
ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான்.நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன்.ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான்.என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன்.அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை.நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான்.நீ சொல்வது பொய்- என்றான் முருகன்.இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது.அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு.பசியை எப்படி காட்டமுடியும்.அதன் நிறம்.பசிக்கு ஏது நிறம்.அதன் குணம்.குணம் இல்லை.உன்னால்...