.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 8, 2013

இ‌ப்படியு‌ம் ‌சில ம‌னித‌ர்க‌ள் !!

உன‌க்காக உ‌யிரையே‌க் கொடு‌ப்பே‌ன் எ‌ன்று காத‌ல் வசன‌ம் பே‌சி, காத‌லி‌த்து, க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு ‌பிறகு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் அடிதடி ரகளை நட‌ப்பது இய‌ல்பான ‌விஷய‌ம். ஒரு வேளை, காத‌லி‌த்து க‌னி‌ந்துரு‌கி, இறு‌தி‌யி‌‌ல் ‌ஏதேனு‌ம் காரண‌த்தா‌ல் ஒ‌ன்று சேர முடியாம‌ல் போனா‌ல், காதலனோ, காத‌லியோ செ‌ய்யு‌ம் ‌விப‌ரீத செய‌ல்களை இ‌ங்கு ‌நினைவூ‌ட்ட ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.தான் கற்ற க‌ல்‌வியையு‌ம், பெற்ற அனுபவ‌த்தையு‌ம், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வது‌ம் உ‌ண்டு, ‌சில‌ர் அதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ‌தீமை செ‌ய்வது‌ம், பழிவா‌ங்குவது‌ம் உ‌ண்டு.இ‌தி‌ல் இர‌ண்டா‌ம் ரக‌ம் ம‌னித‌ர்க‌ளிட‌ம் நா‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டியத‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறு‌த்துவது தா‌ன் இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ன் நோ‌க்க‌ம்.காதல‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ந‌ண்ப‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ஒரு ‌சில ‌விஷய‌ங்களை த‌வி‌ர்‌ப்பது ‌மிகவு‌ம்...

காலத்தை வென்று பிரகாசியுங்கள்!

                                          காலத்தை வென்று பிரகாசியுங்கள்ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று...

Saturday, December 7, 2013

ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.அப்போது...

நட்பு ?

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி...
Page 1 of 77712345Next

 
back to top