
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில், சீக்கிய தீவிரவாதிகள் பெருமளவில் மறைந்திருந்தனர். அங்கிருந்தபடியே அவர்கள் தங்கள் சதித் திட்டங்களை தீட்டி வந்தனர். இதனால் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, 1984ம் ஆண்டு ஜூன் மாதம், அதிரடியாக பொற்கோயிலில் ராணுவம் நுழைந்தது.
அங்கிருந்து தீவிரவாதிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இச்சண்டையில் பலர் இறந்தனர். இதற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் கே.எஸ்.பிரார் தலைமை வகித்தார். ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டதால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அதே ஆண்டில், அக்டோபர் மாதம் சீக்கிய பாதுகாவலரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் நடந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்ட...