.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

சொல்லாதீர்கள்... கவிதை?



எங்களை இல்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
 வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!


எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
 தனித்து அழமுடியும் எங்களால்..!


எங்களை வீரமற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
 தைரியம் இருக்கிறது எங்களிடம்..!


எங்களை திக்கற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
 எங்கள் வறுமை ஜாதிதான்..!


எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
 குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...

மலையாளத்திலும் சந்தானம்





தமிழ் சினிமாவின் தற்போதைய நகைச்சுவை மன்னனாக வலம்வரும் நடிகர் சந்தானம் தற்பொழுது மலையாளத் திரையுலகிலும் நுழைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் சலாலா மொபைல்ஸ் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்துவருவதாகக்
கூறப்படுகிறது. இப்படம் சந்தானம் நடிக்கும் முதல் மலையாளத் திரைப்படமாகும். தமிழில் தவிர்க்க இயலாத நகைச்சுவை நாயகனாக வலம்வரும்
சந்தானம் மலையாளத்திலும் ஜொலிப்பாரா என்பது இப்படம் வெளியானபின்பு தெரியவரும்.

ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை சரத் ஏ.ஹரிதாசன் இயக்கிவருகிறார். நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கான வேலைகள் தொடங்கின ? -




இளைய தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும்
வெற்றி பெற்ற திரைப்படமான துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. அதற்கான படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் தற்பொழுது கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கி திரைப்படம் முழுவதும் மும்பை நகரை மையப்படுத்தி
உருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்பொழுது கொல்கத்தாவை மையப்படுத்தி அடுத்த திரைப்படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் அடுத்த ஆண்டு துவக்கம் முதல்
படப்பிடிப்புத் துவங்கவுள்ள இத்திரைப்படம், அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீசாக
இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இசைஞானி இல்லாமல் கிங் ஆப் கிங்ஸ் 2





                        இசைஞானி இளையராஜா தலைமையில் இன்று கோலாலம்பூர் மெர்டாக்கா மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. கிங் ஆப் கிங்ஸ் 2 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று இசைஞானி அறிவித்துள்ளார்.

கார்த்திக் ராஜா வழங்கும் கிங் ஆப் கிங்ஸ் 2 இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் முக்கியக் கலைஞர்களாக இருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு நேற்று இல்லம் திரும்பிய இளையராஜா, தன்னால் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்று தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதால் தன்னால் இவ்விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என்றும், தான் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைய வேண்டாமென்றும் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

 
back to top