..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar

6:25 PM

Unknown
No comments
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அமெரிக்கரான புனீத் தல்வாரை நாட்டின் மிக முக்கிய தூதரக பதவிக்காக பரிந்துரைத்துள்ளார். மத்தியக் கிழக்கு பகுதிகளுக்கான விவகாரங்களில் கடந்த 4 வருடங்களாக ஒபாமாவின் ஆலோசராக புனீத் தல்வார் விளங்கினார். அவரை, அரசியல் ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக நியமிக்க நேற்று ஒபாமா பரிந்துரைத்தார். அமெரிக்க அரசுத்துறையின் மிக உயரிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராக புனீத் தல்வார் விளங்குகிறார்.
கடந்த ஜூலை மாதம் நிஷா தேசாய் பிஸ்வால் என்பவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளியுறவு உதவி செயலாளராக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பதவிகளும் செனட் சபையால் உறுதி செய்யப்படவுள்ளது.மேலும்,”நாட்டின் இந்த உயரிய பதவியை ஏற்றுக்கொள்ள அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடைய இவர்கள் ஒத்துக்கொண்டு அமெரிக்க மக்களுக்காக பணியாற்ற முன்வந்துள்ளதற்காக நான் அவர்களுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று ஒபாமா கூறியுள்ளார். மேலும் வரும் வருடங்களில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். Barack Obama nominates Indian-American to key diplomatic position
*********************************************************** he United States has nominated an Indian-American to a top diplomatic position as the Assistant Secretary of State for Political Military Affairs.Puneet Talwar was announced to be nominated for the position by the US President Barack Obama yesterday.

6:18 PM

Unknown
No comments

ஒரு காட்டில் இருந்த மான் தண்ணீர் குடிக்க தண்ணீர் அதிகம் இருந்த குளத்தருகே வந்தது.
தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தது.தனக்கு ஆண்டவன் அளித்துள்ள அழகான உருவத்தையும்...புள்ளிகளையும் கொம்புகளையும் கண்டு மகிழ்ந்தது.
அப்போது சிறுத்து நீண்ட தன் கால்களைப் பார்த்தது.என்னை இவ்வளவு அழகாக படைத்த இறைவன் ...கால்களை இப்படி படைத்துவிட்டாரே என வருந்தியது.
அச்சமயம் ஒரு சிங்கம் ...அந்த மானை அடித்து சாப்பிட எண்ணி மானை நோக்கிப் பாய ...அலறி அடித்து மான் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடி தப்பியது.
அப்போது அது.. ஆண்டவன் தனக்கு ஏன் இப்படிப்பட்ட கால்களைக் கொடுத்தான் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றியைச் சொன்னது.
ஆண்டவன் படைப்பில் காரணமில்லாமல் எதையும் அவன் செய்வதில்லை.

5:44 PM

Unknown
No comments
இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் ‘தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார்.ஜோனாதன்பென்னட்-ன் 50வது படம்தான் இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘மெமோரியல்டே’, மீன்கேர்ள்ஸ்’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.அலிஃபால்க்னர்–“திடிவிலைட்சகா – பிரேக்கிங்டான் – பார்ட் 1” மற்றும் “பேட்கிட்ஸ்கோடூஹெல்”படத்திலும், ஸ்டெலியேசவன்டே–“ஏ பியூட்டிபுல்மைன்ட்,” “அக்லிபெட்டி” படத்திலும் நடித்தவர். ரிச்சர்ட்ரைல்-ன் 210வது படம்இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘ஹாலோவின்’, ஆபீஸ்ஸ்பேஸ்” ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.கதைச்சுருக்கம்ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ,திடீர் திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போவது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் மட்டும்தான் இது நடப்பது என்பது புரியாத புதிராக இருக்கிறது!வெற்றிபெற முடியாத திரைக்கதையாசிரியரானகிரேக் (ஜோனாதன்பென்னட்), துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான ராச்சேல் (அலிஃபால்க்னர்) இருவரும் அந்த கிராமத்திற்கு சென்று ஒரு வீடு எடுத்து தங்கி இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இவர்களது ஆராய்ச்சிக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த எவரும் ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கும் நிலையில் ஒரே ஒருவர் மட்டும் இவர்களுக்கு உதவ முன் வருகிறார். இவர்களோடு பேசிய மறுநாள் அந்த நபரும் திடீரென இறந்து போக அதிர்ச்சி மேலும் அதிகமாகிறது.அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜோ (ஸ்டெலியோசவன்டே), ஜேஸன் (Kef Lee) அந்த கிராமத்தின் வழிபாட்டு நடவடிக்கைகளை ரகசியமாக காத்து வருகிறார்கள்.ஒரு சந்தர்ப்பத்தில் கிரேக் காணாமல் போகிறார். இதனால் தனித்து விடப்படும் ராச்சேல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ரகசியங்களை வெளிக்கொண்டு வருவதை திகில் நிறைந்த காட்சிகளோடு சொல்லியிருப்பதே இந்தபடத்தின் கதை.இயக்குனர் சுவாமிகந்தன் பற்றி….ஃபிலெடெல்பியாவைச் சேர்ந்த இப்படத்தின் இயக்குனரான சுவாமிகந்தன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அமெரிக்காவிற்குச் சென்ற பின், திரைப்படத் தயாரிப்பு, விஷுவல்எபெக்ட்ஸ் மற்றும் திரைப்பட மார்க்கெட்டிங் பற்றிய படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்திலுள்ள ஃபிலிம்ஸ் கூலில்படித்தவர்.2008ல் வெளிவந்த ‘கேட்ச்யுவர்மைன்ட்’ என்ற படம்தான் சுவாமிகந்தன்எழுதி, இயக்கி, தயாரித்த முதல்படம். குடும்பக்கதையான இப்படம் அமெரிக்கா, கனடா, கரீபியன்தீவுகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியானது. 2009ல் டிவிடி வடிவில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.தற்போது திகில், மர்மப்படமான ‘திசீக்ரெட்வில்லேஜ்’ படத்தை முடித்துள்ளார். இந்த ஆண்டு அக்டோபர்மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளிவரத் தயாராகஉள்ளது.‘தி மெசேன்ஜர்’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். ஆரம்ப நிலையில்உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.சுவாமிகந்தன் மற்றும் டாக்டர்ராஜன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருப்பதோடு, உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

5:22 PM

Unknown
No comments
தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: அதிகாரிகல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளார்க் பணியில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager (HR BD), City Union Bank Ltd., Cenetral Office, 149, TSR (BIG) Street, KUMBAKONAM 612001, Tamil Nadu.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2013மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cityunionbank.com என்ற இணையதளத்தைப்ப பார்க்கவும்.