..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar

10:42 PM

Unknown
No comments
தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை உருவாக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் உதவியுடன் பயிலும் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து பள்ளிகளையும் இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து (கொலாபரேட்டிவ் சிஸ்டம்) பயிலும் திட்டம் உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளை தேர்வு செய் வது குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வலைதளத்தின் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த செயல்பாட்டினை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம் நன்கு படிப்பதற்கான புதிய வழிகளை கண்டறிந்து தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடவடிக்கையும் திட்டங்களையும் வெளிக்கொண்டு வர முடியும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் புதிய படைப்புகளை உருவாக்குபவர்களாகவும் திகழ்வார்கள்.
இத்திட்டத்தின் முதற் கட்டமாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகள் என 32 மாவட்டங்களில் 128 பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இன்டர்நெட் மூலம் இணைத்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா தகவல்
தமிழகத்தில் 44 ஆயிரத்து 986 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 52 லட்சத்து 4 ஆயிரத்து 61 மாணவர்கள்
படிக்கின்றனர்.

8:45 PM

Unknown
No comments
மைக்ரோசாப்ட் நிறுவனம் டேப்லெடின் அடுத்த படைப்பான Surface 2 மற்றும் Surface Pro 2 இன்று நியூயார்க் நகரத்தில் வெளியிடப்படுகிறது. Surface 2 பார்க்கவும் மற்றும் பணிபுரிவதும் கிட்டத்தட்ட அதன் முந்தைய படைப்புகளை போலவே இருக்கும், ஆனால் இதில் வேகமான TEGRO 4 செயலி(processor) மற்றும் 1080p திரை அம்சங்களை கொண்டுள்ளது.
மைக்ரோசாப்ட் Surface RT மற்றும் Surface Pro tablets புதுப்பிக்கப்பட்டு Surface 2 மற்றும் Surface Pro 2 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு புதிய சாதனங்களையும் அனுசரிக்கக்கூடிய இரண்டு-கட்ட கிக்ஸ்டேன்ட்(two-stage kickstand), மற்றும் மேம்படுத்தப்பட்ட விவரக்கூற்றுகள் (updated specifications) இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள Surface சாதனங்கள் பணிபுரிவது போலவே இருக்கும், மேலும் அது கூட புதிய அக்சசரி பாகங்கள்(accessories) உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு புதிய பவர் கவர்(Power Cover) கொண்டு பேட்டரி ஆயுளை அதிகரிக்க முடியும், மற்றும் மைக்ரோசாப்ட் இறுதியாக Surface Docking Station வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8:42 PM

Unknown
No comments
இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் இன்டர்நெட்டில் பயனர்களுக்கு(users) செய்திகள், தகவல்கள் மற்றும் படங்களை தேட ஒரு புதிய Worldfloat தேடல் என்ஜின் அறிமுகப்படுத்தியுள்ளது. Worldfloat.com நிறுவனரான புஷ்கர் மஹடா இந்த புதிய அம்சமானது நிறுவனத்தின் பயனர் தளத்தை(user base) விரிவுபடுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு சமூக நெட்வொர்க்கிங் தளத்தின் புதிய வசதி, கூகுள் மற்றும் யாகூ போன்ற உலக தேடல் என்ஜின்கள் போன்று பணிபுரியும் என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார். மேலும், இது இன்னும் பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த புதிய தேடல் என்ஜின் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றது. மற்றும், ஆட்டோமேட்டிக் அல்காரிதம் (automatic algorithm) மூலம் உண்மையான நேரத்தின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் இருந்து செய்திகளை அளிக்கும் சமூக நெட்வொர்க்கிங் வசதி அத்துடன் தேடல் என்ஜின் வேறு எந்த தளத்திலும் இல்லை என்றும் புஷ்கர் மஹடா கூறியுள்ளார்.
Worldfloat செய்திகள் மற்றும் தகவல்களை மற்ற நபர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பொதுவான விருப்பத்தை மக்களுடன் தொடர்பு கொள்ளவும் 'Sharing' அம்சம் கொண்ட புதிய தேடல் என்ஜின் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 'தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட நபர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மற்ற நபர்களை சந்திக்க முடியும்; இதேபோல் மருத்துவர்கள் மருத்துவர்களை சந்திக்க முடியும், கட்டிட கலைஞர்கள் கட்டிட கலைஞர்களை சந்திக்க முடியும்,' என்றும் அவர் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் நீண்ட கால திட்டம் ஒரு தேடல் என்ஜின் உருவாக்குவது மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து பொதுவான விருப்பத்தை மக்களுடன் இணைக்க உதவும் ஒரு 'சமூக தேடல் என்ஜின்' உருவாக்கவதே ஆகும் என்று புஷ்கர் மஹடா கூறியுள்ளார்.
Worldfloat பட தேடல் வசதிகளை உருவாக்கியுள்ளது. இது கூகிள் படங்களை போல செயல்படுகிறது, ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து உண்மையான நேர வரிசைப்படி புகைப்பட ஆதாரங்கள் கொண்ட செய்திகள் போன்ற பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

8:10 PM

Unknown
No comments
திங்கட்கிழமையன்று வரும் அமாவாசை நாளில் புத்திர பாக்யம் வேண்டுபவர்கள் காலை 6 லிருந்து 11 மணிக்குள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட வேண்டும். தெய்வங்களை வழிபட உகந்தது என அமாவாசையை சாஸ்திரம் கூறுகிறது. நல்லடக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், திதி கொடுப்பதை இந்த நாளில்தான் செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்த குழந்தைக்கு சாந்தி செய்ய வேண்டும். இல்லையெனில் வாழ்வினில் தவறான வழியை அந்தக் குழந்தை பின்பற்றக்கூடும் என ‘சாந்தி குஸுமாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. பிறப்பதை நாம் தடுக்க முடியாதே! ஆனால், பரிகாரம் செய்து நல்வாழ்வு வாழ முடியுமே! நாம் அனுபவிக்கும் சுகத்தில் சாஸ்திர விரோதமான காரியங்களை விலக்க வேண்டும் என ஆதிசங்கரர் கூறியுள்ளார்.