக்கத்தில் பூங்காக்களில் இருக்கும் நாற்காலி மேடையில் நன்றாக தூங்கிவிட்டான்.மறுநாள்...

மேலாண்மை புது உத்திகள்....!

களைக் காட்டில் கற்றுக் கொண்ட மேலாண்மை விதிகள்.அப்பொழுது ஒரு 15 வயதிருக்கும் ,களைக்காட்டிற்கு சென்று களை எடுக்கும் இடத்தில் இருந்து மேலாண்மை செய்யச் சொன்னார்கள் வீட்டில் .நான் செல்லும் போதே அம்மா சொன்னார் டே களை எடுக்கின்ற பொம்பிள்ளைங்க சரியா களை எடுக்காம பேசிக்கிட்டே இருப்பாங்க நீ அங்க இங்க போகாம அவங்களுக்கு பின்னாடியே நில்லு என்று . களைக் காட்டிற்கு சென்றால் அங்கே அப்பா இருந்தார் ,நீ எங்கடா இங்கே என்றார் ,அம்மா களை எடுக்கும் இடத்தில் இருக்கச்சொன்னதை சொன்னேன் .அவரோ சரி நீ இங்கேயே மர நிழலில் இரு வெயிலில் போய் அவர்கள் பின்னால் நிற்க வேண்டாம் என்றார் ,நானோ இல்லை அம்மா களை எடுக்கும் இடத்தில் தான் நிற்க சொன்னார் என்று .அப்பா சொன்னார் வேண்டான்டா அவர்களாகவே களை எடுத்து விடுவார்கள் என்று .எனக்கு ஒரே சுவாரசியமாகி விட்டது என்ன இது முரண்பாடான இரு கருத்துக்கள் ,எது சரி என்று பார்ப்போம் என்று.                                                                   ...

ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....

 நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த...

பெண்கள் இதை தெரிஞ்சுக்கணும்..

1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்.2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.3. எப்போதும் சரியான உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும்.4. பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள...

ஓஷோ சொல்கிறார் ...

மிகவும் பக்திமானான தகப்பன் ஒருவன் தன் மகனை மிக ஒழுக்கமாக வளர்த்து வந்தார்.ஒரு நாள் அவர்கள் தேவாலயத்திற்கு போகும் பொது அவர் தன் குழந்தையிடம் இரண்டு நாணயங்களை கொடுத்தார். ஒன்று ஒரு ரூபாய், மற்றொன்று ஒரு பைசா நாணயம். தேவாலய நன்கொடைப் பெட்டியில் மகனுக்கு எது விருப்பமோ அந்த நாணயத்தைப் போடலாம் என்று அனுமதியும் கொடுத்தார்.மகன் ஒரு ரூபாய் நாணயத்தைதான் பெட்டியில் போடுவான் என்று தந்தை எதிர் பார்த்தார் . அவனிடம் அதை எதிர்பார்க்கலாம் நம்பலாம்.அப்படித்தான் அவன் வளர்க்கப் பட்டிருந்தான். தகப்பன் காத்திருந்தார் . கூட்டம் கலைந்ததும் என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தார் .பையனைக் கேட்டார் நீ என்ன செய்தாய் என்று.பையன் சொன்னான் ஒரு ரூபாயை வைத்துகொண்டு...

கணிப்பொறி தமிழா...

கணிப்பொறி தமிழா உன் கண்களை கணணி திரை விட்டு கழட்டு!ஏ.சி  அறையில் இருந்து எழுந்து வா !கிளைகளைப் பரப்பும் அவசரத்தில் வேர்களை மண்ணிலிருந்து  வெட்டி விடாதே!நீ படித்த பழைய பள்ளிக் கூடத்தைப் போய்ப் பார்!அதன் மேற்கூரையில் உன் பிஞ்சு சிரிப்பு ஒட்டி இருக்கும்!நீ பிறந்த ஆஸ்பத்திரி எதுவென்று தேடு அதன் வாயிலில் நின்றொரு புகைப் படம் எடுத்து ரசி!நீ ஓட்டிய முதல் நடைவண்டி இன்சாட் 5 ஐவிட முக்கியமானது அதை பாதுகாத்து வை!நீ ஆடிய ஊஞ்சல் மரத்தின் தோள்களில் கொஞ்சம் தோழனாய் சாய்ந்து நில்!நீ ஆனா ஆவன்னா எழுதிய சிலேட்டுப் பலகை கிடைத்ததால் ஆஸ்கார் விருதாய் கருதிவரவேர்ப்பறையில் மாட்டி வை!நீ குரங்கு பெடல் போட்ட சைக்கிளை கண்டெடுத்து உன் காருக்கருகில் நிறுத்திக்கொள்!நீ...

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்க....?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லாகாட்டவும்.3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களைஉபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவேநகத்தையும் கடித்து வையுங்கள்.5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள்எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள்....

புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம்?

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.பெண்: நீ என்னை விரும்புகிறாயா?ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.பெண்: நீ என்னை அடிப்பாயா?ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்...

முக்கியமானது..

வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர்.''மாணவர்களே, இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.''வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீது வைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்து வரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன் மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‎‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?''அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்.. ஸார்!''சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போட ஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட,...

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு...

ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்!

ஜிமெயில் தளத்தில் நாம் பத்திரமாகப் பாதுகாக்க விரும்பும் பல டேட்டா பைல் களைப் பதிந்து வைக்கிறோம். திடீரென நமக்கு மரணம் சம்பவித்தால், இவற்றை எப்படி மற்றவர்கள் பெறுவார்கள். இதனைக் கணக்கிட்டு, கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு மரணம் நேரிட்டால் என்று நேரடியாகக் கூறாமல், உங்கள் மெயில் அக்கவுண்ட் குறிப்பிட்ட மாதங்களுக்கு, எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் இருந்தால் எந்தவித நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என கூகுள் மெயில் தளத்தில் செட் செய்திட, வசதி தரப்பட்டுள்ளது.இந்த புதிய வசதி ‘Inactive Account Manager’ என்று அழைக்கப்படுகிறது.நம் கூகுள் அக்கவுண்ட் தளத்தில், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் வசதியாகும். கூகுள் தளத்துடனான நம் செயல்பாடு தொடர்ந்து குறிப்பிட்ட மாதங்களுக்கு இல்லா மல் போனால் மட்டுமே இது செயல் படுத்தப்படும். மூன்று, ஆறு, ஒன்பது அல்லது பன்னிரண்டு மாதங்கள் செயல் இல்லாமல் போனால், இந்த...

மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்!

உலகின் மிகப் பெரிய மம்மி கண்காட்சி லாஸ் ஏஞ்சலில் உள்ள கலிபோர்னியா அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. இக்கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன.கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் மம்மிக்கள் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக்கண்காட்சியில் மொத்தம் 140 மம்மிக்கள் இடம்பெற்றுள்ளன,இம்மம்மிக்கள் 7 நாடுகளிலுள்ள 20 அரும்பொருள்காட்சியகங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும்.விஞ்ஞானிகள் முதல் முறையாக மம்மியில் டி.என்.ஏ ஆய்வு மற்றும் ஸ்கேனிங் செய்து அவை எவ்வகை திரவங்களால் உடல் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது எனும் கடும்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வின் மூலம் அந்த குறிப்பிட்ட மம்மியின் வயது மற்றும் இறப்பிற்கான காரணம் பற்றி அறியலாம்.மம்மிக்கள் பற்றிய சில உண்மைகள்* ஒரு இறந்த உடல் பாடம் (மம்மி) செய்யப்பட்டால் அதன் பிறகு அந்த உடல் அழுகுவது தடுக்கப்படுகிறது....

காளானின் மருத்துவ குணம் ('மஷ்ரூம்')..!

 மஷ்ரூம்' என்று அழைக்கப்படும் உணவு காளான்களின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் இந்தியர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக, நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. சிலர், காளான் வளர்ப்பை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகிறார்கள்.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.இந்த உணவு காளானுக்கு, பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. காளானைப் போன்று கிரீன் டீ என்று அழைக்கப்படும் பச்சைத் தேயிலைக்கும் இந்த ஆற்றல் இருக்கிறதாம்.காளான், கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப்...

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?

சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது.புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம்...
 
back to top